Sunday, August 19, 2012

ஸ்ரீ அபிராம வள்ளி உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஷ்வரர் திருக்கோவில் .திருக்கடவூர் .


ஸ்ரீ அபிராமியம்பிகை உடனமர் ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர்
திருக்கடவூர்




விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன ,
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழிகிடக்கப் ,
பழிக்கே சுழன்றும்வெம் பாவங்க ளேசெய்து பாழ்நரகக் ,
குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டினியே.

அபிராமி அந்தாதி (பாடல்79) அபிராமி பட்டர்

திருக்கோவில் மூலவர் :

ஸ்ரீ அமிர்தகடேஷ்வரர், என்றும்
அமுதகடோற்பவர் ,அமுதகடேசர் ,கடவூர் வீரட்டேஸ்வரர் என பல திருநாமங்கள் உண்டு.


அம்பாள் :
ஸ்ரீ அபிராமி அம்பிகை ஸ்தலம் சரஸ்வதி தேவி அபிராமியை
பூஜித்து அருள் பெற்ற ஸ்தலம் ஆகும்

அமைவிடம் :
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் திருக்கடவூர் அமைந்துள்ளது. சீர்காழி,பொறையாறு ,மயிலாடுதுறைக்கு பஸ் வசதி உண்டு. வில்வ வனம், பிஞ்சில வனம் என திருக்கடவூர் வேறு பெயர்களும் உண்டு.

ஞான உபதேசம் பெற விரும்பிய பிரம்மன் சிவபெருமானை வணங்கி நின்ற போது சிவன் ஓர் வில்வ விதையினை பிரம்மனிடம் கொடுத்து இது இட்ட இடத்தில் எங்கு முளைக்கிறதோ அங்கு தங்கி என்னை வழிபடுங்கள் எனக்கட்டளையிட திருக்கடவூரில் வில்வ விதையை இட்ட போதே அது குறித்தகாலத்தில் முளைக்க மனம் முருகி பிரம்மன் தங்கி வழிபட்டு ஞான உபதேசம் பெற்ற இடமாகும் .

முதலில் திருக்கடவூர் ஸ்தலத்திற்கு வில்வவனம் என்றும் ஸ்ரீ வில்வனேஷ்வரர் என்றும் அழைத்ததாக புராணங்கள் இயம்புகின்றன.

கடவூர் பெயர்காரணம் :

தேவர்களும் அசுரகர் அமுதத்திற்காக கடைலைக்கடையும் போது உண்டான அமுதத்தை கடத்தில் அடைத்து நீராடச்சென்று திரும்பிய போது அது சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கமாக இருக்க கண்டனர் . கடத்தில் இருந்த அமிர்தமே லிங்கமானதால் அமிர்தகடேசர் அமுதலிங்கம் என அழைக்கப்பட்டதாகவும் , கடத்தில் உண்டானதால் கடவூர் எனவும் ஆதியில் அழைக்கப்பட்டும் பின் திருக்கடவூர் ,திருகடையூர் என பெயர் மாறியதாம் .

பிஞ்சிலம் என்றால் சாதி மல்லிக்கொடியாகும் .இதுவே இங்கு ஸ்தல விருட்சமாகும் .ஆண்டு முழுவதும் பூக்கும் சாதிமல்லியை சுவாமிக்கு அலங்காரம் செய்ய மட்டுமே பயன்படுகிறது.

திருக்கோவிலில் கள்ளவாரணப்பிள்ளையார் வணங்குதல் சிறப்பு . தேவர்கள் அமிதம் சிவலிங்கமாய் சுயம்பு மூர்த்தியாய் நிற்க கண்டு அதிசயித்து நிற்க ஸ்ரீ கள்ளவாரணப்பிள்ளையாரை வணங்கி அமுதம் பெற்று தேவர்கள் அருந்தியது புராண வரலாறு

. ஸ்தலத்தின் சிறப்புகள் :

அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
குங்கிலியக்கலயர் ,காரிநாயனார் போன்ற அடியார்கள் தொண்டாற்றி முக்தி பெற்ற ஸ்தலம். பட்டரால் அபிராமி அந்தாதியை பாடிய போது அபிராமி அம்பாள் அமாவசையை பெளர்ணமியாக்கி அற்புதம் நிகழ்த்திய ஸ்தலம் .

பாற்கடலை கடைந்து எடுத்த அமுதக்குடமே அமிர்தகடேசராக சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஷ்தலமாகும் . மார்கண்டேயர் அமிர்தலிங்கத்தினை வணங்கி காலனை வென்ற ஸ்தலமாகும் .இப்படி பல அற்புதங்களை பெருமானும் அம்பாளும் நிகழ்திய ஸ்தலமாகும் .

தீர்த்தங்கள் :

அமிர்தபுஷ்கரணி ,காலதீர்த்தம் , மார்க்கண்டேய தீர்த்தம்

ஸ்தலமரம் : வில்வமரம் ,சாதிமல்லிக்கொடி எனப்படும் பிஞ்சிலம் பூஜைகள் :ஆறுகாலப்பூஜைகள் நடைபெறுகிறது.

திருவிழா:

சித்திரைமாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. கி.பி 600 ன் காலத்தில் இருந்து கல்வெட்டுக்கள் காணப்பெறுகிறது. கொழும்பு அரசனால் திருக்கடவூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறாகும் .

முடிவுரை :
அண்மையில் கும்பகோணம் சென்று நாங்கள் தரிசித்த ஸ்ரீ அமிர்தகடேஷ்வரும் அன்னை அபிராமியும் வியக்க வைத்தனர் . கூட்டம் நிரம்பி வழிகின்றது. பல சிறப்புகளை உடைய திருக்கோவில் குடும்பத்துடன் வந்து தரிசியுங்கள் .

வரலாற்றுச்சிறப்பு மிக்க ஸ்ரீ அமிர்த கடேஸ்வரரையும்,அன்னை அபிராமியையும் தரிசியுங்கள். நல்லன எல்லாம் அருளும் அன்னை அவள் . தீமைகள் நெருங்காதிருக்க அவ்வப்போது மனதால் நினையுங்கள் .

"முக்கண்ணியை தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே " என அபிராமி பட்டர் மொழிந்த கருத்துக்கள் புலப்படும். கட்டயாகமாக தரிசிக்க வேண்டிய அழகான ஸ்தலம் . நன்றி

Tuesday, August 14, 2012

நட்பூ ( நட்புக்காக 200 வது பதிவை சமர்பிக்கிறேன் )


நட்பே..!
வறண்டு கிடந்த நிலம் போன்ற
எம் எழுத்துக்கு விதையிட்ட
முதல் வித்து நீ ....!!

எமக்குள்ளே மறைந்து
கிடந்த எழுத்துக்களை
வரிகளாக்கி வாசித்து
மகிழ்ந்தது நீ ...!

யாம் அறியாத இணையம்
என்னும் பிரமாண்ட இருக்கையில்
உட்காரச் செய்து
உலகைச்சுற்றி வரச் செய்தவன் நீ ...!

உன் நட்பூவால் படைக்கப்பட்டதோர்
ஓர் அழகிய வலைப்பூ ...!!

பூக்கள் அழகழகாய் கோர்த்து
வலைப்பூ உலகெங்கும் பூத்துக்குழுங்குகிறது...!
அவ்வப்போது வந்து பூக்களின்
சாரலில் நனைந்து செல்லுங்கள் ...!
ஏனெனில் இந்த பூந்தோட்டத்தை
உருவாக்கிய உன்னமதான நட்பூ நீ ...!!

நட்புக்கு சமர்பணம் :
எமது 200 இடுகையான இந்த பதிவும் வலைப்பூவும்
ஓர் சிறிய முயற்சியே என்றாலும் கூட
41 பின் தொடர்பவர்கள்
8500 பார்வையாளர்கள் என சந்தோஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது
என்னைப்போலவே என் வலைப்பூவும் . சற்றே திரும்பி பார்க்கையில் ஓர் மழைக்கால நாளில் பணிக்காக ரயில் ரோட்டில் பேசிக்கொண்டிருக்கையில் எம் எழுத்தார்வத்தை அறிந்த எம் நன்பர் பிரகாஷ் சென்னிமலை அவர்கள் இந்த வலைப்பூவை உருவாக்கித்தந்தார் .

இணையத்தை பற்றி அறிந்திராத எனக்கு பிரகாஷ் நட்பாய் கிடைத்தது வரம் ,
அந்த அன்பு நட்புக்காய் எம் 200 வது படைப்பை சமர்பணம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன் . நன்றி

Saturday, August 11, 2012

திருமணத்தடை நீக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் உடனுறை ஸ்ரீ உத்வாகநாதர் திருக்கோவில் . திருமணஞ்சேரி. மயிலாடுதுறை


SRI UDVAGANATHAR KOKILAMPAL TEMPLE , TIRIMANASERI


"அயிலாரும் அம்பத னால்புர மூன்றெய்து
குயிலாரு மென்மொழி யாள்ஒரு கூறாகி
மயிலாறு மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில் வானைப் பற்றி நின் றார்கில்லை பாவமே"

தேவாரப்பாடல் திருஞானசம்பந்தர்



அறிமுகம் :

சிவாலயங்களில் நால்வர்களால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் மொத்தம் 274 அவற்றில் காவிரி வடகரையில் அமையப்பெற்ற சிவஸ்தலங்கள் 63 ஆகும் . அதில் 25 வது திருத்தலமாக திருமணஞ்சேரி அமைந்துள்ளது .

மூலவர் :

ஸ்ரீ உத்வாகநாதசாமி

அம்பாள் : ஸ்ரீ கோகிலாம்பாள்

திருக்கோவில் பாடியவர்கள் : திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர்

அமைவிடம் :

மயிலாடுதுறையை அடுத்த குத்தாலம் நகருக்கு வடக்கே சுமார் 7 கி.மீட்டர் தொலைவில் திருமணஞ்சேரி என்ற சிறிய ஊரில் பிரமாண்ட திருக்கோவிலாக அமைந்துள்ளது.

சிறப்பும் பெயர் காரணமும் :

சிவனும் பார்வதியும் பூலோக திருமணம் செய்து கொண்ட திருத்தலமாகும் . இறைவி அருள்மிகு கோகிலாம்பாள் இறைவன் ஸ்ரீ உத்வாக நாதர் ஸ்சுவாமியின் கோபத்தால் பசுசாபம் ஏற்பட்டு பசுமாடாக மாறி தவம் செய்து பின் சாபம் நீங்கி பூலோகத்தில் பரத்வாஜ ரிஷி என்பவரின் மகளாக பிறந்து மீண்டும் பூலோக முறைப்படி சிவபெருமானை திருமணம் புரிந்து மக்களுக்கு காட்சி அளிக்கும் இடமே திருமணச்சேரியாகும் .

கல்யாண சுந்தரமூர்த்தி (உத்வாக நாதர் ) காட்சி கொண்டு ஸ்ரீ கோகிலாம்பாள் அம்பிகையை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் "திருமணஞ்சேரி " என சிறப்பு பெயர் பெற்றது.

ஸ்தல வரலாறு :

பார்வதி ஒருநாள் சிவனிடம் நாதா தங்களை பூலோக முறைப்படி திருமணம் செய்ய என் மனம் விரும்புகிறது . அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்குமாறு வேண்ட சிவனும் சிறிது காலம் பொறுத்திருக்கும்படி கூறினார் .

தம் எண்ணம் நிறைவேற வெகுகாலம் ஆகுமென்ற எண்ணத்தில் பார்வதி சிவனிடம் அலட்சியமாக நடந்து கொள்ள அதை கவனித்த சிவபெருமான் "நான் உன் விருப்பத்திற்கு சம்மதித்த போதும் காலம் கடக்கிறதென அலட்சியமாக நடப்பதால் எம்மைப்பிரிந்து நீ பூலோகத்தில் பசுவாக பிறப்பாய் " என கட்டளையிட்டார் .

ஈசனின் சாபத்தால் அம்பிகை பசுவாகி சிவனின் மீது பக்திகொண்டு உலவி வந்தார் .அங்குள்ள லிங்கத்தின் மீது தினம் பாலைப்பொழிந்து அபிஷேகித்து வந்தார் . சிவன் மனம் மாறினார் . பசு உருவில் இருந்த அம்பிகையில் பாதக்குளம்புகள் பட்டு ஈசனின் உடல் மீது பட்டு தழும்புகள் உண்டானது அந்த ஊர் " திருக்குளம்பம் என பெயர் பெற்றது .

பின் திருவாடுதுறையில் சிவனால் பசுவுக்கு முக்தி அளிக்கப்பட்டது. திருந்துருத்தி எனப்படும் குத்தாலத்தில் பரத மகரிஷி பிரமாண்ட யாகவேள்வி நடத்த அந்த யாக வேள்வியில் சிவபெருமானின் அருளால் அம்பிகை தோன்றினார் .

தெய்வீகப்பெண் ஒருவர் வேள்வியில் வர ஆச்சர்யப்பட்டு பரத மகரிஷி நிற்க சிவபெருமான் தோன்றி " மகரிஷியே வேள்வியில் வந்தவர் உமாதேவியே அவரை உமது பெண்ணாக ஏற்று எமக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள் நான் எதிர் கொண்டு வருவேன்" எனக்கூறி மறைந்தார் .

இறை உத்திரவுப்படி திருமண கங்கணதாரணமும் மங்கள ஸ்நானமும் திருவேள்விக்குடியில் நடைபெற்றது.பின் பாலிகை ஸ்தாபனம் குருமுலைப்பாலையில் சிறப்பாக செய்தார் .

பின் மணமகளான உமாதேவியை அழைத்துக்கொண்டு சிவனை தேடி பரத மகரிஷி வர இறைவன் எதிர் கொண்டு காட்சி கொடுத்த இடமே "திரு எதிர்கொள்பாடி " என அழைக்கபடுகிறது.

பின் மணமகனான சிவனையும் உமாதேவியையும் அழைத்துக்கொண்டு திருமணச்சேரியில் கல்யாண வைபவம் நடந்ததாக வரலாறு. திருமணத்தைகாண விண்ணவர்கள் தேவர்கள் நவகிரகங்கள் வந்தனர் .

திருமணச்சேரியில் சிவன் ஸ்ரீகல்யாண சுந்தரராக ஸ்ரீ உத்வாக நாதராக எழுந்தருளி தன்னை நாடி வந்தோர் திருமணத்தை நடத்தி வைக்கிறார். அம்பிகை எப்படி தாம் விரும்பியவாறு சிவனை மணம் புரிந்து கொண்டாரோ அதுபோல இங்கே வணங்குவோர்க்கு அவரவர் விருப்பம் போல திருமணம் நடைபெறுகிறது.

ஸ்தல விருட்சம் : வன்னி கொன்றை ஆகும்.

திருமணஞ்சேரியுடன் வரலாற்று தொடர்புடைய திருக்கோவில்கள் 10 ஆகும் .

தேரழந்தூர் -அம்பிகை பசு சாபம் ஏற்ற ஸ்தலம்

கோமல் - இறைவி பசுமாடக வலம் வந்த(நாச்சினார்குடி,திருக்கொலம்பியம் ,அசிக்காடு ) ஸ்தலங்கள்

திருவாடுதுறை - அம்பாள் பசு சாபம் நீங்கிய ஸ்தலம்

திருவாலங்காடு - அம்பிகை பரத மகரிஷியாக வேதி அவதாரம் எடுத்த ஸ்தலம்

குத்தாலம் அம்பாளை பெண் பார்க்க (திருத்துருத்தி )வந்த ஸ்தலம்

திருவேள்விக்குடி -திருமண யாகங்கள் புரிந்து மங்கள
ஸ்நானமும் கங்கணதாரமும் செய்த இடம்

குறுமுலைபாளை -பாலிகை ஸ்தாபனம் செய்த ஸ்தலம்

வில்லியநல்லூர் - பிரம்மா திருமண வேள்வி புரிந்த ஸ்தலம்

திரு எதிர்கொள்பாடி - இறைவனை மாப்பிள்ளை கோலத்தில் எதிர் கொண்டு வந்த இடம்

திருமணஞ்சேரி - பூலோக முறைப்படி இறைவனும் இறைவியும் திருமணம் செய்து மணம் புரிந்த கோலத்துடன் காட்சியளிக்கும் ஸ்தலம்

எம் அனுபவம்-

திருமணஞ்சேரியை தரிசிக்கும் ஆர்வத்தில் சென்ற வாரம் அந்த வாய்ப்பு கிட்டியது . திருக்கோவில் அமைப்பே அழகாக இருக்கிறது. திருக்கோவிலுக்குள் ரூ 15 மட்டுமே பரிகாரச்செலவாக மாலை பூ என 100ரூபாய்க்குள் மட்டுமே செலவாகிறது.

ஏழை பணக்கார பேதமின்றி எல்லோரும் திருமணம் தடை பரிகாரம் செய்யலாம் . இங்கு கல்யாணம் முடிந்து வருகிற தம்பதிகளைப் பார்த்தாலே திருக்கோவிலின் மகிமை நமக்கு புரிகிறது . திருமணமாகத பலர் வருகின்றனர்.

.திருக்கோவிலில் கொடுக்கப்படும் மாலை,விபூதி,குங்குமம் ,மஞ்சள், எலுமிச்சம்பழம் ஆகியவற்றை திருமணமாகாமல் வருகின்றவர் மட்டும் உபயோகித்தும் வீட்டிற்கு சென்றதும் காலையில் குளித்து பிரசாத எலுமிச்சையை பிழிந்து உப்பு சக்கரை சேர்காமல் சாப்பிட்டு ஆலயத்தில் கொடுத்த மாலையை அணித்து தீபம் ஏற்றி வழிபட்டும் விபூதி குங்குமத்தை தினம் இட்டுக்கொண்டும் வர வேண்டுமாம் .

திருமணம் முடிந்ததும் மஞ்சள்பையில் பத்திரப்படுத்திய பழைய மாலையை திருக்கோவில் கொண்டு வந்து பிரார்தனை பூர்த்தி செய்ய வேண்டும்.

திருமணஞ்சேரி வந்து சிவனை வணங்கி திருமணம் தடைபடும் திருமணம் நடைபெற வாழ்த்துக்கள் . திருக்கோவில் 1100 வருட வரலாற்றை உள்ளடக்கியது திருமணஞ்சேரியாகும் .

நாம் பகிர்ந்தது சிறிதளவே .
நன்றி

Wednesday, August 8, 2012

ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில், அந்தியூர்


SRI KONNAMARATHI AYYAN TIRUKKOVIL ANTHIYUR


அந்தியூர் ஸ்ரீ குருநாத சாமி (SRI GURUNATHA SAMY TEMPLE ., ANTHIYUR திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில் விஷேசமானது . இத்திருக்கோவில் அந்தியூர் இருந்து பர்கூர் செல்லும் வழியில் புதுப்பாளையம் குருநாதசாமி திருக்கோவில் அருகில் சிறிய வனத்தில் அமைந்து உள்ளது.

திருக்கோவில் மூலவர் :

கொன்ன மரத்தையன்

பெயர் விளக்கம் ;

கொன்னை மரத்தையன் ,கொன்ன மரத்தய்யன் என அழைக்கப்பட்ட போதிலும் சுவாமி புன்னை மரத்தடியில் இருந்ததால் புன்னை மரத்தையன் என்பதே காலப்போக்கில் மருவி கொன்னை மரத்தையன் ஆனதாக கூறுவதுண்டு .

திருக்கோவிலைச் சுற்றிலும் வேப்ப மரங்கள் ,ஊஞ்சல் மரங்கள் நிறைந்த அமைதியான இடம் .தியானம் செய்ய ஏற்ற இடம் .

திருக்கோவில் முகப்பில் காவல்காரன் எனும் காவல் தெய்வமும் சற்று தூரம் நடந்தால் திருக்கோவில் முகப்பில் பல்வேறு வேல்கள் குத்தப்பட்டு இருக்க

வலப்புறம் ஸ்ரீவீரகாரன் ,
ஸ்ரீகொன்னை மரத்தையன்,
மற்றும் ஸ்ரீபெருமாளின் அம்சமாக பெருமாள் சாமியும்

திருக்கோவிலில் அமர்ந்திருக்க அழகான திருக்கோவிலாக காணப்படுகிறது.

வார பூஜை புதன் கிழமை அன்று நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ குருநாத சாமியை பற்றிய முழு விபரங்களும் இந்த வலைப்பூவில் உள்ளது.

முடிவுரை:

ஆடி மாதம் வந்தாலே ஈரோடு மாவட்டம் கல கலப்பாகிவிடும் . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பண்டிகையான அந்தியூர் ஸ்ரீ குருநாதசாமி பண்டிகை

இன்று 8.8.12 துவங்கியது. 5 நாட்கள் நடைபெறுகிற அந்தியூர் குருநாதசாமியின் வரலாறு, தோற்றம், ஆன்மீக நிகழ்வுகள் முன்பே இதே வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன் .

படியுங்கள் முடிந்தால் வந்துவிட்டு செல்லுங்கள் மிகப்பெரிய குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையுடன் ஸ்ரீ குருநாதசுவாமி அருள்பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

Tuesday, July 31, 2012

மழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்



ஆன்மீக ஆச்சர்யம்

எப்போதும் இல்லாத அளவில் 2012 வருடத்தில் மழை இல்லாமல் கர்நாடக மாநிலம் கடும் வறட்சி ஏற்பட்டது .

கர்நாடகா அரசு ஏறத்தாழ 150 தாலுக்காக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவித்தது . பின் சுதாரித்துக்கொண்ட கர்நாடக அரசு தனது இந்து அறநிலையத்துறை யத்தின் வசம் சுமார் 18 கோடி ரூபாயை மழைக்காக யாகம் செய்யுமாறு உத்திரவிட்டது .

அதன்படி கர்நாடகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாசஸ் பூஜாரி கர்நாடகா முழுவதும் உள்ள 34000 திருக்கோவில்களும் தலா 5000 காசோலை அளித்து , நடத்த வேண்டிய பூஜை முறைகளுடன் நடத்த உத்திரவு பிறப்பித்தார் .

கடந்த ஜீலை 27 ஆம் நாள் பூஜை ஆரம்பிக்கப்பட்டது . கர்நாடகவின் அனைத்து திருக்கோவில்களிலும் நிகழ்த்தப்பெற்ற பூஜையின் விளைவாக அந்த இரண்டு நாட்களிலும் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக தென்கர்நாடகம் ,பெங்களூர் ,சிமோகா ,சிங்மங்களூர் ஆகிய பகுதிகளில் மழையின் கடுமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . ரயில் போக்குவரத்து சேவை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழைக்காக யாகமா என கேலி செய்த எதிர்கட்சிகள் மழை பெய்ததும் ஆச்சர்யப்பட்டார்களாம் . இறை வழிபாட்டின் உண்மையை உணர்ந்த கர்நாடக அரசே முனைப்பாக மழை வேண்டி யாகம் செய்தது வியப்பான ஒன்றாகும் .

இறை வழிபாடு வேண்டுவோர்க்கு வேண்டுவன கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . தமிழகத்திலும் பழங்கால மன்னர்களும் மழை இல்லாமல் மக்கள் துன்பப்பட்ட போது மழை வேண்டி யாகம் செய்து மழையை வரவழைத்தாக நான் கேள்விப்பட்டதுண்டு.

ஆயிரமாயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் "அவனின்றி அணுவும் அசையாது"

இப்பதிவுவை எழுதவும் மற்றும்

உடனடியாக செய்தியை வெளியிட்ட
தினமலர் நாளிதளுக்கு நம் வலைப்பூவின் சார்பாக நன்றிகளாயிரம் .

Tuesday, July 17, 2012

மனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )




மனிதரும் கடவுளாகலாம் [சரண்யா]

சென்ற வாரம் கோவை ஈரோடு மாவட்டச் செய்திகளில் வலம் வந்த முக்கியமானவர் .

கடந்த ஜீன் 30 2012 அன்று கோவையில் இருந்து கருத்தரங்கு ஒன்றுக்காக சாலினா,சரண்யா, ,விமல் , உட்பட 6 பேர் சேலம் சென்று கருத்தரங்கு முடித்து விட்டு

சேலத்திலிருந்து கோவை நான்கு வழிச்சாலையில் காரில் பயணித்து இரவு 9 மணிக்கு வந்தபோது கோவையில் இருந்து சித்தோடுக்கு ஒரு லாரி திடிரென குறுக்கே வர காரும் லாரியும் எதிர்பாரத விதமாக மோதிக்கொண்டன..

காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் . ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சாலினா என்பவரும் இறந்து விட


சரண்யா மேல் சிகிச்சைக்காக கோவையில் ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் சரண்யாவின் அப்பாவிடம் தெரிவிக்கவும் இடிந்து போன சரண்யாவின் அப்பா மணியன் தனது மகளின் உடல் உள்ளுருப்பகளை தானமாக தர ஒப்புதல் தந்தார் .

அதன்படி பல்வேறு மருத்துவ மனைகளிகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் சரண்யாவின் உடல் உள்ளுருப்புகளை தரப்பட்டது .இதனால் 7 நோயாளிகளுக்கு புதுவாழ்வு கிடைத்தது.


சரண்யா பற்றி :

கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரண்யா B.E எலக்ரிக்கல் முடித்து 93 சதவீத மதிப்பெண் பெற்று கடைசியாக நடந்த தேர்வில் தேர்வானவர்.பள்ளி கல்லூரி நாட்களில் சமுக சேவையில் விருப்பமுடையவர் .

சரண்யாவின் சமுக சேவை எண்ணம் போல வே அவர் உள்ளுருப்பு தானத்தால் "இறந்த சரண்யாவின் ஆத்மா சாந்தியடைந்தது. சிறிய வயதில் இருந்து அவருடன் ஒன்றாக படித்த சாலினா என்ற தோழி இதே விபத்தில் இறந்து விட்டார் .

மலர்கள் சில காலையில் பூத்து
மாலையில் காய்ந்து
போகும்.... .!

சரண்யா போன்ற
பூக்கள்
இருந்தாலும்
உதிர்ந்தாலும்
காலமெல்லாம் அதன் வாசம்
நம்முடன் -எப்போதும்
கலந்திருக்கும்.

முடிவுரை:

உடல் உள்ளுருப்பு தானம் செய்து மறைந்த சரண்யாவிற்கும்
அதே விபத்தில் இறந்த மற்ற நான்கு ஆன்மாக்கள்
சாந்தி அடைய இறை துணை வேண்டுகிறேன் .

Friday, July 13, 2012

விண்ணப்பித்து விட்டீர்களா? கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012_13 க்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012 _13 க்கான அறிவிப்பை கடந்த 9.7.12 அன்று வெளியிட்டது. இதன்படி 1870 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப 10.8.12 கடைசி தேதியாகும் .
வங்கி அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் கட்ட கடைசி நாள் 14.08.12
தேர்வு நடைபெறும் நாள் 30.09.12 காலை 10மணிமுதல் மதியம் 1 மணி வரையாகும் .

21 வயது முடிந்த 40வயதிற்குட்பட்ட 10ஆம் வகுப்பு படித்த தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் . பொது அறிவு பொதுதமிழ் ஆகியவற்றில் 200வினாக்களுக்கு 300மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் .

விண்ணப்பதாரர்கள் 10.7.12 செய்தித்தாள்களை பார்த்தோ அல்லது

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net

ஆகிய இணையங்களில் விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்

முடிவுரை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மேற்கண்ட முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
உங்கள் நன்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் ஆகவே அனைவருக்கும் பகிருங்கள் .
நம் வலைப்பூவைப் பார்த்து விண்ணப்பித்து தேர்வு எழுதும்

அனைவருக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

குருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா


SRI kakuvai mariamman temple function -2012 GURUVAREDDIYUR


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்
சென்ற வருடம் நடந்து முடிந்தது .

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்

ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.


குருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்
கலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .

Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்




திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி

Sunday, June 17, 2012

ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில். கல்வடங்கம். சங்ககிரி வட்டம்





கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி

SRI ANGALAPARAMESWARI TEMPLE, KALVADANGAM


அமைவிடம் :

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தில் அமைந்துள்ள பழங்கால திருக்கோவில்களில் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் ஒன்றாகும். எடப்பாடியில் இருந்து 11 கி.மீட்டர் தொலைவில் திருக்கோவிலைக் காணலாம் கொமராபாளைத்தில் இருந்து எடப்பாடி செல்லும் வழியில் திருக்கோவில் அமைந்துள்ளது.

மூலவர் :

ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவில் திருக்கோவில் முகப்பில் பழங்கால தேர் நிற்க ரசித்து முன்னே சென்றால் பிரமாண்டமான ராஜ கோபுரம் தரிசித்து உட்பிரகாரம் சென்று நீண்ட கொடிமரம் அதைதொடர்ந்து காவல் தெய்வங்கள் வணங்கி உள்ளே சென்றால் மூலவர் ஸ்ரீ அங்காள பரமேஷ்வரியை வணங்கலாம் .

அழகிய அம்சங்கள் பொருந்தி பலர் வாழ்வில் ஏற்றம் அளித்த அழகிய அம்மன் . மூலவர் அருகில் பழங்காலத்தில் இருந்து காணப்படும் பாம்பு புற்று உள்ளது. திருக்கோவில் ஷ்தல மரமாக வில்வம் அமைந்துள்ளது. அருகே பிரமாண்ட அரசமரம் அமைந்துள்ளது.

இப்பகுதி மக்களால் விரும்பி வணங்குகின்ற பழங்காலத்திய காண வேண்டிய சக்தியான அம்மனாகும் ,வெள்ளிக்கிழமை, அமாவசை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

முடிவுரை:

காண வேண்டிய தரிசிக்க வேண்டிய ஆலயங்களில்

கல்வடங்கம் ஸ்ரீ அங்காளம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும் .

Sunday, June 10, 2012

நட்பே நலமா.!


பிரியமிகு நட்பே.. !!

ஆயிரமாயிரம் சோதனைகள்
கடந்து வந்திருக்கும்
நம் நட்பு...!

உனக்கு கணவனும்
எனக்கு மனைவியுமாய்
வந்து நாம் விரும்பிய
வாழ்வை மலர வைத்திருக்கலாம் ..!

பதினாறு பக்கங்களாக
நட்பை பலமாக்கிய
நம் கடிதங்களின்
நட்பை யாரும்
புரியாமலிருக்கலாம் .,!

காலம் ,
நேரமின்மை
உன் குழந்தைகளால்
நம் நட்பை வளப்படுத்த
முடியாமையால் தவறிப் போயிருக்கலாம் .!

இழந்த போன நட்பே.. !
எனக்காக நீ
அனுப்ப வேண்டியது
மடல் மட்டுமல்ல ..!
நீ மறந்த நம் நட்பின்
பசுமையான
நினைவுகளையும் தான் ..!

Friday, June 8, 2012

சொல்லி விடு


அன்பே ... !
இப்போது எனக்காக
சொல்ல வில்லை
என்றாலும் கூட
பராவாயில்லை...!
உனக்காக கடைசி
இதயம் சாகும்
போதாவது சொல்லி விடு...!
உன் காதலை...!

Friday, June 1, 2012

அன்னதானம்



பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...