Wednesday, May 16, 2012

திருப்பரங்குன்றம் ஸ்ரீதெய்வானை உடனமர் சுப்பிரமணிய சுவாமி ஆலய தரிசனம்



திருமணத்தடை தீர்க்கும்

திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்




துதி :

ஒரு முருகா என்று என் உள்ளங்குளிர உவந்துடனே
வருமுருகா என்று வாய் வொருவா நிற்பக் கையிங்ஙனே
திருமுருகா என்று தான் புலம்பா நிற்கும் தையல் முன்னே
திருமுருகாற்றுப்படையுடனே வரும் சேவகனே !

அமைவிடம் :

தமிழ்சங்கம் வளர்த்த மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 7 கி.மீட்டர் தொலைவிலும் மதுரையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது.

திருக்கோவில் அமைப்பு :

சுமார் 300அடி உயர பாறையின் அடியில் அமையப்பெற்ற அழகிய குடவரைக்கோவிலாகும் . மூலவர் : திருமுருகன் தெய்வானையுடன் திருமணம் நடைபெற்ற இடம் . இங்கு முருகப்பெருமான் தெய்வானை திருமணத்திருக்கோலத்தில் அமைந்திருக்கிறார் . ஸ்ரீ முருகர் திருப்பரங்குன்றத்தில் தவம் செய்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

மூலவரும் உடனுறை மூர்த்திகளும் :

ஸ்ரீ பரங்கிநாதர் (சிவலிங்கம் )
ஸ்ரீ கற்பக விநாயகர் ,
துர்க்கை ( கொற்றவை )
ஸ்ரீதேவிபூதேவி உடனமர் பெருமாள் ,
மூலவர் தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர்

ஆகிய ஐந்து மூர்த்திகளும் தனித்தனி கருவறைகளில் ஒரே மண்டபத்தில் அருள்பாலிக்கின்றனர் . குகைக்குள் உள்ள குடவரைக்கோவில் வித்தியசாமான ஆன்மீக அனுபவம் .

புராணக்கதை :

சூரபத்மனை அழித்தமையால் இந்திரன் தன் மகளான தெய்வானையை மணம் செய்து வைக்க திருப்பரங்குன்றத்தில் ஆசைப்பட்டு தேவர்கள் ,நாரதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையை இத்தலத்தில் மணம் புரிந்து முருப்பெருமான் உறையும் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள் :

1. பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற 14 சைவத்திருத்தலங்களில் ஒன்று
2. ஸ்ரீ முருகர் தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் இங்கு மட்டுமே காணலாம்
3. பாறையில் செதுக்கப்பட்ட ஒரே குடவரைக்கோவில்
4. ஆறுபடைவீடுகளில் முதல் படை வீடு
5.இரட்டை விநாயகர் சிலைகள்
6. மூர்த்தி,ஸ்தலம் ,தீர்த்தம் ஆகிய முச்சிறப்புகளையும் கொண்டது
7. தேவாரம் கூறும் சைவத்திருத்தலங்கள் 275ல் ஒன்று
8. முருகர் அமர்ந்த நிலையில் காணப்படும் சிறப்பு
9 .சிவபெருமானும் முருகரும் இணைந்து காணப்படுவதால் "தெற்கு கயிலாய மலை " என கூறப்படும் சிறப்பு

10.போகர் சாப விமோசனம் பெற்ற ஸ்தலம்
11. பாராசுர முனிவரின் மகன்கள் சாபம் நீங்கப்பெற்ற ஸ்தலம் என கண்ணுக்கு தெரியாத பல்வேறு சிறப்புகளை அற்புதங்களை நிகழ்திய ஸ்தலமாகும் .

சான்றுகள் :

சமண முனிவர்கள் இங்கு பஞ்சபாண்டவர்கள் குகையில் தங்கியிருந்ததற்கான சான்றுகள் 3 ஆம் நூற்றாண்டின் பிராமி எழுத்துக்கள் இன்றும் உள்ளதாம் . புராணங்காலங்களில் இருந்து புகழ்பெற்றுவந்த திருப்பரங்குன்றத்தை பாண்டிய மன்னர் நெடுஞ்சடையான் பராந்தகன் கி.பி 765- 815 ல் உருவாக்க முனைந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றது.

ஸ்தலமரம் : கல்லத்தி மரம்

லட்சுமி தீர்த்தம் :

திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பெரிய குளமாகும் . அழகிய மீன்களுக்கு மக்கள் இங்கே விற்கப்படும் பொறிகளை இறைத்து வருகின்றனர் .

திருப்பரங்குன்றதை வியந்து பாடல் பாடியவர்கள் :

திருஞானசம்பந்தர் ,ஸ்ரீ சுந்தரர் ஆகியராலும் தேவாரப்பதிகளில் பாடப்பெற்றும் குமரகுருபரர் ,நக்கீரர்,பாம்பன் சுவாமிகள் ,அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :

கோபூஜை -5..00மணிக்கு துவங்கி உச்சிகாலம் பூஜை12.30வரையிலும் மாலை சாயரட்சையில் 05.30க்கு துவங்கி இரவு 9.30க்கு பள்ளியறை பூஜைகளுடன் முடிவுகிறது.

திருவிழா :

வைகாசி மாதத்தில் வைகாசி விசாக தினம், பங்குனி உத்திரம் ஆகிய இந்துக்களின் அனைத்து விஷேச தினங்களும் முருகப்பெருமானுக்குரிய விஷேச பூஜைநாட்களும் உகந்தது. வெளியூர் பக்தர்கள் எல்லா நாட்களிலும் அருள் வேண்டி வருகின்றனர் .

முடிவுரை :

ஏழு நிலை இராஜகோபுரங்களுடன் 12 தீர்த்தங்களுடன் ஸ்ரீ முருகப்பெருமான் தெய்வானையுடன் மணக்கோலத்தில் புரிகிறார் . இங்கே வழிபடுபவர்கள் நல்ல மணவாழ்வு அமைந்து மங்கள இசை கேட்கலாம் திருமண வரம் கிட்டும் .

திருப்பரங்கிரி,சுமந்தவனம் ,கந்தமாலை ,சுவாமிநாதபுரம் ,தென்பரங்குன்றம் ,தண்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் திருப்பரங்குன்றத்தை திருப்பரங்குன்ற நாதனை வணங்கி மங்களம் உண்டாக வாழ்த்துக்கள் .

ஓம் முருகா சரணம் முருகா

Thursday, May 10, 2012

குன்றி மலைச்சாரலில் அமைந்த குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு




குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு



ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டுகளில் பார்க்கவேண்டிய அணைக்கட்டில் குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டும் ஒன்றாகும் .பெரிய அளவில் இல்லை என்றாலும் சிறிய அளவில் அழகு மிகுந்து சுற்றிலும் மலைகள் பச்சைப்பசேல் என இருக்க இயற்கையாகவே அமைதி நம்மை தொட்டுச்செல்கிறது.

அமைப்பு :

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் கொங்கம்பாளையம் அருகே அமைந்துள்ளது.

எப்படி செல்வது :

சத்தியமங்கலத்தில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் வாணிப்புத்தூரில் இருந்து சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கொங்கர்பாளையம் வரை செல்ல பஸ் வசதி உண்டு.ஆனால் அடிக்கடி குண்டேரிப்பள்ளம் அணை செல்ல பஸ் வசதி இல்லை. கார் அல்லது இருசக்கர வாகனத்தில் செல்வது நல்லது. பெரிய எதிர்பார்ப்புகளுடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும் .

விளக்கோம்பை , குன்றி மலையில் பெய்கின்ற மலைநீர் சேகரிக்கப்படும் இடமாக குண்டேரிப்பள்ளம் திகழ்கிறது. சுமார் ஒரு கி.மீட்டர் தூரமுள்ள அணைக்கட்டின் மேல் சாலையில் நடந்து சுற்றிலும் மலைகள் ரசிக்கலாம் .குண்டேரிப்பள்ளம் அணையை பார்க்க வருபவர்கள் உணவுப்பொருட்கள் கொண்டு வருவது நல்லது. இங்கு உணவுக்கடைகள் கிடையாது.

யானைகள் :

மாலை நேரத்தில் தண்ணீர் குடிக்க யானைகள் கூட்டம் இங்குள்ள நீர்பிடிப்பு பகுதிக்கு வருவதுண்டாம் .அணையின் மேல் இருந்து பார்க்கலாம் என சொன்னார்கள் . நீங்கள் யானையை பார்த்தால் பின்னூட்டம் இடுங்கள் .

முடிவுரை :

ஒருநாள் பயணத்திற்கு ஏற்ற இடம் . அமைதியை தேடிச்செல்ல அழகிய இடம் . ஞாயிற்றுக்கிழமைகளில் மிதமான கூட்டம் இருக்கும் . இங்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பிடித்த மீன்கள் விற்கப்படுகிறது. எப்போதேனும் வாய்ப்பு கிடைத்தால் ஓர் முறை சென்று வரலாம்

Monday, May 7, 2012

ஈரோட்டில் அருள்பாலிக்கும் அம்பிகை



ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில்



அபிராமி அந்தாதி :

தனம் தரும்கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும்தெய்வ வடிவம் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

- அபிராமி பட்டர்


ஈரோட்டின் காவல் தெய்வமாக ஈரோடு மக்களால் விரும்பி வணங்குகின்ற மாரியம்மன் திருக்கோவிலாகும் .

அமைவிடம் :

பழங்காலத்தில் பூந்துறை நாட்டின் ஓர் பகுதியான ஈரோட்டை பல அரசர்கள் ஆண்டு வந்தனர் . அரசர்கள் வாழ்ந்த இடங்கள் கோட்டை இருப்பது நாம் அறிந்ததே ,அவ்வகையில் தற்போது உள்ள ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதி பழங்காலத்தில் கோட்டையாக இருந்தது . அதற்கு உதாரணமாக கோட்டை ஈஸ்வரர் திருக்கோவில் , ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ,ஸ்ரீகோட்டை பெருமாள் கோவில் என பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் தான் பெரிய மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .


மூலவர்:

ஸ்ரீ பெரிய மாரியம்மன் வடக்கு பார்த்த விஷேச அமைப்பான மாரியம்மன் ஆகும் . முகப்பில் அர்த்த மண்டபத்தில் காவல் தெய்வங்களான ஆண் பெண் பூதக்கணங்களை வணங்கி விட்டு அழகிய நிலையில் அம்மன் அமர்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் காட்சியளிப்பது பிரமிப்பாகும் .

கரங்களில் நாகபந்தனத்துடன் உடுக்கை, பாசம் ,கபாலம் கத்திகள் உள்ளன . பெரிய மாரியம்மன் பரசுராமர் திருமேனியில் காட்சியளிப்பதாக பழங்கால இதிகாசங்கள் இயம்புகின்றன.

பூஜை நேரங்கள் :
காலை 06.00மணிக்கு சந்திபூஜையும்
மதியம் 12.00 மணிக்கு உச்சிகால பூஜையும்
மாலை 06.00மணிக்கு சாயரட்ஷை பூஜையும்


தினமும் பூஜை நடைபெற்றாலும் அம்மனுக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும் .

ஸ்தலமரம் :

அம்பிகைக்கு உரிய வேம்பு ஸ்தலமரமாக அமைந்துள்ளது.

வருடபூஜை :

பெரிய மாரியம்மன் திருவிழா பங்குனி மாதம் 1 ஆம் நாள் துவங்கி 20நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடைசிநாளில் கம்பம் பிடுங்கும் விழா 19நாள் லட்சம் மக்கள் கூட முக்கிய வீதிகளில் கம்பம் செல்லப்பட்டு ஈரோடே அதிர கம்பங்களுக்கு உப்பு வீச காளிங்கராயன் வாய்க்காலில் கொண்டு சென்று விட்டு வருவார்கள் . 20 ஆம் நாள் மறுபூஜையுடன் வருடாந்திர பூஜை முடிவு பெறும் .

பெரிய மாரியம் மன் வகையறா திருக்கோவில்கள் :

ஸ்ரீ சின்னமாரியம்மன் திருக்கோவில் பெரியார் வீதியில் அமைந்துள்ளது. காரை வாய்க்கால் மேற்புறப் பகுதியில் ஸ்ரீவாய்க்கால் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த இரு கோவில்களும் பங்குனி மாதத்தில் பெரிய மாரியம்மன் பூச்சாட்டுதலுடன் துவங்குகின்ற திருக்கோவிலாகும் . இந்த இரு மாரியம்மன் திருக்கோவிலும் விஷேசமானதே .

பெரிய மாரியம்மனை விரிவாக இணையத்தில் பார்த்து வணங்க : www.erodeperiamariamman.info.in

வலைத்தளத்தில் காணலாம் .

பெரிய மாரியம்மன் வணங்குவதின்பலன் :

ஒவ்வொரு திருக்கோவிலுக்கும் சென்று வழிபடும்போது பல்விதமான பலன்கள் ஏற்படும் அவ்வகையில் ஸ்ரீ பெரிய மாரியம்மன வணங்குவதால் குழந்தைவரம் ,நோய் நிவாரணி , தொழில் சிறப்பு உள்ளிட்ட வேண்டுவோர் வேண்டும் வரமளிக்கும் அம்பிகையாக ஸ்ரீ பெரியமாரியம்மன் விளங்குகிறது ,

அதற்கு சாட்சியாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் வருடாந்திர பூஜை நடக்கும் 20நாட்களும் கேழ்வரகு கூழ் , அன்னதானம் , மோர் , தாகம் தணிக்க நீர் என மக்களுக்கு வேண்டியதை செய்கின்றனர் .

முடிவுரை :

ஈரோடு மக்களின் விரும்பி வணங்குற அம்பிகை பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . வடக்கு பார்த்த அம்மனாக விஷேச நிலையிலும் ஈரோட்டில் பல மாரியம்மன் திருக்கோவில்கள் அமைந்திருந்தாலும் ,
எல்லோர்க்கும் பெரியவளாக விளங்கும் அம்பிகை ஸ்ரீ பெரிய மாரியம்மனை வணங்கி வளங்களை எப்பதோதேனும் ஈரோடு வந்தால் வணங்கி விட்டுச்செல்லுங்கள் .

Sunday, April 29, 2012

குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா 18.4.12



கடந்த 18.4.2012 அன்று நமது குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா அழகாக தொடங்கியது. 26.2.1913ல் துவங்கிய துவக்கப்பள்ளி 100வது ஆண்டை துவங்கியது மகிழ்வான ஒன்றாகும் .

இந்த விழாவினை சிறப்பிக்க கல்வித்துறை அலுவலர்கள் ,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் .தன்னார்வலர்கள் பெற்றோர்கள் ஊர்பொதுமக்கள் கலந்து கொள்ள 18.4.12 புதன்கிழமை காலை 09.00 மணிக்கு தமிழ்தாய் வாழ்த்து முழங்க கொடியேற்றி துவங்கியது.

தாயகம் சிவ.சிவலிங்கம் கொடியேற்றி தலைமை தாங்கினார் . நூற்றாண்டு விழா வளைவை dr.ஜீவானந்தம் பசுமை இயக்கம் திறந்து வைக்க வாழ்த்துரை பல ஊர்பெரியோர்கள் வழங்க இனிதே நடைபெற்றது.

மாலை 3.00மணிக்கு குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தலைவி திருமதி என் .நீலாதேவி நடராஜன் அவர்கள் தலைமை தாங்க விழா இனிதே தொடர்ந்து நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று அழகாக நூற்றாண்டு விழாவை சிறப்பித்து நடத்திய இரா .வெங்கடாலசலம் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் நல் விதமாக நடத்திமுடித்தது பாரட்டுக்குரியது.


பழங்காலத்தில் பள்ளிக்காக தானமாக இடம் வழங்கிய G.G குருமூர்த்தி EX M.L.A அவர்கள் நினைவாக நூற்றாண்டு விழா வளைவுத்தூண் அவர்கள் புதல்வர்கள் உருவாக்கப்பெற்றது. மாலை 6.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நம் பள்ளி குழந்தைகள் பலர் அழகாக கிராமிய நடனம் நடைபெற்றது.


பலர் வாழ்வில் ஏற்றங்களை ஏற்படுத்திய பள்ளி . இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து பல சாதனைகள் படைக்கட்டும் . மறுபடி பள்ளிப்பருவத்திற்கு சென்று வந்து உணர்வை ஏற்படுத்தியது.

Wednesday, April 25, 2012

உனக்காக காத்திருக்கிறேன்



ப்ரியமானவளே...!

உன்னை ஒரே
ஒரு நாள்
பார்த்து விட்டு
விலகி வந்தாலும்
உன் நினைவுகளில்
நகராது நிற்கிறது ... ?
என் நாட்கள் ...!

நீயே ஓவியமாக



அன்பே...
நீ வரைந்த
ஓவியங்களை ரசித்து
விட்டு திரும்புகையில்
என்னுடேனேயே வருகிறது...!
ஓவியத்தின் அழகும்
எனக்குள்ளே ஓவியமாய்
இருக்கிற
உன் நினைவுகளும் ..!

Monday, April 23, 2012

நாகதோஷம் போக்கி நல்வாழ்வளிக்கும் நாகமலை பயணக்கட்டுரை





நாகமலை

SRI NAGAMALAI ,MATHESWARA HILLS; KARNATAKA STATE

நாகமலை என்பது சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து மாதேஷ்வரமலை சென்றால் கர்நாடக மாநிலம் அடைந்து ஸ்ரீ மாதேஸ்வரரை தரிசனம் செய்து அங்கிருந்து நாகமலைக்கு செல்ல வேண்டும் எனக்கேட்டால் சொல்வார்கள் .

ஸ்ரீ மாதேஷ்வரமலையில் இருந்து 14 கி.மீ தூரத்தில் நாகமலை அமையப்பெற்றுள்ளது. 7 கி.மீட்டர் மாதேஷ்வரமலையில் இருந்து ஜீப் பயணம் கரடுமுரடான திகில் பயணத்துடன் செங்குத்தான செம்மண் மலைபாதைகளில் நம் பயணம் தொடர்ந்தது.

அங்கே சிறிய ஊரை அடைந்தோம் . இங்கிருந்து நாகமலைக்கு 6 கி.மீட்டர் மலையில் நடந்து செல்ல வேண்டும். ஜீப்பீல் மாதேஷ்வர மலையில் இருந்து நபர் ஒருவருக்கு ரூ 35 கொடுத்தால் 7 கி.மீட்டர் மலைப்பாதையில் கடந்து ஓர் கிராமத்தில் இறக்கி விடுகிறார்கள் . மலைக்கிராமமான இங்கு ஏழ்மைகள் தவழ குழந்தைகள் விளையாடுகிறது. சிறிய பள்ளிக்கூடமும் டீக்கடைகளும் இங்கு உண்டு .

நடக்க ஆரம்பித்தால் வளைந்து செல்லும் சாலைகள் நடக்க இந்த கிராமம் தாண்டினால் சமப்பகுதி வருகிறது.யானைகள் உலவும் இடமாகவும் கடக்கும் வழிகள் இருப்பதால் கவனமாக செல்லவும் . மலைகள் ஏற ஆரம்பித்தால் சிறியதும் பெரியதுமாக 7 மலைகள் ஏற வேண்டும் .எளிதான மலைதான் 4 மணி நேரத்தில் எளிதாக அடைந்து விடலாம் .

வயதானவர்கள் கூட மலை ஏறலாம் . 7மலை என்று சொன்னாலும் கூட 3 மலைகள் தான் கடப்பது போன்ற உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

நாகமலை அடிவாரம் இண்டிக நத்தம் :

ஓர் வழியாக பயணித்து நாகமலை அடிவாரத்தில் இண்டிக நத்தம் என்ற ஊரை அடைந்தோம் . பக்தர்கள் பயன்படுத்த இரண்டு கிணறுகள் , ஓர் உணவுக்கடை , மற்றும் சில டீக்கடைகள் இங்கு உள்ளன. இங்கு குளிப்பவர்கள் கிணற்று நீரை வாளியில் இழுத்து பயண்படுத்திக்கொள்ளலாம் .

அடிவார விநாகர் திருக்கோவில் வணங்கி ,அருகில் உள்ள சனீஷ்வரர் தனிச்சன்னதியை வணங்கி சற்றே மேலே சென்றால் சிறிய மலையின் உச்சியில் நாகமலை அமைந்துள்ளது.

மூலவர் :

லிங்க உருவில் அமைந்துள்ள மாதேஸ்வரர் ஆவார். 7தலை கொண்ட தலைநாகமாக அமைந்துள்ளது. இயல்பாக லிங்கம் சுயம்பு மூர்த்தியாக விளங்குகிறார் . .மாதேஷ்வரர் தற்போதுள்ள ஸ்ரீ மலைமாதேஸ்வரர் நடுமலைக்கு வருவதற்கு முன் நாகமலையில் சஞ்சாரம் செய்ததாக வரலாறு.

இங்கு லிங்க உருவில் நாகேஷ்வரராக காட்சி அளிக்கிறார் . நாகமலைக்குன்றின் வலப்பக்கம் சிறிய குகை உள்ளது. அதில் பக்தர்கள் பசும்பால் இட அது நீலநிறமாக மாறும் ஆச்சர்யம் காணலாம் . நாகமே சிவனைக்காக்கின்ற அமைப்பும் வித்தியாசமானதாகும் .

நாகமலை பெயர் காரணமும் அதிசயமும் :

திருக்கோவில் அமைவிடத்தின் பின்புறம் மிகப்பெரிய லிங்க உருவில் பாறையும் அதன் பின்னால் நாகப்பாம்பு உருவில் அந்த லிங்கத்தை பாதுகாப்பதுபோல் படம் எடுத்த நிலையில் பெரிய பாறையும் மிகப்பெரிய ஆச்சர்யம் அளிக்கிறது. போட்டோவை இணைத்துள்ளேன் பாருங்கள் .

திருக்கோவில் காலம் :

சுமார் 800முதல் 1000ஆண்டுகாலமாக இங்குள்ள மலைவாழ்மக்களான லிங்காயத்துகளால் பத்து தலைமுறைகளாக பூஜை செய்து வருவதாக செவிவழிச்செய்திகளாகும் . சான்றுகள் இல்லா விட்டாலும் மிகப்பழமை கொண்ட மலையாகும் . இங்குதான் ஸ்ரீமாதேஷ்வரர் புலியின் மீதேறி வலம் வந்தாராம் .நாக சர்ப்பம் இன்னும் இந்த நாகமலையில் ஏராளமாக வாழ்வதாகவும் பக்தர்கள் நம்பிக்கை

ஸ்தலமரம் :

பயிரன் மரம் மூலவர் எதிரே அமைந்துள்ளது . அருகே முகப்பில் விநாகர் அமைந்துள்ளார் .

பூஜைநாட்கள் :

எல்லா விஷேச நாட்களிலும் கூட்டம் இருந்தாலும் அமாவசை அன்று கூட்டம் அதிகமாக இருக்கும்.

ஸ்ரீ மாதேஸ்வரர் :

முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனிடம் அசுரர்களை அழிக்க வேண்டியதாகவும் பின் ஸ்ரீ சைலத்தில் உத்திரராஜம்மா ,சந்திரசேகரமூர்த்திக்கு மகனாக ஸ்ரீ மாதேஸ்வரர் பிறந்து 16 வயதில் சிவாம்சம் பொருந்திய சித்தராக சாமியாக சிவனாக வணங்கப்படுகிற பல அற்புதங்களை காண்பித்தவர் .

புலி மேல் வலம் வந்து மகிமாசுரன் சிரவணா போன்ற அசுரர்கள் அழிக்க வந்த சிவனாக வழங்கப்படுகிறவர் . நாகமலையை சுற்றி பல மலைகள் அரணாக காக்கின்றன . இங்கு எல்லாம் ஸ்ரீ மாதேஸ்வரர் வலம் வந்ததால் பக்தர்கள் செருப்பில்லாமல் மலை ஏறுகிறார்கள் . அசுரர்களை அழித்த இடம் சித்தூர் மட்டமாகும் .

நாகமலை சுற்றியுள்ள மலைகள் :

மயில் மலை, தேவுமலை ,ஆதி மாதேஷ்வரமலை ,கோடுகல் மாதேஷ்வரமலை, ஆணைத்தலை திம்பம் , தப்பசரைபெட்டா, குஞ்சுமலை, கத்திரி மலை , குருகஞ்சிமலை, சங்குமலை,தேன்மலை என நாகமலையை சுற்றிலும் மிகப்பிரமாண்ட மலைகள் அமைந்துள்ளன.

எல்லா மலைகளிலும் ஸ்ரீ மாதேஸ்வரர் சஞ்சாரம் செய்தாலும் நாகமலையில் வலம் வந்து கடைசியாக தற்போது அமைந்துள்ள நடுமலையில் மலை மாதேஸ்வரர் வந்து புற்றுக்கண்ணில் ஐக்கியமாகி வரும் பக்தர்களுக்காக சுயம்பு லிங்கமாக அமைந்து அருளாட்சி புரிகிறார் .

பக்தர்கள் :

20 வருடமாக அமாவசை தொடர்ந்து வரும் பக்தர்கள் ஏராளம் . வீடு, திருமணம், குழந்தைவரம் .போன்ற சுப நிகழ்வு பிரார்த்தனைகள் இங்கு எளிதாக நிறைவேறுகிறது. ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஜாதக தடை உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசனம் செய்யதால் பலன் நிச்சயம் .

பெங்களூர் பக்தர் ஒருவர் தன் மகன் வேலைக்காக வேண்டி வேலை கிடைத்தும் கோபிநத்தத்தில் இருந்து மின்சார வசதியை நாகமலைக்கு கொண்டு வந்து தன்பங்காக திருக்கோவிலை ஒளிர விட்டுள்ளார். '

முடிவுரை :

சுயம்பு மூர்த்தியாய் சிவலிங்கம் நாகமலையில் சிவனைக்காக்கிற அதிசயம் காண ஓர் முறை செல்லுங்கள் . பல தடைகளை தாண்டியே எம்மால் செல்ல முடிந்தது ." அவனவன் பால் அவன் தாள் வணங்கி" என்னும் இறை கூற்றிற்கு ஏற்ப இறைவன் அழைத்தால் மட்டுமே செல்லக்கூடிய திருக்கோவில் .

வாய்ப்பு கிடைத்தால் ஒர்முறை வந்து தரிசித்து விட்டு செல்லுங்கள் . இதைப்படிக்கிற உங்களுக்கும் வாழ்வில் மாற்றங்களும் ஏற்றங்களும் வர ஸ்ரீ நாகமலை ஆண்டவரை வேண்டுகிறேன் .

ஓம் சிவாய நமஹ.

ஆயிரம் ஆண்டுகள் கடந்த ஈரோடு ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில்



ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் ஈரோடு
SRI MAGIMALEESWARAR TMPLE ERODE


அமைப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பல சிவாலயங்கள் இருக்கப்பெற்றாலும் 1000ஆண்டுகள் தாண்டி கம்பீரமாக இருக்கும் சிவாலயங்கள் சிலதே. அதில் ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவிலும் ஒன்று. திருக்கோவில் ஈரோடு நகரில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் டி.வீ.எஸ் வீதியில் அமைந்துள்ளது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும் .

திருக்கோவில் சிறப்புகள் :

பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்க ஸ்ரீமகிமாலிஷ்வரர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார் .முதல் கொங்கு சோழனால் கட்டப்பெற்ற திருக்கோவில் .

மூலவர் அமைப்பு :

ஸ்ரீமகிமாலீஷ்வரர் சிவலிங்கமாக 2மீட்டர் அகலமும் ஒரு மீட்டர் உயரமும் கொண்டவராக அமைந்துள்ளார் . மூலவர் வெளியே எடுக்கமுடியாத படி மூலவரின் வாசற்படிகள் அமைந்துள்ளது வித்தியாசமானது.

ஸ்தலமரம் :

வில்வமரம் பழங்காலத்தில் திருக்கோவில் அமைந்துள்ள இடம் வில்வ மரங்கள் சூழ்ந்து வில்வ வனமாக அமைந்திருந்து. ஆயிரம் வருடம் கழித்து ஈரோடு நகரின் பெருக்கத்தால் தற்போது காணாமல் போய் ஸ்தலமரமாக ஒரு வில்வம் மட்டும் அமைந்துள்ளது.


திருக்கோவில் காலமும் பெயர் விளக்கமும் :

கி.பி 942 முதல் கி.பி 980 வரை ஈரோடு மண்ணை ஆட்சி செய்த முதல் கொங்கு நாட்டின் சோழ மன்னன் மகிமாலயன் என்பவரால் கட்டப்பெற்றதாக வரலாறுப்பதிவாகும் . திருக்கோவில் ஸ்தலபுராணமும் இதே கருத்தை இயம்ப மன்னர் மகிமாலயனால் தோற்றுவிக்கபட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈஸ்வரர் என்பதால் தனது பெயராலேயே ஸ்ரீமகிமாலீஸ்வரர் திருக்கோவில் என அழைக்கப்பட்டதாக கருதலாம் . இயல்பாக சிவபக்தி கொண்ட மகிமாலயனுக்கு பரகேசரி கோநாட்டான் வீரசோழ பெருமான் அடிகள் என அழைக்கப்பட்டார் .

மாற்றுக்கருத்துடைய சிலர் ராவணனின் முன்னோர்களான மாலி ,சுமாலி ,மகிமாலி ஆகியோர்கள் கட்டியதாகவும் ஸ்தல புராணக்கருத்துக்கள் கருத்துக்கள் உலவுகின்றது .இது ஆய்வுக்குரிய ஒன்றாகும் .

திருக்கோவில் அம்பாள் ஸ்ரீ மங்களாம்பிகை சன்னதி வலப்புறத்தில் உள்ளது. அம்பாள் அழகு சிலை வியக்கும் வண்ணம் அழகாக அமையப்பெற்றுள்ளது. பழங்கால வில்வமரம் கோபுரங்களின் அழகும் வியக்கவைக்கின்றன.

முடிவரை :
கி.பி 980 ல் கட்டப்பெற்ற ஸ்ரீ மகிமாலீஸ்வரர் திருக்கோவிலுக்கு தற்போது 1032 வருடங்கள் தாண்டி கோடிக்கணக்காணக்கான மக்கள் வணங்கி ஈரோடு மாநகரின் நடுவில் அமைந்த பழங்காலத்திய ஸ்ரீ மகிமாலீஷ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் பரிபூரண அருள் பெறுங்கள் .

Thursday, April 12, 2012

sri sokkanatchi amman temple.guruvareddiyur




ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் குருவரெட்டியூர்


திருக்கோவில் அமைவிடம் :

பாலமலையின் சாரலில் அமைந்துள்ள இலிப்பிலி ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூரில் இருந்து கோனார் பாளையம் செல்லும் வழியில் 3 கி.மீ சென்று ஆலமரத்துக்காடு என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது .

பழங்காலத்தில் குருவரெட்டியூர் மக்களின் கிராம தேவதையாக வணங்கப்படுகிற திருக்கோவிலாகும் .பழங்காலத்தில் திருக்கோவிலைக் காக்கும் ஆண்பெண் மினிகளை குருவரெட்டியூரில் இருந்து மண்ணால் ஆன மினிகள் சிலைகளை பூஜை செய்து நடக்க வைத்து திருக்கோவிலுக்கு கூட்டிச்சென்றதாக வரலாறு.

மூலவர் :

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் சுயம்பு மூர்த்தி உருவ அமைப்பில்லாத சிலையாக விளங்குகின்றது. முன்புறம் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. திருக்கோவில் சுற்றி இரண்டு பெரிய ஆலமரங்கள் அருகே கரடிப்பட்டியூர் ஏரியின் பள்ளம் செல்கிறது. திருக்கோவில் பல காலமாக பராமரிப்பின்றி இருந்தது.

தற்போது ஆன்மீகப்பெரியோர்களின் முயற்சியால் திருக்கோவில் குண்டத்துடன் பூச்சாட்டு விழா துவங்க உள்ளது. பல கோவில்கள் சென்று எழுதினாலும் சிறிய
வயதில் இங்குள்ள ஆலமரத்தில் தூரிகை ஆடி விளையாடிய நாட்கள் மறக்க முடியாததாகும் .

ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் திருக்கோவில் விழா ஆரம்பித்த பின் குருவரெட்டியூர் ஊர் மாரியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் பூச்சாட்டு விழா துவங்கும் .

நம் பகுதி வாழ் மக்கள் ஸ்ரீ சொக்கநாச்சி அம்மன் அருள்பெற அன்புடன் அழைக்கிறேன் .

Saturday, April 7, 2012

சிவனையும் சித்தர்களையும் தேடி சிவபயணம்




சதுரகிரியில் சித்தர்கள் பலரும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தையும் ,ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தையும் தரிசித்தும் வரும் பக்தர்கள் சிலருக்கு காட்சி கொடுப்பதாகவும் நம்பப்படுவதால் சதுரகிரியை நோக்கி பக்தர்களும் அடியார்களும் பெளர்ணமி நாட்களில் வழிபடுகிறனர் .

சித்தர்களை சந்திக்கும் ஆசையிலும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கும் ஆசையிலும் நாமும் பயணத்தை தொடர்ந்தோம் . சதுரகிரியின் மலைப்பகுதியில் நடுப்பகுதியில் நாவல் ஊற்று கடந்து செல்ககையில் காவி உடையணிந்த வயதான பெண்மணியாரை சந்தித்தோம் .தனியாக நடந்து வந்த அவரை வணங்க அவர் "சிவாய நமஹ " பஞ்சாட்சர மந்திரத்தை உதிர்த்து ஆசிர்வதித்து கடந்து சென்றார் .

அவர் முகம் ஒளிரும் வண்ணமாக இருக்க சித்தரை கண்டு விட்டோம் என மனம் மகிழ்ந்தது. அடிமலையில் கிளம்பும் மலையில் பாதி தூரம் வரை இடப்பக்கம் சர சர வென சிறிய சப்தம் எங்களுடனேயே வந்தது மேலும் ஆச்சர்யம் கொள்ளச்செய்தது. ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்தை தரிசனம் செய்து திரும்புகையில் எதிரே காவியுடையில் திருநீரு கொடுத்து வாழ்த்தினார் .

ஆங்காங்கே சில நறுமணங்கள் நம்மிடையே வந்து செல்கின்றன.

பைரவர் :

சதுரகிரி வரும் பக்தர்களுக்கு வழி மறந்து வேறு எங்கும் சென்று விடாமல் இருக்க சித்தர்கள் சூட்சம உருவில் பைரவராக( நாய்) கூடவே வருகிறார் . நாங்கள் இறங்கி வரும்போது பாதி வழியில் எங்கு இருந்து வந்ததோ எங்களுடன் கூடவே பாதுகாப்பாக வந்து மறைந்து சென்றது . இரவில் தனியாக செல்கிற பக்தர்களுக்கு துணையாக வருகின்ற பைரவர்கள் மிகுந்த ஆச்சர்யம் தருகிறார்கள் .

பசுக்கள் :

வேண்டுதலுக்காக விடப்பட்ட பசுக்கள் இங்கு ஆங்காங்கே தென்படுகின்றது . ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் பூஜையின் போது பசுக்கள் நந்தீசராக பக்தர்களுடன் வந்து வழிபாடு செய்வது ஆச்சர்யமாகும் . நான் கண்ட சதுரகிரி பெளர்ணமி அம்மாவசை நாட்களில் அல்ல .

ஓர் மத்திம நாட்களில் தான் சதுரகிரியை உணர முடியும் . சதுரகிரி முதல் முறையாக செல்ல விரும்பும் பக்தர்கள் விஷேச நாட்கள் தவிர்த்து பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்யும் வண்ணம் சென்றால் நிறைய அனுபவங்களை உணரமுடியும் .

மரங்கள் :

செடிகளில் மலர்களை பார்ப்பது இயல்பு . மரங்களில் மலர்கள் பூப்பது ஆச்சர்யமாகுமாகும் .நான் சென்றபோது சிவப்பு,மஞ்சள் இளஞ்சிவப்பில் மரங்களில் பூக்களைக்கண்டோம் .

மூலிகைகள் :

இங்கு பல்வேறு மூலிகைகள் இருப்பதை உணரலாம் .கருநெல்லி போன்ற எங்கும் கிடைக்காத மூலிகைகள் இருப்பதாக சொன்னாலும் நாம் காட்டுக்குள் மிருகங்கள் இருப்பதால் செல்லகூடாது . சில மூலிகைகளையும் குங்கிலிய பிசினால் ஆன சாம்பிராணி தூள்கள் இங்குள்ள கடைகளில் விற்கிறார்கள் . மற்ற நாட்களில் சதுரகிரி வரும் பக்தர்கள் பூமாலைகள் , வில்வம் ,மற்றும் மலைக்கு மேலே வரும் வரை உணவு , குளுக்கோஷ் , கொண்டு வரவும் .

எல்லாநாட்களிலும் அன்னதானம் இட்டாலும் மலை ஏறும் வரை நீண்ட தூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் ஒரு வேளை உணவு கொண்டு வருதல் நலம் . இப்படி பல்வேறு ஆச்சர்யங்களை சுமந்து வரும் சதுரகிரியை சென்று மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான நாளில் வணங்கி சிவன் சித்தர்கள் ஆசி பெற்று உங்கள் வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வாழ்த்துகிறேன்.

சதுரகிரியில் என் தேடல் பயணம் முடிவுறவில்லை. இன்னும் எழுதப்படாத இடங்கள் ,கதைகள் நிறைய உள்ளன. சதுரகிரியின் தேடல் தற்காலிகமாக இப்பதிவில் முற்றுப்பெற்றாலும் கூட மறுபடியும் தேடல் தொடரும் .

ஸ்ரீசந்தனமகாலிங்க தரிசனம் .சதுரகிரி



ஸ்ரீ சந்தன மகாலிங்கம் சன்னதி



சதுரகிரி சித்தர்களால் வணங்கப்படுகிற வாழ்கிற சதுரகியில் வலப்புறம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கமும் இடப்புறம் செல்லும் மலையில் ஸ்ரீ சந்தனமகாலிங்கமும் சன்னதியும் உள்ளது. ஸ்ரீ சந்தன மகாலிங்கம் செல்லும் பாதையில் பெரிய ஓடை ஓடுகிறது.பக்தர்கள் செல்ல வசதியாக பாலம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

இங்குள்ள மூன்று சிவலிங்கங்களும் கிழக்கு பார்த்து அமர்ந்திருக்க ஸ்ரீ சந்தன மகாலிங்கமும் கிழக்கு பார்த்த நிலையில் லிங்க உருவில் தனி சன்னதியாக அமர்ந்து பக்தர்கள் குறை போக்குகிறார் . ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதிக்கு அருகே ஆகாய கங்கை தீர்த்தம் மலைமீது இருந்து வருவது சிறப்பாகும் .

ஆகாயகங்கை தீர்த்தம் கோடை காலங்களில் தீர்த்தம் வருவதில்லை. ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியில் சந்தனம் மணக்கிறக்கிறது. பக்தர்கள் திருக்கோவில் சுற்றிலும் சந்தனதை கரைத்து படிக்கட்டுகளில் தடவுகிறார்கள் .

அருகில் அம்பாள் ஸ்ரீ சந்தனமகாதேவியார் சன்னதியும் , ஸ்ரீ சந்தனமுருகர் சன்னதியும் பார்த்து பரவசமடைய வேண்டியவையாகும் . 18 சித்தர்களுக்கும் சிலை பிரதிஸ்டை செய்து அழகான தனிச்சன்னதியாக அமைந்து உள்ளது.

சதுரகிரி பூஜை நேரங்கள்

காலை 06.00மணிக்கும்
பகல் 12.00மணிக்கும் 04.00மணிக்கும்
மாலை 06. 00மணிக்கும் நடைபெறுகிறது.

உணவு :

காலை மதியம் இரவு எல்லா நாட்களிலும் சிறப்பான அன்னதானத்தை ஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் அன்னதான மடத்தில் வரும் பக்தர்களுக்கு இலவசமாக நிறைவாக சுவையாக பாராட்டும்படி செய்து தருகிறார்கள் . அகத்தியர் மடம் என அழைக்கப்படும் அன்னதானமடம் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியில் இருந்து படிக்கட்டில் கீழே வரும் வழியில் அமைந்துள்ளது.

ஆனந்த வள்ளி மடம் தங்கும் வசதி:

ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறமுள்ள ஆனந்தவள்ளிமடம் சுமார் 200பக்தர்கள் தங்கும் அளவில் அமைந்துள்ளது . இரவு பயமில்லாமல் இங்கு உறங்கலாம் . போர்வை ,பெட்சிட் கொண்டு செல்வது நலம் .

சதுரகிரி எப்போது செல்லலாம் : பெளர்ணமி அமாவசை நாட்களில் அதிக கூட்டம் வருகிறது. மற்ற நாட்களில் செல்வதே சிறப்பு .சிவபெருமானையும் சித்தர்களையும் தரிசிக்க விழாக்காலங்கள் அல்லாத நாட்களில் தான் அமைதியாக தரிசிக்கமுடியும் . பெளர்ணமி இரவில் சித்தர்கள் வலம் வருவதாக நம்பினாலும் கூட மற்ற நாட்களில் தான் பக்தர்கள் பலர் சித்தர்களை கண்டதாக சொல்கிறார்கள் .

விலங்குகள் பற்றிய பயப்படத்தேவையில்லை. வெயில் காலங்களில் நீர் பற்றாக்குறைக்கு யானைகள் எப்போதாவது வருமாம் .மற்றபடி எங்கள் கண்களில் எந்த மிருகமும் தென்படவில்லை.ஸ்ரீ சந்தனமகாலிங்கம் சன்னதியை தரிசித்து விட்டு அடுத்த சதுரகிரியில் நான் கண்ட சித்தர் ,

மற்றும் அனுபவங்களை அடுத்த பதிவில் காண்போம் .ஸ்ரீ சந்தன மகாலிங்கத்தை தரிசனம் செய்து பேரருள் பெறுக நன்றி

Thursday, April 5, 2012

சதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


சதுரகிரியில் அமைந்துள்ள மூலவர் சன்னதியாகும் . திருக்கோவில் பகுதியில் வலப்புறம் திரும்பி திருக்கோவில் முகப்பில் உள்ள ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகளை வணங்கி பின் நாம் காண வேண்டிய சன்னதி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் ஆகும் .

நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் எதிரே உயரமான மலை ஆரம்பிக்குமிடமும் சிறிய ஓடையும் எதிரே ஒட நந்தீசரை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கலாம் .

சதுரகிரியின் சுயம்பு மூர்த்தியான பெருமான் இடப்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்க சிவலிங்கமாக சிவபெருமான் வரும் பக்தர்களை கவருகிறார் . முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அருகே அமர்ந்துள்ளார் .

திருக்கோவில் அலங்காரமும் மணமும் சுகந்தம் தரும் வாசனையும் இறைவன் இங்கே அருள்பாலிப்பதை இயம்புவதாக அமைந்துள்ளது .பூஜை நேரத்திற்கு சரியாக இங்கே நேர்த்திக்கடனாக விடப்பட்ட பசுக்கள் மக்களோடு மக்களாக கலந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிப்பது ஆச்சர்யங்களில் ஒன்றாகும் .

வரும் பக்தர்களிடம் அன்பாக பழகுகின்ற பசுக்களை பக்தர்கள் நந்தீசர் பசுவாக நேரில் தரிசனம் செய்வதை கண்டு பழங்கள் உணவாக தருகிறார்கள் . சதுர கிரி சித்தர்கள் பலர் வந்து ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்த தரிசிப்பதாக ஐதீகம் .

திருக்கோவில் அமைதியான சூழலில் காணப்படுகிது.வாழ்நாளில் ஒரு முறையேனும் சதுரகிரி வந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை வந்து வணங்குங்கள் .

மிக மேன்மையான சதுரகிரியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவார் .
நன்றி

ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி சன்னதியும் சதுரகிரியின் அமைப்பும்



அருள்மிகு சதுரகிரி சுந்தரமூர்த்தி


சுவாமி சன்னதியில் லிங்க வடிவில் திருக்கோவில் முகப்பிலேயே அமர்ந்திருக்கிறார் . இங்குள்ள மூன்று சிவலிங்கங்களில் முதல் பூஜையாக ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிக்கு நடைபெறுகிறது. சன்னதிக்கு உட்புறமாக சிறிய விநாயகர் சன்னதி அமைந்துள்ளது . தினசரி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.


சுற்றிலும் மலை சூழ்ந்திருக்க இயற்கை எழிலில் சிவபெருமானை தரிசிப்பதே பெறும் பேறாகும் . இரவு 12 மணிக்கு மேல் சித்தர்கள் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளை வந்து வணங்குவதாக ஐதீகம் .

சதுரகிரியின் அமைப்பு :

சதுரம் என்றால் நான்பக்கமும் சமமாக கொண்டுள்ள எனவும் கிரி என்றால் மலை எனவும் பொருள் கொள்ளலாம் . மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சர்வே எண் 517 ன் படி சதுரகிரி திருக்கோவிலுக்கு 64 ஏக்கர் ஸ்ரீ சுந்தரமகாலிங்க சாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்டதாகும் .

திருக்கோவில் தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பக்தர்கள் யானை ,சிறுத்தை,கரடி போன்ற மிருகங்கள் இருப்பதாக கூறப்படுவதால் திருக்கோவில் வளாகம் தவிர இரவு நேரங்களில் வெளியே காட்டுக்குள் செல்வது ஆபத்தாகும் .

ஸ்ரீ சதுரகிரி சுந்தரமூர்த்தி சுவாமிகளை தரிசனம் செய்த பின் அடுத்த பதிவில் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதியை தரிசிக்கலாம் .

Monday, April 2, 2012

சதுரகிரி பயணம்




ஈரோட்டில் துவங்கிய சதுரகிரி திருக்கோவில் பயணம் 31.3.12 :


சதுரகிரியை இணைய உலகமும் ஆன்மீக அன்பர்களும் சிவனடியார்களும் கொண்டாட எமது இரண்டு நன்பர்களுடன் பயணத்தை தொடர்ந்தோம் . ஈரோட்டில் இருந்து மதுரைக்கு செல்ல 5 மணி நேரப்பயணமும் பஸ் கட்டணம் 120 ரூபாய் ஆகின்றது.

மதுரையில் இருந்து சுமார் 80 கி.மீட்டர் தொலைவில் சதுரகிரி அடிவாரம் உள்ளது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இறங்கி பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோவில் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று பின் தாணிப்பாறை என்னும் சதுரகிரி அடிவாரத்தை அடையவேண்டும் .

ஈரோட்டில் இருந்து பஸ் மற்றும் போக்குவரத்துச்செலவாக ரூ 400 ஆகிறது . செல்லும் வழியில் அடிவாரத்தில் கஞ்சிமடம் போன்ற மடங்கள் உள்ளன. நீண்ட தூரப்பயணம் செல்லும் சதுரகிரி பக்தர்கள் குளிக்க ஏதுவாக அடிவாரத்தில் பெரிய தொட்டி உள்ளது . சிறிய டீக்கடைகள் , கேசட்கடைகள் , என 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

இங்குள்ள தாணிப்பாறை அடிவாரத்தில் அம்மாவசை பெளர்ணமி நாட்கள் அல்லாத நாட்களில் உணவு விடுதிகள் கிடையாது. திருக்கோவில் சன்னதியில் மூன்று வேளை உணவையும் இலவசமாக தருகிறார்கள் . பயணத்தை துவங்கிய நமக்கு பல ஆச்சர்யங்களை ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் தரப்போகிறார் என அப்போது நமக்கு தெரியாது.

சதுரகிரி பல சித்தர்கள் ,முனிவர்கள் ,யோகிகள் வாழ்வதாலும் மலையே சிவனாக வணங்குவதாலும் செருப்பில்லாமல் பயணத்தை ஆரம்பிப்பது நல்லதாம் . முதலில் சற்று தூரம் நடந்தவுடன் பிரமாண்ட பாறகளுடன் அடிவாரங்களும் நீர் ஊற்றுகளும் தென்பட ஆச்சர்யப்பட்டு எட்டிப்பார்க்க பழங்கால ஆமைகள் கரையில் விளையாடி எங்களைக்கண்டதும் குளத்திற்குள் தங்களை மறைத்துக்கொண்டது.

பின் ஆச்சர்யத்துடன் சற்று தூரம் நடக்க முதலில் ஸ்ரீ ஆசிர்வாத விநாயகரை வணங்கி சற்று தூரம் நடந்தால் இடப்புறம் ஸ்ரீ தங்க காளியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து நடந்து செல்கிறோம் . பின் ஆங்காங்கே உட்கார்ந்து நடக்க காவல் தெய்வமான ஸ்ரீகருப்பசாமி பேச்சியம்மன் சன்னதியில் வணங்கி பின் சற்று தூரத்தில் குதிரை ஊற்று சிறிய தண்ணீர் குளங்களை கொண்டது. பின் சற்று தூரம் நடந்தால் கோணத்தலைவாசல் வருகிறது.

அதைக்கடந்து காராம் பசு தீர்த்தம் கண்டு நகர்ந்து சென்றால் இரட்டை லிங்கசாமி திருக்கோவில் .இங்கு இரட்டை லிங்கங்கள் அழகாய அமைக்கப்பட்ட சிறிய சன்னதியாகும். சதுரகிரி செல்லும் வழியில் பார்க்க வேண்டிய சன்னதியாகும் . அடுத்து நாம் காணப்போவது சின்னப்பசுக்கிடையாகும் .இங்குள்ள இயற்கை சூழல்களை ரசித்து சென்றால் நாவல் ஊற்றைக்காணலாம் .

நாவல் ஊற்று :

சதரகிரியில் பல திர்த்தங்கள் இருந்தாலும் நாவல் ஊற்று விஷேசமானது. இங்குள்ள தீர்த்தம் குடித்தால் சர்க்கரை நோய் உட்பட கொடிய நோய்கள் குணமாவதாக வரலாறு. இங்குள்ள தண்ணீர் மிகச்சுத்தமாக சுவையாக உள்ளது.

அடுத்து சில அடி தூரம் நடந்தால் தேனி,கம்பம் செல்லும் பாதை பிரிகிறது. அதைக்கடந்தால் பச்சரிசி பாறை வித விதமான குறிப்பாக சிவப்பு நிறங்களில் காணப்படுகிறது. அடுத்து வனத்தைக்காக்கும் வன பத்ரகாளி அம்மன் சன்னதி வருகின்றது.

அடுத்து நாம் காண்பது பெரிய பசுக்கிடை அதைத்தாண்டி சென்றால் சதுரகிரியின் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி அருகில் வந்து விட்டோம் என்பதை உணர்த்தும் விதமாக திருக்கோவில் முகப்பின் காவல் தெய்வமான பிலாவடிக் கருப்பசாமி திருக்கோவில் வருகிறது .

இங்கு பக்தர்கள் குளித்து விட்டு பிலாவடிக்கருப்ப சாமியை வணங்கி விட்டு ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் செல்கிறார்கள் . அடிவாரத்தில் இருந்து சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் திருக்கோவிலை அடையலாம் .

எல்லா வயதினரும் செல்லலாம் . ஸ்ரீ சுந்தரமகாலிங்க தரிசனம் பற்றிய இடுகை அடுத்த பதிவில் காணவும் .

Thursday, March 22, 2012

அகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி உடனமர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சன்னதி .அகிலாண்டபுரம் காங்கேயம்




ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஷ்வரர் திருக்கோவில்


திருக்கோவில் அமைவிடம் வழி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் என்னும் ஊரில் அம்பாளின் திருப்பெயரையே ஊரின் பெயராக கொண்ட அழகிய ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு. காங்கேயத்திற்கு பழங்காலத்தில் சிங்கையூர் என்னும் பெயர் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

சாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் அகஸ்தீஷ்வரர் அகத்திய சித்தரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கமாகும். .பழங்கோவிலாக இருந்த திருக்கோவிலை சலவைக்கற்களால் அழகுபடுத்தி உள்ளார்கள் .அகன்ற பிரகாரத்தில் இருநிலைக்கோபுரங்களுடன் அழகான சிவலயமாக அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலமாகும்

ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி சன்னதி :

ஒரு காலத்தில் சிவாலயமாக மட்டுமே இருந்த திருக்கோவிலுக்கு அகத்தியர் வந்தார் .அப்போது அகத்தீஷ்வரர் பூஜித்து வந்த போது சிவலிங்கம் மட்டுமே இருப்பதைக்கண்டு அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஸ்ரீ அகிலாண்டிஸ்வரியை பிரதிஷ்டை செய்து அம்பாள் சன்னதியை உருவாக்கினார் என்பது வரலாறாகும் . இதனால் அகத்திய சித்தரால் உருவாக்கப்பெற்ற அம்பாள் சன்னதி என்னும் தனிச்சிறப்பு பெறுகிறது.

சலவைக்கற்களால் உருவாக்கப்பெற்ற அழகான திருக்கோவில் வடிவமைப்பாகும் .அம்பாள் சன்னதியின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்களில் செங்கண்ணன் உட்பட 8 கூட்டத்தாருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.

இத்திருக்கோவிலின் சார்பு கோவிலான காக்கும் கடவுள்களாக ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்கள் காங்கேயத்திலிருந்து கருர் ரோட்டில் அமைந்துள்ளன . ஆயி அம்மன் திருக்கோவில் வீரணாம்பாளையத்தில் அமைந்துள்ளது.

பழங்கால சிறப்புமிக்க அகில உலகம் ஆளும் அகிலாண்டீஷ்வரிக்கு சன்னதி, அகத்தியரால் பூஜிக்கப்பெற்ற ,பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயத்தை
காங்கேயம் அகிலாண்டபுரம் வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் சிவனருள் பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங்க தீர்த்தமும் ,விநாயகர் வழிபாடும் (2012)



சென்னிமலையில் புகழ்பெற்றது மாமாங்க தீர்த்தமென எல்லோரும் செல்ல பார்க்கவேண்டுமென பல நாள் ஆவல் இருந்தாலும் நேரில் செல்லமுடியாது தவிப்பாகவே இருந்து வந்தது .

கடந்த 15 நாட்களுக்கு முன் ஓருவர் மாமாங்க தீர்த்ததைப்பார்க்க சென்றபோது அங்கு தீர்த்தம் பொங்கி வழிவதை பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல கேள்விப்பட்டு பல ஊர்களில் இருந்தும் முருகபக்கதர்கள் கிளம்பி சென்னி மலையை நோக்கி படையெடுக்க இந்த 2012 மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க மாமாங்க தீர்த்தத்தையும் மாமாங்க விநாயகரையும் தரிசனம் செய்ய கிளம்பினோம் .

எப்படிச்செல்வது :

ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு 25 கி.மீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை திருக்கோவிலும் வனமும் அமைந்துள்ளது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலையில் 2கி.மீட்டர் பயணித்து வெப்பிலி பிரிவில் வலப்புறம் திரும்பி சில்லாங்காட்டு வலசு (2 கி.மீ)சென்றால் வலப்புறம் திரும்பி 1 கி.மீட்டர் பயணித்தால் சென்னிமலையின் தெற்குபுறமான மலை அமைப்பை அடைகிறாம் .


பின் ஆங்காங்கே பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களை தாண்டி மிக கவனமாக பாதுகாப்பாக பயணித்தால் மலை அடிவாரம் வருகிறது. இருசக்கரபயணம் மட்டுமே ஏற்றது. மாமாங்க விநாயகர் கோவிலும் தீர்ததமும் சென்னிமலையின் தென்புறமுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .

பின் ஒற்றையடிப்பாதையில் சுமார் 15 நிமிடம் மலைப்பாதையில் நடக்க மாமாங்க விநாயகர் தீர்ததங்களை தரிசிக்கலாம் .

மாமாங்க தீர்த்தத்தின் மகிமைகள் :

சென்னிமலை முருகப்பெருமானின் அருளால் மாமாங்க தீர்த்தம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுரந்து மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது. சென்னிமலையின் இயல்பான அமைப்பே செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதாலும் பிப்ரவரிமுதல் ஜுன் மாதம் முடிய வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .

சென்னிமலை முழுவதும் வறண்டு கிடக்கிற காலம் . இப்படிப்பட்ட கோடை காலத்தில் தான் மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது என்றால் இறைவனின் மகிமைகளை கண்கூடாக உணரலாம் .

இதற்கு முன் பல ஆண்டாக 12 ஆண்டுக்கு ஒரு முறை மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தாலும் கடைசியாக 1988, 2000, 2012 ஆண்டுகளில் சரியாக மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பொங்கி வழிவது ஆச்சர்யமான ஒன்று.

கால மாறுபாட்டால் 4 வருடங்களுக்கு முன் ஓரே ஒர் முறை மாமாங்க தீர்த்தம் வெளிபட்டதாக சொல்வோரும் உண்டு.

தீர்த்ததின் பலன்கள்:

சென்னிமலையில் பல மூலிகைகளும் முக்கியமாக வெண்சாரை, கருநொச்சி போன்ற அரிய மூலிகைகளும் சுமந்து வருவதால் மாமாங்க தீர்த்தம் அருந்துவதால் நல்ல உடல் நிலையும் உடற் சரிர நோய்கள் தெளித்துக்கொள்வதால் நலமாக ஆவதும் உண்மைக்கூற்றே .

மாமாங்க தீர்த்தம் விநாயகர் சன்னதியின் அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீவிநாயகப்பெருமான் அமர்ந்திருக்க சுற்றிலும் சிறிய கட்டிட அமைப்பில் 10க்கு 10 அகல அமைப்பில் விநாயகருக்கு எதிரே காய்ந்து தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற கிளுவை மரத்தின் அடியில் சிறிய பொந்தின் வழியில் மாமாங்க தீர்த்தம் சுரக்கிறது. வேம்பு மரம் அருகே உள்ளது.

தற்போது ஒரு முதியவர் பூஜை செய்து வருகிறார் .மாமாங்க ஸ்ரீ விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆகியவற்றை பார்க்க செல்பவர்கள் பூஜைப்பொருட்கள் ,உணவுத்தேவைகள் உடன் செல்லவும் .இங்கு கடைகள் ஏதுமில்லை.

தீர்த்தத்தில் உள்ளே சென்று குளிக்காமல் வெளியே தீர்த்தம் எடுத்துச்சென்று தெளித்துக்கொள்ளலாம் .மாமாங்க தீர்த்தம் கொண்டு வர ஏதுவாக சிறிய பாட்டில்களுடன் செல்வது நலம் .

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை வனத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் சென்று தீர்த்தம் தெளித்து ஸ்ரீ விநாயகப்பெருமானை வணங்கி வாருங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

Wednesday, March 21, 2012

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்பமா? (வேலை வாய்ப்பு)


தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக சேர அரிய வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் சீருடைப்பணியாளர் குழுமம் இரண்டாம் நிலைக்காவலர்கள் (ஆண்/ பெண் ) ,சிறைக்காவலர்கள் , தீயணைப்புபோர்கள் பணிக்காலியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .

விண்ணப்பங்கள் தமிழகத்தின் 284 தபால் நிலையங்களில் கிடைக்கும் . முழு விபரங்களை www.tn.gov.in/tnusrb இணையத்தளத்தில் காணலாம் . இணையத்தளத்தை காணமுடியாத நன்பர்கள் தமிழக முண்ணனி நாளிதளான தினத்தந்தியில் 21.3. 12 பக்கம் 8 ல் விளம்பரத்தை காணவும் .

தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள் 21.3.12

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்திற்கு வரவேண்டிய கடைசி நாள் : 23.04.2012 மாலை 05.45 மணிக்குள்

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 24. 6.12 காலை09.00மணி .

முழுத்தகவல் விபரங்கள் விண்ணப்பத்துடன் கூடிய தகவல் சிற்றேட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது

தகுதி :

10ஆம் வகுப்பு தேர்வான 18 வயது நிரம்பிய 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . உயரம் 170 செ.மீ மார்பளவு 81 செ.மீ விரிவாக்கம் 5.செ.மீ பெண்கள் உயரம் 159 செ.மீட்டர் இருந்தால் போதுமானது.

எழுத்துத்தேர்வு :

50மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் 30மதிப்பெண்கள் உளவியல் தேர்வுக்கும் நடைபெறும் . உடல் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும் , ncc,nss விளையாட்டு சான்றிதல்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்களாக 5 அளிக்கப்படும். இரண்டாம் நிலைக்காவலர்கள் சிறைக்காவலர்கள் ,தீயணைப்பு படை என மொத்த பணியிடங்கள் :13320

நம் வலைப்பூவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை படிக்கின்ற நண்பர்கள் மெயிலாக தகுதியான நன்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . உங்களால் யாரேனும் பயன் அடைந்தால் நல்லதுதானே.

மற்றபடி மேற்படி பணிக்காக விண்ணப்பங்கள் அனுப்ப தயாராக உள்ள அனைத்து நன்பர்களுக்கு இறைதுணையுடன் வாழ்த்துக்கள் .

Sunday, March 18, 2012

காசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஷ்வேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஷ்வரர் திருக்கோவில் கோபிசெட்டிபாளையம்

அமைவிடம் :

ஈரோடுமாவட்டம் கோபி வட்டம் வீரபாண்டி அக்ரஹாரம் கோபி செட்டி பாளையம். கோபி பஸ் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது .

மூலவர் :

ஸ்ரீ விஸ்வேஷ்வரர்
அம்பாள் :
ஸ்ரீ விசாலாட்சி

திருக்கோவில் உருவான கதை :

பழங்காலத்தில் பாணசுரன் என்னும் அசுரன் தினம் ஒரு சிவ லிங்கத்தை கங்கையில் வைத்து பூஜை செய்து பின் கங்கையில் விட்டு விடுவது வழக்கம் . அதைப்பாணலிங்கம் என்று அழைப்பார்கள் .அவ்வாறு கங்கையில் விட்ட பாணலிங்கங்களை வியாபாரிகள் சேகரித்து எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பார்கள் .

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கோபிச்செட்டிய பாளையம் வீரபாண்டி அக்ரஹாரத்தில் ஒரு சிவாலயம் ஒன்றை உருவாக்க வேண்டுமென எண்ணி திருக்கோவில் எழுப்பினார்கள் .

பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டுமென யோசித்தபோது காசியில் பாணலிங்கத்தை எடுத்துக் கொண்டு பெரிய கூடையில் வியாபாரத்திற்காக ஒருவர் கோபிசெட்டிபாளையம் வந்தார் .

திருக்கோவில் உருவாக்கிய ஆன்மீகப்பெரியோர்கள் வியாபாரியிடம் நீங்கள் கொண்டு வந்த சிவலிங்கம் எங்களுக்கு பிடித்துள்ளது.நாங்கள் கட்டுகிற சிவாலயத்திற்கு விலைக்கு தாருங்கள் என சொல்ல லிங்கம் கொண்டு வந்த வியாபாரி ஒரு விலையை சொல்ல விலை கட்டுப்படியாகதால் திருக்கோவில் கமிட்டியினர் திரும்பி ஏமாற்றதுடன் சென்று விட்டனர் .

நீண்ட பயணத்தில் வந்த லிங்க வியாபாரி அசதியில் தூங்கி விட்டு காலையில் கிளம்பத்தயாராகி சிவலிங்கம் கொண்டு வந்த பூக்கூடையை தூக்க முயற்சித்தான் . முடியவே இல்லை.

கங்கை நதிக்கரையில் இருந்து கோபி வரை எளிதாக கொண்டு வரப்பெற்ற சிவலிங்கம் தூக்க முடியாததை ஆச்சர்யத்துடன் யோசித்து வீரபாண்டி அக்ஹாரம் சென்று திருக்கோவில் கமிட்டியாரிடம் சிவபெருமான் இங்கேயே தங்க ஆசைப்படுகிறார் .

இந்த பாணலிங்கத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் . நீங்களாக மனமுவந்து தருகிற தொகையை கொடுத்தால் போதும் எனக்கூறி கொடுத்த தொகையை லிங்க வியாபாரி பெற்றுக்கொண்டு காசி சென்றதாக வரலாறு .

பின்னர் திருக்கோவில் கட்டிய குடும்பத்தார் சந்தோஷத்துடன் அதை காசியில் இருந்து கொண்டு வந்ததால் காசிலிங்கம் என பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள் .

திருக்கோவில் தற்போதைய அமைப்பு :

மூன்று நிலைக் கோபுரங்களுடன் முன்னை அழகிய கொடிமரம் நந்தீசர் என அழகாயிருக்க மூலவர் ஸ்ரீ விஸ்வேஷ்வரர் லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்க திருக்கோவில் பின்புறம் பஞ்சலிங்கம் சிறப்பு விஷேசமாக அமர்ந்திருக்க திருக்கோவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் தரிசிக்க ஏதுவாக அமைந்த திருக்கோவில் அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள் .

காசியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சிறப்பு வாய்ந்த சிவாலயத்தை வணங்கி எல்லாம் வல்ல சிவனருள் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

Saturday, March 17, 2012

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்பிகை கும்பாபிஷேகம்



ஆதிசங்கரர் உருவாக்கிய சிருங்கேரிமடம் ஆன்மீக உலகில் புகழ்பெற்ற ஒன்று. இந்தியாவின் பல சிருங்கேரி மடத்தின் கிளைகள் இருப்பினும் ஈரோடு மாவட்டம் எந்த வகையிலும் குறைந்ததில்லை என்பதற்கேற்ப கோபி செட்டி பாளையத்தில் நடந்த ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோவில் கும்பாஷேகம் சிறப்பானது.

தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு ஆதிசங்கரரால் துவங்கப்பெற்ற சிருங்கேரி சாரதா பீடத்தின் 36 வது பீடாதிபதியாக பாரதி தீர்த்தர் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ பாரதீ தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களால் அன்னை சாரதாம்பிகைக்கு கோபி வீரபாண்டி அக்ரஹாரத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார் .

கும்பாபிஷேக விழாவினைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர் . சுவையான அன்னதானம் தரப்பட்டது.

கோபியில் அழகான அன்னை சாரதாம்பாள் திருக்கோவில் வீரபாண்டி அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது .வந்து வணங்கிச்செல்லுங்கள் .

1200 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கரரால் சந்தன விக்கஹம் ஒன்றில் அன்னை ஸ்ரீ சாரதாம்பிகையை உருவாக்கி துவக்கப்பட்ட ஆன்மீக நற்பணி தொடர்ந்து நடைபெற்று வருவது சிறப்பு.

ஆன்மீகம் வளரட்டும் விருட்சமாக.

சிருங்கேரி சுவாமிகளையும்,அன்னை சாரதாம்பாள்

கும்பாபிஷேகத்தையும் தரிசிக்க முடியாதவர்கள் புகைப்படம்

இணைக்கப்பட்டுள்ளது. நன்றி

திப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி



ஸ்ரீ கருவண்ணராயர் ஸ்ரீ பொம்மா தேவியர் திருக்கோவில் ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் தெங்குமரஹடா வனச்சாரலில் கெஜலெட்டி என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்றை இதற்கு முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம் .

இந்த திருக்கோவில் அருகே வரலாற்று ஆவணமாக கெஜலெட்டி கணவாயில் அமைந்த பாலம் 200ஆண்டுகள் முன்பு பழமை வாய்ந்து சிதிலமடைந்து பாதி நிலையில் உடைந்து காணப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் திப்புசூல்தான் மாயாற்றைக் கடக்க கெஜலெட்டி கணவாய் பாலத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்ல ரகசிய பாதையாக குதிரை வழிப் பயணமாக பயன்பட்டது என செவி வழிச்செய்திகள் உணர்த்துகின்றன.

கர்நாடகா - தலமலை- தெங்குமரஹடா- பெஜிலெட்டி கணவாய் பாலம் - பவானிசாகர் வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்ல மலைவாழ் மக்கள் பழங்காலத்தில் வணிகம் மேற்கொள்ள சந்தைகளுக்கு வர பயன்பட்டதாம் . திப்பு சூல்தான் கட்டி வழிபட்டதாக கூறப்படும் சிதிலமடைந்த தர்க்கா ,பழங்கால குதிரைக்கொட்டகைகள் இங்கு பாலம் தாண்டி செல்லும் வழியில் உள்ளதாம் .

யானை புலிகள் உலாவும் வனப்பகுதி ஆதலால் சிதிலமடைந்த பாலத்தின் அழகைமட்டும் ரசித்து விட்டு வந்தோம் . மாயற்றுக்கு அருகே குறுக்க ஓடையில் அமைந்த இந்த பாலத்தின் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மா தேவியர் வருடாந்திர பண்டிகை அடுத்த மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மகம் நட்சத்திரத்தில் நடைபெறும் .வனத்துறையின் 3நாள் அனுமதியுடன் நடைபெறும் இந்த நாட்களில் வந்தால் திருக்கோவிலில் இருந்து 100மீட்டர் தொலைவில் உள்ள இந்த கெஜலெட்டி கணவாய் பாலத்தை ரசிக்கலாம் . மற்ற நாட்களில் அனுமதி இல்லை.

பழங்கால வரலாற்று ஆவணமான இந்தப்பாலம் வித்தியாசமானது. அடுத்த வருடம் காத்திருந்து ஸ்ரீ கருவண்ணராயரை வணங்கி திப்புவின் ரகசிய பாதையாக சொல்லப்படுகிற கெஜலெட்டி கணவாய் பாலத்தையும் பார்த்து வாருங்கள் .

சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் வாழும் பகுதி மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவும் உள்ளது. ஸ்ரீ கருவண்ணராயர் திருக்கோவில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். அடுத்த வரும் மாசி மகத்திற்கு தயாராகி காத்திருங்கள் .

அழைப்பு வரும் .

நன்றி

Friday, March 9, 2012

உன் தரிசனம்


நித்தம் நித்தம்
வாழ்கைப் போராட்டத்தின்

கனவுகளில் தொலைந்து
போகிற நாட்களில்

அன்பே ...!
உன் தரிசனமே

விடியலாய் ...!

சத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில் எழுந்தருளி காக்கும் ஸ்ரீபொம்மாதேவி உடனமர் ஸ்ரீ ஆதி கருவண்ணராயர் திருக்கோவில் தரிசனம்


அமைவிடம் :


தமிழகம் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் கற்பூர கோத்திரம் உப்பிலிநாயக்கர் குலதெய்வமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் தெங்குமரஹடா அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி கணவாயில் ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் இரண்டு மணி நேரம் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்று திருக்கோவிலை அடையலாம் .

திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமான உப்பிலியநாயக்கர்கள் மற்றும் இப்பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதிகருவண்ணராயர் ,பொம்மதேவியர் அருள்பெற்றுச்செல்கின்றனர் .

திருக்கோவில் அமைந்த விதம் பற்றிய சில புராணக்கதைகள்

( செவிவழிச்செய்திகள் ) :

பழங்காலத்தில் தமிழகத்திலும் கன்னட நாட்டில் உப்பாரா ,உப்பிலியா என்னும் நாயக்கர் சமுக மக்கள் உப்பு மற்றும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார் . திப்பு சூல்தான் படைப்பிரிவில் வீரர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் , அப்போது உப்பிலிய நாயக சமுக மக்கள் பெண் ஒருவரை மணம் முடிக்க மொகலாய மன்னர் ஆசைப்பட்டதாகவும் ,

மன்னரை எதிர்க்க முடியாமல் தவித்து அவர்களின் காவலர்களிடம் இருந்து இரவில் தப்பித்து தலமலை வழியாக வந்ததாகவும் வரும்போது தன் குலதெய்வமான ஆதிகருவண்ணராயர் பொம்மதேவியர் கொண்டு வந்து தெங்கு மரஹடா காட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்

ஓர் வரலாறு.பின் அங்குள்ள மாயாறு வழியாக கடும் ஆற்று வெள்ளத்தை கடக்கமுடியாமல் ஸ்ரீ கருவண்ணராயரை வணங்க மாயாறு உப்பிலிய நாயக்க மக்களுக்காக வழிவிட்டதாகவும் , அப்போது வந்த மொகலாய அரசர் இடையில் மாயாறு கடும் சீற்றத்தால் செல்ல வருத்தப்பட்டு பெண் கொடுக்கவில்லை எனினும் தங்களை மாமா மச்சினர்களாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு ,

இரண்டவதாக

கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த உப்பிலிநாயக்கர் மக்கள் தமது குலதெய்வமான ஸ்ரீ கருவண்ணராயர் ,ஸ்ரீ பொம்மதேவியரை தமிழகத்திற்கு எடுத்து வர பூக்கூடையில் தலமலை வழியாக குறுகிய வழியில் கொண்டு வரும்போது தெங்குமரஹடா காட்டில் கெஜரெட்டி அருகில் வந்தபோது மாயாறு அருகில் பக்தர்கள் குளிக்க சென்று திரும்ப நேரமானதால்

பூக்கூடையில் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை வைத்திருந்த பக்தரும் குளிக்க ஆசைப்பட்டு பூப்பேழைய இறக்கி வைத்து விட்டு பின் அனைவரும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை பூக்கூடையை தூக்க முற்படும் போது பூக்கூடையை தூக்க முடியவில்லை

அப்போது அருள் வந்த பக்தர்

"உங்கள் குலதெய்வமான நான் இங்கேயே அடர்ந்தகாட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் . என்னை வருடம் ஒருமுறை தமிழ் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில் வந்து வணங்கி செல்லுங்கள் "

கூற இறைகட்டளைக்கு இணங்க பக்தர்கள் இறைவனை அங்கேயே சிறிய கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர் .

சான்றுகள் :

கர்நாடகாவில் இருந்து வாணிபத்திற்காக தலமலை தெங்குமரஹடா வழியாக நடந்து வந்துள்ளது. அதற்கு குறுக்கிடாக மாயாறு குறுக்கிட கிட்டத்தட்ட 500ஆண்டுகள் மேலாக பழமையான பாலம் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பாதை உள்ளது வியப்புக்குரியது.

ஸ்ரீ கருவண்ணராயர் திரிக்கோவில் அருகிலேயே இந்த பாலம் சிதிலமடைத்து கிடப்பதை புகைப்படத்தில் காணலாம் . மாயாற்றை கடக்க உதவுகின்ற இந்த பாலம் கடந்து பவானி சாகர், சத்தியமங்கலம் சந்தைகளில் வாணிபம் நடந்திருப்பதை காண்கூடாக உணரலாம் .

திப்பு சூல்தான் காலத்தில் ஆங்கிலேயர்கள் அறிய முடியாத ரகசியவழியாக இந்தபாலத்தை பயன்படுத்தி கர்நாடக .தமிழ்நாடு சென்று வந்ததாகவும் ,சிறிது தூரத்தில் குதிரைக்கொட்டகையும் உள்ளது.

தற்போது திருக்கோவில் அமைப்பு :

கெஜலெட்டி வனப்பகுதியில் அமைந்த மூலவர் கருவண்ணராயர்,பொம்மதேவியர் அமைந்துள்ளார்கள் .
பெருமாள் அம்சமாக
( வைணவம் ) விளங்கி வருகிறார் . திருக்கோவில் வெளி முகப்பில்காவல்தெய்வமானஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு பிரமாண்டகிடாவெட்டு இங்கு பிரபலமானது.

இரண்டுகுதிரைகள்மற்றும் உட்பகுதிமுகப்பில் விநாயகப்பெருமான், நவகிரகங்கள்அமைந்துள்ளன.அமைந்துள்ளார்கள் . அருகில் பவானிசாகரில் வந்துஇணைகின்ற நீலகிரிமலையில் உற்பத்தியாகும் மாயாறும்ஆறு ஓடுகின்றது.

திருக்கோவில் இடப்புறமாக சிவலிங்கம்அமைக்கபட்டுள்ளது.திருவிழா நடைபெறும்மாசிமகம் நட்சத்திரநாளில் மட்டும் தூக்கநாயக்கன் பாளையத்தில் புறப்பட்டு உற்சவர் கெஜரெட்டி கோவிலுக்கு வந்து பக்தர்கள் காட்சி கொடுப்பார்

.இறைதுதி :

தொல்லுலகில் மானிடரின் தோற்றமொரு தோன்றிவாளர் ,
நல்லதமிழ் நடைமாறிக் கன்னடமாம் எல்லையிலே ,
வல்லுருவ யானைவளர் கெஜஹட்டி பாங்காடே,
இல்லிடமாய் கொண்டாய் என் மாயவரே,


என காக்கும் கடவுளாய் விளங்குகின்ற பெருமாளின் அம்சமாய் அனைவரும் துதிக்க விரும்புகின்ற அனைவரும் திருக்கோவிலை வந்து வணங்கலாம்.

திருக்கோவில் குலதெய்வமாக வணங்குபவர்கள் :

ஸ்ரீ வடகாஞ்சி அயோத்தியாபுரியிலே ஸ்ரீ மகா விஷ்ணுவின் வலது வியர்வையில் பிறந்ததாக கருத்தப்படுகிற சத்திரிய வம்சத்தாருக்கும் ,

திருமூர்த்திகள் ,அகத்திய முனிவர் இவர்களால் சிங்கக்கொடியும் ,சீராமாலை தீர்க்காயுசு பெற்ற பெரியோர்களுக்கும் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கெடாத பெரியோர்களுக்கும் கற்பூரகோத்திரம் உப்பிலியநாயக்கர்களுக்கும் 6 பட்டம் 24 நாட்டார்களுக்கும் குலதெய்வமாகும் .

மாசி மகம் பண்டிகையை விளக்கும் பாடல் :

ஓங்கு புகழ் உன்னால் உத்தமர்கள் எண்ணற்றோர்,
ஈங்கு வந்து இணைந்துந்தன் எழில் விழா கொண்டாடும்
வீங்கும் மதி மாசி மகம் நட்சத்திர நாளிலே
பாங்காடும் பட்டணம் போல் காட்சி கொள்ளுமே.

முடிவரை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் :

ஸ்ரீ ஆதிகருவண்ணராயர் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் புலி, யானை
உட்பட உள்ளதால்
இப்பதிவை படிக்கும்
நன்பர்கள் ஆர்வத்தில்செல்லமுற்படாதீர்கள்

மிகஆபத்தான இடம்செல்லவிரும்புவர்கள்
மாசிமாதம்மகம் நட்சத்திர நாளில்
பலபேருடன் பாதுகாப்புடன் சென்றுஇறையருள் பெருங்கள்
நன்றி

Thursday, March 8, 2012

இயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகு


பவானி சாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகும் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் கெத்தமங்கலம் என்னும் இடத்தில் பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது . சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் ,மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவிலும் பவானிசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. பவானி சாகர் அணைக்கட்டில் மாயாறு இணைந்து கொள்கிறது.


பின்னர் 70 கி.மீட்டர் பவானி ஆறு காவிரியுடன் பவானியில் இணைந்து கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி பல மின்திட்டங்களில் பயன் தந்து மாயாற்றை இணைத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மூலிகைகளை தழுவிக்கொண்டு பவானிசாகர் அணையில் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் இணைகிறது .

சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் .

நான் சிறிய வயதில் இருந்தபோது ஆடி 18 அன்று ஒருநாள் மட்டும் மக்களின் பார்வைக்காக அணையின் மேற்பகுதியில் பார்வையிட அனுமதிப்பார்கள் . கடலைப்போல தேங்கிகிடக்கும் நீரையும் அதன் அழகும் நடந்து பலதூரம் செல்ல ஆசையாக இருக்கும் .

நீலகிரி மலைத்தொடரில் துவங்கி பல பேர் இருளை மின்சாரத்தாலும் விவசாயத்தாலும் விலக்குகின்ற பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கட்டும் போற்றுதலுக்குரியது.

தமிழகத்தில் பெரிய மண்ணால் ஆன அணைக்கட்டு என்னும் பெருமை கொண்ட பவானிசாகர் அணை 9 மதகுகளுடன் உபரி நீரை வெளியேற்றியும் . வாய்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் பயணித்து பவானி காவிரியில் அடையும் முன் காளிங்கராயன் என்பவரால் கட்டப்பெற்று காளிங்கராயன் வாய்கால் ஆக பிரிந்து கொடுமுடி வரை பாசனத்திற்காக கலக்கிறது.

பவானி சாகர் பூங்கா :

நீண்ட நெடிய அசோக மரங்கள் பவானி சாகர் அணையின் அழகைகாட்ட புல்வெளிகளின் அழகில் பவானி சாகர் அணைப்பூங்கா அழகில் மிதக்கிறது. தற்போது அழகிய ரோஜா செடிகளை பொதுப்பணித்துறையால் நடப்பட்டு அழகு செய்கிறது.

சிறிய அலங்கார நீர்த்தொட்டிகள் ,டைனேசர் உருவச்சிலைகள் . அமர்ந்து பேச அழகான குடில்கள் ,குழந்தைகள் விளையாடும் சறுக்குகள் என குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக சென்று ரசிக்கும் விதமாக பவானிசாகர் அணைக்கட்டின் பூங்கா அமைந்துள்ளது.

நீங்கள் இறை தேடலில் விருப்பமிகுந்தவாக இருந்தால் அருகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஒருநாள் சுற்றுலா வர குடும்பத்துடன் வர ஏற்ற இடம் . பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேற்பகுதி செல்ல அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அருகில் சென்று பார்க்கலாம் .

ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வாருங்கள் .

Sunday, March 4, 2012

பாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் .ரெட்டியபாளையம் .குருவரெட்டியூர்


அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் வெள்ளக்கரட்டூர்
ரெட்டியபாளையம் ,குருவரெட்டியூர்

SRI BALATHANDAYUDABANI THIRUKKOVIL, VELLAKKARADUR,
REDDIYAPALAYAM GURUVAREDDIYUR

மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலமலையின் இயற்கை அமைத்திச்சாரலிலே குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரன் அழகில் மயக்கும் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் கிராமத்தை சேர்த்த வெள்ளக்கரட்டூர் எனும் அழகிய ஊரில் குடிகொண்டு கடந்த நான்கு தலைமுறைகளாக அருள் பாலித்து வருகிறார் .

சிறிய அளவில் இருந்த திருக்கோவில் பல ஆன்மீக அன்பர்கள் முயற்சியால் பெரும் திருக்கோவிலாக தயாராகி வருகின்றது.

செல்லும் வழி :

பவானி வெள்ளித்திருப்பூரில் இருந்து முரளி சனிச்சந்தை செல்லும் வழியில் வெள்ளக்கரட்டுர் உள்ளது . சுமார் 500 வருடங்களுக்கு முன் சிறிய திருக்கோவிலாக ஆரம்பித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் நாட்களில் பிரமாண்ட பூஜை நடைபெறும் .பின்னர் திருக்கோவில் பழங்கால ஆலயமாக உள்ளதால் தற்போது மாற்றம் செய்து பெரும் திருக்கோவிலாக உருவாகி வருகிறது .

குருவரெட்டியூர் உட்பட 20 கிராமங்களுக்கு மலை மீதுள்ள முருகர் ஆலயம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்னும் சிறப்பை பெறுகிறது. பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்று வருவதால் திருக்கோவிலும் எண்ணம் இருந்தால் நேரில் சென்று திருப்பணிகளை பார்வையிட்டு தரலாம் .

இன்னும் ஒரு வருட காலத்தில் அழகான முருகப்பெருமான் ஆலயம் தயாராகி விடும் . இதனால் ஏழ்மை நிலையால் பழனி சென்று ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியாதவர்கள் வெள்ளக்கரட்டூர் வந்தே தரிசித்துக்கொள்ளலாம் .

முருகர் துதி:

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு
வள்ளி காந்தனைக் கந்தக்கடம்பனைக்
கார்மயில் வாகனனைச் சாந்துணைப்
போதும் மறவா தவர்கொரு
தாழ்வில்லையே,


திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள ஊர்கள் :

ஜரத்தல் ,முரளி, சென்னம்பட்டி,ஜோதிபுரம் ,கோனார்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் , கருங்கரடு, குருவரெட்டியூர்
பாலகுட்டைபட்டி பழையூர் ,புதூர் ,
பொரவி பாளையம் ,தொப்பபாளையம் ,
என இப்பகுதி மக்களுக்கு புதியதோர்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உருவாகி வருகிறது.

சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி
ஆலய திருப்பணிகள்கள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும்போது நம் வலைப்பதிவில் தகவல் அளிக்கப்படும் .
நன்றி

Monday, February 27, 2012

சுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்


27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுத்து செய்தால் நன்மைகள் பலவும் நம்மை வந்து சேரும் .பழங்காலத்தில் எல்லா நல்ல விஷயங்கள் செய்யும் முன் ஜோதிடரிடம் கலந்து ஆலோசனை செய்தே ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் நல்ல காரியம் துவங்கும் போது நட்சத்திரங்கள் பார்த்து செய்து தடையில்லாமல் காரியங்கள் நிறைவேறிட இப்பதிவு உதவும்.

ரேவதி -திருமணம் சம்பந்தமான சுப நிகழ்ச்சி
சதயம் - திருமணம் மாங்கல்யம் செய்தல்
சுவாதி- திருமணம் செய்ய முடிகாணிக்கை ,பள்ளியில் சேர்க்க உகந்தது
அசுவனி - திருமணம் ,வளைகாப்பு,பூப்புனித நீராட்டு
ரோகிணி- திருமணம் கிரகப்பிரவேசம் ,வளைகாப்பு
புனர் பூசம் -மாங்கல்யம் செய்ய வளைகாப்பு நடத்த உகந்தது
மகம் -மாங்கல்யம் செய்ய ,போர்வெல் அமைக்க சிறந்தது
மிருகசீரிடம் - காதணிவிழா, முடிகாணிக்கை ,வெளியூர் பயணம் செல்ல உகந்தது
பூசம் -கிரகப்பிரவேசம் , வீடுகட்ட துவங்கலாம்
பூரம் , விசாகம்- ஆடுமாடு வாங்கலாம்
உத்திரம் - கிணறு வெட்ட உகந்தது
அஷ்தம்,மூலம் - வீடுகட்டிடப்பணி துவங்குதல் ,கிரகப்பிரவேஷம்
சித்திரை - பெயர் சூட்ட காது குத்த உகந்தது.
உத்திராடம் -ஆபரணம் வாங்க உகந்தது
அனுசம் -புதிய ஆபரணம் அணிய உகந்தது.
திருவோணம் - கிரகப்பிரவேசம்
அவிட்டம் - உபநயனம் செய்தல் கிணறு வெட்ட உகந்தது
பூரட்டாதி -விவசாயப் பணி துவங்க ஆடுமாடு வாங்க உகந்தவை
உத்திராட்டதி - சுவாமி பிரதிஷ்டை செய்யவும்
வளைகாப்பு நடத்தவும் உகந்த நட்சத்திரங்களாகும்

சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :
பூராடம் ,கேட்டை, ஆயில்யம் ,
திருவாதிரை, கார்த்திகை ,பரணி ஆகிய நட்சத்திரங்களாகும்

Thursday, February 23, 2012

சுனாமியை விரட்டிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருச்செந்தூர்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
SRI SUBRAMANIAHA SWAMY TEMPLE THIRUCHENDUR

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிலிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு.
காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின்பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :


ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .


திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு

Sunday, February 19, 2012

மாசி மகா சிவராத்திரி (மறந்து விடாதீர்கள் இன்று 20.2.12 மாசி மகாசிவராத்திரி )


சைவத்திருமார்களும் சிவனடியார்களும் சிவவழிபாடு செய்வது மரபு . அதில் மாதமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை மிகுந்த விஷேச நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர் .

மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் நினைப்போடு மாலையில் நன்கு குளித்து சிவாய நமஹ எனச்சொல்லி சுத்த வெண் திருநீறு தரித்து
" ஓம் சிவாய நமஹ"

'' ஓம் நமச்சிவாய''

எனும் பஞ்சாட்சர மந்திரங்களை இடைவிடாது உச்சரித்து விரதமிருந்து ஏதேனும் ஓர் சிவாலயத்தில் கண்விழித்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்சனை செய்து தேவாரம்,திருவாசகம் , பாரயணம் செய்வது சிவபெருமானுக்கு அருகில் நாம் செல்ல வைக்கும் அரியதோர் வாய்ப்பு

மகா சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவதன் பலன் :

நூறு அசுவமேதயாகம் செய்த பலன் .
அறிந்தும் அறியாமலும் செய்த பாவ நிவர்த்தி ,
அடுத்த பிறவியில் சிவலோக பதவி, ஆகியவை கிட்டும் .

சிவன் ஜோதி வடிவில் உருவமாகவும் அருவவடிவில் லிங்கமாகவும் அருள்புரிகிறார் . அப்படி சிவன் லிங்கத்தில் அருவமாகி காட்சி தரும் நாளே சிவராத்திரியாகும் . மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்தசி திதியில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடம்முழுவதும் சிவராத்திரி விரதமிருக்கமுடியாதவர்கள் மாசிமகா சிவராத்திரியன்று வணங்குவது வருடமுழுவதும் சிவனை வணங்கியதற்கு சமமாகும்.

கயிலாயத்தில் ஓர் நாள் பார்வதி தேவி சிவபெருமான் கண்களை மூட சிவனின் இரு கண்களான சூரிய சந்திரகளை மறைத்தது போலகிவிட உலகம் இருண்டு ஜீவராசிகளும் மக்களும் பயந்து நடுங்க அப்போது சிவன் தன் அக்னி வடிவான நெற்றிக்கண்ணைத்திறக்க அனைத்து உயிர்களும் மேலும் பயம் கொள்ள பார்வதி தேவியார் தான் செய்த தவறை உணர்ந்து அன்றிரவு சிவனுக்கு நான்கு காலபூஜைகள் செய்து சிவனை வழிபட்டார் .

பூஜையில் மகிழ்ந்த நெற்றிக்கண் அக்னி தளர்ந்து அருள் ஒளியாக்கினார் . பார்வதியை நோக்கி சிவன் என்ன வரம் வேண்டுமெனக்கேட்க தாம் செய்த பூஜை சிவனுக்குரிய பூஜைநாளாக சிவராத்திரி பூஜையாக அருள வேண்டுமெனவும் , இந்த சிவராத்திரியில் நான்கு காலபூஜை செய்து அபிஷேகித்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் எல்லா ஐஷ்வர்யங்களும் கிட்ட வேண்டுமென அருள்புரியுங்கள் எனக்கேட்க அப்படியே ஆகட்டும் தேவி என ஆசிர்வதித்தார் சிவபெருமான் .

புராணங்கள் சிவராத்திரியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :
அர்ஜீனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்றது ஓர் சிவராத்திரியில்
பகிரத முனிவர் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது. கண்ணப்பநாயானார் முக்தி பெற்றது சிவராத்திரி நாளில்தான் .
சிவன் பார்வதிக்கும் தம் இடப்பாகம் கொடுத்து மகாசிவராத்திரி நாளில்

இப்படி ஆயிரமாயிரம் புண்ணியங்கள் நிறைந்தது மகா சிவராத்திரி என சிவபுராணங்கள் இயம்புகின்றன. வயதானவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள் .

இளம் வயதினர் தூங்கமலிருந்து அருகிலுள்ள சிவாலயங்கள் பலவற்றிக்கும் சென்று சிவதரிசனம் செய்யுங்கள் .கல்வி,வேலை ,திருமணம் போன்ற உயர்வுகள் கிட்ட சிவபெருமான் உங்களுடனிருப்பார் .

வெளியூர் வெளிநாடுகளில் வாழ்ந்தால் என்ன சிவாலயம் செல்ல முடியாவிட்டாலும் சிவனின் படங்களை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள் . யாருக்கேனும் இந்த இனிய நாளில் அன்னதானமிடுங்கள் . அல்லது அன்னதானத்திற்கு உதவுங்கள் .
அன்பே சிவம் .

எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள் .சிவபெருமான் உங்கள் உடனிருந்து வழி நடத்துவார் . ஓம் சிவாய நமஹ

இராமேஸ்வரத்தின் 22 தீர்த்தங்களில் நீராடுவதின் பலன்


இராமேஸ்வரம் தீர்த்தங்களை ஸ்ரீ ராமர் உருவாக்கி ஸ்ரீஇராமேஸ்வரை பிரதிஷ்டை செய்து இராவணை வதம் செய்த பின் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார் என்பது புராணகால கூற்று அப்படி பல விஷேசங்கள் பெற்ற ஸ்ரீ ராமலிங்கசாமி திருக்கோவில் உட்புறத்தில் 22 தீர்த்தங்களும் வெளிப்பகுதியில் 31 தீர்த்தங்களும் இராமேஷ்வரத்தை சுற்றியும் அமைந்துள்ளன.

22 தீர்த்தங்களில் குளிப்பதால் என்ன நன்மை கிட்டுமென பார்ப்போம். ஆனால் திருக்கோவில் எதிரே உள்ள கடலில் கலந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டே 22 தீர்த்தங்களில் நீராட வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்

22 தீர்த்தங்களும் நீராடுவதின் பலனும்

1. மகாலட்சுமி தீர்த்தம் - ஐஸ்வர்யம்
2.சாவித்திரி தீர்த்தம் - சாப நீக்கம்
3.சந்ததியில்லாதவர் சாப நீக்கம்
4. சரசுவதி தீர்த்தம் - அறியாமையால் சடங்கு செய்தாது விட்ட பாவ சாப நீக்கம்
5. சேது மாதவ தீர்த்தம் - செல்வம் ,லட்சுமி கடாட்சம் சித்த சுத்தி
6.கந்தாமன தீர்த்தம் - தரித்திர நீக்கம் ,
7 சுவாட்ச தீர்த்தம் - சொர்க்கத்திற்கு செல்லலாம்
8. கவாய தீர்த்தம் - நீண்ட ஆரோக்கியம்
9. நளதீர்த்தம் - நல்ல சுகம் சொர்க்கம்
10. நீள தீர்த்தம் - பெரும் யாகம் செய்த பலன்
11. சங்கு தீர்த்தம் - செய்நன்றி மறந்த பாவம் போகும்
12. சக்கர தீர்த்தம் -அனைத்து நோய் நிவர்த்தி
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - மகா பாவங்கள் ,பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி. பில்லி .சூன்யம் போன்ற அனுமானுஷ்ய தீவினைகளிலிருந்து விடுதலை
14. சூரிய தீர்த்தம்- ஞானம்
15.சந்திர தீர்த்தம் - அழகு அறிவு ஞான விருத்தி
16. கங்கா தீர்த்தம் - ஞானம்
17. யமுனா தீர்த்தம் - ஞானம்
18. சிவ தீர்த்தம் - சிவகடாட்சம் ஐஷ்வர்யம்
19. சாத்யமிர்த தீர்த்தம் - சாப நீக்கம்
20 கயா தீர்த்தம் -ஞானம்
21 சர்வ தீர்த்தம் - பிறவி நோய் அனைத்து சரிர நோய் நீக்கம்
22. கோடி தீர்த்தம் -
ஸ்ரீ ராமர் ஸ்ரீ ராமலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்ய பயன் படுத்திய மகா தீர்த்தமே கோடி தீர்த்தமாகும் . இந்த தீர்த்தத்தில் நீராடித்தான் கம்சனை கொன்ற பாவம் கிருஷ்ணபகவானுக்கு நீங்கியதாக புராணவரலாறு .

மேற்கண்ட பலன்கள் யாவுமே திருக்கோவில் கேட்ட செவிவழிச்செய்திகள் . சுற்றிலும் ராமேஷ்வரத்தை கடல் சூழ்ந்து இருக்க 22 தீர்த்தங்களில் நீராடி கொஞ்சம் சுவைத்துப்பாருங்கள் .ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சுவை . இராமயணக்காலத்தில் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட் இந்த ஸ்தலத்தின் பெருமையுணர்ந்து இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவது வழிபடுவதுமே ,
ராமேஸ்வரம் காலத்தால் அழியாத தமிழர்க்கு கிடைத்த மகா பொக்கிஷம் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...