Thursday, January 24, 2013

சேலத்தில் திருமணிமுத்தாறு படிகையில் ஆட்சி செய்யும் அருள்மிகு சுவர்ணாம்பிகை உடனமர் ஸ்ரீ சுகவனேஷ்வரர் திருக்கோவில் தரிசனம்

அருள்மிகு சுகவனேஷ்வரர் -சுவர்ணாம்பிகை திருக்கோவில் தரிசனம்



மூலவர் :


ஸ்ரீ சுகவனேஸ்வரர் (கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுக பிரம்மரிசி
வழிபட்டதால் சுகவனம் என்ற திருப்பெயர் ஏற்பட்டது )

 அம்பாள் :

ஸ்ரீ
சுவர்ணாம்பிகை

 ஸ்தல அமைப்பும் சிறப்பும் :

 பஞ்ச பாண்டவர்களால் வழிபட்ட திருமணி முத்தாறு படுகையில் அமைந்த சுயம்பு லிங்கங்களில் முதலாலதாக சேலம் ஸ்ரீ சுகவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

 சேலம் நகரின் நடுவே கிழக்கு பார்த்த வண்ணம் 3 இராஜ கோபுரங்களை உடையதோர் அற்புத திருக்கோவிலாகும் .ஸ்தலம் ,மூர்த்தி,தீர்த்தம் ,மூன்றிலும் சிறப்புகொண்டது. சுவாமி சுயம்பாக சற்றே சாய்வாக லிங்க உருவில் காட்சிதருகிறார் .

 முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளதாம் . அம்பிகை
சுவர்ணாம்பிகை சன்னதியும் அருட்பார்வையும் காணற்கரியது. பிரகாரத்தின்
அருகில் ஓர் கிணறு அமைந்துள்ளது .

ஸ்தலவிருட்சம் : பாதிரி மரம்

 ஸ்தலம்
விளக்கும் புத்தகங்கள் :

பாபநாச ஸ்தல புராணம்,மற்றும் அருணகிரி நாதரால்
பாடல் பெற்ற ஸ்தலம் . , சுந்தரர், ஔவையார் ஆகியோர் வழிபட்ட பாடல் பெற்றஸ்தலமாகும் .


 ஸ்ரீ சுகவனேசப்பெருமானின் வேறு பெயர்கள் :


கிளிவண்ணமுடையார் , கிளிவனநாதர், பாபநாசர் ,பட்டீஸ்சுரர் ,நாகீசர்
,மும்முடிநாதர் என்றும் அம்பாள் ஸ்ரீ சுவர்ணாம்பிகை,மரகதவல்லி
,பச்சைவல்லி என்பனவாகும்.

 தீர்த்தக்கிணற்றிக்கு அமண்டுக தீர்த்தம் என்றுபெயர் . இன்றுவரை இக்கிணற்றில் தவளைகள் இல்லை என்பதே ஆச்சர்யமான
செய்தியாகும் .

 திருக்கோவில் காலம் : சுமார் 800ஆண்டுகள்
எனத்தெரிகிறது. கி.பி 1200களில் சுந்தர பாண்டியன் என்பவனால்
திருக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு.


பூஜை நேரங்கள் :

காலை 6.00 மணி ,
காலை9.00மணி
உச்சிகால பூஜை 11.30
மாலை 5.30
இரவு 8.30பூஜையென
 5 காலப்பூஜை
சிறப்பாக நடைபெறுகிறது.

ஆண்டுத்திருவிழா : வைகாசி மாதம்

 முடிவுரை:
பிரம்மனால் கிளி தோஸம் பெற்ற சுகமுனிவர் சாபம் நீங்கப் பெற்ற அற்புத
ஸ்தலத்தை நீங்களும் வணங்கினால் பிறவித்தோஸம் விலகி நன்மைகள் நாளும் நடைபெறும் . அற்புத அதிர்வுகள் கொண்ட ஆலயம் .

வந்து வணங்கி விட்டு
கருத்திடுங்கள் , நன்றி

Monday, January 21, 2013

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சித்துக்கள்

                                       ஓம் ஸ்ரீ ஸதாசிவ ப்ரஹ்மணே நம;



 கரூர் அருகே 12 கி.மீ தொலைவில் உள்ள
நெரூரில் ஸ்ரீ சதாசிவபிரம்மேந்திராள்ஜீவசமாதியை பற்றி சென்ற பதிவில்
பார்த்தோம் . அந்த பதிவை படிக்காதவர்கள் அதையும் படித்து வரவும் .

 ஸ்ரீ
சதாசிவ பிரம்மம் கொடுமுடி அருகேயுள்ள அகத்தியம்பாறை என்னும் இடத்தில் தவம் செய்து கொண்டு இருந்தபோது காவிரியின் திடீர் வெள்ளம் இவரை உருட்டிச்சென்று மண்ணில் புதைத்து விட்டது .

காவிரியின் சீற்றம்
அடங்கியதும் சதாசிவ பிரம்மத்தை சீடர்களும் ,மக்களும் தேட கிடைக்கவில்லை.

 பல காலம் கழித்து கட்டிடம் கட்ட மணல் தோண்ட வந்தவர்கள் ஆழமாக தோண்ட மண்வெட்டி புதைந்திருந்த சதாசிவ பிரம்மத்தின் தலையில் பட்டு காயமாகி ரத்தம் வந்ததும் மணல் எடுக்க வந்தவர்கள் ஓடிப்போய் ஊர் பெரியவர்களைகூட்டி வந்து சுற்றிலும் மணலை எடுத்து சதாசிவ பிரம்மத்தை உடம்பு சுத்தம் செய்து விட யாரிடமும் பேசாமல் அமைதியாக நடந்து சென்றாராம் .

அடுத்ததாக புதுக்கோட்டை பகுதியில் சதாசிவபிரம்மம் நெற்கதிர் நிலங்களுக்கிடையே நடந்து சென்று கொண்டு இருந்தாராம் . அப்போது வைக்கோல் போர்அடுக்கும் வேலை நடந்து கொண்டிருக்க , அடுக்கிக்கொண்டிருந்த வைக்கோல் போர்களுக்கிடையே சதாசிவ பிரம்மம் விழுந்து விட்டாராம் .

 வைக்கோல் போர்
அடிப்பவர் சதாசிவ பிரம்மத்தை கவனிக்காது அவர் மேலேயே வைக்கோல் போரைஅடுக்கி பெரிய வைக்கோல் போர் ஆகி விட்டது.

 சதாசிவ பிரம்மம் கீழே கிடக்க பல அடி உயரத்திற்கு வைக்கோல் போட்டு விட்டனர் .ஒரு வருடமாக பசுக்களுக்கு  வைக்கோல் போட படிப்படியாக குறைந்த வைக்கோல் போரில் இருந்து சதாசிவ பிரம்மம் எழுந்து நடக்க அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்தனர் .

இந்த விஷயம் மந்திரியின் காதுக்கு சென்று பின் அரசன் விஜயரகுநாத தொண்டைமானிடம் சென்றது.

அவரும் சதாசிவ பிரம்ம் இருக்குமிடத்தை வந்து 8 வருடமாக மன்னர் காத்திருந்து பின் மன்னரின் பொறுமையை அறிந்துசதாசிவ பிரமம் மணலிலேமந்திரத்தை எழுதிக்காண்பிக்க அதை மனனம் செய்து அந்த மணலை தன் அங்கவஸ்திரத்தில் எடுத்துச்சென்று அரண்மனையில் பூஜை செய்யதொடங்கினாராம் .


அந்த பூஜை இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.கரூர் தான் தோன்றிமலையில் ஸ்ரீ வெங்கடாசலபதி சிலையை வணங்கி ஜன ஆகர்ஷ்ண
சக்கரம் எழுதி பூஜை செய்து அங்கு அமைத்து

 "வறுமையால் திருப்பதி
செல்லமுடியாத பக்தர்கள் தான்தோன்றி மலையப்பரை வணங்கினால் திருப்பதி சென்று வந்ததிற்கு ஈடாகுமென அருளிச்சென்றார் .

 தன் நிலை மறந்தவாறு உடையில்லாமல் இறை தியானத்தில் அரசன் கொலு பட்டறையின் வழியே நடந்து செல்ல கோபப்பட்டு மன்னர் சதாசிவ பிரமத்தை அறிந்திராமல் அவரின் கையை வெட்டி விடகை துண்டானது கண்டு கொள்ளாமல் திரும்பி நடக்க மன்னர் மன்னிக்க வேண்டி
கேட்டு நிற்க வெட்டிய கையை ஒட்ட வைத்து நடந்து சென்றாராம் .

 இப்படி பல அற்புத சித்துக்களை நிகழ்திய ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் கடைசியாக நெரூர் வந்து ஜீவசமாதி அடைந்து தம்மை நாடி வருகிறவர்களுக்கு ஆசியையும்
நன்மையையும் அளிக்கிறார் .

ஸ்ரீசதாசிவம் ஜீவசமாதி அடைந்த அதே நாளில்
மானாமதுரையில் வைகை ஆற்றங்கரையில் மானாமதுரை சிவன் கோவில் பின்புறம் ஸ்ரீ சதாசிவர் சூட்சமசரிரமாகவூம் , கராச்சியில் காரணசரீரமாகவும் ,நர்மதா நதி ஓம்காரம் என்ற இடத்தில் அங்கேயும் ஜீவசமாதியானதாக கருதப்படுகிறது.


காசியிலும் ஸ்ரீ சதாசிவம் ஜீவசமாதி ஆகியுள்ளதாக அறியப்படுகிறது.
சித்தர்கள் பலர் பல முகமாக காட்சி கொடுத்து ஒருவரே பல இடங்களில்
ஜீவசமாதியானதாக அறிகிறோம் .

அவ்வகையில் பல அற்புதங்கள் செய்த ஸ்ரீ
சதாசிவ பிரம்மேந்திராள் மட்டும் விதிவிலக்கன்று. வாய்ப்பு கிடைக்கும்
போது தரிசனம் செய்யுங்கள் .

நன்றி

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் (அதிஷ்டானம் )ஜீவ சமாதி

ஓம் ஸ்ரீஸதாசிவ பிரஹ்மணே நம; நம் நாட்டில் பல யோகிகளும்
சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் பல பெற்ற புண்ய பூமியாகும்.
கரூர் மாவட்டம் கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில்
காவிரிக்கரையின் அருகே உள்ள நெரூர் என்னும் ஊரில் ஸ்ரீ சதாசிவ
பிரம்மேந்திராள் அவர்களின் அற்புத ஜீவசமாதி அமைந்துள்ளது.

 நெரூர்சதாசிவம் திருக்கோவில் என்று கேட்டால் கருர் பஸ் நிலையத்தில் இருந்தே பஸ்கள் உள்ளன. பரமசிவேந்திராள் என்ற குருநாதர் சிவராமகிருஷ்ணன் என்ற இயற்பெயரை மாற்றி சதாசிவம் என்னும் பெயர் சூட்டி சந்நியாசம் கொடுத்துஅனுப்பி வைக்க குருவின் உபதேசப்படி அதிகம் யாரிடமும் பேசாமல் நெரூரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்துள்ளார் .

பல அற்புதங்களை சித்துகளை செய்த அற்புதமான மகான் . ஸ்ரீ சதாசிவ பிரம்மம் தமது ஜீவசமாதி அமைக்க சீடர்களான தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மைசூர் மகாராஜாக்களை அழைத்து "குகை அமைத்து சாமக்கிரியைகளால் மறைத்து விடுங்கள்" என்றார் .

அவர் சொன்னமுறைப்படி ஜீவசமாதி குகை அமைக்கப்பட்டது.ஸ்ரீ சதாசிவ பிரம்மம்அங்கிருந்த சீடர்களை அழைத்து "நான் ஜீவசமாதி ஆக இந்த குகையில்இறங்கிய பின்பு விபூதி,உப்பு,மஞ்கள் ,செங்கற்பொடி போட்டு குகையை மூடிவிடச்சொன்னார் .

பின் 9 ஆம்நாள் எம் சிரசின் மேல் வில்வமரம்
முளைக்குமென்றும் ,1 2 ஆம் நாள் காசியில் இருந்து சிவலிங்கம் வரும் அதை
எம் ஜீவசமாதியில் இருந்து12 அடிக்கு முன்னதாக கிழக்கில் கோவில்
கட்டசொல்லிவிட்டு ஜீவ சமாதி அடைய குகைக்குள் சென்று அமர்ந்து விட்டார் .

சீடர்கள் குருவின் உபதேசம் கேட்டு பின் குகையை மூடிவிட 8 ஆம் நாளில்
வில்வம் துளிர்விட 12 ஆம் நாள் காசியிலிருந்து சாது ஒருவரின் மூலம்
சிவலிங்கமும் வந்து சேர்ந்த அற்புதம் நடந்தது .

 திருக்கோவில் 220ஆண்டுகாலமாக பலரால் மெருகேற்றப்பட்டு ஸ்ரீ சதாசிவபிரம்மத்தின் ஜீவசமாதியுடன் அமைதியாய் இன்றும் வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம்அளித்துக்கொண்டிருக்கிறது.

 சித்தர்களை தேடி சித்தர்களின் ஜீவசமாதிகளை
தேடி பயணிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் அமைதியையும் , இருட்டிலே
பயணிக்கும் வாழ்க்கையை வெளிச்சமாக்கும் அருமையான ஸ்தலம் . ஸ்ரீ
சதாசிவபிரம்மேந்திராளை தேடி வாருங்கள் .

கண்டிப்பாக உங்களுக்கும் ஆசிகள்வழங்க காத்திருக்கிறார் .பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில்   ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திராளின் சித்துக்களை பகிர்கிறேன் . நன்றி

Friday, January 18, 2013

ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவ சமாதி

கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் ,சித்தர்கள் வாழ்ந்த
பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊதியூர் மலையில் தவம்
இருந்தார் . பின் ஸ்ரீ உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில் பிரதிஷ்டை
செய்தார் என்றும்

சிலகாலம் வாழ்ந்து தம் சீடரான செட்டி தம்பிரானுக்கு ஆசிர்வாதமளித்து திருப்பதி சென்று ஜீவசமாதியாகி விட்டதாக வரலாறு . கொங்கண
சித்தரின் திருக்கோவிலும் ,பொன் செய்ய ஊதிய பாறைகளின் ஓட்டைகளும்
தற்போதும் உள்ளன.

 இரசவாதக்கலைகளை அறிந்த கொங்கணர் இரும்பை தங்கமாக்கும்
சித்துகளை அறிந்தவர் .

 ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி :

 காங்கோயத்தில்
இருந்து தாராபுரம் (அ)பழனி சாலையில் 12 கி.மீட்டர் தொலைவில் ஊதியூர் மலைஎன்றும் கொங்கணகிரி , என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ உத்தண்ட வேலாயுத சாமி திருக்கோவில் அமைந்துள்ள குன்றில் முதலில் வேலாயுதசாமி திருக்கோவில்அமைந்துள்ளது.

நாங்கள் சென்றபோது திருக்கோவில் பூட்டப்பட்டு இருந்தது
.(காலை 6 முதல்10 வரையிலும் மாலை 4 மணி முதல் 6 வரை திறக்கப்படுமாம் )
சற்று தூரம் மலைப்பாதையில் நடந்தால் ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவசமாதி இரு

பெரிய பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. இங்கே அமாவசை,பெளர்ணமி நாட்களில்நிறைய கூட்டம் வருகிறது .

அருட்சக்தி அற்புதமாய் அமைந்துள்ள
ஜீவசமாதியாகும் . சுமார் 3000 ஏக்கர் மூலிகை வளம் பொருந்திய குன்றாகும்
.பெளர்ணமி நாட்களில் இங்கு வழங்கப்படும் மூலிகைச்சாறு விஷேசமாகும் .
இங்கிருந்து மேலே சென்றால் ஸ்ரீ கொங்கண சித்தரின் திருக்கோவிலை காணலாம் .

ஊதியூர் மலை சிவனும் சித்தர்களும் வாசம் செய்யும் அற்புதமான மலை என்பதை ஆங்காங்கு காணப்படும் வில்வமரங்கள் உறுதி செய்கின்றன. சித்தர்களின் தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக பார்க்க,தெளிய அறிய, அற்புதமானஇடம் . அரிய இவ்விடத்தின் சூட்சமங்களையும் விரிவாக தேடலுடன்
சந்திக்கிறேன் நன்றி,

கொடநாடு காட்சி முனையின் அழகு

நீலகிரி மாவட்டத்தில் அழகிய இடங்களில் கொடநாடு காட்சி முனையும் ஒன்றாகும்.சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் மலைச்சரிவை கண்டு களித்துக் கொண்டேசென்றால் கோத்தகிரியில் இருந்து 19 கி.மீட்டர் தொலைவில் உள்ள கொடநாடு
காட்சிமுனையை அடையலாம் .

 கொடநாடு வியூ பாயிண்டில் ஹோட்டல் எதுவும்
கிடையாது .சிற்றுண்டி கடை ஒன்றும் மேலே மகளீர் சுய உதவிக் குழுவின்
பல்பொருள் அங்காடி ஒன்றும் உள்ளது. இங்கே நீலகிரி தைலம் டீத்தூள்கள்
கிடைக்கின்றது.

 கொடநாடு காட்சி முனையில் இருந்து பார்த்தால் வலப்புறம்
தூரத்தில் பவானி சாகர் அணைக்கட்டு தெரிகிறது. காட்சி முனையின் அருகே
வலப்புறமாக தெரிவது ரங்கசாமி குன்று ஆகும் .நடுவிரல்,
மோதிரவிரல்,ஆட்காட்டி விரல் போல ரங்கசாமி பில்லர் தெரிகிறது.

40வருடங்களுக்கு மேக மூட்டத்தின் காரணமாக ரங்கசாமி குன்றில் மோதி விமான விபத்து ஒன்று நடந்ததாக இங்குள்ள நன்பர் கூறினார் , ரங்கசாமி குன்றின் கீழே அழகான நீண்ட அருவி ஓடுகிறது . இடப்புறமாக மாயாறு U வடிவில்ஓடுகிறது.

அருகே தெங்குமரஹடா என்னும் கிராமம் அழகாக தெரிகிறது. கொடநாடு
காட்சி முனையின் கீழ் இறங்கி நடந்தால் இன்னோரு வியு பாய்ண்ட் வருகிறது . இங்கே இருந்து பார்த்தால் தெங்குமரஹடா கிராமம் சற்று அருகே தெரிகிறது.


ஊட்டியில் இருந்து 50கி.மீட்டருக்குள்ளே வரும் கொடநாடு காட்சி முனை
பார்க்கவேண்டிய சுற்றுலா ஸ்தலமாகும் . கொடநாடு காட்சிமுனை ஈரோடு
மாவட்டத்தின் பல இடங்களை மேக மூட்டம் இல்லாமல் இருந்தால் காணலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் . நன்றி

Friday, January 11, 2013

நாகதோஷம் நீக்கும் திருநாகேஷ்வரர்

                                    ராகுதோஷம் போக்கும் திருநாகேஸ்வரம்
                                                                                                    

" நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம்
நண்ணுவார் கோளும் நாளும்
தீயவேணும் நன்காம் குறிகொண்மினே"

-(திருஞான
சம்பந்தர்)


மூலவர் : செண்பகராண்யேஸ்வர் \

அம்பாள் : கிரிகுஜாம்பாள்
(குன்று முலையம்மை) \

திருநாகேஸ்வரம் முன்காலத்தில் செண்பகப்பூ தோட்டமாக
இருந்தமையால் செண்பகாராண்யம் என்றும்
ஸ்ரீநாகநாதர், ஸ்ரீநாகேஸ்வரர் என
இறைவனை அழைத்தும் , இறைவிக்கு கிரிகுஜாம்பாள் ,பிறையணிவாள் நூதல் அம்மை
என்றும் பொருளுண்டு.


 செல்லும் வழி : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்
இருந்து வடகிழக்கே 7 கி.மீட்டர் தொலைவில் காரைக்கால் செல்லும் வழியில்
திருநாகேஸ்வரம் திருக்கோவில் அழகே அமையப்பெற்றுள்ளது.

நவகிரகங்களில்   ஒன்றான ஸ்ரீ ராகு பகவான் இங்குள்ள ஈசனை வழிபட்ட சாப நிவர்த்தி பெற்றதாக
வரலாறு,கெளமர் வழிபட்டு தன் மனைவி அகலியைப் பெற்றதும் பாண்டவர் தாம்
இழந்த நாட்டைப்பெற்றதும் ,திருநாகேஸ்வரத்தில் வணங்கியதால் பலன்
ஏற்பட்டதாம்

 நாகராஜர் திருக்கோவில் :நாகராஜர் தனது தேவியர்களான சிம்ஹி
,சித்ரலேகா உடன் தனி சன்னதியாக தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. ரூ 500
கொடுத்தால் இருவர் பாலாபிஷேம் செய்து வரலாம் .

ஞாயிற்றுக்கிழமை 4.30
மணிக்கு திருநாகேஸ்வரத்தில் ராகுகால பூஜை துவங்குகிறது 04.30 மணி முதல்
06 .00 மணி வரை நடைபெறும் .நாகராஜருக்கு பாலாபிஷேகம் செய்யும் போது
பால் நீல நிறமாக மாறுவது இங்குள்ள அற்புதமான விஷயமாகும்

.ஞாயிற்றுக்கிழமை
பாலாபிஷேகம் செய்வது சிறப்பு என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு
பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் ,காலசர்ப்பதோஷம் , ஆகிய பல நாக தோஷங்கள்
நிவர்த்தி ஆகுமென்பது கண்கூடாகும் .

 திருக்கோவில் திறப்பு நேரம் : காலை
5மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஆலயம்
திறந்திருக்கிறது. ''

திருக்கோவிலில் சூரியனால் உண்டாக்கபெற்ற சூரிய
தீர்த்தம் ,மற்றும் திரிசூல தீர்த்தம் உட்பட 12 தீர்த்தங்கள்
அமைந்துள்ளது.

முடிவுரை : ஜோதிடம் கூறும் நாகர் சம்பந்தமான அனைத்து
கிரகதோஷங்களையும் திருநாகேஸ்வரம் வந்து ஸ்ரீ நாகநாதர்க்கு பாலபிஷேகம்
செய்தால் நீங்குவது தெளிவான உண்மையாகும் .

 தோஷ காரணங்களால்
திருமணமாகதவர்கள் கூட திருநாகேஷ்வரத்தில் ஞாயிறுக்கிழமை பாலபிஷேகம்
செய்து பின் திருமணஞ்சேரி வந்தால் திருமணம் கைகூடுகிறது .
அற்புதமான
பழங்கால திருக்கோவில் சென்று வாருங்கள் நன்றி

Thursday, January 10, 2013

2012 my Important year

                                              ஓம் சிவாய நமஹ
                                                                                                                         
நீண்டதோர் இடைவெளிக்கு பின் பதிவிற்கு திரும்பி   இருக்கிறேன் .
 நமது பிளாக்கர் பயணத்தில் 203 இடுகைகளுக்கும்  பிளாக்கர்                                                                                                          
தனது டாஷ்போர்டு இடைமுகத்தை மாற்றியவுடன்    

 எமது நோக்கியா 5130 செல்போனில்
இருந்து பதிவு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

லேப்டாப்பில் தமிழில் டைப்
செய்ய அறியாததால் பெரிய பின்னடைவை சந்தித்தேன் .                                                          

இப்போது இமெயில் மூலம்
பதிவிடலாம்என அறிந்து

தற்போது செட்டிங் உள்ளே சென்று     இமெயில்
முகவரியை பதிவு செய்து இமெயில் மூலம் பதிவிடுகிறேன் .


 கடந்த3மாதங்களுக்கு முன் எமக்கு திருமணமாகத சூழலில்        
  பல திருக்கோவில் வரலாறு
எழுதிய பின் நன்பர்களுடன் திருப்பதி சென்று விட்டு வந்து

பின் கல்யாண
மாகாத ஆண்கள் பெண்கள் இருபாலரும் சென்று வணங்க கூடிய
திருமணஞ்சேரிப்பெருமானை வணங்கி வந்த குறுகிய காலத்தில்

26.11. 12 அன்று
காலை பழ.மாதேஸ்வரன் ஆகிய எமக்கும் கிரு.சத்யாவிற்கும் கூடுதுறை ஸ்ரீ
சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் நால்வர் சன்னதில் ஸ்ரீ மணிகண்டன் அய்யர்
அவர்கள் நடத்தி வைக்க இனிதே திருமணம் நடைபெற்றது.

இது இறைவனின் கிருபை.
ஆன்மீகமும் இறைவழிபாடும் உண்மையானதென்பதையும் எமது வேண்தலின் பேரில்
திருமணம் நடந்ததை உறுதிபடுத்தியுள்ளது.

 ஆக இறைதேடல் ஓர் மனிதனை
வலுவாக்குமென்பது உண்மையே, கொங்கு நாட்டில் பல திருக்கோவில்கள் மேலும்
எழுதவுள்ளேன் .

நான் பெற்ற சித்தர் ஆசீர்வாதம் பற்றியும் எழுத ஆவல் ,
மேலும் அற்புதமான பகிர்வுகள் உள்ளன .

மறுபடி நல்லதோர் திருக்கோவில்
பதிவுகளுடன் சந்திப்போம் .

நட்புடன் குரு.பழ,மாதேசு
அன்பே.. !                                                                                                                                     எத்தனை முறை                                                                                                         முயற்சித்தும் எழுதவே                                                                                                         முடியவில்லை......?
உன்னைப்                                                                                                                                 போன்றதொரு                                                                                                                                அழகான      கவிதை...!  

Wednesday, September 12, 2012

எம பயம் நீக்கும் ஸ்ரீ மங்களாம்பிகை உடனமர் ஸ்ரீ வாஞ்சி நாதர் திருக்கோவில் .திருவாஞ்சியம்





" புற்றில் ஆடரவோடு புனல்மதி தெற்று செஞ்சடை
தேவர் பிரான்பதி சுற்றுமாடங்கள் சூழ் திருவாஞ்சியே "

திருநாவூக்கரசர்

"ஆலயம் பற்றிப் பாடுவோர்க்கு பாவமில்லையே "
என திருக்குறுந்தொகையில் பாடியுள்ளார் .


மூலவர்:

ஸ்ரீ வாஞ்சிநாதர் ,ஸ்ரீவாஞ்சீஸ்வரர் ,
ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி என அழைக்கப்டும் சுயம்பு லிங்கமாவார்.

அம்பாள் :

ஸ்ரீ மங்களாம்பிகை எனவும் மருவார் குழலி (மாறாத மணத்தை கொண்ட கூந்தலை உடைய நாயகி ) அம்பிகை எனவும் சிறப்புப்பெயரால் வழங்கப்பெறுகிறார் .

திருக்கோவில் அமைவிடம் :

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமத்தில் அமைந்துள்ளது.

செல்லும் வழி :

கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் ஸ்ரீ வாஞ்சியம் கிராமம் அமைந்துள்ளது.

தீர்த்தம் :

999 அம்சங்களுடன் ரகசியமாக உரையும் புனித குளம் குப்தகங்கை (முனி தீர்த்தம் ) இது திருக்கோவில் உட்புறத்தில் உள்ளது. திருக்கோவில் சுற்றிலும் 23 தீர்த்தங்கள் உள்ளது.

ஸ்தல விருட்ஷம் :

சந்தன மரம் விஷேச தெய்வங்கள் : ஸ்ரீ எமதர்மராஜா -யோக பைரவர் (அமர்ந்த நிலை ) அஷ்ட பூஜ மகிஸாசுரமர்தினி ,ராகுகேது ஒரே மூர்த்தியாக அமர்ந்துள்ளார்கள்

திருக்கோவில் சிறப்புகள்:

நாயன்மார்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் . அருணகிரிநாதர் ,இராமலிங்கசுவாமிகள் ,முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

திருக்கோவில் காலம் :

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பழைய ஆலயமாகும் .கி.பி 946 ல் மூன்றாம் நரசிம்மன் மகன் வீரபாண்டியன் திருவாஞ்சியம் ஆலய கருவரை அமைத்ததாக கல்வெட்டின் மூலம் அறியலாம் .

ஸ்தலத்தின் மேன்மிக்க சிறப்புகள் :

மகாலட்சுமி திருமணம் செய்ய வேண்டி திருமால் ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் எனப்பெயர் பெற்றது. மூர்த்தி.தலம் ,தீர்த்தம் மூன்றும் பெற்றது , பிரம்மன் ,சூரியன் ,பெருமாள் , தேவர்கள் சிவனருள் பெற்ற ஸ்தலம் காசியை விட பன்மடங்கு மேலானது .

எமர்தர்மராஜா ஸ்ரீ வாஞ்சிநாதருக்கு வாகனமாக உள்ளார் . தனி சந்நதியில் எமதர்மராஜா அருள்பாலிக்கிறார் ,எமபயம் பைரவ உபாதை நீக்கும் ஸ்தலம் கங்காதேவி 999 கலைகளுடன் குப்த கங்கையாக உறையும் ஸ்தலம் .மகிஷாசுரமர்த்தினியை 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் அனைத்து தோஷ நிவர்த்தி . நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலம்

கார்த்திகை ஞாயிறு வழிபாடு :

ஸ்ரீ வாஞ்சியத்தில் குப்தகங்கை எனப்படும் முனி தீர்த்தத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுதும் வழிபட்டால் மன உடன்தூய்மையுடன் சிவதுரோக பாவம் போகும் . சூரிய பகவானுக்கே பாவம் கார்த்திகை மாதம் நீராடியதால் நீங்கியதாம் .

கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களுக்கு பஞ்சமாபாவங்களும் மன்னிக்கப்படும் என்பது சிவபெருமானின் வாக்காகும் . திருவாஞ்சிய மகாத்மியத்தில் குப்த கங்கையில் குளிக்கும் கால பலன்கள் சொல்லப்பட்டுள்ளது அதன்படி

காலை : நாற்கடல் சூழ்ந்த பூமிதானம் செய்த பலன்
மதியம் :ஆயிரம் கோடி காறாம் பசு தானம் செய்த பலன்
மாலை :கோடி பசுதானம் செய்த பலன்
இரவு : அஸ்வமேத யாகம் செய்த பலன் .

இங்கு உழவாரப்பணி செய்வது மிக உயர்ந்த புண்ணியத்தை அளிக்கிறது, கூப்பிட்டால் துயர்தீர்க்க ஓடி வருவார் : ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் ஓர் தனிச்சிறப்பு உண்டு ,

அந்த வகையில் சுயம்பு லிங்கமான வாஞ்சிநாதரை காசியிலும் 1000 மடங்கு பெருமை கொண்ட ஈசனை " ஸ்ரீ வாஞ்சிநாதா" அபயம் ஏற்படுகையில் கூப்பிட்டால் ஓடி வந்து துயர் தீர்ப்பார் .யாரெல்லாம் ஸ்ரீ வாஞ்சிநாதர் புராணம் வாசிக்கிறார்களோ அவர் முக்தி அடைவார் என ஸ்கந்தபுராணம் சனத்குமார ஸம்ஹிதை 58 அத்தியாயம் விளக்குகிறது.

திருவாஞ்சிய திவ்ய தீர்த்தங்கள் :

1.கிழக்கில் -பிரம்ம தீர்த்தம்
2.அக்னி திக்கில் -நாரக தீர்த்தம்
3 தெற்கில் -விஸ்வாமித்திர தீர்த்தம்
4 நிருதி திக்கில் - ஸர்வ தீர்த்தம்
5 பரத்வாஜ தீர்த்தம்
6ஷேச தீர்த்தம் வேண்டியன அளிக்கும்
7நாராயண தீர்த்தம்
8 ராம தீர்த்தம்
9 இந்திர தீர்த்தம்
10 திருக்கோவில் ஆனந்தக்கிணறு ஆகியன வாகும் .

கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வழிபட மிகப்பெரிய தோஷங்கள் விலகுமென்பது திருவாஞ்சிய மகிமைகளில் ஒன்றாகும் .

பூஜை முறைகள் :
ஆறுகால பூஜைகள் தினசரி நடைபெறுகிறது காலை 0500மணி முதல் 1200மணி வரையிலும் மாலை 0300மணி முதல்0830மணி வரையிலும் திறந்திருக்கும் .

பூஜை நேரங்கள் :காலை உஷத்காலபூஜை 0600மணிக்கும் காலசந்தி 8.30மணிக்கும் உச்சி கால பூஜை 1200மணிக்கும் சாயரட்சை0500மணிக்கும் 2ஆம் கால பூஜை 700மணிக்கும் அர்த்தசாம பூஜை 8.30மணிக்கும் நடைபெறுகிறது

ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபடும் முறே :

முதலில் திருக்கோவில் புனித தீர்த்தக்குளம் குப்த கங்கையில் நீராடி அங்குள்ள விநாயகரை தரிசித்து பின் ஸ்ரீ எமதர்மராஜாவை வழிபட்டு பின் அபயங்கர விக்னேஷ்வரரை வணங்கி பின் மூலவர் ஸ்ரீ வாஞ்சிநாதர் வணங்கவும்

முடிவுரை :

ஸ்ரீ வாஞ்சிநாதா என்றால் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அபயங்களில் காப்பாற்றும் வாஞ்சிநாதர் அளப்பரிய சக்தியுடையவர் . எமபயம் சாவு பயம் கொண்டவர்கள் பயத்தை நீக்கி ஆயுள் நீட்டிப்பு ஸ்தலமான ஸ்ரீ வாஞ்சியத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கு மிக மேலான பலன்பெற்றிடுங்கள்

" க்ரீங்கர பீஜ மிக்யுக்தம் ஸ்வாஹவசக்திரத; பரம் .

ஸ்ரீ வாஞ்சி நாதர் புராணம் படிக்க வந்த உங்களும் நன்மைகள் கிட்ட

ஸ்ரீ வாஞ்சிநாதரை வணங்கி பதிவை முடிக்கிறேன்

.நன்றி

ஸ்ரீ வாடாமுலையம்மை உடனமர் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் திருமயானம் .திருக்கடவூர்


திருக்கடவூர் மயானம்

மூலவர் : ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர்
அம்பாள் : ஸ்ரீ வாடா முலையாள்

திருக்கோவில் அமைவிடம் : நாகை மாவட்டம் தரங்கம்பாடிவட்டம் திருக்கடவூருக்கு அருகே திருமயானம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ பிரம்மபுரிஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது

.அபிராமி பட்டர் பாடிய புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்பாள் திருக்கோவிலுக்கு பின்புறமாக 1 கி.மீட்டர் தூரத்தில் ஆட்டோ பயணத்தில் அமைந்துள்ளது. நடந்தும் செல்லலாம் . திருக்கடவூர் வந்து அம்பிகையை தரிசனம் செய்து அருகே உள்ள திருக்கடவூர் மயானத்திற்கு சென்று வரலாம் .

சைவ சமயத்தில் உள்ள மயானங்கள் ஐந்து ஆகும்

1 .காசிமயானம்
2.கச்சி
3.காழி
4.நாலூர்

5. கடவூர் மயானம் ( இதில் ஐந்தாவது திருத்தலமாக திருமயானம் அழைக்கப்படுகிறது ).

பெயர்காரணம் :

பிரம்மதேவரை எரித்து நீராக்கி மீண்டும் சிவபெருமான் உயிர்பித்த ஸ்தலம் .அதனால் இங்குள்ள சிவபெருமானுக்கு பிரம்மபுரிஷ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

திருமயானத்தின் சிறப்புகள் :
திருஞானசம்பந்தர் ,திருநாவூக்கரசர் , சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

மார்க்கண்டேயருக்கு காசி தீர்த்தத்தை வரவழைத்து அருளிய ஸ்தலம் .
அன்று இருந்து இன்று வரை திருமயானத்தில் இருந்து தான் திருக்கடையூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஷ்வரருக்கு தினமும் புனிதநீர் எடுத்து சென்று அபிஷேகிக்கப்படுகிறது.

இங்கு தனிசன்னதியில் சிங்காரவேலர் . 3 ஆம் நூற்றாண்டில் மெளரியர் படைக்கு சிங்கார வேலர் தலைமைதாங்கி அழித்தார் . அதனால் மெளரிய அரசன் சிங்காரவேலி எனும் 53ஏக்கர் நிலத்தை காணிக்கையாக்கியதாக வரலாறு.

சேக்கிழார் திருக்கடவூர் மயான சிறப்பை

" காசியினும் மீறிய சீர் மண்ணு திருக்கடையூர் மயானம் வணங்கி"

என வர்ணிக்கையில் திருக்கடவூர் மயானச்சிறப்பை அழைக்கிறார் .1928 ல் கடைசியாக குடமுழுக்கு நடந்து 83 ஆண்டுகள் ஆகிறது . திருக்கோவில் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. முடிந்தால் நேரில் சென்று தரிசித்து உதவுங்கள்

முடிவுரை :

தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாயங்களில் புகழ்பெற்ற திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் மிக நுட்பமானது திருக்கடவூர் மயானமாகும் . நல்லதோர் சிவாலயம் ஏதோ ஓர் காரணத்தால் மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது .

திருக்கோவில் சென்று ஸ்ரீ வாடாமுலையாள் உடனமர் பிரம்ம புரிஷ்வரரை சென்று வணங்குங்கள். ஸ்ரீபிரம்மபுரிஷ்வரர் திருமேனியில் அபிஷேகித்த திருநீற்றை தருகிறார்கள் . அற்புதமணம் . திருக்கடவூர் திருமயானம் வந்து இறைவன் இறைவியை தரிசித்து நலன்கள் பெறுங்கள்.

Sunday, August 19, 2012

ஸ்ரீ அபிராம வள்ளி உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் .திருக்கடவூர் .


ஸ்ரீ அபிராமியம்பிகை உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர்
திருக்கடவூர்




விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன ,
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் ,
பழிக்கே சுழன்றும்வெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் ,
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டினியே.

அபிராமி அந்தாதி (பாடல்79) அபிராமி பட்டர்

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ அமிர்தகடேஷ்வரர், என்றும்
அமுதகடோற்பவர் ,அமுதகடேசர் ,கடவூர் வீரட்டேஸ்வரர் என பல திருநாமங்கள் உண்டு.


அம்பாள் :
ஸ்ரீ அபிராமி அம்பிகை ஸ்தலம் சரஸ்வதி தேவி அபிராமியை
பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் ஆகும்

அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடவூர் அமைந்துள்ளது. சீர்காழி,பொறையாறு ,மயிலாடுதுறைக்கு பஸ் வசதி உண்டு. வில்வ வனம், பிஞ்சில வனம் என திருக்கடவூர் வேறு பெயர்களும் உண்டு.

ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவபெருமானை வணங்கி நின்ற போது சிவன் ஓர் வில்வ விதையினை பிரம்மனிடம் கொடுத்து இது இட்ட இடத்தில் எங்கு முளைக்கிறதோ அங்கு தங்கி என்னை வழிபடுங்கள் எனக்கட்டளையிட திருக்கடவூரில் வில்வ விதையை இட்ட போதே அது குறித்தகாலத்தில் முளைக்க மனம் முருகி பிரம்மன் தங்கி வழிபட்டு ஞான உபதேசம் பெற்ற இடமாகும் .

முதலில் திருக்கடவூர் ஸ்தலத்திற்கு வில்வவனம் என்றும் ஸ்ரீ வில்வனேஷ்வரர் என்றும் அழைத்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

கடவூர் பெயர்காரணம் :

தேவர்களும் அசுரகர் அமுதத்திற்காக கடைலைக்கடையும் போது உண்டான அமுதத்தை கடத்தில் அடைத்து நீராடச்சென்று திரும்பிய போது அது சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கமாக இருக்க கண்டனர் . கடத்தில் இருந்த அமிர்தமே லிங்கமானதால் அமிர்தகடேசர் அமுதலிங்கம் என அழைக்கப்பட்டதாகவும் , கடத்தில் உண்டானதால் கடவூர் எனவும் ஆதியில் அழைக்கப்பட்டும் பின் திருக்கடவூர் ,திருகடையூர் என பெயர் மாறியதாம் .

பிஞ்சிலம் என்றால் சாதி மல்லிக்கொடியாகும் .இதுவே இங்கு ஸ்தல விருட்சமாகும் .ஆண்டு முழுவதும் பூக்கும் சாதிமல்லியை சுவாமிக்கு அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுகிறது.

திருக்கோவிலில் கள்ளவாரணப்பிள்ளையார் வணங்குதல் சிறப்பு . தேவர்கள் அமிதம் சிவலிங்கமாய் சுயம்பு மூர்த்தியாய் நிற்க கண்டு அதிசயித்து நிற்க ஸ்ரீ கள்ளவாரணப்பிள்ளையாரை வணங்கி அமுதம் பெற்று தேவர்கள் அருந்தியது புராண வரலாறு

. ஸ்தலத்தின் சிறப்புகள் :

அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
குங்கிலியக்கலயர் ,காரிநாயனார் போன்ற அடியார்கள் தொண்டாற்றி முக்தி பெற்ற ஸ்தலம். பட்டரால் அபிராமி அந்தாதியை பாடிய போது அபிராமி அம்பாள் அமாவசையை பெளர்ணமியாக்கி அற்புதம் நிகழ்த்திய ஸ்தலம் .

பாற்கடலை கடைந்து எடுத்த அமுதக்குடமே அமிர்தகடேசராக சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஷ்தலமாகும் . மார்கண்டேயர் அமிர்தலிங்கத்தினை வணங்கி காலனை வென்ற ஸ்தலமாகும் .இப்படி பல அற்புதங்களை பெருமானும் அம்பாளும் நிகழ்திய ஸ்தலமாகும் .

தீர்த்தங்கள் :

அமிர்தபுஷ்கரணி ,காலதீர்த்தம் , மார்க்கண்டேய தீர்த்தம்

ஸ்தலமரம் : வில்வமரம் ,சாதிமல்லிக்கொடி எனப்படும் பிஞ்சிலம் பூஜைகள் :ஆறுகாலப்பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழா:

சித்திரைமாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கி.பி 600 ன் காலத்தில் இருந்து கல்வெட்டுக்கள் காணப்பெறுகிறது. கொழும்பு அரசனால் திருக்கடவூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறாகும் .

முடிவுரை :
அண்மையில் கும்பகோணம் சென்று நாங்கள் தரிசித்த ஸ்ரீ அமிர்தகடேஷ்வரும் அன்னை அபிராமியும் வியக்க வைத்தனர் . கூட்டம் நிரம்பி வழிகின்றது. பல சிறப்புகளை உடைய திருக்கோவில் குடும்பத்துடன் வந்து தரிசியுங்கள் .

வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும்,அன்னை அபிராமியையும் தரிசியுங்கள். நல்லன எல்லாம் அருளும் அன்னை அவள் . தீமைகள் நெருங்காதிருக்க அவ்வப்போது மனதால் நினையுங்கள் .

"முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே " என அபிராமி பட்டர் மொழிந்த கருத்துக்கள் புலப்படும். கட்டயாகமாக தரிசிக்க வேண்டிய அழகான ஸ்தலம் . நன்றி

Tuesday, August 14, 2012

நட்பூ ( நட்புக்காக 200 வது பதிவை சமர்பிக்கிறேன் )


நட்பே..!
வறண்டு கிடந்த நிலம் போன்ற
எம் எழுத்துக்கு விதையிட்ட
முதல் வித்து நீ ....!!

எமக்குள்ளே மறைந்து
கிடந்த எழுத்துக்களை
வரிகளாக்கி வாசித்து
மகிழ்ந்தது நீ ...!

யாம் அறியாத இணையம்
என்னும் பிரமாண்ட இருக்கையில்
உட்காரச் செய்து
உலகைச்சுற்றி வரச் செய்தவன் நீ ...!

உன் நட்பூவால் படைக்கப்பட்டதோர்
ஓர் அழகிய வலைப்பூ ...!!

பூக்கள் அழகழகாய் கோர்த்து
வலைப்பூ உலகெங்கும் பூத்துக்குழுங்குகிறது...!
அவ்வப்போது வந்து பூக்களின்
சாரலில் நனைந்து செல்லுங்கள் ...!
ஏனெனில் இந்த பூந்தோட்டத்தை
உருவாக்கிய உன்னமதான நட்பூ நீ ...!!

நட்புக்கு சமர்பணம் :
எமது 200 இடுகையான இந்த பதிவும் வலைப்பூவும்
ஓர் சிறிய முயற்சியே என்றாலும் கூட
41 பின் தொடர்பவர்கள்
8500 பார்வையாளர்கள் என சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது
என்னைப்போலவே என் வலைப்பூவும் . சற்றே திரும்பி பார்க்கையில் ஓர் மழைக்கால நாளில் பணிக்காக ரயில் ரோட்டில் பேசிக்கொண்டிருக்கையில் எம் எழுத்தார்வத்தை அறிந்த எம் நன்பர் பிரகாஷ் சென்னிமலை அவர்கள் இந்த வலைப்பூவை உருவாக்கித்தந்தார் .

இணையத்தை பற்றி அறிந்திராத எனக்கு பிரகாஷ் நட்பாய் கிடைத்தது வரம் ,
அந்த அன்பு நட்புக்காய் எம் 200 வது படைப்பை சமர்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன் . நன்றி

Saturday, August 11, 2012

திருமணத்தடை நீக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுறை ஸ்ரீ உத்வாகநாதர் திருக்கோவில் . திருமணஞ்சேரி. மயிலாடுதுறை


SRI UDVAGANATHAR KOKILAMPAL TEMPLE , TIRIMANASERI


"அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாள்ஒரு கூறாகி
மயிலாறு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில் வானைப் பற்றி நின் றார்கில்லை பாவமே"

தேவாரப்பாடல் திருஞானசம்பந்தர்



அறிமுகம் :

சிவாலயங்களில் நால்வர்களால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274 அவற்றில் காவிரி வடகரையில் அமையப்பெற்ற சிவஸ்தலங்கள் 63 ஆகும் . அதில் 25 வது திருத்தலமாக திருமணஞ்சேரி அமைந்துள்ளது .

மூலவர் :

ஸ்ரீ உத்வாகநாதசாமி

அம்பாள் : ஸ்ரீ கோகிலாம்பாள்

திருக்கோவில் பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர்

அமைவிடம் :

மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் நகருக்கு வடக்கே சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி என்ற சிறிய ஊரில் பிரமாண்ட திருக்கோவிலாக அமைந்துள்ளது.

சிறப்பும் பெயர் காரணமும் :

சிவனும் பார்வதியும் பூலோக திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகும் . இறைவி அருள்மிகு கோகிலாம்பாள் இறைவன் ஸ்ரீ உத்வாக நாதர் ஸ்சுவாமியின் கோபத்தால் பசுசாபம் ஏற்பட்டு பசுமாடாக மாறி தவம் செய்து பின் சாபம் நீங்கி பூலோகத்தில் பரத்வாஜ ரிஷி என்பவரின் மகளாக பிறந்து மீண்டும் பூலோக முறைப்படி சிவபெருமானை திருமணம் புரிந்து மக்களுக்கு காட்சி அளிக்கும் இடமே திருமணச்சேரியாகும் .

கல்யாண சுந்தரமூர்த்தி (உத்வாக நாதர் ) காட்சி கொண்டு ஸ்ரீ கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் "திருமணஞ்சேரி " என சிறப்பு பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு :

பார்வதி ஒருநாள் சிவனிடம் நாதா தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள அதை கவனித்த சிவபெருமான் "நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப்பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் " என கட்டளையிட்டார் .

ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்திகொண்டு உலவி வந்தார் .அங்குள்ள லிங்கத்தின் மீது தினம் பாலைப்பொழிந்து அபிஷேகித்து வந்தார் . சிவன் மனம் மாறினார் . பசு உருவில் இருந்த அம்பிகையில் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது பட்டு தழும்புகள் உண்டானது அந்த ஊர் " திருக்குளம்பம் என பெயர் பெற்றது .

பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது. திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார் .

தெய்வீகப்பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க சிவபெருமான் தோன்றி " மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் நான் எதிர் கொண்டு வருவேன்" எனக்கூறி மறைந்தார் .

இறை உத்திரவுப்படி திருமண கங்கணதாரணமும் மங்கள ஸ்நானமும் திருவேள்விக்குடியில் நடைபெற்றது.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் சிறப்பாக செய்தார் .

பின் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர இறைவன் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே "திரு எதிர்கொள்பாடி " என அழைக்கபடுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு திருமணச்சேரியில் கல்யாண வைபவம் நடந்ததாக வரலாறு. திருமணத்தைகாண விண்ணவர்கள் தேவர்கள் நவகிரகங்கள் வந்தனர் .

திருமணச்சேரியில் சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது.

ஸ்தல விருட்சம் : வன்னி கொன்றை ஆகும்.

திருமணஞ்சேரியுடன் வரலாற்று தொடர்புடைய திருக்கோவில்கள் 10 ஆகும் .

தேரழந்தூர் -அம்பிகை பசு சாபம் ஏற்ற ஸ்தலம்

கோமல் - இறைவி பசுமாடக வலம் வந்த(நாச்சினார்குடி,திருக்கொலம்பியம் ,அசிக்காடு ) ஸ்தலங்கள்

திருவாடுதுறை - அம்பாள் பசு சாபம் நீங்கிய ஸ்தலம்

திருவாலங்காடு - அம்பிகை பரத மகரிஷியாக வேதி அவதாரம் எடுத்த ஸ்தலம்

குத்தாலம் அம்பாளை பெண் பார்க்க (திருத்துருத்தி )வந்த ஸ்தலம்

திருவேள்விக்குடி -திருமண யாகங்கள் புரிந்து மங்கள
ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம்

குறுமுலைபாளை -பாலிகை ஸ்தாபனம் செய்த ஸ்தலம்

வில்லியநல்லூர் - பிரம்மா திருமண வேள்வி புரிந்த ஸ்தலம்

திரு எதிர்கொள்பாடி - இறைவனை மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு வந்த இடம்

திருமணஞ்சேரி - பூலோக முறைப்படி இறைவனும் இறைவியும் திருமணம் செய்து மணம் புரிந்த கோலத்துடன் காட்சியளிக்கும் ஸ்தலம்

எம் அனுபவம்-

திருமணஞ்சேரியை தரிசிக்கும் ஆர்வத்தில் சென்ற வாரம் அந்த வாய்ப்பு கிட்டியது . திருக்கோவில் அமைப்பே அழகாக இருக்கிறது. திருக்கோவிலுக்குள் ரூ 15 மட்டுமே பரிகாரச்செலவாக மாலை பூ என 100ரூபாய்க்குள் மட்டுமே செலவாகிறது.

ஏழை பணக்கார பேதமின்றி எல்லோரும் திருமணம் தடை பரிகாரம் செய்யலாம் . இங்கு கல்யாணம் முடிந்து வருகிற தம்பதிகளைப் பார்த்தாலே திருக்கோவிலின் மகிமை நமக்கு புரிகிறது . திருமணமாகத பலர் வருகின்றனர்.

.திருக்கோவிலில் கொடுக்கப்படும் மாலை,விபூதி,குங்குமம் ,மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை திருமணமாகாமல் வருகின்றவர் மட்டும் உபயோகித்தும் வீட்டிற்கு சென்றதும் காலையில் குளித்து பிரசாத எலுமிச்சையை பிழிந்து உப்பு சக்கரை சேர்காமல் சாப்பிட்டு ஆலயத்தில் கொடுத்த மாலையை அணித்து தீபம் ஏற்றி வழிபட்டும் விபூதி குங்குமத்தை தினம் இட்டுக்கொண்டும் வர வேண்டுமாம் .

திருமணம் முடிந்ததும் மஞ்சள்பையில் பத்திரப்படுத்திய பழைய மாலையை திருக்கோவில் கொண்டு வந்து பிரார்தனை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருமணஞ்சேரி வந்து சிவனை வணங்கி திருமணம் தடைபடும் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் . திருக்கோவில் 1100 வருட வரலாற்றை உள்ளடக்கியது திருமணஞ்சேரியாகும் .

நாம் பகிர்ந்தது சிறிதளவே .
நன்றி

Wednesday, August 8, 2012

ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில், அந்தியூர்


SRI KONNAMARATHI AYYAN TIRUKKOVIL ANTHIYUR


அந்தியூர் ஸ்ரீ குருநாத சாமி (SRI GURUNATHA SAMY TEMPLE ., ANTHIYUR திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில் விஷேசமானது . இத்திருக்கோவில் அந்தியூர் இருந்து பர்கூர் செல்லும் வழியில் புதுப்பாளையம் குருநாதசாமி திருக்கோவில் அருகில் சிறிய வனத்தில் அமைந்து உள்ளது.

திருக்கோவில் மூலவர் :

கொன்ன மரத்தையன்

பெயர் விளக்கம் ;

கொன்னை மரத்தையன் ,கொன்ன மரத்தய்யன் என அழைக்கப்பட்ட போதிலும் சுவாமி புன்னை மரத்தடியில் இருந்ததால் புன்னை மரத்தையன் என்பதே காலப்போக்கில் மருவி கொன்னை மரத்தையன் ஆனதாக கூறுவதுண்டு .

திருக்கோவிலைச் சுற்றிலும் வேப்ப மரங்கள் ,ஊஞ்சல் மரங்கள் நிறைந்த அமைதியான இடம் .தியானம் செய்ய ஏற்ற இடம் .

திருக்கோவில் முகப்பில் காவல்காரன் எனும் காவல் தெய்வமும் சற்று தூரம் நடந்தால் திருக்கோவில் முகப்பில் பல்வேறு வேல்கள் குத்தப்பட்டு இருக்க

வலப்புறம் ஸ்ரீவீரகாரன் ,
ஸ்ரீகொன்னை மரத்தையன்,
மற்றும் ஸ்ரீபெருமாளின் அம்சமாக பெருமாள் சாமியும்

திருக்கோவிலில் அமர்ந்திருக்க அழகான திருக்கோவிலாக காணப்படுகிறது.

வார பூஜை புதன் கிழமை அன்று நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ குருநாத சாமியை பற்றிய முழு விபரங்களும் இந்த வலைப்பூவில் உள்ளது.

முடிவுரை:

ஆடி மாதம் வந்தாலே ஈரோடு மாவட்டம் கல கலப்பாகிவிடும் . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பண்டிகையான அந்தியூர் ஸ்ரீ குருநாதசாமி பண்டிகை

இன்று 8.8.12 துவங்கியது. 5 நாட்கள் நடைபெறுகிற அந்தியூர் குருநாதசாமியின் வரலாறு, தோற்றம், ஆன்மீக நிகழ்வுகள் முன்பே இதே வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன் .

படியுங்கள் முடிந்தால் வந்துவிட்டு செல்லுங்கள் மிகப்பெரிய குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையுடன் ஸ்ரீ குருநாதசுவாமி அருள்பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

Tuesday, July 31, 2012

மழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்



ஆன்மீக ஆச்சர்யம்

எப்போதும் இல்லாத அளவில் 2012 வருடத்தில் மழை இல்லாமல் கர்நாடக மாநிலம் கடும் வறட்சி ஏற்பட்டது .

கர்நாடகா அரசு ஏறத்தாழ 150 தாலுக்காக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவித்தது . பின் சுதாரித்துக்கொண்ட கர்நாடக அரசு தனது இந்து அறநிலையத்துறை யத்தின் வசம் சுமார் 18 கோடி ரூபாயை மழைக்காக யாகம் செய்யுமாறு உத்திரவிட்டது .

அதன்படி கர்நாடகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாசஸ் பூஜாரி கர்நாடகா முழுவதும் உள்ள 34000 திருக்கோவில்களும் தலா 5000 காசோலை அளித்து , நடத்த வேண்டிய பூஜை முறைகளுடன் நடத்த உத்திரவு பிறப்பித்தார் .

கடந்த ஜீலை 27 ஆம் நாள் பூஜை ஆரம்பிக்கப்பட்டது . கர்நாடகவின் அனைத்து திருக்கோவில்களிலும் நிகழ்த்தப்பெற்ற பூஜையின் விளைவாக அந்த இரண்டு நாட்களிலும் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக தென்கர்நாடகம் ,பெங்களூர் ,சிமோகா ,சிங்மங்களூர் ஆகிய பகுதிகளில் மழையின் கடுமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . ரயில் போக்குவரத்து சேவை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழைக்காக யாகமா என கேலி செய்த எதிர்கட்சிகள் மழை பெய்ததும் ஆச்சர்யப்பட்டார்களாம் . இறை வழிபாட்டின் உண்மையை உணர்ந்த கர்நாடக அரசே முனைப்பாக மழை வேண்டி யாகம் செய்தது வியப்பான ஒன்றாகும் .

இறை வழிபாடு வேண்டுவோர்க்கு வேண்டுவன கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . தமிழகத்திலும் பழங்கால மன்னர்களும் மழை இல்லாமல் மக்கள் துன்பப்பட்ட போது மழை வேண்டி யாகம் செய்து மழையை வரவழைத்தாக நான் கேள்விப்பட்டதுண்டு.

ஆயிரமாயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் "அவனின்றி அணுவும் அசையாது"

இப்பதிவுவை எழுதவும் மற்றும்

உடனடியாக செய்தியை வெளியிட்ட
தினமலர் நாளிதளுக்கு நம் வலைப்பூவின் சார்பாக நன்றிகளாயிரம் .

Tuesday, July 17, 2012

மனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )




மனிதரும் கடவுளாகலாம் [சரண்யா]

சென்ற வாரம் கோவை ஈரோடு மாவட்டச் செய்திகளில் வலம் வந்த முக்கியமானவர் .

கடந்த ஜீன் 30 2012 அன்று கோவையில் இருந்து கருத்தரங்கு ஒன்றுக்காக சாலினா,சரண்யா, ,விமல் , உட்பட 6 பேர் சேலம் சென்று கருத்தரங்கு முடித்து விட்டு

சேலத்திலிருந்து கோவை நான்கு வழிச்சாலையில் காரில் பயணித்து இரவு 9 மணிக்கு வந்தபோது கோவையில் இருந்து சித்தோடுக்கு ஒரு லாரி திடிரென குறுக்கே வர காரும் லாரியும் எதிர்பாரத விதமாக மோதிக்கொண்டன..

காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் . ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சாலினா என்பவரும் இறந்து விட


சரண்யா மேல் சிகிச்சைக்காக கோவையில் ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் சரண்யாவின் அப்பாவிடம் தெரிவிக்கவும் இடிந்து போன சரண்யாவின் அப்பா மணியன் தனது மகளின் உடல் உள்ளுருப்பகளை தானமாக தர ஒப்புதல் தந்தார் .

அதன்படி பல்வேறு மருத்துவ மனைகளிகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் சரண்யாவின் உடல் உள்ளுருப்புகளை தரப்பட்டது .இதனால் 7 நோயாளிகளுக்கு புதுவாழ்வு கிடைத்தது.


சரண்யா பற்றி :

கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரண்யா B.E எலக்ரிக்கல் முடித்து 93 சதவீத மதிப்பெண் பெற்று கடைசியாக நடந்த தேர்வில் தேர்வானவர்.பள்ளி கல்லூரி நாட்களில் சமுக சேவையில் விருப்பமுடையவர் .

சரண்யாவின் சமுக சேவை எண்ணம் போல வே அவர் உள்ளுருப்பு தானத்தால் "இறந்த சரண்யாவின் ஆத்மா சாந்தியடைந்தது. சிறிய வயதில் இருந்து அவருடன் ஒன்றாக படித்த சாலினா என்ற தோழி இதே விபத்தில் இறந்து விட்டார் .

மலர்கள் சில காலையில் பூத்து
மாலையில் காய்ந்து
போகும்.... .!

சரண்யா போன்ற
பூக்கள்
இருந்தாலும்
உதிர்ந்தாலும்
காலமெல்லாம் அதன் வாசம்
நம்முடன் -எப்போதும்
கலந்திருக்கும்.

முடிவுரை:

உடல் உள்ளுருப்பு தானம் செய்து மறைந்த சரண்யாவிற்கும்
அதே விபத்தில் இறந்த மற்ற நான்கு ஆன்மாக்கள்
சாந்தி அடைய இறை துணை வேண்டுகிறேன் .

Friday, July 13, 2012

விண்ணப்பித்து விட்டீர்களா? கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012_13 க்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012 _13 க்கான அறிவிப்பை கடந்த 9.7.12 அன்று வெளியிட்டது. இதன்படி 1870 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப 10.8.12 கடைசி தேதியாகும் .
வங்கி அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் கட்ட கடைசி நாள் 14.08.12
தேர்வு நடைபெறும் நாள் 30.09.12 காலை 10மணிமுதல் மதியம் 1 மணி வரையாகும் .

21 வயது முடிந்த 40வயதிற்குட்பட்ட 10ஆம் வகுப்பு படித்த தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் . பொது அறிவு பொதுதமிழ் ஆகியவற்றில் 200வினாக்களுக்கு 300மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் .

விண்ணப்பதாரர்கள் 10.7.12 செய்தித்தாள்களை பார்த்தோ அல்லது

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net

ஆகிய இணையங்களில் விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்

முடிவுரை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மேற்கண்ட முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
உங்கள் நன்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் ஆகவே அனைவருக்கும் பகிருங்கள் .
நம் வலைப்பூவைப் பார்த்து விண்ணப்பித்து தேர்வு எழுதும்

அனைவருக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

குருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா


SRI kakuvai mariamman temple function -2012 GURUVAREDDIYUR


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்
சென்ற வருடம் நடந்து முடிந்தது .

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்

ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.


குருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்
கலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .

Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்




திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி

Sunday, June 17, 2012

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். கல்வடங்கம். சங்ககிரி வட்டம்





கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

SRI ANGALAPARAMESWARI TEMPLE, KALVADANGAM


அமைவிடம் :

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள பழங்கால திருக்கோவில்களில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் ஒன்றாகும். எடப்பாடியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் திருக்கோவிலைக் காணலாம் கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் திருக்கோவில் அமைந்துள்ளது.

மூலவர் :

ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் திருக்கோவில் முகப்பில் பழங்கால தேர் நிற்க ரசித்து முன்னே சென்றால் பிரமாண்டமான ராஜ கோபுரம் தரிசித்து உட்பிரகாரம் சென்று நீண்ட கொடிமரம் அதைதொடர்ந்து காவல் தெய்வங்கள் வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம் .

அழகிய அம்சங்கள் பொருந்தி பலர் வாழ்வில் ஏற்றம் அளித்த அழகிய அம்மன் . மூலவர் அருகில் பழங்காலத்தில் இருந்து காணப்படும் பாம்பு புற்று உள்ளது. திருக்கோவில் ஷ்தல மரமாக வில்வம் அமைந்துள்ளது. அருகே பிரமாண்ட அரசமரம் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களால் விரும்பி வணங்குகின்ற பழங்காலத்திய காண வேண்டிய சக்தியான அம்மனாகும் ,வெள்ளிக்கிழமை, அமாவசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

முடிவுரை:

காண வேண்டிய தரிசிக்க வேண்டிய ஆலயங்களில்

கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும் .

Sunday, June 10, 2012

நட்பே நலமா.!


பிரியமிகு நட்பே.. !!

ஆயிரமாயிரம் சோதனைகள்
கடந்து வந்திருக்கும்
நம் நட்பு...!

உனக்கு கணவனும்
எனக்கு மனைவியுமாய்
வந்து நாம் விரும்பிய
வாழ்வை மலர வைத்திருக்கலாம் ..!

பதினாறு பக்கங்களாக
நட்பை பலமாக்கிய
நம் கடிதங்களின்
நட்பை யாரும்
புரியாமலிருக்கலாம் .,!

காலம் ,
நேரமின்மை
உன் குழந்தைகளால்
நம் நட்பை வளப்படுத்த
முடியாமையால் தவறிப் போயிருக்கலாம் .!

இழந்த போன நட்பே.. !
எனக்காக நீ
அனுப்ப வேண்டியது
மடல் மட்டுமல்ல ..!
நீ மறந்த நம் நட்பின்
பசுமையான
நினைவுகளையும் தான் ..!

Friday, June 8, 2012

சொல்லி விடு


அன்பே ... !
இப்போது எனக்காக
சொல்ல வில்லை
என்றாலும் கூட
பராவாயில்லை...!
உனக்காக கடைசி
இதயம் சாகும்
போதாவது சொல்லி விடு...!
உன் காதலை...!

Friday, June 1, 2012

அன்னதானம்



பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

சித்தர்கள் சொல்லிச்சென்ற தத்துவங்கள்


சித்தர்கள் தங்கள் வைத்திய முறைக்காகவும் யோக நெறிக்காகவும் 96 தத்துவங்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். அவற்றில் சிலவற்றை நாம் அறிந்திருந்தாலும் சில அடிப்படை விஷயங்கள் அறிந்திராமல் உள்ளதால் அறிந்து கொள்ள வேண்டி பதிவிட்டுள்ளேன் .



அறிவு 1 - கருத்துச்செயல்பாடு

வினைகள் 2- நல்வினை,தீவினை

முக்குற்றங்கள் 3- வாதம் பித்தம் ,சிலேத்துமம்

குணம் 3-சாத்வீகம் ,தாமஷம்,ராட்ஷசம்

ஈடணை 3-தாரேட்சணை,புத்ரேட்சணை,விரேட்சணை

மலம் 3-ஆணவம் ,கன்மம் ,மாயை


மண்டலம் 3- சூரியன் ,சந்திரன், அக்னி

கரணம் 4- மனம் ,புத்தி, சித்தம் ,அகங்காரம்

பூதம் 5-மண் ,நீர் ,நெருப்பு,காற்று ஆகாயம்

பொறி 5- மெய்,வாய் ,கண்,மூக்கு செவி

புலன் 5- வாய்,கால் ,கை,குதம் ,குறி

கண்மேந்திரியம்
5- வாக்கு,பாணி,பாதம் ,பாயு ,உபஸ்தம்

ஞானேந்திரியம் 5- உணர்வு,அறிவு,வெபம் ,தாக்கம் ,மெய்

ஆசையம் 5-மலம், விந்து,சிறுநீர்,சத்து,உணவு ஆகிய ஐந்தும் தங்கும் இடங்கள்

கோசம் 5-ஆகாரமையம் ,விஞ்ஞானமையம் ,மனோமயம் ,பிராணமயம் ஆனந்தமயம்

அவஸ்தை 5-சொப்பணம்,சுக்கிரம் ,கமுத்தி,துரியம் ,துரியாநிதம்

ஆதாரங்கள் 6-மூலாதாரம் ,சுவாதிட்டானம்,மணிபூரகம் ,
அனாகதம் ,விசுத்தி,ஆன்ஞேயம்

இராகம் 8- காமம் ,குரோதம் ,லோபம் ,மதம் ,
மோகம் ,ஆச்சர்யம் ,இடும்பை,பொறாமை

நாடி 10-இடகலை,பிங்கலை.கழுமுனை, கண்டம் ,
அட்சி,கந்தாரி,சுத்தி, அலம்புடை,சங்கினி,குரு

வாயு 10- பிராணன் ,அபானன் ,வியானன் ,உதானன் ,சமானன் ,
நாகன் ,கூர்மன்,கிரிகரன் ,தேவதத்தன் ,தனஞ்செயன்

Saturday, May 19, 2012

திருமுருகர் அவதரித்த வைகாசி விசாக நட்சத்திர வழிபாடு


தமிழ்கடவுள் முருகப்பெருமான் இந்துக்களால் விரும்பி வணங்கப்படுகிற கடவுள் . இறைவழிபாட்டில் முக்கிய விஷேச நாட்களை தேர்ந்தெடுத்து அந்த திதி ,நாட்கள் ,நட்சத்திரங்கள் , ஓரைகளை கணக்கிட்டு வணங்கினால் கண்டிப்பாக பலன் நிச்சயம் . அவ்வாறு முருப்பெருமானுக்கு தைப்பூசம் ,மாசிமகம் ,பங்குனி உத்திரம் , ஆடிப்பூரம் , இப்படி வருகின்ற நட்சத்திர நாட்களில் வைகாசி விசாகம் மிக முக்கியமாக முருகர் வழிபாட்டிற்கு உரிய நாளாகும் .

2012 ஆண்டிற்கான வைகாசி விசாக நாள் வரும் 03.06.2012 வைகாசிமாதம் 21 நாள் ஞாயிற்றுக்கிழமை நாளில் வருகிறது. அன்றைய தினம் உங்களுக்கு அருகில் உள்ள ஏதேனும் ஓர் திருமுருகர் ஆலயத்தில் வழிபாடு செய்வதின் மூலம் வளர்ச்சிகள் கைகூடும் .



வீட்டில் வணங்குவது எப்படி :


அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து சாணத்தால் மெழுகி விரதமிருந்து வீட்டில் பூஜையறையில் உள்ள முருகப்பெருமான் படத்தை சுத்தம் செய்து வைத்து

5 முக விளக்கில்
5 வித எண்ணெய் ஊற்றி
5 வித பூக்கள் ஒருசேரகட்டி
5 விதமான பழங்கள் வாங்கி வைத்து நைவேத்தியமாக்கி'
முருகருக்கு பிடித்த கந்தரப்பத்தை செய்து படைத்து

முருகருக்கு பிடித்த மாம்பழத்தையும் படைத்து அருகே முழுமுதற்கடவுளான விநாயகருக்கு கற்பூர தீபாராதனை காட்டி பின் முருகப்பெருமானுக்கு தீபம் காட்டி கந்தர்சஷ்டி கவசம் ,கந்தர் அநுபூதி, கந்த குரு கவசம் பாடி ,கேட்டு ,படித்து வழிபட தமிழ் கடவுள் முருகர் நம் வீட்டில் வந்து இறங்கி நம்மைக்காப்பது கண்கூடு.

பின் ஏதேனும் ஓர் முருகரின் ஆலயம் சென்று வழிபாடு செய்து வசதியிருப்பின் பக்தர்கள் தாகம் தீர்க்க மோர் ,தண்ணீர் ,தானமாக தர நம் குலம் தழைத்து மேலோங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு .அன்றைய தினம் திருமுருகர் ஆலயத்தில் செல்லும்போது செந்நிற மலர்கள் , நெய் (விளக்கேற்ற) அபிஷேகப்பொருட்களுடன் செல்வது சிறப்பு.'

ஜோதிடத்தில் பூமிகாரகன் எனச்சொல்லப்படுகிற செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் ஆவார் . எனவே வீடுகட்ட ,இடம் வாங்க ,நிலம் வாங்க செந்நிற பொருட்கள் வாங்குவோர் விற்போர் , ரியல் எஸ்டேட் போன்ற தொழில் செய்பவர்கள் அதிகாரத்திற்குரிய வேலைக்கு செல்ல வேண்டி விரும்புபவர்கள் ஆகியோர் முருகரை வழிபட்டால் மேன்மேலும் வளர்ச்சி கூடும் .

முடிவுரை :

திருமுருகரை முறையாக வழிபாடு செய்ய வழிவகுக்கவே இந்தப்பதிவு. வசதியில்லை என்னால் படைக்க இயலாது என்று எண்ணுபவர்கள் ஏதேனும் ஓர் முருகர் ஆலயம் சென்று வழிபடுங்கள் .ஏனெனில் இறைவன் நீங்கள் திருக்கோவில் வரவேண்டும் என்பதையே விரும்புகிறார் . நன்றி

Wednesday, May 16, 2012

பழமுதிர்சோலையின் அழகிய நூபுரகங்கை தீர்த்தம்



நூபுரகங்கை தீர்த்தம் :


மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையும் ஒன்று .பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது.

வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .

அருணகிரி நாதர்பாடல் :

சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில்

" ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை"

என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் .

மிகவும் பழமை பொருந்திய நூபுரகங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. நூபுரகங்கை தீர்த்தத்தில் பல நோய் தீர்க்கும் காரணிகள் மூலிகைகள் உள்ளதாக சொல்கிறார்கள் . இரும்புச்சத்தும் ,கால்சிய சத்தும் ,தாமிரசத்துக்கள் அடங்கியுள்ளதாக பலர் கருத்து . எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் நூபுரகங்கையில் குளித்து விட்டு வந்தோம் .எமக்கு உண்மையாகவே புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் இந்தப்பதிவு.

நாங்கள் நன்பர்களுடன் சென்றபோது பழமுதிர்சோலையில் இறங்கி சற்றுதூரம் சென்றதும் சிறு சிறுகடைகள் சுமார் 100படிகட்டுகள் ஏறிச்சென்றால் இரண்டு விதமான டிக்கட் விற்கிறார்கள் . அதில் ஸ்பெசல் கியூவில் சென்றால் நன்றாக 15 வாளி வரை ஊற்றுகிறார்கள். நன்றாக குளிக்கலாம் . அற்புதமான இடம் .

ஸ்ரீராக்கியம்மன் சன்னதி:

ஸ்ரீ ராக்கியம்மன் சன்னதி நூபுரகங்கை தீர்த்தம் அருகில் உள்ள காக்கும் கடவுளாகும் .அம்பாளின் திருவுருவம் போல இருக்கும் சன்னதியில் தரிசித்து விட்டு சற்றே பள்ளத்தில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தை எட்டிப்பார்த்துவிட்டு அருகேயுள்ள பழமுதிர்சோலை ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு வந்தோம் .

முடிவுரை: பழமுதிர்சோலை பற்றிய முந்திய பதிவில் எப்படி பழமுதிர்சொலை செல்வது என அறிந்து கொள்ளவும் .அழகர்மலையும் ,பழமுதிர்சோலையும் நூபுரகங்கை தீர்த்தமும் மதுரை மக்களுக்கு கிடைத்த பொக்கிசங்கள் நன்றி.

ஸ்ரீமுருகரின் ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை தரிசனம்



பழமுதிர்ச்சோலையில் அருள்பாலிக்கும்

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்



பழமுதிர்சோலையின் முருகரை வணங்க துதி :

"எழுமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங் கிடைப்ப முன்னவன்
மழமுதிர களிறென வருதல் வேண்டிய
பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் ."

அமைவிடம் :

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர் கோயில் நடுமலையில் பழமுதிர் சோலை அமைந்துள்ளது. மதுரையின் சிறப்புகளில் ஒன்றாக விளங்கும் பழமுதிர்சோலை அறுபடைவீடுகளில் ஆறாவது படை வீடாகும் .

முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மதுரையில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது இது முருகரின் முதல் படை வீடாகும் .முருகப்பெருமானின் இருபடை வீடுகளை தன்னகத்தே கொண்டுள்ள மதுரை ஒர் அற்புத ஆன்மீக நகராகும் .

மூலவர் :

ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஸ்தல விருட்சம் : நாவல் மரம்

ஔவைக்கு ஸ்ரீ முருகர் காட்சி தந்து நாவற்பழம் கொடுத்த இடம் . இது ஐப்பசிமாதத்தில் மட்டுமே பழம் பழுக்கும் .மற்ற நாவல் மரங்கள் ஆடி ஆவணிமாதத்தில் மட்டும் பழம் பழுக்கும்

தீர்த்தம் :

நூபுர கங்கை தீர்த்தம்

திருக்கோவில் சுற்றியுள்ள சன்னதிகள் :


முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தரிசனம் செய்து பின் மூலவரான வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தரிசித்து ஸ்ரீ ஆதிவேல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகரை பார்த்து வரலாம் .

பழமுதிர் சோலை செல்லும் வழிகள் பஸ் வசதிகள் :

மதுரையில் இருந்து அழகர் கோவில் 20 கி.மீட்டர் தொலைவில் கடந்து அழகர்மலை அடிவாரத்தில் இருந்து திருக்கோவில் நிர்வாகத்தால் இயக்கப்படும் சிற்றுந்தின் மூலம் 20நிமிட பயணத்தில் பழமுதிர்ச்சோலையை அடையலாம் .

மதுரையில் இருந்து அழகர்மலை செல்ல காலை 05.00மணியில் இருந்து இரவு 10.00 மணிவரைகள் பஸ்கள் உண்டு. அழகர் மலையில் இருந்து பழமுதிர்சோலை செல்ல திருக்கோவில் நிர்வாகத்தின் பஸ் காலை 06 .00மணி முதல் மாலை05.00மணி வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பூஜை முறைகள் :

மூன்றுகாலப்பூஜைகள் பழமுதிர்ச்சோலையில் நடைபெறுகிறது.
காலை அபிஷேகபூஜை 09.00 மணிக்கும்
உச்சிகால பூஜை 12.00மணிக்கும்
மாலை அபிஷேகபூஜை 05.00மணிக்கும் நடைபெறுகிறது.
திருக்கோவில் காலை 0600மணிமுதல் மாலை
0600மணி வரை திறந்தே இருக்கும் .

பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் :

அழகர்மலையின் அடிவாரத்தில் காக்கும் கடவுள் ஸ்ரீ திருமாலின் வைணவத் திருக்கோவில் அமைந்துள்ளது. மலையின் மேலே பழமுதிர்சோலையில் ஸ்ரீ முருகர் (சைவம் )குடிகொண்டுள்ளார் .

சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஸ்தலம் . மாமனாகிய திருமாலும் மருமகனாகிய ஸ்ரீமுருகரும் இணைந்த ஸ்தலம் . பழமுதிர்சோலை வருபவர்கள் அழகர் மலையில் திருமாலை வணங்கி விட்டு பின்னர் பழமுதிர்ச்சோலை வருவதே சிறப்பாகும் .

ஆறாம் படை வீடு ,மாட்டுக்கார சிறுவனாக வந்து அவ்வையார்க்கு நாவல் பழம் கொடுத்து காட்சி தந்த ஸ்தலம் . பாடல் பெற்ற ஸ்தலம் .அழகிய கண்ணனும் அழகன் முருகனும் ஆட்சி செய்வதாலேயே இது அழகர் மலையானது. கந்தபுராணம் இயற்றிய கச்சியப்பர் வியந்து பாடிய ஸ்தலம் .

அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற ஸ்தலம் , திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் போற்றிப்புகழ்ந்த அழகு மிகு மலையில் அமைந்துள்ள அற்புத ஸ்தலமே பழமுதிர்சோலையாகும் .

ஸ்தலத்தின் வேறுபெயர்கள் :

சோலைமலை, பழமுதிர்ச்சோலை, குலகிரி,குலமலை, விருஷபகிரி,

முடிவுரை :

பழமுதிர் சோலை வருகின்றவர்கள் நூபுரகங்கை தீர்த்தத்தில் குளித்து மாற்றிக்கொள்ள ஏதுவாக மாற்றுத்துணிகளுடன் வந்தால் நூபுரகங்கையில் குளித்து விட்டு ஸ்ரீ முருகப்பெருமானை 500மீட்டர் நடந்து வந்து ஸ்ரீ பழமுதிர்ச்சோலையில் முருகப்பெருமானை வணங்கலாம் .

நூபுரு கங்கை தீர்த்தம் பற்றி நிறைய தகவல்கள் அடுத்த பதிவில்

வாழ்நாளில் ஒரு முறையேனும் ஆறாம்படை வீடான பழமுதிர்ச்சோலயில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகரை வணங்கி செல்லுங்கள் .

கருத்துரையிடுங்கள் நன்றி

திருப்பரங்குன்றம் ஸ்ரீதெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம்



திருமணத்தடை தீர்க்கும்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்




துதி :

ஒரு முருகா என்று என் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய் வொருவா நிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்று தான் புலம்பா நிற்கும் தையல் முன்னே
திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவகனே !

அமைவிடம் :

தமிழ்சங்கம் வளர்த்த மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 7 கி.மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பு :

சுமார் 300அடி உயர பாறையின் அடியில் அமையப்பெற்ற அழகிய குடவரைக்கோவிலாகும் . மூலவர் : திருமுருகன் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் . இங்கு முருகப்பெருமான் தெய்வானை திருமணத்திருக்கோலத்தில் அமைந்திருக்கிறார் . ஸ்ரீ முருகர் திருப்பரங்குன்றத்தில் தவம் செய்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

மூலவரும் உடனுறை மூர்த்திகளும் :

ஸ்ரீ பரங்கிநாதர் (சிவலிங்கம் )
ஸ்ரீ கற்பக விநாயகர் ,
துர்க்கை ( கொற்றவை )
ஸ்ரீதேவிபூதேவி உடனமர் பெருமாள் ,
மூலவர் தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி கருவறைகளில் ஒரே மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர் . குகைக்குள் உள்ள குடவரைக்கோவில் வித்தியசாமான ஆன்மீக அனுபவம் .

புராணக்கதை :

சூரபத்மனை அழித்தமையால் இந்திரன் தன் மகளான தெய்வானையை மணம் செய்து வைக்க திருப்பரங்குன்றத்தில் ஆசைப்பட்டு தேவர்கள் ,நாரதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையை இத்தலத்தில் மணம் புரிந்து முருப்பெருமான் உறையும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் :

1. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 சைவத்திருத்தலங்களில் ஒன்று
2. ஸ்ரீ முருகர் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்
3. பாறையில் செதுக்கப்பட்ட ஒரே குடவரைக்கோவில்
4. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு
5.இரட்டை விநாயகர் சிலைகள்
6. மூர்த்தி,ஸ்தலம் ,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்டது
7. தேவாரம் கூறும் சைவத்திருத்தலங்கள் 275ல் ஒன்று
8. முருகர் அமர்ந்த நிலையில் காணப்படும் சிறப்பு
9 .சிவபெருமானும் முருகரும் இணைந்து காணப்படுவதால் "தெற்கு கயிலாய மலை " என கூறப்படும் சிறப்பு

10.போகர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்
11. பாராசுர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என கண்ணுக்கு தெரியாத பல்வேறு சிறப்புகளை அற்புதங்களை நிகழ்திய ஸ்தலமாகும் .

சான்றுகள் :

சமண முனிவர்கள் இங்கு பஞ்சபாண்டவர்கள் குகையில் தங்கியிருந்ததற்கான சான்றுகள் 3 ஆம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளதாம் . புராணங்காலங்களில் இருந்து புகழ்பெற்றுவந்த திருப்பரங்குன்றத்தை பாண்டிய மன்னர் நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி 765- 815 ல் உருவாக்க முனைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றது.

ஸ்தலமரம் : கல்லத்தி மரம்

லட்சுமி தீர்த்தம் :

திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய குளமாகும் . அழகிய மீன்களுக்கு மக்கள் இங்கே விற்கப்படும் பொறிகளை இறைத்து வருகின்றனர் .

திருப்பரங்குன்றதை வியந்து பாடல் பாடியவர்கள் :

திருஞானசம்பந்தர் ,ஸ்ரீ சுந்தரர் ஆகியராலும் தேவாரப்பதிகளில் பாடப்பெற்றும் குமரகுருபரர் ,நக்கீரர்,பாம்பன் சுவாமிகள் ,அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :

கோபூஜை -5..00மணிக்கு துவங்கி உச்சிகாலம் பூஜை12.30வரையிலும் மாலை சாயரட்சையில் 05.30க்கு துவங்கி இரவு 9.30க்கு பள்ளியறை பூஜைகளுடன் முடிவுகிறது.

திருவிழா :

வைகாசி மாதத்தில் வைகாசி விசாக தினம், பங்குனி உத்திரம் ஆகிய இந்துக்களின் அனைத்து விஷேச தினங்களும் முருகப்பெருமானுக்குரிய விஷேச பூஜைநாட்களும் உகந்தது. வெளியூர் பக்தர்கள் எல்லா நாட்களிலும் அருள் வேண்டி வருகின்றனர் .

முடிவுரை :

ஏழு நிலை இராஜகோபுரங்களுடன் 12 தீர்த்தங்களுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையுடன் மணக்கோலத்தில் புரிகிறார் . இங்கே வழிபடுபவர்கள் நல்ல மணவாழ்வு அமைந்து மங்கள இசை கேட்கலாம் திருமண வரம் கிட்டும் .

திருப்பரங்கிரி,சுமந்தவனம் ,கந்தமாலை ,சுவாமிநாதபுரம் ,தென்பரங்குன்றம் ,தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்ற நாதனை வணங்கி மங்களம் உண்டாக வாழ்த்துக்கள் .

ஓம் முருகா சரணம் முருகா

Thursday, May 10, 2012

குன்றி மலைச்சாரலில் அமைந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு




குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பார்க்கவேண்டிய அணைக்கட்டில் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டும் ஒன்றாகும் .பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் அழகு மிகுந்து சுற்றிலும் மலைகள் பச்சைப்பசேல் என இருக்க இயற்கையாகவே அமைதி நம்மை தொட்டுச்செல்கிறது.

அமைப்பு :

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொங்கம்பாளையம் அருகே அமைந்துள்ளது.

எப்படி செல்வது :

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் வாணிப்புத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொங்கர்பாளையம் வரை செல்ல பஸ் வசதி உண்டு.ஆனால் அடிக்கடி குண்டேரிப்பள்ளம் அணை செல்ல பஸ் வசதி இல்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் .

விளக்கோம்பை , குன்றி மலையில் பெய்கின்ற மலைநீர் சேகரிக்கப்படும் இடமாக குண்டேரிப்பள்ளம் திகழ்கிறது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரமுள்ள அணைக்கட்டின் மேல் சாலையில் நடந்து சுற்றிலும் மலைகள் ரசிக்கலாம் .குண்டேரிப்பள்ளம் அணையை பார்க்க வருபவர்கள் உணவுப்பொருட்கள் கொண்டு வருவது நல்லது. இங்கு உணவுக்கடைகள் கிடையாது.

யானைகள் :

மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதுண்டாம் .அணையின் மேல் இருந்து பார்க்கலாம் என சொன்னார்கள் . நீங்கள் யானையை பார்த்தால் பின்னூட்டம் இடுங்கள் .

முடிவுரை :

ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் . அமைதியை தேடிச்செல்ல அழகிய இடம் . ஞாயிற்றுக்கிழமைகளில் மிதமான கூட்டம் இருக்கும் . இங்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பிடித்த மீன்கள் விற்கப்படுகிறது. எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் ஓர் முறை சென்று வரலாம்

Monday, May 7, 2012

ஈரோட்டில் அருள்பாலிக்கும் அம்பிகை



ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில்



அபிராமி அந்தாதி :

தனம் தரும்கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவம் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்


ஈரோட்டின் காவல் தெய்வமாக ஈரோடு மக்களால் விரும்பி வணங்குகின்ற மாரியம்மன் திருக்கோவிலாகும் .

அமைவிடம் :

பழங்காலத்தில் பூந்துறை நாட்டின் ஓர் பகுதியான ஈரோட்டை பல அரசர்கள் ஆண்டு வந்தனர் . அரசர்கள் வாழ்ந்த இடங்கள் கோட்டை இருப்பது நாம் அறிந்ததே ,அவ்வகையில் தற்போது உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதி பழங்காலத்தில் கோட்டையாக இருந்தது . அதற்கு உதாரணமாக கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் , ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ,ஸ்ரீகோட்டை பெருமாள் கோவில் என பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் தான் பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .


மூலவர்:

ஸ்ரீ பெரிய மாரியம்மன் வடக்கு பார்த்த விஷேச அமைப்பான மாரியம்மன் ஆகும் . முகப்பில் அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வங்களான ஆண் பெண் பூதக்கணங்களை வணங்கி விட்டு அழகிய நிலையில் அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது பிரமிப்பாகும் .

கரங்களில் நாகபந்தனத்துடன் உடுக்கை, பாசம் ,கபாலம் கத்திகள் உள்ளன . பெரிய மாரியம்மன் பரசுராமர் திருமேனியில் காட்சியளிப்பதாக பழங்கால இதிகாசங்கள் இயம்புகின்றன.

பூஜை நேரங்கள் :
காலை 06.00மணிக்கு சந்திபூஜையும்
மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 06.00மணிக்கு சாயரட்ஷை பூஜையும்


தினமும் பூஜை நடைபெற்றாலும் அம்மனுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும் .

ஸ்தலமரம் :

அம்பிகைக்கு உரிய வேம்பு ஸ்தலமரமாக அமைந்துள்ளது.

வருடபூஜை :

பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 1 ஆம் நாள் துவங்கி 20நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடைசிநாளில் கம்பம் பிடுங்கும் விழா 19நாள் லட்சம் மக்கள் கூட முக்கிய வீதிகளில் கம்பம் செல்லப்பட்டு ஈரோடே அதிர கம்பங்களுக்கு உப்பு வீச காளிங்கராயன் வாய்க்காலில் கொண்டு சென்று விட்டு வருவார்கள் . 20 ஆம் நாள் மறுபூஜையுடன் வருடாந்திர பூஜை முடிவு பெறும் .

பெரிய மாரியம் மன் வகையறா திருக்கோவில்கள் :

ஸ்ரீ சின்னமாரியம்மன் திருக்கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது. காரை வாய்க்கால் மேற்புறப் பகுதியில் ஸ்ரீவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்குகின்ற திருக்கோவிலாகும் . இந்த இரு மாரியம்மன் திருக்கோவிலும் விஷேசமானதே .

பெரிய மாரியம்மனை விரிவாக இணையத்தில் பார்த்து வணங்க : www.erodeperiamariamman.info.in

வலைத்தளத்தில் காணலாம் .

பெரிய மாரியம்மன் வணங்குவதின்பலன் :

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று வழிபடும்போது பல்விதமான பலன்கள் ஏற்படும் அவ்வகையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன வணங்குவதால் குழந்தைவரம் ,நோய் நிவாரணி , தொழில் சிறப்பு உள்ளிட்ட வேண்டுவோர் வேண்டும் வரமளிக்கும் அம்பிகையாக ஸ்ரீ பெரியமாரியம்மன் விளங்குகிறது ,

அதற்கு சாட்சியாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வருடாந்திர பூஜை நடக்கும் 20நாட்களும் கேழ்வரகு கூழ் , அன்னதானம் , மோர் , தாகம் தணிக்க நீர் என மக்களுக்கு வேண்டியதை செய்கின்றனர் .

முடிவுரை :

ஈரோடு மக்களின் விரும்பி வணங்குற அம்பிகை பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . வடக்கு பார்த்த அம்மனாக விஷேச நிலையிலும் ஈரோட்டில் பல மாரியம்மன் திருக்கோவில்கள் அமைந்திருந்தாலும் ,
எல்லோர்க்கும் பெரியவளாக விளங்கும் அம்பிகை ஸ்ரீ பெரிய மாரியம்மனை வணங்கி வளங்களை எப்பதோதேனும் ஈரோடு வந்தால் வணங்கி விட்டுச்செல்லுங்கள் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...