Thursday, March 22, 2012

அகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி உடனமர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சன்னதி .அகிலாண்டபுரம் காங்கேயம்




ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஷ்வரர் திருக்கோவில்


திருக்கோவில் அமைவிடம் வழி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் என்னும் ஊரில் அம்பாளின் திருப்பெயரையே ஊரின் பெயராக கொண்ட அழகிய ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு. காங்கேயத்திற்கு பழங்காலத்தில் சிங்கையூர் என்னும் பெயர் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

சாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் அகஸ்தீஷ்வரர் அகத்திய சித்தரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கமாகும். .பழங்கோவிலாக இருந்த திருக்கோவிலை சலவைக்கற்களால் அழகுபடுத்தி உள்ளார்கள் .அகன்ற பிரகாரத்தில் இருநிலைக்கோபுரங்களுடன் அழகான சிவலயமாக அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலமாகும்

ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி சன்னதி :

ஒரு காலத்தில் சிவாலயமாக மட்டுமே இருந்த திருக்கோவிலுக்கு அகத்தியர் வந்தார் .அப்போது அகத்தீஷ்வரர் பூஜித்து வந்த போது சிவலிங்கம் மட்டுமே இருப்பதைக்கண்டு அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஸ்ரீ அகிலாண்டிஸ்வரியை பிரதிஷ்டை செய்து அம்பாள் சன்னதியை உருவாக்கினார் என்பது வரலாறாகும் . இதனால் அகத்திய சித்தரால் உருவாக்கப்பெற்ற அம்பாள் சன்னதி என்னும் தனிச்சிறப்பு பெறுகிறது.

சலவைக்கற்களால் உருவாக்கப்பெற்ற அழகான திருக்கோவில் வடிவமைப்பாகும் .அம்பாள் சன்னதியின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்களில் செங்கண்ணன் உட்பட 8 கூட்டத்தாருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.

இத்திருக்கோவிலின் சார்பு கோவிலான காக்கும் கடவுள்களாக ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்கள் காங்கேயத்திலிருந்து கருர் ரோட்டில் அமைந்துள்ளன . ஆயி அம்மன் திருக்கோவில் வீரணாம்பாளையத்தில் அமைந்துள்ளது.

பழங்கால சிறப்புமிக்க அகில உலகம் ஆளும் அகிலாண்டீஷ்வரிக்கு சன்னதி, அகத்தியரால் பூஜிக்கப்பெற்ற ,பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயத்தை
காங்கேயம் அகிலாண்டபுரம் வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் சிவனருள் பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங்க தீர்த்தமும் ,விநாயகர் வழிபாடும் (2012)



சென்னிமலையில் புகழ்பெற்றது மாமாங்க தீர்த்தமென எல்லோரும் செல்ல பார்க்கவேண்டுமென பல நாள் ஆவல் இருந்தாலும் நேரில் செல்லமுடியாது தவிப்பாகவே இருந்து வந்தது .

கடந்த 15 நாட்களுக்கு முன் ஓருவர் மாமாங்க தீர்த்ததைப்பார்க்க சென்றபோது அங்கு தீர்த்தம் பொங்கி வழிவதை பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல கேள்விப்பட்டு பல ஊர்களில் இருந்தும் முருகபக்கதர்கள் கிளம்பி சென்னி மலையை நோக்கி படையெடுக்க இந்த 2012 மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க மாமாங்க தீர்த்தத்தையும் மாமாங்க விநாயகரையும் தரிசனம் செய்ய கிளம்பினோம் .

எப்படிச்செல்வது :

ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு 25 கி.மீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை திருக்கோவிலும் வனமும் அமைந்துள்ளது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலையில் 2கி.மீட்டர் பயணித்து வெப்பிலி பிரிவில் வலப்புறம் திரும்பி சில்லாங்காட்டு வலசு (2 கி.மீ)சென்றால் வலப்புறம் திரும்பி 1 கி.மீட்டர் பயணித்தால் சென்னிமலையின் தெற்குபுறமான மலை அமைப்பை அடைகிறாம் .


பின் ஆங்காங்கே பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களை தாண்டி மிக கவனமாக பாதுகாப்பாக பயணித்தால் மலை அடிவாரம் வருகிறது. இருசக்கரபயணம் மட்டுமே ஏற்றது. மாமாங்க விநாயகர் கோவிலும் தீர்ததமும் சென்னிமலையின் தென்புறமுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .

பின் ஒற்றையடிப்பாதையில் சுமார் 15 நிமிடம் மலைப்பாதையில் நடக்க மாமாங்க விநாயகர் தீர்ததங்களை தரிசிக்கலாம் .

மாமாங்க தீர்த்தத்தின் மகிமைகள் :

சென்னிமலை முருகப்பெருமானின் அருளால் மாமாங்க தீர்த்தம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுரந்து மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது. சென்னிமலையின் இயல்பான அமைப்பே செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதாலும் பிப்ரவரிமுதல் ஜுன் மாதம் முடிய வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .

சென்னிமலை முழுவதும் வறண்டு கிடக்கிற காலம் . இப்படிப்பட்ட கோடை காலத்தில் தான் மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது என்றால் இறைவனின் மகிமைகளை கண்கூடாக உணரலாம் .

இதற்கு முன் பல ஆண்டாக 12 ஆண்டுக்கு ஒரு முறை மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தாலும் கடைசியாக 1988, 2000, 2012 ஆண்டுகளில் சரியாக மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பொங்கி வழிவது ஆச்சர்யமான ஒன்று.

கால மாறுபாட்டால் 4 வருடங்களுக்கு முன் ஓரே ஒர் முறை மாமாங்க தீர்த்தம் வெளிபட்டதாக சொல்வோரும் உண்டு.

தீர்த்ததின் பலன்கள்:

சென்னிமலையில் பல மூலிகைகளும் முக்கியமாக வெண்சாரை, கருநொச்சி போன்ற அரிய மூலிகைகளும் சுமந்து வருவதால் மாமாங்க தீர்த்தம் அருந்துவதால் நல்ல உடல் நிலையும் உடற் சரிர நோய்கள் தெளித்துக்கொள்வதால் நலமாக ஆவதும் உண்மைக்கூற்றே .

மாமாங்க தீர்த்தம் விநாயகர் சன்னதியின் அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீவிநாயகப்பெருமான் அமர்ந்திருக்க சுற்றிலும் சிறிய கட்டிட அமைப்பில் 10க்கு 10 அகல அமைப்பில் விநாயகருக்கு எதிரே காய்ந்து தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற கிளுவை மரத்தின் அடியில் சிறிய பொந்தின் வழியில் மாமாங்க தீர்த்தம் சுரக்கிறது. வேம்பு மரம் அருகே உள்ளது.

தற்போது ஒரு முதியவர் பூஜை செய்து வருகிறார் .மாமாங்க ஸ்ரீ விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆகியவற்றை பார்க்க செல்பவர்கள் பூஜைப்பொருட்கள் ,உணவுத்தேவைகள் உடன் செல்லவும் .இங்கு கடைகள் ஏதுமில்லை.

தீர்த்தத்தில் உள்ளே சென்று குளிக்காமல் வெளியே தீர்த்தம் எடுத்துச்சென்று தெளித்துக்கொள்ளலாம் .மாமாங்க தீர்த்தம் கொண்டு வர ஏதுவாக சிறிய பாட்டில்களுடன் செல்வது நலம் .

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை வனத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் சென்று தீர்த்தம் தெளித்து ஸ்ரீ விநாயகப்பெருமானை வணங்கி வாருங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

Wednesday, March 21, 2012

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்பமா? (வேலை வாய்ப்பு)


தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக சேர அரிய வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் சீருடைப்பணியாளர் குழுமம் இரண்டாம் நிலைக்காவலர்கள் (ஆண்/ பெண் ) ,சிறைக்காவலர்கள் , தீயணைப்புபோர்கள் பணிக்காலியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .

விண்ணப்பங்கள் தமிழகத்தின் 284 தபால் நிலையங்களில் கிடைக்கும் . முழு விபரங்களை www.tn.gov.in/tnusrb இணையத்தளத்தில் காணலாம் . இணையத்தளத்தை காணமுடியாத நன்பர்கள் தமிழக முண்ணனி நாளிதளான தினத்தந்தியில் 21.3. 12 பக்கம் 8 ல் விளம்பரத்தை காணவும் .

தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள் 21.3.12

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்திற்கு வரவேண்டிய கடைசி நாள் : 23.04.2012 மாலை 05.45 மணிக்குள்

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 24. 6.12 காலை09.00மணி .

முழுத்தகவல் விபரங்கள் விண்ணப்பத்துடன் கூடிய தகவல் சிற்றேட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது

தகுதி :

10ஆம் வகுப்பு தேர்வான 18 வயது நிரம்பிய 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . உயரம் 170 செ.மீ மார்பளவு 81 செ.மீ விரிவாக்கம் 5.செ.மீ பெண்கள் உயரம் 159 செ.மீட்டர் இருந்தால் போதுமானது.

எழுத்துத்தேர்வு :

50மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் 30மதிப்பெண்கள் உளவியல் தேர்வுக்கும் நடைபெறும் . உடல் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும் , ncc,nss விளையாட்டு சான்றிதல்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்களாக 5 அளிக்கப்படும். இரண்டாம் நிலைக்காவலர்கள் சிறைக்காவலர்கள் ,தீயணைப்பு படை என மொத்த பணியிடங்கள் :13320

நம் வலைப்பூவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை படிக்கின்ற நண்பர்கள் மெயிலாக தகுதியான நன்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . உங்களால் யாரேனும் பயன் அடைந்தால் நல்லதுதானே.

மற்றபடி மேற்படி பணிக்காக விண்ணப்பங்கள் அனுப்ப தயாராக உள்ள அனைத்து நன்பர்களுக்கு இறைதுணையுடன் வாழ்த்துக்கள் .

Sunday, March 18, 2012

காசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஷ்வேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஷ்வரர் திருக்கோவில் கோபிசெட்டிபாளையம்

அமைவிடம் :

ஈரோடுமாவட்டம் கோபி வட்டம் வீரபாண்டி அக்ரஹாரம் கோபி செட்டி பாளையம். கோபி பஸ் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது .

மூலவர் :

ஸ்ரீ விஸ்வேஷ்வரர்
அம்பாள் :
ஸ்ரீ விசாலாட்சி

திருக்கோவில் உருவான கதை :

பழங்காலத்தில் பாணசுரன் என்னும் அசுரன் தினம் ஒரு சிவ லிங்கத்தை கங்கையில் வைத்து பூஜை செய்து பின் கங்கையில் விட்டு விடுவது வழக்கம் . அதைப்பாணலிங்கம் என்று அழைப்பார்கள் .அவ்வாறு கங்கையில் விட்ட பாணலிங்கங்களை வியாபாரிகள் சேகரித்து எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பார்கள் .

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கோபிச்செட்டிய பாளையம் வீரபாண்டி அக்ரஹாரத்தில் ஒரு சிவாலயம் ஒன்றை உருவாக்க வேண்டுமென எண்ணி திருக்கோவில் எழுப்பினார்கள் .

பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டுமென யோசித்தபோது காசியில் பாணலிங்கத்தை எடுத்துக் கொண்டு பெரிய கூடையில் வியாபாரத்திற்காக ஒருவர் கோபிசெட்டிபாளையம் வந்தார் .

திருக்கோவில் உருவாக்கிய ஆன்மீகப்பெரியோர்கள் வியாபாரியிடம் நீங்கள் கொண்டு வந்த சிவலிங்கம் எங்களுக்கு பிடித்துள்ளது.நாங்கள் கட்டுகிற சிவாலயத்திற்கு விலைக்கு தாருங்கள் என சொல்ல லிங்கம் கொண்டு வந்த வியாபாரி ஒரு விலையை சொல்ல விலை கட்டுப்படியாகதால் திருக்கோவில் கமிட்டியினர் திரும்பி ஏமாற்றதுடன் சென்று விட்டனர் .

நீண்ட பயணத்தில் வந்த லிங்க வியாபாரி அசதியில் தூங்கி விட்டு காலையில் கிளம்பத்தயாராகி சிவலிங்கம் கொண்டு வந்த பூக்கூடையை தூக்க முயற்சித்தான் . முடியவே இல்லை.

கங்கை நதிக்கரையில் இருந்து கோபி வரை எளிதாக கொண்டு வரப்பெற்ற சிவலிங்கம் தூக்க முடியாததை ஆச்சர்யத்துடன் யோசித்து வீரபாண்டி அக்ஹாரம் சென்று திருக்கோவில் கமிட்டியாரிடம் சிவபெருமான் இங்கேயே தங்க ஆசைப்படுகிறார் .

இந்த பாணலிங்கத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் . நீங்களாக மனமுவந்து தருகிற தொகையை கொடுத்தால் போதும் எனக்கூறி கொடுத்த தொகையை லிங்க வியாபாரி பெற்றுக்கொண்டு காசி சென்றதாக வரலாறு .

பின்னர் திருக்கோவில் கட்டிய குடும்பத்தார் சந்தோஷத்துடன் அதை காசியில் இருந்து கொண்டு வந்ததால் காசிலிங்கம் என பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள் .

திருக்கோவில் தற்போதைய அமைப்பு :

மூன்று நிலைக் கோபுரங்களுடன் முன்னை அழகிய கொடிமரம் நந்தீசர் என அழகாயிருக்க மூலவர் ஸ்ரீ விஸ்வேஷ்வரர் லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்க திருக்கோவில் பின்புறம் பஞ்சலிங்கம் சிறப்பு விஷேசமாக அமர்ந்திருக்க திருக்கோவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் தரிசிக்க ஏதுவாக அமைந்த திருக்கோவில் அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள் .

காசியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சிறப்பு வாய்ந்த சிவாலயத்தை வணங்கி எல்லாம் வல்ல சிவனருள் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

Saturday, March 17, 2012

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற அன்னை ஸ்ரீ சாரதாம்பிகை கும்பாபிஷேகம்



ஆதிசங்கரர் உருவாக்கிய சிருங்கேரிமடம் ஆன்மீக உலகில் புகழ்பெற்ற ஒன்று. இந்தியாவின் பல சிருங்கேரி மடத்தின் கிளைகள் இருப்பினும் ஈரோடு மாவட்டம் எந்த வகையிலும் குறைந்ததில்லை என்பதற்கேற்ப கோபி செட்டி பாளையத்தில் நடந்த ஸ்ரீ சாரதாம்பிகை திருக்கோவில் கும்பாஷேகம் சிறப்பானது.

தற்போது ஈரோடு மாவட்டத்திற்கு ஆதிசங்கரரால் துவங்கப்பெற்ற சிருங்கேரி சாரதா பீடத்தின் 36 வது பீடாதிபதியாக பாரதி தீர்த்தர் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீ பாரதீ தீர்த்த சங்கராச்சார்ய சுவாமிகள் அவர்களால் அன்னை சாரதாம்பிகைக்கு கோபி வீரபாண்டி அக்ரஹாரத்தின் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தார் .

கும்பாபிஷேக விழாவினைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் விழாவில் கலந்து கொண்டனர் . சுவையான அன்னதானம் தரப்பட்டது.

கோபியில் அழகான அன்னை சாரதாம்பாள் திருக்கோவில் வீரபாண்டி அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது .வந்து வணங்கிச்செல்லுங்கள் .

1200 வருடங்களுக்கு முன்பு ஆதிசங்கரரால் சந்தன விக்கஹம் ஒன்றில் அன்னை ஸ்ரீ சாரதாம்பிகையை உருவாக்கி துவக்கப்பட்ட ஆன்மீக நற்பணி தொடர்ந்து நடைபெற்று வருவது சிறப்பு.

ஆன்மீகம் வளரட்டும் விருட்சமாக.

சிருங்கேரி சுவாமிகளையும்,அன்னை சாரதாம்பாள்

கும்பாபிஷேகத்தையும் தரிசிக்க முடியாதவர்கள் புகைப்படம்

இணைக்கப்பட்டுள்ளது. நன்றி

திப்பு சூல்தான் பயன்படுத்திய ரகசிய வழி



ஸ்ரீ கருவண்ணராயர் ஸ்ரீ பொம்மா தேவியர் திருக்கோவில் ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் தெங்குமரஹடா வனச்சாரலில் கெஜலெட்டி என்னுமிடத்தில் அருள்பாலிக்கும் வரலாற்றை இதற்கு முந்தைய பதிவில் விளக்கியிருந்தோம் .

இந்த திருக்கோவில் அருகே வரலாற்று ஆவணமாக கெஜலெட்டி கணவாயில் அமைந்த பாலம் 200ஆண்டுகள் முன்பு பழமை வாய்ந்து சிதிலமடைந்து பாதி நிலையில் உடைந்து காணப்படுகிறது.

ஆங்கிலேய ஆட்சிக்கு முன் திப்புசூல்தான் மாயாற்றைக் கடக்க கெஜலெட்டி கணவாய் பாலத்தை பயன்படுத்தி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து செல்ல ரகசிய பாதையாக குதிரை வழிப் பயணமாக பயன்பட்டது என செவி வழிச்செய்திகள் உணர்த்துகின்றன.

கர்நாடகா - தலமலை- தெங்குமரஹடா- பெஜிலெட்டி கணவாய் பாலம் - பவானிசாகர் வழியாக சத்தியமங்கலத்திற்கு வந்து செல்ல மலைவாழ் மக்கள் பழங்காலத்தில் வணிகம் மேற்கொள்ள சந்தைகளுக்கு வர பயன்பட்டதாம் . திப்பு சூல்தான் கட்டி வழிபட்டதாக கூறப்படும் சிதிலமடைந்த தர்க்கா ,பழங்கால குதிரைக்கொட்டகைகள் இங்கு பாலம் தாண்டி செல்லும் வழியில் உள்ளதாம் .

யானை புலிகள் உலாவும் வனப்பகுதி ஆதலால் சிதிலமடைந்த பாலத்தின் அழகைமட்டும் ரசித்து விட்டு வந்தோம் . மாயற்றுக்கு அருகே குறுக்க ஓடையில் அமைந்த இந்த பாலத்தின் போட்டோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மா தேவியர் வருடாந்திர பண்டிகை அடுத்த மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மகம் நட்சத்திரத்தில் நடைபெறும் .வனத்துறையின் 3நாள் அனுமதியுடன் நடைபெறும் இந்த நாட்களில் வந்தால் திருக்கோவிலில் இருந்து 100மீட்டர் தொலைவில் உள்ள இந்த கெஜலெட்டி கணவாய் பாலத்தை ரசிக்கலாம் . மற்ற நாட்களில் அனுமதி இல்லை.

பழங்கால வரலாற்று ஆவணமான இந்தப்பாலம் வித்தியாசமானது. அடுத்த வருடம் காத்திருந்து ஸ்ரீ கருவண்ணராயரை வணங்கி திப்புவின் ரகசிய பாதையாக சொல்லப்படுகிற கெஜலெட்டி கணவாய் பாலத்தையும் பார்த்து வாருங்கள் .

சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் வாழும் பகுதி மற்றும் தெங்குமரஹடா வனப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்படவும் உள்ளது. ஸ்ரீ கருவண்ணராயர் திருக்கோவில் செல்பவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும். அடுத்த வரும் மாசி மகத்திற்கு தயாராகி காத்திருங்கள் .

அழைப்பு வரும் .

நன்றி

Friday, March 9, 2012

உன் தரிசனம்


நித்தம் நித்தம்
வாழ்கைப் போராட்டத்தின்

கனவுகளில் தொலைந்து
போகிற நாட்களில்

அன்பே ...!
உன் தரிசனமே

விடியலாய் ...!

சத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில் எழுந்தருளி காக்கும் ஸ்ரீபொம்மாதேவி உடனமர் ஸ்ரீ ஆதி கருவண்ணராயர் திருக்கோவில் தரிசனம்


அமைவிடம் :


தமிழகம் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் கற்பூர கோத்திரம் உப்பிலிநாயக்கர் குலதெய்வமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் தெங்குமரஹடா அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி கணவாயில் ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் இரண்டு மணி நேரம் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்று திருக்கோவிலை அடையலாம் .

திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமான உப்பிலியநாயக்கர்கள் மற்றும் இப்பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதிகருவண்ணராயர் ,பொம்மதேவியர் அருள்பெற்றுச்செல்கின்றனர் .

திருக்கோவில் அமைந்த விதம் பற்றிய சில புராணக்கதைகள்

( செவிவழிச்செய்திகள் ) :

பழங்காலத்தில் தமிழகத்திலும் கன்னட நாட்டில் உப்பாரா ,உப்பிலியா என்னும் நாயக்கர் சமுக மக்கள் உப்பு மற்றும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார் . திப்பு சூல்தான் படைப்பிரிவில் வீரர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் , அப்போது உப்பிலிய நாயக சமுக மக்கள் பெண் ஒருவரை மணம் முடிக்க மொகலாய மன்னர் ஆசைப்பட்டதாகவும் ,

மன்னரை எதிர்க்க முடியாமல் தவித்து அவர்களின் காவலர்களிடம் இருந்து இரவில் தப்பித்து தலமலை வழியாக வந்ததாகவும் வரும்போது தன் குலதெய்வமான ஆதிகருவண்ணராயர் பொம்மதேவியர் கொண்டு வந்து தெங்கு மரஹடா காட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்

ஓர் வரலாறு.பின் அங்குள்ள மாயாறு வழியாக கடும் ஆற்று வெள்ளத்தை கடக்கமுடியாமல் ஸ்ரீ கருவண்ணராயரை வணங்க மாயாறு உப்பிலிய நாயக்க மக்களுக்காக வழிவிட்டதாகவும் , அப்போது வந்த மொகலாய அரசர் இடையில் மாயாறு கடும் சீற்றத்தால் செல்ல வருத்தப்பட்டு பெண் கொடுக்கவில்லை எனினும் தங்களை மாமா மச்சினர்களாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு ,

இரண்டவதாக

கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த உப்பிலிநாயக்கர் மக்கள் தமது குலதெய்வமான ஸ்ரீ கருவண்ணராயர் ,ஸ்ரீ பொம்மதேவியரை தமிழகத்திற்கு எடுத்து வர பூக்கூடையில் தலமலை வழியாக குறுகிய வழியில் கொண்டு வரும்போது தெங்குமரஹடா காட்டில் கெஜரெட்டி அருகில் வந்தபோது மாயாறு அருகில் பக்தர்கள் குளிக்க சென்று திரும்ப நேரமானதால்

பூக்கூடையில் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை வைத்திருந்த பக்தரும் குளிக்க ஆசைப்பட்டு பூப்பேழைய இறக்கி வைத்து விட்டு பின் அனைவரும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை பூக்கூடையை தூக்க முற்படும் போது பூக்கூடையை தூக்க முடியவில்லை

அப்போது அருள் வந்த பக்தர்

"உங்கள் குலதெய்வமான நான் இங்கேயே அடர்ந்தகாட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் . என்னை வருடம் ஒருமுறை தமிழ் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில் வந்து வணங்கி செல்லுங்கள் "

கூற இறைகட்டளைக்கு இணங்க பக்தர்கள் இறைவனை அங்கேயே சிறிய கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர் .

சான்றுகள் :

கர்நாடகாவில் இருந்து வாணிபத்திற்காக தலமலை தெங்குமரஹடா வழியாக நடந்து வந்துள்ளது. அதற்கு குறுக்கிடாக மாயாறு குறுக்கிட கிட்டத்தட்ட 500ஆண்டுகள் மேலாக பழமையான பாலம் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பாதை உள்ளது வியப்புக்குரியது.

ஸ்ரீ கருவண்ணராயர் திரிக்கோவில் அருகிலேயே இந்த பாலம் சிதிலமடைத்து கிடப்பதை புகைப்படத்தில் காணலாம் . மாயாற்றை கடக்க உதவுகின்ற இந்த பாலம் கடந்து பவானி சாகர், சத்தியமங்கலம் சந்தைகளில் வாணிபம் நடந்திருப்பதை காண்கூடாக உணரலாம் .

திப்பு சூல்தான் காலத்தில் ஆங்கிலேயர்கள் அறிய முடியாத ரகசியவழியாக இந்தபாலத்தை பயன்படுத்தி கர்நாடக .தமிழ்நாடு சென்று வந்ததாகவும் ,சிறிது தூரத்தில் குதிரைக்கொட்டகையும் உள்ளது.

தற்போது திருக்கோவில் அமைப்பு :

கெஜலெட்டி வனப்பகுதியில் அமைந்த மூலவர் கருவண்ணராயர்,பொம்மதேவியர் அமைந்துள்ளார்கள் .
பெருமாள் அம்சமாக
( வைணவம் ) விளங்கி வருகிறார் . திருக்கோவில் வெளி முகப்பில்காவல்தெய்வமானஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு பிரமாண்டகிடாவெட்டு இங்கு பிரபலமானது.

இரண்டுகுதிரைகள்மற்றும் உட்பகுதிமுகப்பில் விநாயகப்பெருமான், நவகிரகங்கள்அமைந்துள்ளன.அமைந்துள்ளார்கள் . அருகில் பவானிசாகரில் வந்துஇணைகின்ற நீலகிரிமலையில் உற்பத்தியாகும் மாயாறும்ஆறு ஓடுகின்றது.

திருக்கோவில் இடப்புறமாக சிவலிங்கம்அமைக்கபட்டுள்ளது.திருவிழா நடைபெறும்மாசிமகம் நட்சத்திரநாளில் மட்டும் தூக்கநாயக்கன் பாளையத்தில் புறப்பட்டு உற்சவர் கெஜரெட்டி கோவிலுக்கு வந்து பக்தர்கள் காட்சி கொடுப்பார்

.இறைதுதி :

தொல்லுலகில் மானிடரின் தோற்றமொரு தோன்றிவாளர் ,
நல்லதமிழ் நடைமாறிக் கன்னடமாம் எல்லையிலே ,
வல்லுருவ யானைவளர் கெஜஹட்டி பாங்காடே,
இல்லிடமாய் கொண்டாய் என் மாயவரே,


என காக்கும் கடவுளாய் விளங்குகின்ற பெருமாளின் அம்சமாய் அனைவரும் துதிக்க விரும்புகின்ற அனைவரும் திருக்கோவிலை வந்து வணங்கலாம்.

திருக்கோவில் குலதெய்வமாக வணங்குபவர்கள் :

ஸ்ரீ வடகாஞ்சி அயோத்தியாபுரியிலே ஸ்ரீ மகா விஷ்ணுவின் வலது வியர்வையில் பிறந்ததாக கருத்தப்படுகிற சத்திரிய வம்சத்தாருக்கும் ,

திருமூர்த்திகள் ,அகத்திய முனிவர் இவர்களால் சிங்கக்கொடியும் ,சீராமாலை தீர்க்காயுசு பெற்ற பெரியோர்களுக்கும் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கெடாத பெரியோர்களுக்கும் கற்பூரகோத்திரம் உப்பிலியநாயக்கர்களுக்கும் 6 பட்டம் 24 நாட்டார்களுக்கும் குலதெய்வமாகும் .

மாசி மகம் பண்டிகையை விளக்கும் பாடல் :

ஓங்கு புகழ் உன்னால் உத்தமர்கள் எண்ணற்றோர்,
ஈங்கு வந்து இணைந்துந்தன் எழில் விழா கொண்டாடும்
வீங்கும் மதி மாசி மகம் நட்சத்திர நாளிலே
பாங்காடும் பட்டணம் போல் காட்சி கொள்ளுமே.

முடிவரை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் :

ஸ்ரீ ஆதிகருவண்ணராயர் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் புலி, யானை
உட்பட உள்ளதால்
இப்பதிவை படிக்கும்
நன்பர்கள் ஆர்வத்தில்செல்லமுற்படாதீர்கள்

மிகஆபத்தான இடம்செல்லவிரும்புவர்கள்
மாசிமாதம்மகம் நட்சத்திர நாளில்
பலபேருடன் பாதுகாப்புடன் சென்றுஇறையருள் பெருங்கள்
நன்றி

Thursday, March 8, 2012

இயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகு


பவானி சாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகும் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் கெத்தமங்கலம் என்னும் இடத்தில் பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது . சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் ,மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவிலும் பவானிசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. பவானி சாகர் அணைக்கட்டில் மாயாறு இணைந்து கொள்கிறது.


பின்னர் 70 கி.மீட்டர் பவானி ஆறு காவிரியுடன் பவானியில் இணைந்து கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி பல மின்திட்டங்களில் பயன் தந்து மாயாற்றை இணைத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மூலிகைகளை தழுவிக்கொண்டு பவானிசாகர் அணையில் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் இணைகிறது .

சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் .

நான் சிறிய வயதில் இருந்தபோது ஆடி 18 அன்று ஒருநாள் மட்டும் மக்களின் பார்வைக்காக அணையின் மேற்பகுதியில் பார்வையிட அனுமதிப்பார்கள் . கடலைப்போல தேங்கிகிடக்கும் நீரையும் அதன் அழகும் நடந்து பலதூரம் செல்ல ஆசையாக இருக்கும் .

நீலகிரி மலைத்தொடரில் துவங்கி பல பேர் இருளை மின்சாரத்தாலும் விவசாயத்தாலும் விலக்குகின்ற பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கட்டும் போற்றுதலுக்குரியது.

தமிழகத்தில் பெரிய மண்ணால் ஆன அணைக்கட்டு என்னும் பெருமை கொண்ட பவானிசாகர் அணை 9 மதகுகளுடன் உபரி நீரை வெளியேற்றியும் . வாய்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் பயணித்து பவானி காவிரியில் அடையும் முன் காளிங்கராயன் என்பவரால் கட்டப்பெற்று காளிங்கராயன் வாய்கால் ஆக பிரிந்து கொடுமுடி வரை பாசனத்திற்காக கலக்கிறது.

பவானி சாகர் பூங்கா :

நீண்ட நெடிய அசோக மரங்கள் பவானி சாகர் அணையின் அழகைகாட்ட புல்வெளிகளின் அழகில் பவானி சாகர் அணைப்பூங்கா அழகில் மிதக்கிறது. தற்போது அழகிய ரோஜா செடிகளை பொதுப்பணித்துறையால் நடப்பட்டு அழகு செய்கிறது.

சிறிய அலங்கார நீர்த்தொட்டிகள் ,டைனேசர் உருவச்சிலைகள் . அமர்ந்து பேச அழகான குடில்கள் ,குழந்தைகள் விளையாடும் சறுக்குகள் என குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக சென்று ரசிக்கும் விதமாக பவானிசாகர் அணைக்கட்டின் பூங்கா அமைந்துள்ளது.

நீங்கள் இறை தேடலில் விருப்பமிகுந்தவாக இருந்தால் அருகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஒருநாள் சுற்றுலா வர குடும்பத்துடன் வர ஏற்ற இடம் . பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேற்பகுதி செல்ல அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அருகில் சென்று பார்க்கலாம் .

ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வாருங்கள் .

Sunday, March 4, 2012

பாலமலையின் இயற்கை சாரலில் வெள்ளக்கரட்டூர் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் .ரெட்டியபாளையம் .குருவரெட்டியூர்


அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் வெள்ளக்கரட்டூர்
ரெட்டியபாளையம் ,குருவரெட்டியூர்

SRI BALATHANDAYUDABANI THIRUKKOVIL, VELLAKKARADUR,
REDDIYAPALAYAM GURUVAREDDIYUR

மேற்குத்தொடர்ச்சி மலையின் பாலமலையின் இயற்கை அமைத்திச்சாரலிலே குன்றுகள் தோறும் குடியிருக்கும் குமரன் அழகில் மயக்கும் தமிழ் கடவுளாம் முருகப்பெருமான் ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் கிராமத்தை சேர்த்த வெள்ளக்கரட்டூர் எனும் அழகிய ஊரில் குடிகொண்டு கடந்த நான்கு தலைமுறைகளாக அருள் பாலித்து வருகிறார் .

சிறிய அளவில் இருந்த திருக்கோவில் பல ஆன்மீக அன்பர்கள் முயற்சியால் பெரும் திருக்கோவிலாக தயாராகி வருகின்றது.

செல்லும் வழி :

பவானி வெள்ளித்திருப்பூரில் இருந்து முரளி சனிச்சந்தை செல்லும் வழியில் வெள்ளக்கரட்டுர் உள்ளது . சுமார் 500 வருடங்களுக்கு முன் சிறிய திருக்கோவிலாக ஆரம்பித்த ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் தைப்பூசம் நாட்களில் பிரமாண்ட பூஜை நடைபெறும் .பின்னர் திருக்கோவில் பழங்கால ஆலயமாக உள்ளதால் தற்போது மாற்றம் செய்து பெரும் திருக்கோவிலாக உருவாகி வருகிறது .

குருவரெட்டியூர் உட்பட 20 கிராமங்களுக்கு மலை மீதுள்ள முருகர் ஆலயம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்னும் சிறப்பை பெறுகிறது. பாலாலயம் செய்து திருப்பணிகள் நடைபெற்று வருவதால் திருக்கோவிலும் எண்ணம் இருந்தால் நேரில் சென்று திருப்பணிகளை பார்வையிட்டு தரலாம் .

இன்னும் ஒரு வருட காலத்தில் அழகான முருகப்பெருமான் ஆலயம் தயாராகி விடும் . இதனால் ஏழ்மை நிலையால் பழனி சென்று ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை தரிசிக்க முடியாதவர்கள் வெள்ளக்கரட்டூர் வந்தே தரிசித்துக்கொள்ளலாம் .

முருகர் துதி:

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச்
செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்கு
வள்ளி காந்தனைக் கந்தக்கடம்பனைக்
கார்மயில் வாகனனைச் சாந்துணைப்
போதும் மறவா தவர்கொரு
தாழ்வில்லையே,


திருக்கோவில் சுற்றி அமைந்துள்ள ஊர்கள் :

ஜரத்தல் ,முரளி, சென்னம்பட்டி,ஜோதிபுரம் ,கோனார்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம் , கருங்கரடு, குருவரெட்டியூர்
பாலகுட்டைபட்டி பழையூர் ,புதூர் ,
பொரவி பாளையம் ,தொப்பபாளையம் ,
என இப்பகுதி மக்களுக்கு புதியதோர்
ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உருவாகி வருகிறது.

சுமார் 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி
ஆலய திருப்பணிகள்கள் முடிந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறும்போது நம் வலைப்பதிவில் தகவல் அளிக்கப்படும் .
நன்றி

Monday, February 27, 2012

சுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்


27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுத்து செய்தால் நன்மைகள் பலவும் நம்மை வந்து சேரும் .பழங்காலத்தில் எல்லா நல்ல விஷயங்கள் செய்யும் முன் ஜோதிடரிடம் கலந்து ஆலோசனை செய்தே ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் நல்ல காரியம் துவங்கும் போது நட்சத்திரங்கள் பார்த்து செய்து தடையில்லாமல் காரியங்கள் நிறைவேறிட இப்பதிவு உதவும்.

ரேவதி -திருமணம் சம்பந்தமான சுப நிகழ்ச்சி
சதயம் - திருமணம் மாங்கல்யம் செய்தல்
சுவாதி- திருமணம் செய்ய முடிகாணிக்கை ,பள்ளியில் சேர்க்க உகந்தது
அசுவனி - திருமணம் ,வளைகாப்பு,பூப்புனித நீராட்டு
ரோகிணி- திருமணம் கிரகப்பிரவேசம் ,வளைகாப்பு
புனர் பூசம் -மாங்கல்யம் செய்ய வளைகாப்பு நடத்த உகந்தது
மகம் -மாங்கல்யம் செய்ய ,போர்வெல் அமைக்க சிறந்தது
மிருகசீரிடம் - காதணிவிழா, முடிகாணிக்கை ,வெளியூர் பயணம் செல்ல உகந்தது
பூசம் -கிரகப்பிரவேசம் , வீடுகட்ட துவங்கலாம்
பூரம் , விசாகம்- ஆடுமாடு வாங்கலாம்
உத்திரம் - கிணறு வெட்ட உகந்தது
அஷ்தம்,மூலம் - வீடுகட்டிடப்பணி துவங்குதல் ,கிரகப்பிரவேஷம்
சித்திரை - பெயர் சூட்ட காது குத்த உகந்தது.
உத்திராடம் -ஆபரணம் வாங்க உகந்தது
அனுசம் -புதிய ஆபரணம் அணிய உகந்தது.
திருவோணம் - கிரகப்பிரவேசம்
அவிட்டம் - உபநயனம் செய்தல் கிணறு வெட்ட உகந்தது
பூரட்டாதி -விவசாயப் பணி துவங்க ஆடுமாடு வாங்க உகந்தவை
உத்திராட்டதி - சுவாமி பிரதிஷ்டை செய்யவும்
வளைகாப்பு நடத்தவும் உகந்த நட்சத்திரங்களாகும்

சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :
பூராடம் ,கேட்டை, ஆயில்யம் ,
திருவாதிரை, கார்த்திகை ,பரணி ஆகிய நட்சத்திரங்களாகும்

Thursday, February 23, 2012

சுனாமியை விரட்டிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருச்செந்தூர்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
SRI SUBRAMANIAHA SWAMY TEMPLE THIRUCHENDUR

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிலிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு.
காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின்பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :


ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .


திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு

Sunday, February 19, 2012

மாசி மகா சிவராத்திரி (மறந்து விடாதீர்கள் இன்று 20.2.12 மாசி மகாசிவராத்திரி )


சைவத்திருமார்களும் சிவனடியார்களும் சிவவழிபாடு செய்வது மரபு . அதில் மாதமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை மிகுந்த விஷேச நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர் .

மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் நினைப்போடு மாலையில் நன்கு குளித்து சிவாய நமஹ எனச்சொல்லி சுத்த வெண் திருநீறு தரித்து
" ஓம் சிவாய நமஹ"

'' ஓம் நமச்சிவாய''

எனும் பஞ்சாட்சர மந்திரங்களை இடைவிடாது உச்சரித்து விரதமிருந்து ஏதேனும் ஓர் சிவாலயத்தில் கண்விழித்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்சனை செய்து தேவாரம்,திருவாசகம் , பாரயணம் செய்வது சிவபெருமானுக்கு அருகில் நாம் செல்ல வைக்கும் அரியதோர் வாய்ப்பு

மகா சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவதன் பலன் :

நூறு அசுவமேதயாகம் செய்த பலன் .
அறிந்தும் அறியாமலும் செய்த பாவ நிவர்த்தி ,
அடுத்த பிறவியில் சிவலோக பதவி, ஆகியவை கிட்டும் .

சிவன் ஜோதி வடிவில் உருவமாகவும் அருவவடிவில் லிங்கமாகவும் அருள்புரிகிறார் . அப்படி சிவன் லிங்கத்தில் அருவமாகி காட்சி தரும் நாளே சிவராத்திரியாகும் . மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்தசி திதியில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடம்முழுவதும் சிவராத்திரி விரதமிருக்கமுடியாதவர்கள் மாசிமகா சிவராத்திரியன்று வணங்குவது வருடமுழுவதும் சிவனை வணங்கியதற்கு சமமாகும்.

கயிலாயத்தில் ஓர் நாள் பார்வதி தேவி சிவபெருமான் கண்களை மூட சிவனின் இரு கண்களான சூரிய சந்திரகளை மறைத்தது போலகிவிட உலகம் இருண்டு ஜீவராசிகளும் மக்களும் பயந்து நடுங்க அப்போது சிவன் தன் அக்னி வடிவான நெற்றிக்கண்ணைத்திறக்க அனைத்து உயிர்களும் மேலும் பயம் கொள்ள பார்வதி தேவியார் தான் செய்த தவறை உணர்ந்து அன்றிரவு சிவனுக்கு நான்கு காலபூஜைகள் செய்து சிவனை வழிபட்டார் .

பூஜையில் மகிழ்ந்த நெற்றிக்கண் அக்னி தளர்ந்து அருள் ஒளியாக்கினார் . பார்வதியை நோக்கி சிவன் என்ன வரம் வேண்டுமெனக்கேட்க தாம் செய்த பூஜை சிவனுக்குரிய பூஜைநாளாக சிவராத்திரி பூஜையாக அருள வேண்டுமெனவும் , இந்த சிவராத்திரியில் நான்கு காலபூஜை செய்து அபிஷேகித்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் எல்லா ஐஷ்வர்யங்களும் கிட்ட வேண்டுமென அருள்புரியுங்கள் எனக்கேட்க அப்படியே ஆகட்டும் தேவி என ஆசிர்வதித்தார் சிவபெருமான் .

புராணங்கள் சிவராத்திரியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :
அர்ஜீனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்றது ஓர் சிவராத்திரியில்
பகிரத முனிவர் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது. கண்ணப்பநாயானார் முக்தி பெற்றது சிவராத்திரி நாளில்தான் .
சிவன் பார்வதிக்கும் தம் இடப்பாகம் கொடுத்து மகாசிவராத்திரி நாளில்

இப்படி ஆயிரமாயிரம் புண்ணியங்கள் நிறைந்தது மகா சிவராத்திரி என சிவபுராணங்கள் இயம்புகின்றன. வயதானவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள் .

இளம் வயதினர் தூங்கமலிருந்து அருகிலுள்ள சிவாலயங்கள் பலவற்றிக்கும் சென்று சிவதரிசனம் செய்யுங்கள் .கல்வி,வேலை ,திருமணம் போன்ற உயர்வுகள் கிட்ட சிவபெருமான் உங்களுடனிருப்பார் .

வெளியூர் வெளிநாடுகளில் வாழ்ந்தால் என்ன சிவாலயம் செல்ல முடியாவிட்டாலும் சிவனின் படங்களை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள் . யாருக்கேனும் இந்த இனிய நாளில் அன்னதானமிடுங்கள் . அல்லது அன்னதானத்திற்கு உதவுங்கள் .
அன்பே சிவம் .

எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள் .சிவபெருமான் உங்கள் உடனிருந்து வழி நடத்துவார் . ஓம் சிவாய நமஹ

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...