Friday, July 8, 2016

மரங்கள் அடையாளங்கள், TREE IDENTIFICATION

மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கும் இனிய வேளையில் மரங்களின் அடையாளங்கள் பதிவிடலாம் என ஆர்வமாக உள்ளேன்.நீண்ட காலங்களுக்கு பின் பதிவு எழதலாம்  என எண்ணியுள்ளேன்.மூலிகை பற்றிய பதிவுகள் இருக்கும்.தொடர்ந்து பயணிப்போம்,நன்றி

Tuesday, December 1, 2015

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி


தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

அருள்மிகு பிரம்மேஸ்வரர் திருக்கோவில்,சுல்வாடி, மாட்டெலி

தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு பிரம்மேஸ்வர சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு அண்மையில் கிட்டியது.                         ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக  மலைப்பாதையில் கர்கேகண்டி 4 ரோடு வந்து அங்கிருந்து 4 துாரத்தில் சுல்வாடியில் பிரம்மேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.  அந்தியூரில் இருந்து 60 கி.மீ ஆகும்.  சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.                                                                  இங்கு   வீரபத்திரசாமி, பொம்மையசாமி,தொட்டையசாமிஆகிய சன்னதிகள் அமைந்துள்ளது.மேற்படி திருக்கோயில்  கொள்ளேகால்வட்டம் சாம்ராஜ்நகர் மாவட்டமாகும்.அருகில் பிரசித்திபெற்ற கிச்சிகுத்து மாரியம்மன்  ஆலயம் அமைந்துள்ளது. அவசியம் தரிசிக்க வேண்டிய சிவாலயம்,நன்றி

Wednesday, July 22, 2015

அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி

சேலத்தில் பார்க்க பல்வேறு இடங்கள் இருந்தாலும் சித்தர்களை தேடி பயணிப்பவர்களுக்கு அல்லாதார் ஆன்மீக ஸ்தலமாக விளங்குவது அப்பா பைத்தியம் சுவாமிகள் ஜீவசமாதி ஆகும் .               சேலத்தில் பழைய சூரமங்கலம் அருகிலும்,சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து அரை கிமீ தொலைவில்  திருவாக்கவுண்டனுாரில் தருகவிலாஸ் என்னும் சத்குரு மாளிகையில் அப்பா பைத்தியம் ஜீவசமாதி  அமைந்துள்ளது.                                                சுவாமிகள் பற்றி.    :     கரூர் ஜமீன் வம்சாவழியில் 1859  ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர் .தம்மை பைத்தியம் என்று சுவாமிகள் கூறிக்கொள்வாராம், பக்தர்கள் இவரை அப்பா என்றே அழைத்தார்கள். ஆகையால் அப்பா பைத்தியம் என பக்தர்கள் அழைத்தார்கள்.12.2.2000  ஜீவசமாதி:   தைமாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆனார்கள்... நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...