Tuesday, October 15, 2013

ஸ்ரீ நவபிருந்தாவனம் ( ஸ்ரீ பாதராஜமடம் ) சந்நியாசிமடம் ,பள்ளிபாளையம் ,

              sri  nava birunthavanam    & sanyasimadam        &         sribatharajamadam,pallipalayam,namakkal(d.t)



எத்தனையோ சித்தர்களும் மகான்களும் , யோகிகள் வாழ்ந்த புண்ணிய பூமி நம்பாரத பூமி . அந்தவகையில் அண்மை கண்ட அழகிய அமையான ஜீவசமாதியை உங்களுடன்பகிர்வதில் பெருமகிழ்வுருகிறேன் .

 அமைவிடம் : 


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இருந்து சேசாயி பேப்பர் மில் செல்லும் சாலையில்வசந்தநகர் என்ற இடத்தில் இருந்து காவிரிக்கரையின் கிழக்கு புறத்தில்கரைகாண முடியாத பல அற்புதங்கள் கொண்ட நவ பிருந்தாவனம் ஸ்ரீ பாதராஜ மடம்அமைந்துள்ளது . இப்பகுதிமக்களால் சந்தியாசி மடம் என்றும் முளபாகல் மடம்என்றும் அழைக்கப்படுகிறது .

காலம் : 


கி.பி 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது
அல்லது 300வருடங்களுக்கு முற்பட்டது என்பது ஆய்விற்குரியது .

 ஸ்ரீபாதராஜர் : 


 ஸ்ரீ பாதராஜ மடத்தின் நிறுவனர் ஸ்ரீ பாதராஜர் ஆவார் ,இவர்கர்நாடக மாநிலம் அப்பூரை சேர்ந்தவர் , லட்சுமி நாராயணன் என்பது இவர் இயற்பெயராகும் . சேஷகிரியாச்சார் கிரியம்மா தம்பதிகளின் மகனாக பிறந்த
இளம்வயதிலேயே தெய்வ அருட் குழந்தையாக வளர்ந்தார் .

 கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முளுபாகல் என்ற இடத்தில் இவரின் மூல பிருந்தாவனம்அமைந்துள்ளது கி.பி 1486 ல் பிருந்தாவனஸ்தரானார் . இவ்விடம் நரசிம்மதீர்தம் என அழைக்கப்படுகிறது . இந்த முளபாகல்மடம் தான் நாம் பார்க்கஉள்ள நவபிருந்தாவனத்தின் தலைமை இடமாக கருதப்படுகிறது .

 பாதராஜமடத்தின் 36 வது மடாதிபதியாக 1987 முதல் 23 ஆண்டுகாலம் நிர்வாகம் செய்தவர் ஸ்ரீவிக்ஞான நிதி தீர்த்தர் ஆவார் . இவர் பொறுப்பேற்ற பின்னரே நவபிருந்தாவனத்தில் அன்றாட பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்புற நடைபெறுகிறது.ஸ்ரீ விக்ஞான தீர்த்த சுவாமிகள் 95வது வயதில் கர்நாடக மாநிலம்முளுபாகலில் உள்ள நரசிம்ம தீர்த்ததில் பிருந்தாவனஸ்தராகி (ஜீவசமாதி)விட்டார் . 

பள்ளிபாளையத்தில் நவபிருந்தாவனத்தில் அருள்பாலிக்கிற

நவநாயகர்கள் :



 1. ஸ்ரீ லட்சுமி மனோகர தீர்த்தர் : 


 கர்நாடகாவில் பிறந்த இவர் கி.பி 1670முதல் 1708 வரை வாழ்ந்தவர். ஸ்ரீ பாதராஜர் மடத்தின் 8வது பீடாதிபதியாவார் . பாரதம் முழுவதும் சஞ்சாரம் செய்து வேததர்மம் , ஒழுக்கம் பக்தி ஆகியவற்றை மக்களுக்கு போதித்தவர் .

 இவர் ஒசூர் பகுதி யாத்திரையின் போது கடும் பஞ்சம் நிலவுதை கண்டு மக்கள்
குறையால் மனமுருகி ஸ்ரீ ஆஞ்சநேயவிக்கிரகத்துடன் ஓர் ஆலயத்தை அமைத்து ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து பூஜிக்க கடும் மழை பெய்து அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்ததாக வரலாறு . சர்வதாரி வருடம் தைமாதம் பெளர்ணமி தினத்தில் முதல் ஜீவசமாதியாக நவ பிருந்தாவனத்தில் முதல்பிருவனஸ்தராகிவிட்டார்..

 2. ஸ்ரீ லஷ்மிபதி தீர்த்தர் : 


இவர் ஸ்ரீ லஷ்மி மனோகர தீர்த்தரின் சீடர் ஆவார் . திரிகால ஞானி ஸ்ரீ ஹரி கீர்த்தனைகள் பாடி பக்தர்கள் வியாதிகளில் இருந்து காத்து அருளியவர் . இவர்
பிருந்தாவனத்திற்கு அருகில் இருந்த சுண்டைக்காய் உண்ட பலரும் சாகும்
தருவாயில் பிழைத்துள்ளதாக வரலாறு .

 இவர்க்கு சுண்டைகாய் தீர்த்தர் என்றும் கூறுவர் . இவர் வைத்தியராக வாழ்ந்த மகான் . தனக்காக பிருந்தாவனம் நிர்மாணிக்க சிற்பிக்கு உத்திரவிட்டார் . அப்படி இம்மகானின் பிருந்தாவனம் தயார் செய்த போது பாம்பு தீண்டி சிற்பியின் மகன் இறந்துவிட்டாதாக கேள்விப்பட்டு பதற மகான் சிற்பியை கூப்பிட்டு உன் மகன் சற்று நேரத்தில் உயிர்பெற்று வருவான் என கூறி கருட மந்திரத்தைதியானித்து காப்பாற்றினாராம் .

 மந்திரப்பிரயோகம் . யந்திரப்பிரதிஷ்டை,தாந்திரிகம் ஆகிய கலைகளில் நிபுணராவார் . பல அற்புதங்கள் புரிந்து நவ
பிருந்தாவனத்தில் 2வதாக ஆஷாட சுத்தி ஆடி ஏகாதசியில்
பிருந்தாவனஸ்தரானார் .

 3. ஸ்ரீ நிதி தீர்த்தர் : 


ஸ்ரீ பாதராஜ
அஷ்டாகம் என்ற ஹ்தோத்திரத்தை உலகிற்கு உணர்த்திய மகான்மகாவிஷ்ணுவிடம்அதீத பக்தி கொண்டவர்
temple kopuram

 4. ஸ்ரீ வித்யாநிதி தீர்த்தர் : 


 ஜபதவ அனுஷ்டானங்களை செய்து கொண்டிருந்தவர் இவர் தியானத்தை மெச்சி இறைவனேஸ்ரீ பாண்டுரங்க விட்டல சுவாமி தம்பதி சமேதாராக காட்சி அளித்தவர் , 14வது பீடாதிபதியானவர் வித்வான் , எழுத்தாளர் , இலக்கியவாதியாவார் ,மைசூர் மகாராஜவிற்கு தர்மநெறிப்படி மன்னர் ஆட்சி செய்யும் நெறிமுறைகளை உபதேசித்த மகான் இவரை வணங்குபவர் கல்வியில் சிறப்பர்

5. ஸ்ரீ சுதிநிதிதீர்த்தர்: 


23வது மடாதிபதியாவார் . மத்வ சிந்தாந்தத்தின் உயர்ந்த
கிரதமான ஸ்ரீ மந்நியாயசுதா என்ற கடினமான கிரந்தத்தை மிக எளிய முறையில்அநேகர்க்கு கற்பித்த மகான் .

தன் வாழ்நாழ் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் நீராடி ஸ்ரீ கிருஷ்ணபகவானை பூஜித்து வந்த திவ்ய புருஷர் .

இவரின் முக்கிய உபதேசம் ஏகாதசி அன்னம் உண்பதை தவிர் , தினமும்
மத்வாச்சாரியாரின் கிரந்தங்களை படித்து பகவானை பூஜிக்கவேண்டும் .
கடன் வாங்கி எக்காரியமும் செய்யக்கூடாது . இவர் திருச்சனூரில் வேத வியாசபகவானை பிரதிஷ்டை செய்து பூஜித்தவர்

 6. ஸ்ரீ மேதாநிதி தீர்த்தர் : 


 இவர்ஸ்ரீ சதிநிதி தீர்த்தரிடம் சந்நியாசம் பெற்றவராவார் . மகான் ஸ்ரீ
வியாசராஜ தீர்த்தர் அருளிய சந்திரிகா என்ற கிரந்தத்தின் மூலப்பிரதியை
கைப்பட எழுதியவர் , விலைமதிக்க முடியாத இவரின் கையெழுத்துப்பிரதி மைசூர் ஓரியண்டல் நூலகத்தில் அமைந்துள்ளது .

 ஆந்திராவில் யாத்திரையின் போது புலி வர பயப்படாமல் அபிஷேக தீர்த்தம் கொடுத்து மந்திர அட்சத்தையால்புலியை ஆசிர்வதித்தாக வரலாறு


 7. ஸ்ரீ தேஜோ நிதி தீர்த்தர் :


இராமநாதபுரம் மாவட்டம் இளையான் குடி வட்டத்தை சேர்ந்தவராவார் . துவைத சிந்தாந்த கொள்கையை கடைபிடிப்பதே     உண்மையான முக்கிநிலை என்றுஉணர்ந்தவர் .இவர் ஸ்ரீ   லட்சுபதி தீர்த்தர் காலத்தில்   சேவை புரிந்தவராவார்

8.ஸ்ரீ தபோநிதி தீர்த்தர்:   


 ஸ்ரீதோஜோநிதி தீர்த்தரின் சீடர் தம் 37   வது வயதில் துறவறம்      பூண்டு
கி.பி  1806 முதல்1838 வரை ஓடப்பள்ளி    ஸ்ரீ பாதராஜ   மடத்தை  நிர்வாகம்
செய்தவராவார்

9.ஸ்ரீயசோநிதி தீர்த்தர் : 

                                                                                                                                                      கி.பி1840ஆம் ஆண்டு   தை மாதம் வளர்பிறை தசமியன்று   தம் குரு ஸ்ரீ தபோநிதி தீர்த்த மகான் அருகில்   பிருந்தாவனம் ஆனார்.இப்பதிவின் நீளம்கருதி  

 2ஆம்பதிவில்   பதிந்துள்ளேன்  

 படித்து கருத்துரையிடுங்கள்    
  நன்றி

Saturday, October 12, 2013

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் மூல பிருந்தாவனம் ,சத்திய மங்கலம்

ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் பிருந்தாவனம் சத்தியமங்கலத்திலிருந்து
பண்ணாரி செல்லும் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவிலுக்கு அருகில் சிருங்கேரி மடம் ஒட்டிய பாதையில் இடப்புறம் திரும்பி சென்றால் பவானி ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமத் அட்சுத ப்ரேட்சார்யா சமஸ்தான ஸ்ரீ பீமசேது முனிவிருந்த மடத்தை சார்ந்தவர் .இம்மடம் பீமன கட்டே மடம் என்றும் அழைக்கப்படுகிறது.

பீமன கட்டே இடம் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி வட்டம் துர்வாசபுரம் என்னுமிடத்தில் அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ ரகோத்வஜ தீர்தத சுவாமிகளின் தற்போதைய சீடர் தீர்த்தஹள்ளி மடத்தை நிர்வாகம் செய்கிறார் .

சத்தியமங்கலத்தில் பிருந்தாவனம் ஆன வரலாறு :


ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் கர்நாடகத்தில் மடாதிபதியாக 300ஆண்டுகளுக்கு முன்பு இருந்தபோது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பி பண்ணாரி வந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட சத்தியமங்கலம் வந்து பவானி ஆற்றங்கரை அருகில் தாம் பிருந்தாவனம்  ஆக தனது விருப்பத்தை சீடர்களிடம் தெரிவித்து அவ்வாறே இங்கு பிருந்தாவனம் (ஜீவசமாதி )ஆகிவிட்டார் .

 பிருந்தாவனம் தற்போது : 


 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தேச சஞ்சாரத்தின் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஒன்றை கொண்டு வந்திருந்தார் .அவர் ஜீவசமாதி ஆனவுடன் ஸ்ரீ ஆஞ்சநேய விக்கிரகம் ஜீவசமாதி அருகிலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது . இது தவிர ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர் தம் வாழ்நாளில் பயன்படுத்திய சாளக்கிராமம் ,சங்கு பாதகுறடுகள் ஆகியவையும்  பூஜையில் வைக்கப்பட்டுள்ளன .

 ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தரின் மகிமைகள் :


சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நடுநிசியில் திருமதி ராஜலட்சுமி
அனந்தராமன் கனவில் சுவாமிகள் தோன்றி "எம் இடம் பல ஆண்டுகளாக இருள்சூழ்ந்து கிடக்கிறது . நீ வந்து விளக்கேற்று " எனக்கூறி
மறைந்துவிட்டார் . அதன் பிறகு புதர்மிகுந்த அப்பகுதி சுத்தம் செய்து
அவர்கள் விளக்கேற்றி வழிபட்டு வந்தனர் .

சில வருடங்களுக்கு முன் மீண்டும்கனவில் வந்த சுவாமிகள் தம் பிருந்தாவனத்தில் அன்னதானம் செய்யச்சொல்ல பிறகு அத்தம்பதிகளால் அவ்வப்போது ஸ்ரீ ரகோத்வஜரின் அதிஷ்டானத்தில் வைத்து பூஜை அன்னதானங்கள் செய்து உயர்வு பெற்றதாகவும்.,,

 24.4.09 ல் கும்பாபிஷேகம் முடிந்த பின்பு மறுபடி கனவில் தோன்றி தாம் மிகதிருப்தியாக உள்ளதாக கனவில் கூறினார் . இங்கு சலவை தொழிலாளி அதிகாலை3.00 மணிக்கு பவானி ஆற்றில் துணி துவைக்க பிருந்தாவனம் அருகே வந்தபோது,,

5 அடி உயரத்தில் இடுப்பில் துண்டுடன் கையில் கமண்டலத்துடன் ஓர் மனிதஉருவம் கம்பை ஊன்றியபடி பூட்டிய கதவுகளிடேயே வந்தும் பின் பவானி ஆற்றில்நீராடி விட்டு அதிஷ்டானத்தின் கதவுகளின் வழியே ஊடுருவிச் சென்றது கண்டு பிரமிப்படைந்து பல முறை மகானின் தரிசனத்தை அதிகாலை 3 மணிக்குதரிசித்துள்ளார் .

இந்நிலையில் அவர்க்கு கண்பார்வை மங்கி விடசிகிச்சைக்காக மருத்துவர்களிடம் சென்று முடியாதென கைவிரித்துவிட இறுதியாக சுவாமிகளிடமே கேட்டு விடலாமென தீர்மானித்து ஓர் நாள் அதிகாலையில் வந்துசுவாமிகளிடம் கேட்க கேரட் பீட்ரூட் , கீரை உணவை சாப்பிடு என்றாராம் .

அவரின் ஆலோசனைப்படி கண்பார்வை திரும்ப சில நாட்களில் கிட்டியதாம் .
காணமல் போன மகன் கிடைக்க 21 நாள் தீபமிட அவர்களின் மகன் ஆபத்தின்றி
திரும்பி வந்துள்ளான் .

 சிவகங்கை மாவட்டம் சிங்கம் புணரியை சேர்ந்தவர்
திரு. வெங்கட்ராமன் தியானத்திலிருந்த போது சுவாமிகள் என்
மூர்த்தத்தை நீ செய் எனக்கட்டளையிட அதன்படி ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்த
சுவாமிகளின் பஞ்சலோக சுவாமிகள் திரு உருவத்தை படைத்து
புணஷ்காரங்காரங்கள் செய்து 10.10.09 அன்று ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தம் மூல
பிருந்தாவன நற்பணி மன்றத்தார் வசம் ஒப்படைத்தார் .
சிலருக்கு வயோதிகராக5 அடி உயரம் கொண்டவராக காட்சி அளித்துள்ளார் .

 விஷேசம் : 


 தினமும்
அதிகாலை 3 மணிக்கு இங்கு ஜீவசமாதி அடைந்துள்ள ஸ்ரீ ரகோத்வஜ தீர்த்தர்
பவானி நதியில் நீராடியும் பின் செல்கிற காலடிச்சத்தம் கேட்பதுமாக மக்கள்
கூறுவது பிரமிப்பதாக உள்ளது . தினமும் அதிசயிக்க தக்க வகையில் ஓர்
பெருமாள் கருடன் மதியம் 12 மணி அளவில் சுவாமிகளின் பிருந்தாவனத்தை
தரிசிப்பதாக இன்றும் காணக்கூடிய ஒன்றாகும் .

 முடிவுரை : 


 ஸ்ரீரகோத்வஜ தீர்த்த சுவாமிகளின் மகிமை சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம் . மகான்களைஅளக்க முடியாது , இந்த அரிய ஜீவசமாதியை தரிசனம் செய்தது எம் பாக்கியம்அவ்வகையில் இந்த அரிய அதிஷ்டானத்தை உலகிற்கும் எமக்கும் காட்டிய ஆன்மீக அன்பர்

திரு நவ பிருந்தாவனம் பழனிச்சாமி 9750265865 அவர்கள்
மேலும் பல ஆன்மீக சாதனைகள் செய்யவும் ,பாராட்டவதும் நம் கடமையாகும் .அண்ணாரின் பணி சிறக்கட்டும் . மிக அமைதியான நல் அதிர்வுகள் கொண்ட ஜீவசமாதி சத்தியமங்கலத்தில் பார்க்க வேண்டிய அதிஷ்டானம் .

 ஸ்ரீ
ரகோத்வஜ தீர்த்த சுவாமிகள் அருள் இதைப்படிக்கிற அனைவர்க்கும் கிட்ட
வேண்டுகிறேன் .நன்றி .

Sunday, September 22, 2013

சிவயோக பூசை பலன் , அறம் செய்வதின் பலன் ,பாவத்தின் பலன்

குருமுனி என புகழப்படுகிற ஸ்ரீ அகத்திய சித்தர் பல்வேறு                       சித்துக்களையும்   அற்புதங்களை பல புத்தகப்படிப்பினைகளையும்
மனிதர் வாழ்விற்கு வழிகாட்டிய    சித்தராவார் .


 அகத்தியர் பூஜா விதி -200 தீட்சா விதி - 200 வழிபாடுகள்
தியானம் யோகம் என பூஜை தீட்சை விதிகளை ஆராய்ந்துள்ளார் . இதற்கு
யாரேனும் மொழி பெயர்த்துள்ளார்களா எனில் பல இடங்களில் பரிபாசைகளாகவும்  நுணுக்கமாகவும் கூறியுள்ளதால் பல பாடல்கள் ஆய்விலேயே உள்ளது .

 சிவயோகம்அறம் பாவம் செய்வதின் பலனை பின்வருமாறு கூறுகிறார்

 " காணுகிற தர்மமதுசெய்வாகிற

 காசியினி லவனுக்கா மவன் பிதிர்குமாகும் "


 இந்த வரிக்கு பொருள்  ;

உலகில் தர்மம் செய்பவர்களுக்கு அவர்களுக்கும் அவர்கள்
சார்ந்தவர்களுக்கு உயர்வாகும் என்றும் ,

 அடுத்தவரியில்

 " தோணவே  பாவத்தைச் செய்வானாகிற் 

 சொன்னவர்க்கா மல்லாட்டால் சுற்றத்தார்க்காம்"


இதன் பொருள்    ;;

பாவமென்று தெரிந்தே செய்பவர்கள் பாவம் செய்வரல்லாமல்
சுற்றத்தையும் பாதிக்கும் என்கிறார் .


அடுத்தவரியில்

" ஊணவே சிவயோகஞ் செய்வானாகில் உயிரதுதான் 

மோஷமெய்து முண்மையுண்மை, 

பூணவே பூசைசெய்தால்சிவத்துக்காகும் 

பூசையென்ன மனங் கனிந்தால் புகழுமாச்சே ".


 இதன் பொருள்  ;;


நன்றாக சிவனை பூசை செய்பவர்கள் உயிர் மோட்சத்தை அடைவது உண்மை என்றும் அப்படி சிவ பூஜை செய்பவர்கள் புகழ் உண்டாகுமென ஸ்ரீஅகத்திய பெருமான் சிவ பூஜையின் மேன்மையான பலனை உரைக்கிறார் . ஆக சிவ பூஜை செய்யுங்கள் ,புகழையும் மோட்சத்தையும் அடையுங்கள் .

ஆதாரப் பாடல் : 


அகத்தியர் பூரண சூத்திரம் 216 புத்தகத்தின் 206 ஆவது பாடல்

 பின்குறிப்பு : 


 இப்பகுதி அனுபவம் இல்லாதவரால் மொழிபெயர்க்கப்பட்டது , பாடலில் திருந்தங்கள் யார்வேண்டுமெனிலும் பின்னூட்டமாக சேர்க்கலாம் . இப்பக்கத்தில் அகத்தியர்  படம் ஒன்றை கூகுள் தேடலில் இணைக்கப்பட்டுள்ளது . அந்த வலைத்தள நன்பருக்கு
நன்றிகள் மற்றபடி வோறொரு சித்தர் பாடலுடன் சந்திப்போம் .

ஓம்  அகத்தீஸாய நமஹ

Tuesday, September 10, 2013

தேடிக்கொண்டிருக்கிறேன் நாம் தொலைத்து விட்ட ஓலைச்சுவடிகளும் ,அரிய புத்தகங்களையும்

கடினமான பணிகளுக்களுக்கிடையே ஆன்மிக தேடலில் சிவாலயங்கள் , சித்தர்கள் ஜீவசமாதி , சித்தர்களின் அரிய புத்தகங்கள் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய ஆய்வும் தொடர்கிறது . தற்போது ஒர் சித்த வைத்தியரிடம் அவ்வப்போது சித்த வைத்தியம் கற்று வருகிறேன் .

அவ்வகையில் பல சித்தர்களின் நூல்கள்வெளிவந்து பல பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன அவைகளை சேகரித்தும் வருகிறேன.;

ஓலைச்சுவடி 


நம் முன்னோர்களான சித்தர்கள் எல்லாநோய்களுக்கும் மருந்துகளை ஓலைச்சுவடிகளிலும் பல அரிய புத்தகங்களிலும்கூறி விட்டனர் . பரிபாஷைகளான பல புத்தகங்கள் மறைத்தும்
அருளிச்சென்றுவிட்டனர் .

 சில ஓலைச்சுவடிகள் புத்தகங்கள் ஆகி விட்டன . சில நூல்கள் எல்லாம் காலப்போக்கில் சிலரிடம் மட்டுமே வம்ஷா வழியாக பாதுகாக்கப்பட்டு வருகிறது . சில ஓலைச்சுவடிகள் சில நன்பர்கள் புரியாமல்
வைத்திருக்கிறார்கள் .

சிலருடைய வீட்டில் பயன்படாமல் பழைய மரப்பெட்டியில்
உறங்கிக்கொண்டு இருக்கிறது . யாருக்கும் பயனில்லாமல் அரிய புத்தகமோ
ஒலைச்சுவடிகளோ இருப்பதாலேயே நம் சித்த மருத்துவம் அழித்து ஆங்கிலேயர்கள் மருத்தவத்தில் மோகங்கொண்டு தீர்க்க முடியாத சில வியாதிகளை எடுத்துக்காட்டாக சக்கரை வியாதி போன்றவற்றை வைத்துக்கொண்டு ஆயுள் முழுக்க கஷ்டப்படுகிறோம் .

சிலருக்கு சித்த வைத்திய மருந்துகள் தன் சந்ததிக்கு
சொல்லாமல் மரித்தும் விட்டனர் . இப்போதைய நம் வேண்டுதல்கள் எல்லாம்
எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவேண்டும் . மக்கள் நலமுடன்
இருக்கவேண்டும் .

 உங்களிடமோ ,உங்கள் நன்பர்களிடோமோ பழங்கால
ஓலைச்சுவடிகளோ சித்தர்கள் பற்றியும் சித்த மருத்தும்
,மருத்துவம்பற்றியும் அரிய நூல்கள் இருக்குமாயின் எனக்கு ஓர் நகல்
அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன் .

எம்மால் முடிந்த தொகை அனுப்பி வைக்கிறேன் . அதிக பணம் அளிக்க முடியாத நிலையால் எம் நிதித்துறை பழுதடைந்துள்ளது . எமது தேடலின் பெரிய முயற்சியில் எமக்கு தேவையான சில
புத்தகங்கள் கிடைத்தால் மகிழ்வுறுவேன் .


எம் தேடலுக்கு உதவ விரும்புகிற நன்பர்கள் புத்தகங்களை என் முகவரிக்கு அனுப்பலாம் '

 ப.மாதஸ்வரன்
 த/ பெ   பழனிச்சாமி
 755 -அரசமரத்து வீதி ,
குருவரெட்டியூர் அஞ்சல் 638504,
பவானிவட்டம்
 ஈரோடு மாவட்டம் .

 மெயில் செய்யலாம் .

palamathesu@gmail.com

மற்றும்

pala.mathesu@ymail.com 

 தொடர்பு எண்    ;

9750155005



சித்தர்களின் ஆசிர்வாதமிருப்பின் அரிய புத்தகங்கள் கிடைக்குமென
நம்புகிறேன் . இ மெயில் மூலமாக ஒலைச்சுவடி நகல் விபரங்கள் கிடைக்குமெனஎதிர்நோக்கி ,

நட்புடனும் ஆவலுடனும் குரு.பழ.மாதேசு.

ஆறுமுக சித்தரின் அற்புத ஜீவசமாதி

நீண்ட இடைவெளிக்கு பின் 75 பின்தொடர்பவர்கள் 15000 பார்வையாளர்கள் என 250 பதிவுகள் கடந்து 1000 பதிவுகளையாவது தொட்டு விட வேண்டுமென்கிறஆர்வத்தில் சற்றே ஓய்வெடுத்து மறுபடியும் உற்சாகமாக கிளம்பி இருக்கிறேன்.


 இதற்கு உதவியாக பிள்ளையார் சுழியிட்டு இந்த பிளாக்கை உருவாக்கி தந்த என் மனம் கவர் நன்பர் பிரகாஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்மையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டியபாளையத்தில் நன்பர் வெங்கடேஷ் உதவியால் ஓர் அற்புத ஜீவசமாதியை கண்டுபெருமகிழ்வுற்றேன் .


                                 ஸ்ரீ ஆறுமுகசித்தர் ஜீவசமாதி 



ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது .

அதன் வழியாக சென்றால் துரையப்பா காம்பிளக்ஸ் பின்புறம் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் ஜீவசமாதியான ஸ்ரீ குகை நமச்சிவாயரை அல்லது குகநாதரை குருவாக கொண்டு பூஜித்து வந்த ஸ்ரீ ஆறுமுக சித்தர் தாந்தீரிக வல்லுனராக இருந்தவர் .

ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் இவரின் வம்சாவழிக்கோவிலாகும் . ஸ்ரீ
ஆறுமுக சித்தர் ஜீவசமாதி நெரிசல் மிக்க நகரில் அமைதியாய்
அமைந்திருக்கிறது .

எம் அனுபவத்தில் சில ஜீவசமாதிகள் கண்டுற்ற போதிலும்
அதிக ஈர்ப்புடைய மறுபடி செல்லத்தூண்டுகிற அற்புத இடம் .

 விஷேசநாட்கள் :

 பெளர்ணமி நாளில் காலைமுதல் இரவு 7.30மணி வரை
திறக்கப்பட்டிருக்கும் . அன்று விஷேச பூஜைகள் நடைபெறுகிறது . மற்ற
நாட்களில் மாலை 05.30 07.30 மணி வரை திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் ..

நம் ஆர்வமெல்லாம் ஸ்ரீ ஆறுமுகசித்தரின் ஜீவசமாதியை எல்லோரும்
கண்டுற்று வணங்கி நல்வாழ்வு பெற வேண்டுமென்பதே . மேலும் ஸ்ரீ ஆறுமுக
சித்தர் ஜீவசமாதி பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் , வம்சாவழியினர்
விபரங்கள் அனுப்பினால் கட்டுரை விருவாக்கப்படும் .

தற்காலிக விபரங்கள்அவ்வளவே , மறுபடியும் ஒர் அற்புத பதிவில் உங்களை சந்திக்கிறேன் .ஜீவசமாதியை தரிசிக்க வேண்டுவோர் விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம் .இப்பதிவை காண வந்த உங்களுக்கு ஸ்ரீ ஆறுமுக சித்தரின் அருளாசி கிடைக்கவேண்டி விரும்புகிறேன் .

 பதிவை படித்து கருத்துரையிடுக்கள் நன்றி .

ஒம்சிவ சிவ ஓம்

Tuesday, September 3, 2013

ஸ்ரீ முத்துமரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திரசாமி திருக்கோவில்

அமைவிடம் :

 சேலத்திலிருந்து சோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
பவானியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் நசியனூர் பிரிவில்
நசியனூரில் திருக்கோவில் அமைந்துள்ளது

 ஈரோட்டில் இருந்து நசியனூர் 8 வதுகி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

மூலவர் :ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர்

இறைவி :ஸ்ரீ முத்து மரகத வல்லி


 புராணமும் வரலாறும் :

சேர சோழ பாண்டியமன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தின் ஓர் பகுதியாக கொங்குநாடு விளங்கியது. அது 24 சிறிய நாடுகளை கொண்டதாக பழங்காலத்தில் விளங்கியது .

மூவேந்தர்களால் காவிரி கரையில் மேற்கரையில் கரூர் பசுபதீஷ்வரர் திருக்கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய கலசம் வைக்க முற்பட்டபோது கலசம் நிற்காமல் போக அப்போது எதிர்பட்ட சாதுவின் ஆலோசனைப்படி கொங்கு நாட்டு வேளாண் மக்களை அழைத்துச்சென்று கலசத்தை கொடுத்து நிற்க வைக்க அதுநின்றதாம் .

 ஆதலால் மூவேந்தர்கள்களை விடபூந்துறைநாடுமேன்மையுடையதெனக்கருதி மூவேந்தர்கள் யாத்திரையின் போது பூந்துறை,எழுமாத்தூர், வெள்ளோடு ,நசியனூர் ஆகிய இடங்களுக்கு வந்து பல சிவாலயங்கள்திருப்பணி செய்தும்

 பல வைணவத்திருக்கோவில்கள் பிரதிஷ்டை செய்தும்சேர.சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் வணங்கி வந்ததாக வரலாற்று
இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாகும் .


 பழங்காலத்தில் நசையாபுரி  என்றும் இன்று நசியனூர் என்றும் அழைக்கப்படுகிற நசியனூரிலே மூவேந்தர்களாலும் திருப்பணிகள் செய்து வணங்கப்பட்டதாக வரலாறு  இயம்புகின்ற ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றபெரிய ஆலயமாகும் .

சிவபெருமான் கொங்கு நாட்டில் பல இடங்களில்
வீற்றிருந்தாலும் இங்கே மேற்கு நோக்கிய லிங்கமாக வீற்றிருப்பது மிக
விஷேசமாக கூறப்படுகிறது.

 உப திருக்கோவில்களான ஆதிநாரயணப்பெருமாள்
திருக்கோவிலும் அமைந்துள்ளது . சற்று தூரத்தில் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மற்றும் ,மாகாளி அம்மன் திருக்கோவில் அமைப்பெற்றுள்ளது .

 இங்கே
சிவாலயத்தில் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிற அம்பிகை முத்து
மரகதவல்லியின் கனிவான பார்வை கண்டு பெறும் பேறு பெறலாம்.

 ஸ்ரீ
மாகாளியம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது . கொங்கு
வேளார்ளர்களில் கண்ணன் ,பூச்சந்தை,கூறை,செம்பன் ,ஈஞ்சன் ,கீரை,பாண்டியன்ஆகிய ஏழு குலத்திற்கும் காக்கும் கடவுளாகவும் குலதெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள் .

திருக்கோவில் வளாகத்தில் தெய்வச்சேக்கிழார் ,நால்வர் ,
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் ,சூரிய,சந்திரர்கள் ஸ்ரீ தேவி
பூதேவி அம்பிகைகள் சன்னதீ ,ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் சன்னதி . ஸ்ரீ
ஆஞ்சநேயர் சன்னதிகள் கருடாழ்வார்,நாகர் சன்னதிகள் மற்றும்
திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்து பழமைமாறாமல்
புதுமையாக்கி இருக்கிறார்கள் .

 சைவ வைணவ ஒற்றுமை கலந்த
இத்திருக்கோவில்கள் கடந்த 15.7.13 மகா கும்பாபிஷேகம்
ஆன்மீகப்பெரீயோர்களால் நிகழ்த்தப்பெற்றது .

திருக்கோவில் பழங்காலத்தியஅரசமரம் ஸ்தலமரமாக விளங்கிவருகிறது .

முடிவுரை :

 ஸ்ரீ மூவேந்திரர்களால் வணங்கப்பெற்றதால் இது 1000வருடங்கள் கடந்த சிவாலயங்களில் ஒன்றாக பெருமையும் சிறப்பையும் பெறுகிறது . ஈரோடு மாவட்டத்தில் அமைந்த பழமையான சிவாலயங்களில் ஒன்றாகவும் ,சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகின்ற இப்பகுதிமக்களால் விரும்பி வணங்கப்படுகிற

மேற்கு பார்த்தஅமைப்பில் நிறைய விஷேசங்கள் கொண்ட நசியனூர் ஸ்ரீ முத்து மரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வர சுவாமியை வணங்கி எல்லா வளங்களும் நலங்களும்
பெற விழைகிறேன் .

 ஓம் சிவ சிவ ஓம்

Friday, July 26, 2013

ஸ்ரீ காசி விஷ்வநாதர் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி. ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில்கள் ,கொமராபாளையம் ,திருச்செங்கோடு வட்டம்

திருச்செங்கோடு வட்டத்தில் கொமராபாளையம் காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொமராபாளையத்தில் பார்க்க வேண்டிய ஆலயங்களில் ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி ,காசி விசுவேரசாமி, ஆஞ்சநேயர் திருக்கோவில் விஷேசமானது ,


கொமராபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் யார்
கேட்டாலும் சொல்லக்கூடிய தூரத்தில் காவிரியன்னையின் மடியில் பவானிக்கு கிழக்கே அமைந்த அற்புத திருக்கோவிலாகும் , திருக்கோவில் அமைப்பு மூன்று சன்னதிகள் அமைந்த திருக்கோவிலாகும் , திருக்கோவில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது .

 திருக்கோவில் முகப்பிலே ஸ்ரீ லட்சுமி நாராயணசாமி
சன்னதி முதலாக அமையப்பெற்றுள்ளது . ஸ்ரீ லட்சுமி நாராயணர் வணங்கி பின்இரண்டாவதாக ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியை வணங்கிட செல்கிறோம் .

நாமக்கல்லில் இருப்பதைப்போன்ற பெரிய ஆஞ்சநேயர் சன்னதி கண்டு வியப்பாக இருக்கிறது .வணங்கிய நிலை ஆஞ்சநேயர் கண்டு வணங்கி நிற்க துன்பங்களை இன்பங்களாக மாற்றும் அனுமன் பிரமிக்கும் விதத்திலமர்ந்து ஆச்சர்யம் தருகிறார் .


மூன்றாவதாக ஸ்ரீ காசி விஷ்வேஸ்வரர் சன்னதியில் சிறிய லிங்கம் அமைதியான சன்னதி , சுற்றிலும் வன்னி ,வில்வம் ,இலந்தையென பல ஆன்மீக மரங்களுடன் கோவிலைச்சுற்றி வருகையில் மனம் அமைதியடைகிறது , இங்கே திருமாலும்,சிவனும் , ஸ்ரீ அனுமனும் காவிரி ஆற்றங்கரையில் ஒரத்தில் அமர்ந்திருப்பதால் பழங்கால ஆலயமாக கருதப்படுகிறது ,

 கொமராபாளையத்தில்இருப்பவர்களெனில் கண்டிப்பாக வணங்க வேண்டிய ஆலயமாகும் . சனிக்கிழமைநாளில் ஸ்ரீ அனுமனுக்கு விஷேசபூஜை நடைபெறுகிறது . திருக்கோவில் 6 முதல்11 வரையிலும் மாலை 4முதல் 8 வரையிலும் திறந்திருக்கும் , வாய்பிருப்பின்
இறையருள் பெற்றுச்செல்லுங்கள்.

 நன்றி .

Thursday, July 25, 2013

திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஷ்வரர் திருக்கோவில்

வேதத் திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு ,
போதந் தருவது நீரு புன்மை தவிர்ப்பது நீறு,
ஓதத் தகுவது நீரு உண்மையி லுள்ளது நீரு ,
 சீதப்புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே ,

                                                                                                                 திருஞான சம்பந்தர்


எங்கும் நீங்கமற நிறைந்திருக்கிற சிவபெருமான் பல அற்புத திருத்தலங்களில் வீற்றிருக்கிறார் . அவ்வகையில் புகழ் பெற்ற ஸ்ரீ கம்பகரேஸ்வர்திருக்கோவில் சிறப்புடையதாகும்..

 மூலவர் :ஸ்ரீ கம்பகரேஸ்வரர்

 அம்பிகை :

ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி (தர்மஷம்வர்த்தினி)

ஸ்தல அமைவிடம் :

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் இரயில்
நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் திருபுவனம் அமைந்துள்ளது. சோழ நாட்டில் சோழ மன்னர்களால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆகும் ,திருபுவன வீரபுரம் என்பதே பழங்காலப்பெயராகும் .

 திருக்கோவிலமைப்பு :

கிழக்கு நோக்கிய சிவாலயத்தில் முதல்கோபுரமாகிய திரு தோரணவாயில் கண்டுபின் திருமாளிகை திருவாயில் நுழைந்தும் ,பின் மூன்றாம் வாயிலான
அர்த்தமான திருவாயில் கடந்து செல்கிறோம் இது ஓர் விஷேச அமைப்பாகும், இதைகடந்தே மூலவரை தரிசிக்கிறோம் .

 மூலவரின் சிறப்புகள் :

ஸ்ரீகம்பகஷ்வரருக்கு நடுக்கம் தீர்த்த பெருமான், திருப்புவன ஈச்சரமுடையாக
தேவர் என்கிற மற்றொரு திருநாமம் உண்டு . தேவர்கள் ,பிரகலாதன் , பெருமாள்ஆகியோரின் கம்பத்தை ( பயம் அச்சம் ) நீக்கியதால் ஸ்ரீ கம்பகேஷ்வரர் எனஅழைக்கபடுகிறார் .

 தீர்த்தங்கள் 7 அமைந்துள்ளது

ஸ்தல விருட்ஷம் :வில்வம்

 வழிபட்டோர்கள் :

வருணன் , இலட்சுமி, விஷ்ணு , சித்ரதன் .நாரதர்
,வரகுணன் , இராஜராஜ சோழன் ஆகியோராவர்கள் .

பூஜைகள்;

 5 காலபூஜைகள்
நடைபெறுகிறது .

 காலம் ;

கி.பி 1900 துவக்கத்தில் 3ஆம் குலோத்துங்க சோழன்
வம்ஷ வழியினரால் துவக்கம் செய்யப்பட்ட திருக்கோவிலாகும் .

புராணம் :

இரணியன் என்ற அசுரன் பல்வகை வரங்கள் பெற்று யாராலும் சாகா வரம்
பெற்று வாழ்ந்து வந்தான் , அவனுக்கு பிரகலாதன் என்ற மகன் பிறந்தான் அவன் ஓம் நமோ நாராயண என்கிற மந்திரத்தை உச்சரித்து வர இரணியன் கோபமுற்று தம்மை வணங்கும் படி கர்வம் கொண்டு பிரகலாதனை அச்சுறுத்த பிரகலாதன்தந்தைக்கு பயப்படாமல் நாரயணரை உச்சரித்து வந்தான் .

கடுங்கோபமுற்ற இரணியன் பிரகலாதனிடம் நீ வணங்கும் நாராயணர் எங்குள்ளார் என செருக்குடன் கேட்க தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரென பிரகலாதன் பதிலளிக்க  உடனே அங்கிருந்த தூணை உதைத்த இரணியனை திருமால் நரசிம்மராக தோன்றி இரணியனை கொன்று இரத்தம் குடித்து இரணியனை கொன்றார் .

 இரணியன் இரத்தம் திருமாலின் உடம்பினுள் சென்றதால் திருமால் மதிமயங்கி உலகை அழிக்கத்தொடங்க தேவர்கள் ஓடி சிவனிடம் தஞ்சமடைய சிவன் சரபப்பறவை வடிவமாக்கி நரசிம்மரான பெருமாளை நோக்கி விரைந்தார் . தன்மீதுசரபப்பறவையின் நிழல் பட்டதும் நரசிம்மர் இயல்பு நிலையடைந்ததாக வரலாறு .


தம் தவறை உணர்ந்து திருமால் தேவர்கள் சிவனைப்பாடி அருள்பெற்றனர் ,
தங்களுக்கு விளைந்த கம்பத்தை (அச்சம் நடுக்கம் ) நீக்கியதால்
இச்சிவனுக்கு கம்பகரேஷ்வரர் நடுக்கம் தீர்த்த பெருமான்
என்றழைக்கபடுகிறார் .


திருவிடை மருதூர் செல்லும் போது
அருகிலுள்ள திருபுவனநாதரை வணங்கி விட்டு வாருங்கள் , எதற்கெடுத்தாலும் பயப்படுகிற சிலர் திருபுவன நாதரை வணங்குவது மிகச்சிறப்பு , நடுக்கம்தீர்த்த பெருமானை வணங்கி அச்சமில்லா வாழ்விற்கு அஸ்திரமிடுங்கள் .

 ஓம் சிவ சிவ ஓம்

Sunday, July 21, 2013

ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் ,துறையூர், திருச்சி

திருச்சி மாநகரில் உள்ள பல திருக்கோவில்களில் விஷேசமான திருக்கோவிலாக இருந்தாலும் அம்பிகை வழிபாட்டுக்குரிய பழமையான திருக்கோவிலாக ஸ்ரீவெக்காளியம்மன் திருக்கோவில் பழமையும் புராணத்தொடர்பும் கொண்டது .


செல்லும் வழி :

 திருச்சி நகரின் மேற்குப்பகுதியில் உறையூர் என்ற பழமை
வாய்ந்த பகுதியாகும் , திருச்சியில் இருந்து 3கி.மீ தொலைவிற்குள்ளாக
நாச்சியார் கோவில் என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மேற்கே
500மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது


உறையூர் :

 பழங்காலச்சோழர்களின் தலைநகராக விளங்கிய துறையூரில்
அருள்பாலிக்கும் அம்பிகையாவார் . கி.பி 130 களிலேயே உறையூரின் பெருமையை யவனமுனிவரால் சோழர்கள் தலைநகராக குறிப்பிட்டுள்ளதை வைத்தை பழமையும் தொன்மையும் அறியலாம் .

 வாசபுரி உறந்தை.வாரணம் ,முக்கீஷ்வரம் எனபழங்காலத்தில் உறையூர் அழைக்கப்பட்டது. உறையூரில் புகழ்பெற்ற நாச்சியார் திருக்கோவில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று அதை முந்தைய பகிர்வில்படிக்கவும் .


 திருக்கோவில் வந்தவுடன் தெற்கு வாயிலாக உள்ளே நுழைந்தவுடன்
நாம் காண்பது வல்லப கணபதியாவார் அவரை வணங்கி பின் மயூரமுருகர் வள்ளிதெய்வானை தரிசித்து பின் காத்தவராயர் மதுரைவீரன் ,பெரியண்ணன் சன்னதிகளை தரிசனம் செய்து பின் தனிச்சன்னதியில் உள்ள பொங்கு சனிஷ்வரரை வணங்கி நவகிரகங்கள் தொழுது நீண்ட பிரகாரத்தில் மூலவராக அம்பிகை ஸ்ரீவெக்காளியம்மன் அருள்பாலிக்கிறார் ,

இறைவி காக்கும் கடவுளாக மங்களகரமாக விளங்குகிறார் .நாங்கள் செல்லும்போது தங்கரதத்தில் ஸ்ரீ வெக்காளி அம்மன் தரிசனம் கிடைக்கப்பெற்றது.

அம்பிகைக்கு தங்க தேர் உள்ள நான் பார்த்த திருக்கோவில் வெக்காளியம்மன் மட்டுமே, இறை கருணையால் நாங்கள் சென்ற நேரம்அம்பிகை தங்கத்தேரில் பவனி வந்தது எங்கள் பாக்கியமேவாகும்.

 அம்பிகைக்கு முன் சூலங்கள் ,இறை வேண்டுதலுக்காக பக்தர் வேண்டி மாலையாக மடித்து கட்டப்பட்ட சீட்டுகளை கண்டு வியப்புற்றேன் .

 அம்பிகையும் சிறப்புகளும் :

வடக்கு பார்த்த அம்பிகை ஸ்ரீ வெக்காளி அம்மனாகும் .வலது காலை மடித்து
இடது காலை ஊன்றி இருப்பது சுகாசனம் என்றும் இவ்வாறுள்ள அம்பிகை
மங்களங்கள் பலவற்றை வாழ்வில் ஏற்படுத்துவார் ,ஆகவே நன்றாக வணங்குகள் என விளக்கினார். கருணைமிகு கண்களால் சிவந்தமுகத்தால் அம்பிகை கண்டு வழிபட்டோர்க்கு தீவினைகள் களைந்து நல்வினைகள் பிறக்கமென்பதில் ஐயமில்லை.


விஷேசநாட்கள் :

பெளர்ணமி மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகிறது ஒவ்வொரு மாதத்திற்கேற்றார் போல சிறப்பு அபிஷேக வழிபாடுகள்நடைபெறுகிறது. கட்டணம் செலுத்தும் பக்தர்களுக்கு வெள்ளி காலை 10.15 முதல்11 வரை தங்ககவச வழிபாடு விஷேசமாக நடைபெறுகிறது

 . பூஜை நேரங்கள் :


திருக்கோவில் தினமும் காலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.00மணிக்கு
சாத்தப்படுகிறது. முழு பகல் நேரத்திலும் கோவில் எப்போதும்
திறக்கப்பட்டிருக்கும் .

அபிஷேகம் இரு நேரங்கள் காலை 5.30 மற்றும்
மதியம் 12 மணிக்கும் நடை பெறும் . ஆறுகால பூஜை விஷேசமாக செய்யப்படுகிறது


 திருக்கோவில் தொலைபேசி எண் :0431 - 2761869, 2767110

 முடிவுரை :

எங்கும் சக்தி தெய்வமாக காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ வெக்காளியம்மன்
பழங்கால சோழர்கள் காலத்தியது. பல காலமாற்றங்களால் திருக்கோவில்
புதுப்பிக்கப்பட்டு இருப்பினும் அன்னையின் சக்தி அளப்பரியது . வாய்ப்பு
அமையும் போது ஸ்ரீ வெட்காளியம்மனை தரிசித்து வாருங்கள் ,நலங்கள் பலவும்கூடும் .

நன்றி

Saturday, July 20, 2013

அருள்மிகு அகிலாண்டிஷ்வரி உடனமர் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவில் ,திருவானைக்காவல் ,திருச்சி

''சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து,
உலந்தவன் இறந்த போதேகோச்செங்கண்ணுமாக ,
கலந்த நீர் காவிரிசூழ் சோணாடு சோழர்தங்கள் ,
குலந்தனிற்பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே''.

                                                                                                                    -திருநாவுக்கரசர்

 தமிழகத்தின் பஞ்ச பூதத் ஸ்தலங்களில் நீர்த்ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகதிருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவிலாகும் .

 இறைவன்-சம்புகேஸ்வரர்

அம்பாள் - ஸ்ரீ அகிலாண்டீஷ்வரி

 அமைவிடம் -
திருச்சிமாவட்டம் ஸ்ரீ ரங்கம் வட்டம் ஸ்ரீரங்கத்தில்இருந்து
திருவானைக்காவல் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஷ்தலமரம் : வெண்நாவல் மரம்

 பழமை -

தேவாரப் புகழ் பெற்ற சுமார் 2500 ஆண்டுகள் வரலாற்றுப்
பெருமை கொண்ட கோச்செங்கோட்சோழனால் கட்டப்பெற்ற நீண்டபெரிய மதிற்சுவர்கொண்ட அழகிய திருத்தலமாகும் .

தீர்த்தங்கள் - நவ (9) தீர்த்தங்கள் பாடல்

பாடியோர்கள் -

சமயக்குரவர்கள் அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் ,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய அற்புத ஸ்தலம்.அவர்களின்றி
காளமேகப்புலவர் .தாயுமானவர்.கச்சிய்யப்ப முனிவர் ,அருணகிரிநாதர் .
ஆகியோரால் பாடல் பெற்ற பதியாகும் ,

வணங்கியோர் -

நந்தி,சம்புமுனிவர்,அகிலாண்டீஷ்வரி . பிரம்மா ,இராமபிரான் ,அருணகிரிநாதர் .ஆகிய எண்ணற்ற
பெருயோர்கள் வணங்கிய ஸ்தலமாகும் ,

 பூஜைநேரங்கள் :

5காலபூஜையாகும் ,

 காலைஉசத்காலபூஜை 6.30 முதல் 7.30 வரை,
காலசந்தி 8. 00 முதல் 9.00 வரை
உச்சிகாலபூஜை 11.00 முதல் 12. 00வரை
 சாயரட்சைபூஜை 05. 00முதல் 05.45வரை
அர்த்தசாம பூஜை -09. 00 0930க்குள்ளாக
நடைபெறுகிறது.
 முக்கிய திருவிழா நாட்களில் வெள்ளி ஞாயிறுகளில் நடை திறந்தே இருக்கிறது.

புராணம் :

பழங்காலத்தில் யானை ஒன்று காட்டில் வசித்து வந்தபோது
காட்டில் சிவலிங்கம் ஒன்றைக்கண்டது. யானை அவ்விடமே தங்கி காவிரி நீரால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தது . அப்போது வெண்ணாவல் மரத்தில் சிலந்தி ஒன்று வசித்து வந்தது . மரத்தில் இருந்து குப்பைகளும் தூசிகளும் லிங்கம் மேல் விழாமல் வலைபின்னி சிவவழிபாடு செய்து வந்தது .

அடுத்த நாள் யானைவந்தது. சிவலிங்கம் மேல் சிலந்தி வலையா என பிய்த்து எறிந்தது . யானை சென்ற பின் வந்த சிலந்தி கோபம் கொண்டு மறுபடி சிலந்திவலை கட்டி பூஜை செய்து கொண்டிருக்க மறுநாள் வந்த யானையும் சிலந்தியும் கோபம் கொள்ள சிலந்தி துதிக்கை வழியாக தலை உச்சியில் சென்று கடிக்க யானை இறந்தது.துதிக்கையிலிருந்து வெளிவரமுடியாமல் சிலந்தியும் இறந்தது.

 அப்போது காட்சி கொடுத்த சிவபெருமான் தமக்கு பூஜை செய்தபடியால் யானைக்கு சிவலோகத்தில் பூத கணங்களுக்கு தலைமையாக நியமித்து அருள் வழங்கினார் ,சிலந்தி சோழமன்னராக பிறக்க அருள் செய்தார் என்பது புராணம் கூறும் உண்மையாகும் .

 அன்றுமுதல் இத் திருத்தலம் "திருவானைக்கா "என்றும்"ஆனைக்கா " என்றும் பெயர் பெற்று சிறப்பு பெற்றது. நால்வர் மட்டுமன்றிஅருணகிரி நாதராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும் .

 முடிவுரை :

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமான சிவஸ்தலமாக வணங்கப்படுகிற ஸ்ரீஜம்புகேஷ்வரர் ஸ்ரீ அகிலாண்டிஸ்வரி திருக்கோவில் வந்து அருள்பெறுங்கள் .


திருக்கோவில் நீண்ட மதிற்சுவரும் சிறிய சிவலிங்க அமைப்பும் குனிந்து
செல்லக்கூடிய அழகையும் காணுதல் சிறப்பு . திருச்சியில் பார்க்கவேண்டிய
அருகாமையில் உள்ள சிவஸ்தலம் ,

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமான் உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் உண்டாக்கவேண்டி இதைப்பாராயணம்
செய்கிற அனைவர்க்கும் சிவனருள் கிட்ட வேண்டி விடைபெறுகிறேன் .

நன்றி

Friday, July 5, 2013

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ,குமார வயலூர் ,ஸ்ரீ ரங்கம் வட்டம் ,திருச்சி

ஸ்ரீ ஆதிநாயகி உடனமர் ஆதிநாதர் திருக்கோவில் ,

                                வயலூர், திருச்சி



அமைப்பு : 


திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வயலூர் என
அழைக்கப்படுகிற குமரன் குடிகொண்டு அருள்வதால் குமாரவயலூர் எனவும்
சிறப்பிக்கப்படுகிற சுற்றிலும் வயல் சூழ்ந்த ஓர் அழகிய அமைப்பில் ஸ்ரீ
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

 இங்கே மூலவராக தாயார் ஸ்ரீஆதிநாயகி உடன் தகப்பனார் ஸ்ரீ ஆதிநாதராக அருள்பாலிக்க பெருமை சேர்க்கும் விதமாக வள்ளி ,தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் ஸ்தலமரமாக வன்னி மரம் விளங்குகிறது.


தீர்த்தம் :


சக்தி தீர்த்தம் இத் தீர்த்தம் முருகப்பெருமான் தன் வேலால்
உருவாக்கியதாக புராணச்செய்தி உரைக்கிறது. சக்தி தீர்த்தம் திருக்கோவில்
முன்பாக குளத்தில் பொங்கி வழிகிறது.

 திருக்கோவில் சிறப்பு : 


 அருணகிருநாதருக்கு ஸ்ரீ முருகப்பெருமான் திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்டு வயலூருக்கு வா என அழைத்து வயலூருக்கு வந்த அருணகிரி நாதருக்கு காட்சி தந்து அவரின் நாக்கில் "ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட முதல் அடியாக அருளிய ஸ்தலமாக போற்றப்படுகிறது .


முருகப்பெருமான் தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்ட ஸ்தலமாக
போற்றப்படுகிறது. ஆக ஞானம் வளர இங்கே வணங்குவது சிறப்பு ,
திருக்கோவிலில் திருமணம் செய்வது மிக சிறப்புடையாக குறிப்பிடுகிறார்கள்.ஸ்ரீ ஆதிநாயகி இங்கே வடக்குமுகமாக அருள்பாலிப்பதால் விஷேசமாகும் .


திருக்கோவில் வணங்கியோர்கள் : 


அக்கினி தேவன் , அருணகிரி நாதர் ,
கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகியோராவர்.

 திருக்கோவில் பூஜைகள்:


 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் , மதியம் 3.30முதல் இரவு 09.00 மணி வரையிலும்
திருக்கோவில் திறந்திருக்கும் . திருக்கோவில் காலம் சோழர்கள் கால
கல்வெட்டை சார்ந்ததாகும் .


பழங்காலத்தில் சோழ அரசர்கள் வயலூரை முகாமிட்டிருந்த போது தாகம் காரணமாக கரும்பை உடைக்க அது மூன்றாக பிளந்து இரத்தம் வர அங்கே சுத்தம் செய்து தோண்டிய போது அங்கே சுயம்பு லிங்கமாக ஆதிநாதர் வெளிப்பட அச்சோழ மன்னரால் திருக்கோவில் எழுப்பப் பட்டது என்பது வரலாறாகும்.பொய்யாக்கணபதி என்ற தனிச்சன்னதி வணங்கத்தக்கது .

 விசேச நாட்கள் :

வைகாசி விசாகம் , கிருத்திகை ,சஷ்டி, பிரதோஷ நாட்கள் ஆகியனவாகும் .


முடிவரை :


 குன்றில்லாத இடத்தில் அமையாத முருகர் கோவில் என்றாலும் கூட
இங்கே மூலவராக ஆதிநாதர் இருக்க முருகப்பெருமான் ஸ்ரீ அருணகிரி
நாதர்க்கு காட்சி கொடுத்ததால் பல சிறப்புகள் பெற்று விளங்குகிறார் .


முருகப்பெருமானே காட்சி தந்த ஸ்தலம் , அழகில் முருகர் நம்மை அன்பு
செலுத்துகிறார் . திருச்சி சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள் .
வயலூர் முருகர் வளங்கள் பல சேர்ப்பார் . நன்றி

Thursday, July 4, 2013

ஸ்ரீ மைவிழியம்மை உடனமர் உஜ்ஜீவநாதர் திருக்கோவில் , உய்ய கொண்டான் மலை , கற்குடி ,திருச்சி

அமைப்பு : 


 திருச்சியில் இருந்து மேற்கே 5 கி.மீ தொலைவில் வயலூர்
செல்லும் ரோட்டில் உய்யகொண்டான் மலை என்னும் அழகிய 50 அடிக்குன்றில் கற்குடியில் என்ற இடத்தில் ஸ்ரீ உஜ்ஜீவநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது


மூலவர் : 


உஜ்ஜீவநாதர் ,

உச்சிநாதர் ,கற்பக நாதர் , முக்தீசர் என
அழைக்கப்படுகிறார் .

மூலவர் சுயம்பு லிங்கம் . 


 இறைவி :


பாலம்பிகை , மைவிழியம்மை காவிரியின் தென்கரை சோழநாட்டில் அமைந்த 4வதுசிவஷ்தலமாகும் . அழகிய கற்குன்றில் சிவன் குடியிருப்பதால் கற்குடி எனஅழைக்கப்படுகிறது .

 ஸ்தல விஷேசம் : 


 என்றும் 16 ஆக வாழமார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த சிவஸ்தலம் ,ஆக இத்தலத்தில் மார்க்கண்டேயரை காப்பாற்ற உறுதி அளித்து சிவன் காட்சி தந்த ஸ்தலமாகும் .நந்திவர்ம பல்லவமன்னரால் கட்டப்பெற்ற திருக்கோவில் ஆதலால் இவ்வூர் பழங்காலத்தில் நந்தி வர்ம மங்கலம் என பெயர் பெற்றது.

 பாடல் பாடியோர் :


அப்பர் .சுந்தர் ,சம்பந்தர் ஆகியோர் பாடல் பெற்ற சிவஷ்தலமாகும் .
அருணகிரிநாதர் இங்குள்ள ஸ்ரீ முருகப்பெருமானை பாடியுள்ளார் .

 தீர்த்தம்: 


பொன்னொளி ஓடை ,நாற்கோண தீர்த்தமாகும் .

 ஸ்தலமரம் : 


 வில்வம் .

வழிப்பட்டோர் :


 உபமன்யு முனிவர்,நாரதர் ,கரண் ,மார்க்கண்டேயர் ஆகியோராவர். 18 ஆம் நூற்றாண்டில் திருக்கோவில் கோட்டை யாக இருந்ததாம் .


திருக்கோவில் காலை 06.00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4.00 மணிமுதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோவில் திறந்திருக்கும் . மற்றோர்சிவலிங்கமாக இடர்காத்தார் உடன் அஞ்சானாட்சி அம்மன் அருள்பாலிக்கிறார் .


முடிவுரை : 


ஸ்ரீ உய்யகொண்டான் திருமலை திருச்சியில் இருந்து 5 கி.மீ
தொலைவில் அமைந்த அற்புத சிவஸ்தலமாகும் . அழகிய குன்றில் ஏறி உள்ளே அழகியஅமைப்பில் பழங்காலத்தில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட திருக்கோவில் .நிறைய வில்வமரங்கள் சூழ திருக்கோவில் அமைந்துள்ளது .

 தேவாரப்பாடல் பெற்றஅழகிய ஆலயம் . பார்க்கவேண்டிய அற்புத திருக்கோவில் . அதீத சக்திகள்கொண்ட ஆலயம் . வாய்ப்பு கிடைக்கும் போது தரிசித்து வாருங்கள். 5கி.மீதொலைவிற்குள்ளாக வயலூர் ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் அமைந்துள்ளது .


வாய்ப்பு கிடைப்பின் வந்து ஆழ்ந்து வணங்குங்கள். எல்லா வளமும் நலமும்
கிட்டும் . நன்றி

Monday, July 1, 2013

ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருக்கோவில் ,உறையூர் திருச்சி

                                   "திசுளாபுரவல்லியே நம ஓம் "


 ஸ்ரீ ரங்கம் அண்மையில் பயணித்து வந்த போது 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
திருக்கோவில் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது .இது ஸ்ரீ அரங்கநாதசுவாமி  தேவஷ்தானத்திற்குட்பட்டது .

 திரு உறையூர் கோழியூர் எனவும் நிகளாபுரி
எனவும் அழைக்கப்படுகிறது. நந்த கோழ மகாராஜாவுக்கு குழந்தைபேறு
இல்லாக்குறை நீக்கி இலட்சுமி கமலமலரில் அவதரித்து இங்கே உறைந்த
காரணத்தால் இவ்வூர் திரு உறையூர் என்றும் உறந்தை என்றும்
அழைக்கப்படுகிறது .


 பெருமாள் இங்கே அழகிய மணவாளப்பெருமானாக நின்றநிலையில் அருள்புரிகிறார் .


 தாயார் மூலவராக வாஸல லட்சுமியாகவும்



உத்சவராக கமலவல்லி உறையூர் வல்லி எனவும் அழைக்கப்படுகிறார் . நந்த
சோழர் உறையூர் கமலவல்லி நாச்சியாரை பெருமாளுக்கு திருமணம் செய்து
வைக்கிறார் . திருக்கோவில் ஸ்ரீ ரங்கம் பார்த்த நிலையில் வடக்குதிசையில்
அமைந்துள்ளது .

கல்யாண விமானத்தில் அருள் புரிய இங்குள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் கமலபுஷ்கரணி என்றும் அழைக்கப்படுகிறது . காவேரி நதி ,
இதன் தீர்த்தமேயாகும் . திருக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


சிறப்பு :

திருப்பாணாழ்வார் அவதரித்த ஸ்தலம் . திருமங்கையாழ்வாரால்
மங்களாசாசனம் செய்து வைக்கப்பட்ட ஸ்தலம் . கார்த்திகை மாதம் 10நாட்கள்
ரோகிணி நட்சத்திர உற்சவம் சிறப்பாக நடைபெறும் .

 திருக்கோவில் காலை 6.45
முதல் 12.00  வரையிலும் ,
மாலை 05.00முதல்
 இரவு 0800

முடிவுரை :

 ஸ்ரீ ரங்கம் ஆன்மீக சுற்றுலா சுற்றுலா செல்பவர்கள் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கமலவல்லி நாச்சியாரை வணங்குங்கள் . மங்கலங்கள் உங்கள்வீட்டிற்கு வர அழகிய மணவாளப்பெருமானை வணங்கி வாருங்கள் . நல்லது பலவும்
உங்கள் வாழ்வில் கிட்டும் .நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...