Saturday, February 18, 2012

ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ ராமேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட
ஸ்ரீ இராமநாதர் (சிவபெருமான் )திருக்கோவில் ராமேஸ்வரம்


மூலவர் :
ஸ்ரீ இராமேஷ்வரர் (ஸ்ரீ ராமலிங்கம், ஸ்ரீராமநாதர்) என்ற பெயராலும் அழைக்கப்படுவதுண்டு


முதலில் ராமாயண காலத்தில் நடைபெற்ற சிலவற்றை நினைவு கூர்வோம் . இராவணை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஷ்வரம் கரைக்கு வந்த ஸ்ரீ ராமர் மகரிஷிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து 22 தீர்த்தக்கிணறுகளை உருவாக்கி குளித்து ஸ்ரீ ராமர் ,சீதை ,லட்சுமணன் மூவரும் தோஷம் நீங்க சிவாயலயம் பிரதிஷ்டை செய்து சிவலிங்கம் அபிஷேகம் செய்தால் தீருமென முடிவெடுத்தனர் .

அதன் படியே அனுமனை கயிலாயத்திற்கு அனுப்பி சிவலிங்கம் கொண்டு வருமாறு குறிப்பிட்ட தேதி மணி குறித்து இராமேஷ்வரத்திற்கு கொண்டு வருமாறு கூறினார் . அதன் படியே அனுமனும் கயிலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து கொண்டிருந்தார் .

குறிப்பிட்ட நாள் மணியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நேரமும் வந்தது . அனுமனைக்காணாது தவித்த சீதை உடனே மண்ணால் ஓர் சிவலிங்கம் பிடித்து வழிபாட்டை ஆராம்பித்தனர் அதையே தற்போதுள்ள இராமலிங்கம் , இராமேஷ்வரர் என அழைக்கிறோம் .

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த அனுமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியதை அறிந்து கோபமுற்று மண்ணாலான இராமேஷ்வர லிங்கத்தை அகற்ற முயன்று முடியாததால் ஏமாற்றமடைந்தார் .

அனுமனின் கஷ்டமறிந்த ஸ்ரீராமர் மண்ணாலான இராமேஸ்வரர் அருகில் அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்திற்கு முதல் பூஜையும் இரண்டவதாக சீதா செய்த மண்ணாலான சிலைக்கும் பூஜிக்குமாறு கூறினார்

இராமேஷ்வரத்தின் சிறப்புகள் :

ஸ்ரீ இராமனால் உருவாக்கப்பட்ட ஸ்தலம் .
பிரம்மஹத்தி முதலான 22தோஷங்களை நீங்கும் ஸ்தலம் .
இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் தெற்கே அமைந்த ஒரே புகழ் பெற்ற சிவஸ்தலம்.
இராமேஷ்வரம் 12 ஜோதி விங்களில் ஒன்று.
மூர்த்தி,தீர்த்தம் ,ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்ட ஷ்தலம் .
இராமேஸ்வரத்தின் சேதுவின் படுக்கையில் அமைந்த ஷ்தலம் .
ஸ்ரீ தாயுமானவர் , ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீதிருஞானசம்பந்தர் ,ஸ்ரீ திருநாவுகரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
சைவம் ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஸ்தலம் .

கால வரலாறு :

இராமயணக்காலத்தில் தோன்றிய இராமேஷ்வரம் திருக்கோவில் ஓர் சித்தரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும் 12 ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரம பாகு என்பவரால் முதல் மூலஷ்தானம் துவங்கப்பட்டதாக கல்வெட்டுகள் இயம்புகின்றன.

மூலவர் ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதி:

முதல் பிரகாரத்தில் ஸ்ரீ இராமநாதர் எழுந்தருளியுள்ளார் . மணலால் சீதையால் ஊருவாக்கப்பெற்று இராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முதல் லிங்கமாகும் .

ஸ்ரீ விசுவநாதர் சன்னதி:

அனுமனால் கயிலாயத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற லிங்கமாகும் . ராமநாதர் சன்னதிக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கூற்றுப்படி இன்றும் முதலில் விசுவநாதர் சன்னதியில் முதல் பூஜை நடைபெறுவது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீவிசாலட்சி அம்பிகை சன்னதி:

விசுவநாதரின் தேவியாக விசாலாட்சி அம்பாள் இங்குள்ளார் .முதல் பூஜை ஸ்ரீ விசுவநாதருடன் இணைந்து விசாலாட்சிதேவிக்கும் நடைபெறும்.

பர்வதவர்த்தினி அம்பிகை சன்னதி :

ஸ்ரீஇராமநாத சுவாமிகளின் அம்பிகையான பர்வதவர்த்தினி அமைந்துள்ளது .சுவாமி சன்னதிக்கு வலப்புறம் அம்பிகை இருப்பது மிக விஷேசமாகும் . இங்கு அந்த அமைப்பு உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்கரம் கண்டு வழிபட வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் உட்பகுதியில் மேலும் காணவேண்டிய சன்னதிகள் :
1.அருள்மிகு விக்னேஸ்வரர்
2.ஸ்ரீ சேதுமாதவர்
3.ஸ்ரீ ஜோதிர்லிங்கம்
4. ஸ்ரீ சஹஷ்கரலிங்கம்
5. ஸ்ரீ வஜ்ரேஷ்வரர்
6. ஸ்ரீ நடராஜர்
7பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி
8. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள்
9.ஸ்ரீ ஆஞ்சநேயர்
10.ஸ்ரீ 63நாயன்மார்கள்
11. ஸ்ரீ சிவதுர்க்கை
12. ஸ்ரீ மகாலட்சுமி

நடராஜர் சன்னதி :
உலகப்புகழ் கொண்ட நடராஜர் சன்னதி மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் உள்ள மூன்றாம் பிரகாரம் அதிசயிக்க தக்க ஒன்றாகும் . இது சபாபதி சன்னதி எனவும் அழைக்கப்படும் .18 சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அருகே அமைந்துள்ளது. இவர் ஆதிஷேசன் அவதாரமென அழைக்கப்படுகிறார் .

ஜோதிர்லிங்கம் விபீஷணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அழகாக உள்ளது. திருக்கோவிலினுள் 22 தீர்த்தங்களும் மற்ற 31 தீர்த்தங்களும் திருக்கோவிலுக்கு வெளியே இராமேஸ்வரத்தை சுற்றி அமைந்து உள்ளது. எல்லா விசேச திருக்கோவில்களையும் போல 6 காலபூஜை நடைபெறுகிறது .

மண்டபம் பாம்பனுக்கு இடையே கடலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து எளிது. ஈரோட்டிலிருந்து பஸ்பயணமாக 375 கி.மீட்டரும் மதுரையில் இருந்து 165 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 666கி.மீட்டர் தொலைவிலும் இராமேஷ்வரம் உள்ளது. இராமேஷ்வரம் புகை வண்டி பயணமும் ஏதுவானதே.

முடிவுரை :
நம் ஆன்மீக அன்பர்கள் காசியில் துவங்கும் பயணத்தை இராமேஷ்வரத்தில் முடிப்பார்கள் . காசி ,திருப்பதி, கயிலாயம் போல மிகச்சிறப்புகளை கொண்டது ராமேஸ்வரம் . மூர்த்தி,தீர்த்தம் ஷ்தலமென முப்பெருமைகளை உடையது.

நல்லதோர் வாழ்வினை தொடங்க விரும்பும் யாவரும் குடும்பத்துடன் சென்று கடலில் அக்னி தீர்த்ததில் நீராடி பின் 22 தீர்த்தங்களில் நீராடி ஸ்ரீ இராமநாத சுவாமிகளையும் ,
ஸ்ரீ விசுவநாதரையும் சிவபெருமானுக்குரிய நாளில் வந்து வணங்கி வாழ்வின் எல்லாதோஷங்களும் விலகி நலமும் வளமும் காண வாழ்த்துக்கள் . நட்புடன் குரு.பழ.மாதேசு

Monday, February 13, 2012

அருணகிரி நாதருக்கு படிச்காசு வழங்கி காட்சி தந்த ஸ்ரீ சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி



ஸ்ரீசென்னிமலை முருகரின் அற்புதங்கள்

sri chennimalai murgar special

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணியர் (தண்டாயுதபாணி கோலம் )

அமைவிடம் : ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஊரின் பெயரும் ,மலையின் பெயரும் ஒருங்கே அமையப்பெற்ற சென்னிமலை சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 1750அடி உயரத்தில் அமைந்துள்ள பெரிய குன்று ஆகும் இது சென்னியங்கிரி,சிரகிரி, சென்னிமலை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்தலவரலாறு :

ஆதிஷேசனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு முறை யார் பலசாலி என பலபரிட்சை நிகழ்ந்த போது வாயுபகவானால் தூக்கி வீசப்பட்ட ஆதிஸேசனின் சிரசு விழுந்த மலை சிரகிரி (சிரம் என்றால் தலை கிரி என்றால் மலை) என்றும் பீடம் விழுந்த இடம் திருப்பதி ஏழுமலை என்றும் ஷ்தலபுராணாங்கள் இயம்புகின்றன.

பழங்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் பகுதியில் வேளாளர் இனத்தின் பசுமாடு குறிப்பிட்ட புற்று மணல் உள்ள இடத்தில் பால் செரிவதை ஆச்சர்யத்துடன் தோண்டிப்பார்க்க சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ முருகப்பெருமான் இடுப்பு பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டார் .

அழகிய முருகரின் சிலை அனைவரும் மெய் சிலிர்த்து கொண்டாட அங்கு வந்த முருகர் அடியார் முருகர் அருள் வந்து ஸ்ரீமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய சிரகிரி குன்றில் வைத்து வழிபாடு செய்யுங்கள் எனச்சொல்ல ஆன்மீக அன்பர்கள் முருகப்பெருமானே நேரில் வந்து சொன்ன வாக்காக எண்ணி பாதி உருவமேயுள்ள முருகர் சிலையை அழகாக செதுக்கலாம் என சிற்பி செதுக்க முதல் வெட்டிலேயே ஏற்பட்ட காயம் காரணத்தால் இரத்தம் வர ஸ்ரீ முருகப்பெருமானை அப்படியே கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் .

இன்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தரும் மூலவர்க்கு இடுப்பு பகுதிக்கு கீழ்பகுதி செதுக்கப்படாமல் அப்படியே உள்ளது. உளிபட்ட சிறுகாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான் இங்கு கிரக அதிபதியாக வீற்றிருக்கிறார்

சிறப்புகளும் அதிசயங்களும் :

ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாடல் பாலன்தேவராயன் அவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஸ்தலம் பின்நாக்கு சித்தர் உறையுமிடம் ,அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் முருகப்பெருமானை காண வேண்டி அருணகிரி நாதர் " உனை எனதுள் நினையும் அன்பைத்தருவாயே" எனப்பாடி மனமுருகி வேண்டியதால் சென்னிமலையில் காட்சி தந்து முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு "படிக்காசு" வழங்கினார் என்பது ஸ்தலவரலாறு கூறும் உண்மை.

,9 நவக்கிரகங்களை தன் மூலவிமானத்தில் ஒருங்கே கொண்ட பரிகாரத்தலம் ( இங்கு வணங்கினால் நவகிரகங்களை வணங்கிய புண்ணியம் கிட்டும் ) , வள்ளி தெய்வானை தேவியர் அமுதவள்ளி சுந்தரவல்லியாக தவமிருந்த தலம் ,செங்கத்துறை பூசாரி அவர்களால் மாட்டு வண்டியை 1320படிகளை ஏற்றிய ஷ்தலம் , மாமாங்க தீர்த்தம் பொங்கும் சுணை, சரவணமுனிவர் ,தன்னாசியப்பர் அருளும் மலை, காளைகள் வாயிலாக முருகப்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வரும் அதிசயமென எண்ணிலடங்காக அதிசயங்களை கொண்ட மலையாக விளங்குகிறது சென்னிமலை .

திருக்கோவில் செல்ல வழி :

ஈரோடில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 30கி.மீட்டரில் சென்னிமலை முருகர் திருக்கோவில் உள்ளது . சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 80கி.மீட்டர் தொலைவிலுள்ள பெருந்துறையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் 10 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை உள்ளது.

ஆறு காலபூஜை நேரங்கள் :

விழாகாலபூஜை காலை 7 மணி காலசந்தி காலைபூஜை 8 மணி உச்சிகால பகல் பூஜை பகல் 12 மணி சாயரட்சை மாலை பூஜை 5 மணிக்கும் இராக்காலம் பூஜை இரவு 7 மணிக்கும் அர்த்தசாம பூஜை இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

தைப்பூசம் ,பங்குனி உத்திரம் ,சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் , ஆடி அமாவசை கிருத்திகை,கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம்,

மரத்தேர் :

ஸ்ரீமுருகப்பெருமான் வேங்கைமரமாக வந்து வள்ளியை மணம்புரிந்ததும் ,திருக்கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஆன்மீகமரமான வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் பக்தர்கள் விரும்பும் நாளில் நேர்த்திக்கடன் செய்யலாம் கட்டணம் ரூ700 ஆகும் . திருப்பணி செய்யவிரும்பும் பக்தர்கள் செயல் அலுவலர் தொலைபேசியில் அழைக்கலாம் .

அலுவலகம் : 04294- 250223

மலைக்கோவில் : 04294-250263 ,292595
இணையத்தள முகவரி : www.chennimalaitemple.org

மின்னஞ்சல் : chenkovil@sancharnet.in


திருக்கோவில் பற்றிய மேலும் விபரங்கள் எமது நன்பர் திரு பிரகாஷ் அவர்களின் பிளாக்கில் அறியலாம்

www.chennimalaimurugan.blogspot.com

இந்த வலைப்பூவில் சென்னிமலை முருகரின் முழு விபரத்தொகுப்பு உள்ளது . அல்லது இப்போது படித்துக்கொண்டிருக்கின்ற வலைப்பூவில் உள்ள முருகர் படத்தை கிளிக்கினால் மேற்கண்ட வலைப்பூவிற்கு (blog) செல்லும் . இங்கு வாழ்ந்த அடியார்கள் சித்தர்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

சிறிய பகுதியில் அடைக்க முடியாத பெரும் புகழும் 2000வருடங்கள் பழமையான உலகலாவிய பெருமைகள் சிறப்புகள் கொண்ட ஸ்ரீசென்னிமலை சுப்பிரமணியசாமியை வந்து வணங்குங்கள் .

கலியுகத்தில் ஸ்ரீ தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கால சரித்திரம் கொண்ட ஸ்ரீ சென்னிமலை பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழுங்கள் .ஓம் முருகா சரணம் முருகா

Friday, February 10, 2012

ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்





அருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில்
ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE
மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலின் அமைதி தழுவ குழுமையான ஓர் இடத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தன் அருட்சக்தியால் மக்களைக் காக்கும் ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் விஷேசமானது.

திருக்கோவில் அமைவிடம் :
அந்தியூரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் பஸ் வசதி உண்டு .

செல்லும் வழி :

அந்தியூரில் இருந்து கோபி செல்லும் வழியில் (1கி.மீ ) தவிட்டுப்பாளையத்தில் இருந்து வலப்புறம் திரும்பி 9 கி.மீட்டர் பயணித்தால் சுற்றிலும் தென்னை மரங்கள் பசுமை இழுக்க பயணித்தால் அந்தியூர் மலையின் ஒருபகுதியை அடையலாம் . முகப்பில் உள்ள முனியப்ப சாமி யை வணங்கி விட்டு பின் ஸ்ரீமலைக்கருப்பசாமி திருக்கோவில் முகப்பை அடையலாம் .

ஸ்ரீதவசியப்பன் சன்னதி :

இரண்டவதாக நாம் வணங்க வந்துள்ள சன்னதி ஸ்ரீ தவசியப்பன் சன்னதியாகும் . பிரமாண்ட முனியப்பர் போன்ற மூலவர் ஸ்ரீ தவசியப்பன் சன்னதியும் அருகருகே உள்ள சிறிய அளவிலான முனியப்பர் சன்னதிகளும் சூழ்ந்து இருக்க நேர்த்திக்கடனாக குத்தப்பட்ட வேல்கள் நூற்றுக்கணக்கில் இருக்க திருக்கோவிலை சுற்றியும் புளிய மரங்கள் இருக்கிறது.

ஸ்ரீ தவசியப்பர் சைவக்கடவுள் ஆதலால் சர்க்கரைப்பொங்கல் மட்டுமே நிவேதனமாக படைக்கப்படுகிறது. ஸ்ரீ தவசியப்பர் சன்னதியில் அமைதியான சூழல் தென்படுகிறது

பூஜை முறை :

திருக்கோவில் பூசாரி அவர்கள் வலக்கையால் நிரம்பும் அளவுக்கு கற்பூரத்தை கையில் எடுத்து அதை பற்ற வைத்து ஸ்ரீ தவசியப்பர் சன்னதி மூலவர் எதிரே உள்ள சிறு குழியில் போடுகிறார் .பின்னர் அங்கு வந்துள்ள பக்தர்களுக்கு வேலில் குத்தப்பட்டுள்ள எலுமிச்சம் பழங்களை ஒவ்வொன்றாக விநியோகிக்கிறார் . பக்தர்களுக்கு பின் அங்குள்ள குங்குமம் அளிக்கப்படுகிறது.

மூலிகைச்சாறு :

திருக்கோவில் வளாகத்தில் பூஜை முடித்த பின் கொடுக்கப்படும் மூலிகைச்சாறு வாங்க பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள் . தீராத நோய்கள் , வயிற்று வலி, சளி தொந்தரவுகள் போன்ற பல உடல்ரீதியான பிரச்சினைகளுக்கு திருக்கோவில் பூசாரியால் 4 விதமான பாத்திரங்களில் வரும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக மூலிகைச்சாறு வழங்கப்படுவது சிறப்பு .

மன நோய் உள்ளவர் இங்கு வந்தால் சிறப்பாக நோய் தீர்ந்து நல்ல மனிதராக திரும்பி வீட்டுக்கே செல்வது மற்றொரு சிறப்பு . பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய் தீர்ந்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி :

திருக்கோவில் வளாகத்தில் மூன்றாவதாக ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி . காக்கும் கடவுளான மலைக்கருப்பசாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .ஸ்ரீ மலைக்கருப்ப சாமியை வணங்குபவர்களுக்கு பில்லி,சூனியம் ,போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நல்லதோர் தீர்வாக தம்மை நாடி வரும் பக்தர்கள் குறை தீர்ப்பதால் லட்சக்கணக்கான பக்தர்களின் காக்கும் கடவுளாக அருள்பாலித்து வருகிறார் .

இங்கு கோழி ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு தாங்கள் நேர்த்திக்கடனை பல பக்தர்கள் நிவர்த்தி செய்வார்கள் . ஆனால் இங்கு வந்து ஸ்ரீமலைக்கருப்ப சாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் முடித்து அசைவ உணவு உண்டவர்கள் ஸ்ரீதவசியப்பர் சன்னதிக்கு வரக்கூடாது.

வாரபூஜை:

செவ்வாய் ,வெள்ளி செவ்வாய் அதிகளவு கூட்டமும் வெள்ளியில் சுமாரான கூட்டம் வரும் . இரண்டு நாட்களும் மூலிகைச்சாறு வழங்கப்படும்

வருடத்திருவிழா :

சித்திரை மாதத்தின் முதல் செல்வாய் கிழமைகளில் வருடாந்திரத்திருவிழா ஆரம்பித்து 4 நாட்கள் நடைபெறுகிறது. யானை உலவும் காட்டுப்பகுதியாதலால் ஸ்ரீ மலைக்கருப்பசாமியை வணங்க வருபவர்கள் மாலை 6 மணிக்குள் வனத்தில் இருந்து சென்று விடவும் .

காட்டுக்குள் நீண்ட தூரம் செல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது சுற்றிலும் அமைதியான சூழலில் அமைந்துள்ள காக்கும் கடவுளாம் ஸ்ரீ மலைக்கருப்பசாமி ஸ்ரீ தவசியப்பர் ,

ஸ்ரீ முனியப்பசாமியை வணங்கி தீவினைகள் நீங்கப்பெற்று வளங்கள் பெற்றிடுங்கள் .நன்றி

Tuesday, February 7, 2012

ஸ்ரீ கோனியம்மன் தரிசனம்





ஸ்ரீ கோனி அம்மன் திருக்கோவில்


SRI KONNI AMMAN TEMPLE COIMBATORE

தைப்பூசத்திருநாளில் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மருத மலை முருகரை பார்க்க முடியவில்லை என்றாலும் கோவையை காக்கும் அரசி, அம்பிகையான ஸ்ரீ கோனி அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

திருக்கோவில் அமைவிடம் :

பெரிய கடைவீதி ,டவுன்ஹால் கோவை.

முகப்பில் பஞ்சமுக விநாயகர் திருக்கோவில் பழங்கால அரசமரமும் ஆரம்பமே பிரமாண்டமாக இருக்க வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ கோனி அம்மன் அழகுடன் 4 கரங்களுடன் உடுக்கைவாள் சக்கரங்களுடன் மணி. கபாலம் கேடயம் கொண்டு சூட்சம சக்தியாய் இருக்கிறார் .

திருக்கோவில் வளாகத்தில் சாந்த விநாயகர் சன்னதியும் நவகிரக சன்னதி,ஸ்ரீ வள்ளி,தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதிகள் காணக்கிடைக்காத அற்புதம் . ஸ்ரீ கோனியம் திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்தலமரம் நாகலிங்கமரம் அழகாய் பூத்துக் குழுங்குகிறது.

திருக்கோவில் தோன்றி 500 முதல் 1000 ஆண்டுகள் இருக்கலாம் . ஆலயம் முன்பு இருந்த ஊர் கோவன்புத்தூர் என்றும் காலப்போக்கில் மருவி கோயம்புத்தூர் ஆகிவிட்டது.

பழங்கால அரசர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் கோட்டைகள் அமைத்து அங்கு அம்பாள் சிவனுக்காக திருக்கோவில்கள் எழுப்பி உள்ளார்கள் . அந்த வகையில் ஸ்ரீகோனியம்மன் அமைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே தற்போது "கோட்டைமேடு" என்ற பகுதி தற்போதும் உள்ளது. அருகிலேயே கோட்டை ஈஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்த்திருவிழா:

வருடாந்திர விழாவாக மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறுகிறகிறது. கோயம்பத்தூரின் பெரிய தேர்விழாவாக நடைபெறுகிறது. சுமார் இரண்டு வட்சம் பக்தர்கள் தேர் இழுக்க கோவை மக்களே கொண்டாடி மகிழும் அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீ கோனி அம்மனை நம்பிக்கையுடன் வந்து வணங்குகள் பெரியதோர் கோவை மாநகரத்தையே காக்கும் அன்னை உங்கள் குறைகளுக்காக செவி சாய்க்க மாட்டாரா என்ன ?

உப செய்தி:

மிகப்பெரிய இராஜகோபுரம் ஸ்ரீ கோனியம்மனுக்காக தயாராகி வருகிறது.

Sunday, February 5, 2012

ஈரோட்டில் பள்ளி கொண்ட ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோவில்,






SRI KASTHURI RANGANATHAR TEMPLE


ஈரோடு அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 200மீட்டர் தூரத்தில் ஈஸ்வரன் கோவில் வீதியில் திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் கோட்டை என அழைக்கப்பட்டு பல சிற்றரசர்களால் வாழ்ந்து வந்த இப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்கது.

திருக்கோவில் மூலவராக ஸ்ரீ கஸ்தூரி பெருமாள் அருள்புரிய பள்ளி கொண்டு பிரமாண்ட நிலையில் ஸ்ரீ பெருமாளின் தரிசனம் அழகானது. தெற்கு பார்த்த நிலையில் திருக்கோவில் மூலவர் இருக்க திருக்கோவில் இராஜகோபுரம் அழகில் ரசிக்கக்கூடிய ஒன்றாகும் .

திருக்கோவில் ஆண்டாள் சன்னதியும் தரிசிக்கவேண்டிய இடமாகும் .

ஸ்ரீ கமலவள்ளி தாயார் சன்னதி :

திருக்கோவில் பின்பகுதி பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .பங்குனி உத்திரதன்று சுவாமியுடன் 1 நாள் மட்டும் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரிவர் மற்றம் ஸ்ரீ தன்வந்நிரி ஸ்ரீ விஷ்வக்னேசர் சன்னதிகள் பார்த்து தரிசிக்க வேண்டிய இடமாகும் .ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் தலையில் அக்னி விரிய காட்சி தருகிறார் . பழமையான தேர் புரட்டாசி தேர்திருவிழா விஷேசமானதாகும் .

ஸ்தலவிருட்சம் :

வில்வமரம் .

திருக்கோவில் வெளிபிரகாரத்தில் ஸ்ரீ ராமனுஜர் சன்னதி , ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதி ஸ்ரீ லிங்கப்பாறை ஆஞ்சனேயர் கல்வெட்டாக செதுக்கி அழகாக உள்ளார் .

மூலவரின் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர்க்கு காவல் தெய்வமாக ஸ்ரீஜெயந்,ஸ்ரீ விஜயன் ஆகியோர் வீற்றிருக்க ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் தரிசிக்க வேண்டிய ஆலயம் .பிரகாரத்தில் ஸ்ரீகஷ்தூரி பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் வலதுகையில் தண்டம் தலைக்கு மேல் ஐந்து தலையுடன் ஆதிஸேசன் உடல் சுற்றி இருக்க ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ரீ கருடாள்வார்கள் உள்ளனர் .

ஆனி மாதத்தில் தைலக்காப்பு 48 நாள் சுவாமியின் முகம்,பாதமே அப்போது காண முடியும் . ஸ்ரீபெருமாளுக்குரிய நாளான ஏகாதசி, சனிக்கிழமை நாட்களில் திருக்கோவிலில் கூட்டம் அலைமேதுகிறது. இங்கு வந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பல நலங்கள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .

திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் :

05.30முதல் 12.30வரையிலும்
மாலை 04.30முதல் இரவு 08.30 வரையிலும் திறந்திருக்கும் .

ஈரோடு வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு கருத்துரையிடுங்கள் நன்றி.

ஈரோட்டை காக்கும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆருத்ரகபாலீஸ்வரர் திருக்கோவில் .





ஸ்ரீ வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில்
SRI VARANAMBIKAI AND ARUTHRAKABALIESWARAR THIRUKKOVIL, ERODE

அமைவிடம் :

ஈரோடு நகரத்தின் உட்பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் பழங்காலத்தில் மன்னர் ஆட்சி செய்த பகுதியில் இப்பகுதி " கோட்டை " என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் :
ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் இறைவனை திருத்தொண்டீசுவரர் ,
கோட்டை ஈஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்

அம்பாள்:

ஸ்ரீ வாரணாம்பிகை திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா வந்து இறங்கி அங்கிருந்து 200 மீட்டர் நடைப்பயணத்தில் திருக்கோவிலை சென்றடையலாம் .

திருக்கோவில் சிறப்புகள் :

ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் துவங்கி 1500ஆண்டுகளாக அருள்பாலீக்கும் இறைவன் கி.பி 1146 ல் குடமுழுக்கு நடந்துள்ளதாக ஆவணங்கள் பறை சாற்றுகின்றது. கதிரவனின் கதிர்கள் மாசி மாதத்தில் 25,26,27 ல் இறைவன் மேல் விழுவது விஷேசமாகும் .

கல்வெட்டு :

850 ஆண்டுகள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலாமாக விளங்கி வருகிறது. இறைவனுக்கு நான்கு கால பூஜை நடை பெறுகிறது.

அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கின்ற ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க ஓர் வழியும் , அம்பாள் ஸ்ரீ வாரணாம்பிகையை தரிசிக்க ஓர் ராஜ கோபுர வழியும் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ராஜ கோபுரம் பின் கொடிமரம் மற்றும் நந்தீஷ்வரரை வணங்கி பின் உள்ள செல்ல முகப்பில் அருள் தரும் மகாகணபதி ,அருள் தரும் பாலமுருகரை வணங்கி இரு பிரகாரங்கள் கொண்ட அமைப்பில் உள் பிரகாரத்தில் சுவாமி ஸ்ரீஆருத்ர கபாலீஷ்வரர் சிறிய சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளார் .

சிவதரிசனம் செய்து வெளியே வந்தால் வலப்புறம் துர்க்கை என்னும் பத்ரகாளியும் பின் நால்வர் சன்னதிகளை வணங்கி 63 நாயன்மார்கள் தரிசனம் செய்து ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாரை வணங்கி சேக்கிழார் நம்பியாண்டார் நம்பி, நார்த்தன கணபதியை வணங்கி ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கி

பின் உட்பிரகாரத்தில் தொடர்ந்து வலம் வர சோமாஸ் கந்தர் வணங்கி பின்புறமுள்ள லிங்கோத்பவர் பிரம்மா அழகுடன் விளங்கும் வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியரை வணங்கலாம் பின் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ,ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வணங்கினால் அருகில் பழங்கால சிறிய கிணறு அழகாய் அமைந்துள்ளது. பின் நவகிரக சன்னதிகள் வணங்கி ஸ்ரீ சனீஷ்வர பகவானை வணங்கினால் உட்பிரகார முகப்பை அடைந்து விடலாம் .

ஸ்ரீ வாரணாம்பிகை சன்னதி:

கொடிமரம் வணங்கி நந்தீசர் துதித்து தனிச்சன்னதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ வாரணாம்பிகை அம்மன் அழகும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற இறைவியை வணங்கலாம் . பின் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ மூல விநாயகர் வணங்கி பின் தனிச்சன்னதியில் யானை உரிந்த நாதராக வீற்றிருக்கும் ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியை தொழுது ஸ்ரீ வாரணம்பிகை சன்னதி இடப்புறமுள்ள ஸ்ரீ சண்டிகேஸ்வரியை வணங்கி

பின் திருக்கோவில் ஸ்தலமரமாக உள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம் அதனடியே வீற்றிருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை தொழுது காலபைரவரை வணங்கி சிவனருள் முழுமையாக முடித்து வரலாம் . சூரிய சந்திரகளை வணங்கி கொடிமரம் முன்பு நெடுசான்கிடையாக விழுந்து வணங்கி சிவனருளை பெறலாம் .

திருக்கோவில் அமைப்பு பிரமாண்டமானது . திருக்கோவில் பூஜை நேரம் : காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 4.30 முதல் 08.30வரையிலும் திறந்திருக்கும் . விஷேச காலங்களில் மாறுதலுக்குட்படும் .

திருக்கோவிலில் அமைந்துள்ள சன்னதிகள் :

சித்தி விநாயகர் , ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, சூரிய சந்திரர்கள்,ஸ்ரீ வராணாம்பிகை ,மூலவிநாயகர் ,பைரவர் , மகாகணபதி, துர்க்கை,1008 சிவலிங்கம் , 63 நாயன்மார்கள் ,வலம்புரிவிநாயகர்,ஜீரகண்டேஷ்வரர் ,ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் . முடிவுரை : எங்கும் நீக்கமறை நிறைந்திருக்கிற சிவபெருமான் இங்கு திருத்தொண்டீசராக ஆருத்ர கபாலீஷ்வரராக ஈரோட்டை காக்கும் கோட்டை ஈஸ்வரரை வணங்கி வேண்டும் வரம் பெற்றிடுங்கள் .

ஓம் சிவாய நமஹ.

Thursday, February 2, 2012

நூற்றாண்டு விழா காணும் குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி


குழந்தையாக இருந்து தமிழை முதன் முதலாய் கற்றுக்கொடுத்து நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆரம்பிக்கிப்படுவது பள்ளிகள் .அதிலும் நாம் இளைமையில் படித்த பள்ளிக்கூட நினைவுகள் ஆட்டோகிராப் படம் போல அவ்வப்போது நம் ஞாபகத்தில் வரும் போது வரும் உற்சாகமே தனிதான் .

அந்த வகையில் நான் 1வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்த ஊராட்சி ஒன்றியப்பள்ளி .பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur-638504) அமைந்துள்ளது. இப்பள்ளி 26.2.1913 ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரும் 27.2.2012 உடன் 100 ஆம் ஆண்டு துவங்க உள்ளது.

இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க சிறப்பாக கொண்டாட , எப்படியெல்லாம் விழா நடத்தலாம் என கலந்துரையாடல் கூட்டம் 3.2.12 இன்று வெள்ளி மாலை 03.00மணியளவில் நடைபெறுவதாக பள்ளி முன்னால் மாணவர்கள் கற்போர் - கற்பிப்போர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .

நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி விரைவில் நம் இணையத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் .

நீங்களும் நம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னால் மாணவராக இருந்தால் கண்டிப்பாக நம் குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR-638504 )ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பள்ளியின் முன்னால் மாணவராக உங்களை வரவேற்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Wednesday, February 1, 2012

சுவை


அன்பே ...!
உன் அழகை
வியந்து வரைந்த
ஓவியங்களை
கரையான்கள் அரித்து
தின்று கொண்டிருந்தன .!
அட
அதற்க்கும்
தெரிந்து விட்டதா
உன் சுவை...!

Saturday, January 28, 2012

குடி




மெல்ல பீரில் துவங்கு
முதலில்
சந்தோஷத்திற்கும்
பின்
துக்கத்திற்கும்
குடி
பின் அதில் குளி ..!
சில வருடங்கள்
கழித்து
எப்போதவது
திரும்பி பார் ..!
செத்துக்கொண்டிருக்கும்
உன் மனைவியும்
குழந்தைகளும்
வறுமையில்..!

Wednesday, January 25, 2012

உறவுகள்



இறந்தவனின்
சொத்துக்காக உறவுகள்
சண்டையிட்டுக்கொள்ள
அவர்களைப் பார்த்து
தப்பித்து விட்டதாய்
எண்ணி
சிரித்துக் கொண்டிருந்தது...!

சடலத்தின் நெற்றியிலிருந்த
ஒற்றைக்காசு...!

கெட்ட நேரம்



எல்லோர்க்கும் நல்லது

சொல்லும்

கிளி ஜோசியக்காரன்

கிளிக்கு என்ன

கெட்ட நேரமோ.. .?


கூண்டில் அகப்பட்டு..!

நீ வருவாயென..!



அன்பே ..!
என் ஒவ்வொரு
இரவுக்கனவுகளும்
நீ வந்தால் தான்
நல்லதொரு
இரவாய் துவங்கிறது..!
என் ஒவ்வொரு
விடியலும்
நீ
எதிரே வருகையில்
தான் துவங்கிறது..!
இப்படி என்னுடன்
எங்கும்
நிறைந்திருக்கிற
நீ இல்லதாத கணம் !
நானும் ஓர்
நடைப்பிணம்..!

Tuesday, January 24, 2012

சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில்




அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம் ,பண்ணாரி ,சத்தியமங்கலம்

SRI BANNARI MARIAMMAN TEMPLE , SATHYAMANGALAM ERODE D.T

அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் பல மாரியம்மன் ஆலயங்கள் இருந்தாலும் மிகப்பிரசித்திபெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் முக்கிய மான ஒன்றாகும் . ஈரோட்டில் இருந்தும் கோயம்புத்தூரில் இருந்தும் சுமார் 75 கி.மீட்டர் தொலைவிலும் சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீட்டர் தொலைவிலும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மைசூர் ,தாளவாடி, செல்லும் வழியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.


திருக்கோவில் உருவான வரலாறு :

சுமார் 500 வருட முன்பு பழங்காலத்தில் பசுக்களை மேய்த்து வந்த பசுமாட்டின் உரிமையாளர் ஓர் நாள் பசுமாடு அழகிய ஓர் இடத்தில் வேங்கை மரத்தடியில் பால் செரிவூட்டி வருவதை கண்டு(தற்போது திருக்கோவில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் அமைவிடத்தில் ) திகைப்புற்று

அப்பகுதி மக்களிடம் தாம் ஆச்சரியப்பட்ட விஷயத்தை ஊர் பெரியவர்களிடம் சொல்ல அடர்ந்த அழகிய வனத்தில் வேங்கை மரத்தின் அடியில் சுத்தம் செய்து பார்க்க அப்போது எல்லோரும் வியக்கும் வண்ணம் "சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் "வெளிப்பட்டார்.

அப்போது அருள் வந்த ஆன்மீகப் பெரியவர் " கேரளா கர்நாடக மங்களின் வழித்துணையாக வந்த அம்பிகை நான் இந்த அழகிய இடம் எமக்கு பிடித்திருப்பதால் இங்கேயே தங்கி விட்டேன் .என்னை ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் என அழைத்து பூஜை செய்யுங்கள் ". என வாக்கு சொல்ல அன்றிலிருந்து அம்பிகைக்கு விஷேச பூஜைகள் நடைபெற்று படிப்படியாக வளர்ச்சி பெற்று மிகப் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் .

மூலவர் :
ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன்

திருக்கோவில் எல்லா நாட்களிலும் திறந்திருக்கும் காலை 06.00மணி முதல் இரவு 09.00. மணிவரை செவ்வாய் வெள்ளி வழிபட உகந்த நாட்கள்

அம்பிகையின் அழகு:

தாமரைபீடத்தில் கத்தி,கபாலம் ,கலசங்களுடன் உயிர்ப்புடன் சக்தி அம்சமாய் பிரமாண்டாமாய் அழகாய் அருள்பாலிக்கும் அழகை காண்போர்க்கு சக்தியின் அருளை உணரலாம் .

குண்டம் திருவிழா :

பங்குனி மாதத்தில் வருடாந்திர விழாவாக குண்டம் திருவிழா நடைபெறுகிறது. அக்னி குண்டத்திற்கு தேவயான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை "கரும்பு வெட்டுதல் " என இப்பகுதில் அழைப்பார்கள் .

8 அடிக்குண்டத்தில் அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் குண்டம் இறங்க மதியம் 1 மணிவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிப்பார்கள் . இதில் பல பக்தர்கள் ஐ.பி.எஸ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் வேண்டுதல் நிறேவேறியதும் குண்டம் மிதிப்பது குறிப்பிட வேண்டியதாகும் .
பக்தர்கள் அல்லாது ஆடு மாடுகளை குண்டம் இறங்குவதை இங்கு கண்டு ஆச்சர்யப்படலாம் .

வேண்டும் வரமருளும் அம்பிகை:

தம்மைநாடி வரும் பக்தர்கள் துயர் தீர்க்கும் அம்பிகையை வணங்குவது கண்நோய் , அம்மை நோய்க்கள் தீர சிறப்பு ஸ்தலமாக போற்றப்படுகிறது.

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் ஸ்தல சிறப்பு :

1.தெற்கு நோக்கிய அம்மன் கோவில்
2.தாமே தோன்றிய சுயம்பு மூர்த்தி

பிரசாதம் :
எல்லா திருக்கோவில்களிலும் திருநீரு பிரசாதமாக தருவார்கள் .
இங்கே "புற்று மணலையே விபூதி பிரசாதமாக "தருகிறார்கள்.

கோவில் வளாகத்தில் தரிசிக்கவேண்டிய இடங்கள் :
தெப்பக்கிணரும் ,அருகேயுள்ள சருகு மாரியம்மன் மற்றும் முனியப்ப சாமி சன்னதிகளாகும் .

பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அன்னையின் அருளாளே பெண்குழந்தை பிறந்தால் பண்ணாரி என பெயரிட்டு அன்புடன் அழைக்கிறார்கள். திருக்கோவில் கர்நாடகா .கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் பலபக்தர்கள் வந்து ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனை வணங்கி செல்வார்கள் .

சுயம்பு மூர்த்தீயாய் வெளிப்பட்ட பண்ணாரி மாரியம்மனை வந்து வழிபடுங்கள்.
அம்பிகை வணங்கி எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

திருஞானசம்பந்தர் பாடிய குழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம் ( குழந்தைப்பேறு இல்லாதவர் கண்டிப்பாக படிக்க வேண்டிய சிவ பதிகம் )




மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண்கள் தம்பதிகளின் மனவருத்தம் வருந்தத்தக்கது .

கீழே யாம் பதிவு செய்துள்ள பதிகம் சமயக்குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவெண்காட்டில் பாடப்பெற்ற அருமையான பதிகமாகும் . இப்பதிகத்தை தெய்வச் சேக்கிழார் " செப்பரும் பதிக மாலை " எனப் போற்றியுள்ளார் . இவ்வளவு புகழ் பெற்ற திருவெண்காட்டுப் பதிகத்தைப் பாடித்தான் நம் சைவ சித்தாந்த ஞானக்களிறு எனப் போற்றப்படும் "மெய்கண்டார்" பிறந்தார் என்பது வரலாற்று ஆவனமாகும்

. இவ்வளவு சிறப்பு மிக்க சிவபதிகத்தை பாடுவதால் குழந்தை வரம் கிட்டும் என்பதில் ஐயமில்லை .

திருவெண்காடு பண் - சீகாமரம்

திருஞானசம்பந்தர் 2 ஆம் திருமுறை

கண் காட்டு நூதலானும் கனல் காட்டும் கையானும்
பெண் காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண் காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீ வினையே.2

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதி இரவி
எண்ணில் வரும் இயமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர் கோன் வழிபட வெண்காடு இடமா விரும்பினனே.3

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்
கடல் விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே.4

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக் கீழ்
மாலைமலி வண் சாந்தால் வழிபடு நன் மறையவன் தன்
மேலடர் வெங் காலனுயிர் விண்ட பினை நமன் தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்று அடர அஞ்சுவரே.5

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண் மொழியால் அவன் நாமம் பல ஓதப் பசுங்கிள்ளை
வெண்முகில் சேர் கரும்பெணை மேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரை மேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கணுடை இறையவனே.7

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம் நெரித்தன்று அருள் செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கரு மஞ்ஞை நடமாடக் கடல் முழங்KA
விண்மொய்த்த பொழில் வரி வண்டு இசைமுரலும் வெண்காடே 8

கள்ளார் செங்கமலத்தான் கடல் கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற் கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகு வெண்காட்டான் என்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.9

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர் பிறிமின் அறிவுடையீர் இது கேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண்காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்று உணருமினே.10

தண்பொழில் சூழ் சண்பையர் கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண் காட்டைப்
பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொழிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.11

எப்படி பாடுவது :

சிவ பேறு பெற்ற குழந்தை விரும்பும் தம்பதிகள் திருவெண்காடு சென்று முக்குள நீராடி சிவபெருமானை மேற்கண்ட பதிகத்தை மனமுருகப்பாடி வழிபட்டால் நல்ல சிவஞானம் பெற்ற குழந்தை பிறந்து அடுத்த தலைமுறை வளரும் என்பது நிச்சயம் .

சரி ஏழ்மை நிலையால் திருவெண்காடு செல்லமுடியாதவர்கள் உங்கள் ஊரில் அமைந்துள்ள சிவலாயத்தில் சோமவாரம் என அழைக்கப்படும் திங்கட்கிழமை நாட்களிலோ அல்லது பிரதோஷ நாளிலோ மனமுருக வேண்டி வணங்கி வாருங்கள் .பதிகத்தை படிக்க முடியாதவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நன்பர்கள் இப்பதிகத்தை அவர்களுக்காக பாடுங்கள் . பலன் கண்கூடு

முடிவு :

பழங்காலத்தில் நம் முன்னோர்கள் எல்லா விஷயங்களையும் சாதரணமாக எழுதி வைக்கவில்லை. எட்டு வருடங்களாக குழந்தையில்லா இரு தம்பதிகள் இப்பதிகத்தை பாடி குழந்தை வரம் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதது . நம்பிக்கையுடன் இதை நகல் எடுத்து படியுங்கள் .குழந்தைப்பேறு பெற்ற பின் எமக்கு மெயில் செய்யுங்கள் .

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கு சிவபெருமான் குழந்தைவரம் வேண்டுகிற உங்களுக்கு நற் குழந்தைப்பேறு கிடைக்க அருள்புரிய வேண்டுமென மனமுருக வேண்டி முடிக்கிறேன் .
ஓம் சிவாய நமஹ

Sunday, January 22, 2012

ஆற்றங்கரை நாகரீகத்தின் உச்சம் ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் ,தூக்கநாயக்கன் பாளையம் .கோபி




ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் திருக்கோவில்


அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தூக்கநாயக்கன் பாளையம் என்னும் அழகிய ஊரில் அமைந்துள்ளது. T.N .PALAYAM என சுருக்கமாக அழைக்கப்படும் தூக்கநாயக்கன் பாளையம் ஊரின் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஸ்ரீ முருங்கத்தூர் முனியப்பன் திருக்கோவில் கடந்து வாய்க்கால் கரை வழியாக சுமார் 1 கி.மீ பயணித்தால் மத்தாளக்கோம்பு விநாயகர் எனக்கேட்டால் சொல்வார்கள்.

மத்தாளக்கோம்பு:

திருக்கோவில் தலைப்பே வித்தியாசமாக இருப்பதால் புராணத்திற்கு செல்வோம் . பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றபோது இப்பகுதிக்கு வந்த போது திரவுபதிக்கு தாகம் எற்பட அப்போது தன் அம்பால் மத்து ஆழத்தில் கோம்பு ஓன்றை உருவாக்கி தாகம் தீர்த்ததாக புராண வழிச் செய்திகள் இயம்புகின்றன.

மற்றொரு பெயர் காரணம் உண்டு அதன் விளக்கம் கோம்பு முழுவதும் மத்த இலை பழங்காலத்தில் படர்ந்து இருந்ததால் மத்த இலைகோம்பு என்பது மாறி மருவி மத்தாளக்கோம்பு என மாறி இருக்கும்.

ஸ்ரீ விநாயகர் :

பழங்கால ஆற்றங்கரை நாகரீகத்தை பறைசாற்றும் விதமாக கால வரையறை அறியாத அறிய முடியாத திருக்கோவிலாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவிலாகும் . ஸ்ரீ விநாயகர் இருண்டுகரம் ஓர் தும்பிக்கையுடன் இடது கரத்தால் தும்பிக்கையை இறுக்கிப்பிடித்தபடி யோக நிலையில் இருப்பது எங்கும் காண முடியாத விஷேசமாகும்

கிரிடம் இல்லாத மொட்டை தலை மனிதகாதுடன் ஸ்ரீ மத்தாளகோம்பு விநாயகர் விஷேசமானவர் . விநாயகர் முன்பு உள்ள மூக்ஷிதவாகனர்க்கு பதிலாக நந்தீஸ்வரர் அமைந்திருக்கிருப்பது இத்திருக்கோவில் சிவ அம்சம் பொருந்திய ஸ்தலமாகும் . விநாயகர் அருகில் சுமார் 28 ராகு கேது சிலைகள் அமைந்துள்ளன.

நடந்த உண்மை:

சுமார் 120 வருடங்களுக்கு ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகரை திருடிச்செல்ல இரவில் மூன்று திருடர்கள் வந்தாகவும் ,அப்போது கடப்பாரையால் குத்தும்போது (தற்போதும் விநாயகர் வயிற்றில் காயம் உள்ளது) யானை பிளிரும் சத்தம் கேட்டு பயந்து கை கால்கள் செயலிழந்து இரண்டு திருடர்கள் விழுந்து விட ஒருவர்க்கு பார்வை பறி போய்விட்டதாம் . பின்பு திருக்கோவில் பூசாரி பழனியாண்டி அவர்கள் வந்து ஊர் மக்களும் எச்சரித்து விரட்டி விட்டதாக செவி வழிச்செய்திகள் இயம்புகின்றன.

ஸ்தலமரம் :

இரட்டை அரசமரம் .பழங்காலத்தில் ஓர் பெரிய அரசமரம் இருந்து விழந்துவிட்டதாகவும் பிறகு அதன் விதையால் தற்போது முளைத்துள்ள இரட்டை அரசமரத்திற்கு 400 வருடங்கள் இருக்கும் . அருகே நாகலிங்கமரம் அழகாய் பூத்துக்குழுங்கிறது.

மத்தாளக்கோம்பு தீர்த்தம் :

ஸ்ரீ விநாயகர் சன்னதிக்கு எதிரில் 50மீட்டர் தொலைவில் உள்ள அழகிய நீர் ஊற்றுக் குளமாகும். எக்காலத்திலும் இது வற்றாத தீர்த்தக்குளமாகும் . சுற்றிலும் நெல் வயல்கள் சேறுகளாய் இருக்க தீர்த்தக்குளத்தில் உள்ள நீர் பன்னீர் போன்ற சுத்தமாக அழகாக மிகச்சுத்தமாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் சோப்பு பயன்படுத்தாமல் குளிக்க அனுமதிக்கிறார்கள் .இங்கு படிக்கட்டில் பழங்கால தமிழ் எழுத்துக்கள் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது.

பழங்கால ஆற்றங்கரை நாகரீக சான்று :

திருக்கோவிலுக்கு சற்று தூரத்தில் எருக்கந்துறை என்னுமிடத்தில் பழங்கால தமிழ் மக்கள் வாழ்ந்த சுவடுகள் கல்தூண் ,மண்ணால் ஆன சட்டிகள் , பழங்கால கற்கள் இருப்பதே சாட்சி . ஆக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் அக்காலத்தில் வாழ்ந்த மக்களால் வணங்கப்பட்ட ஆலயம் சுமார் 1500வருடங்கள் முந்தைய பழமையான திருக்கோவில் என்பது புலனாகிறது. கோம்பு என்றால் ,தீர்த்தக்குளம் என பொருள் கொள்ளலாம் .

ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் செல்ல ஏதேனும் வழி அல்லது விபரங்கள் அறிய முன்பு இப்பகுதியில் வாழ்ந்து தற்போது சென்னையில் உள்ள

நன்பர் சுதாகர் 9841984524

எண்ணில் தொடர்பு கொள்ளலாம் . நமக்கு திருக்கோவிலை அறிமுகப்படுதியதும் இவரே.

முடிவுரை :

நம் ஆன்மீகப்பயணத்தில் இந்த வருடத்தின் பிள்ளையார் சுழியாக ஸ்ரீ மத்தாளக்கோம்பு விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது . கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஆலயமாகும். உங்களுக்கும் ஆச்சர்யமூட்டும் திருக்கோவிலாக இது இருக்குமென நம்புகிறேன் .ராகு ,கேது தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும் .

வந்து வணங்கி விட்டு மெயில் செய்யுங்கள் .
நன்றி

Saturday, January 14, 2012

சூரியப் பொங்கல்




அதிகாலைச் சூரியன்
எட்டிப்பார்க்க
வண்ணமிகு கோலத்தில்
சாணத்தில் விநாயகர்
கண் சிமிட்ட
கரும்பின் இனிப்பும்
மஞ்சளின் மங்கலமும் கலக்க
பொங்கல் பானையில்
வழிந்தோடுகின்ற பொங்கலில்
சூரிய ஒளி கண் சிமிட்ட ..!

எப்போதும் போலத்தான்
நம் வேண்டுதல் ...!
" சூரிய பகவானே இனியேனும்
எங்களுக்குள் புகுந்து விட்ட
சாதி,மதம் ,
இப்படி கண்ணுக்குத்தெரியாத
ஆயிரமாயிரம்
"மாய இருளை"
அகற்றிடு என்பதே..!

போகி



செல்வந்தன் வீட்டில்
"பழையன கழிதழும்
புதியன புகுதலும்"
போகி பண்டிகையெனக்
கருதி
பழைய துணிகள் எரிக்கப்பட்டது .

எட்டி ஒட்டி நிற்கிற
ஒலைக்குடிசையில்
மேல் சட்டையில்லாமல்
ஏழைச்சிறுவனுக்கு
ஏக்கப்பெருமுச்சே
போகிப் பண்டிகையாய்..!




(எம்மைப் வலைப்பூ,பேஷ்புக் ,டுவிட்டரில் பின் தொடர்கின்ற நட்புகளுக்கும் ,எமது ஊர் நட்புகளுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் )

Thursday, January 12, 2012

பிணங்களாய் மனிதர்கள்


மனிதன் உயிருடன்
இருக்கையில் உணவிட்டு
கவனிக்காத உறவுகள்
இறந்த பின்
நெய்யும் பாலும்
இட்டும் பிணத்தை
அபிஷேகித்தன - உயிர் இருந்தும் பிணங்களாய்

திறக்கப்படாத பக்கங்கள்


அன்பே..!
நான் ஒவ்வொரு முறை
காதலைச்சொல்ல
வரும்போதும்
"நாம் நல்ல நட்புதான் "
என
நீ உறுதிப்படுத்திய பின்னும்
உனக்காக எழுதப்பட்ட
என் கவிதைப்பக்கங்கள்
திறக்கப்படாமலே உள்ளது.!
உன்னிடம் சொல்லாத
எம் காதலைப்போலவே..!

வயதானவர்களை வணக்கவேண்டிய தருணம்



வயதானவர்கள் என்றால் கேவலமா ? இன்று பொது இடங்களில் வயதானவர்களை சிலர் "பெரிசுகள் " "கிழடு "" கிழவி" என பல ஏகவசனங்களில் கூப்பிட பல இளைய தலைமுறைகள் தாய் ,தந்தையை அனாதை ஆசிரமங்களில் தவிக்க விட்டு தனிக்குடித்தனம் என தனிமையில் வாழ்கின்றனர் .

பழங்காலத்தில் வீட்டில் பெரியவர்களுடன் குழந்தைகள் அன்பாக இருக்க எல்லா வீட்டிலும் அன்பு பல்கிப்பெருகிருந்தது. தற்காலத்தில் அந்த நிலை மாறி சில குடும்பங்களில் வயதானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் . அந்த பெரியவர்கள் அல்லது வயதானவர்கள் முக்கியதுவத்தை விளக்க இந்த கதையை படித்துவிட்டு வாருங்கள் .


பழங்காலத்தில் ஒர் அரசன் இருந்தான் .அவன் தன் நாட்டில் வளர்ச்சி பாதையில் செல்ல தடையாக இருப்பது வயதானவர்கள் தான் என்ற எண்ணம் கொண்டு இருந்தான் .ஏனெனில் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் பராமரிப்பு செலவு என இருப்பதால்தான் நாட்டின் வளர்ச்சி குறைவதாக எண்ணி அமைச்சரை கூப்பிட்டு " நாளையில் இருந்து ஒரு வாரத்திற்குள் நம் நாட்டில் உள்ள 60 மேலுள்ள வயதானவர்களை கொன்று விடச்சொல்லி உத்தரவிட்டார் .

அப்படி கொல்ல அவர்கள் வீட்டில் யாரேனும் தடுத்தால் அவர்களையும் கொல்ல உத்திரவிட்டான் .அதன்படி நாட்டில் உள்ள 60வயதுக்கும் மேற்பட்ட வயதானவர்கள் கொல்லப்பட்டனர் . சில காலம் கழிந்தது. நாட்டில் திடீரென உருவான வெள்ளப்பெருக்கால் நாட்டில் பலருக்கு இனம் புரியாத நோய் தோன்றியது. பலர் இறந்து போயினர் .

என்ன செய்வது எனத்திகைத்த அரசன் இந்த கொடிய நோயை தீர்த்து மக்களை காப்பாற்றுபவர்களுக்கு 1000 பொற்காசுகளும் அரசவையில் நாட்டு பாதுகாப்பு ஆலோசகராக நியமிப்பதாக அறிவித்தான் .

அடுத்த நாள் காலையில் ஓர் இளைஞன் சித்த மருந்துகள் அடங்கிய பெரிய குடுவையுடன் அரசவைக்கு வந்தான் . தான் நோயை குணப்படுத்துவதாகவும் ,அரசர் அனுமதிக்க வேண்டும் என அந்த இளைஞர் கேட்க அரசர் மக்களைக் காப்பாற்றும் படி வேண்டினான். மூலிகைச்சாற்றின் வித்தையால் ஒரே மாதத்தில் எல்லோர்க்கும் வைத்தியம் அளித்து காப்பாற்றினான் .

மன்னர் மகிழ்ந்து அந்த இளைஞர்க்கு பாராட்டு விழா நடத்த விரும்பி அந்த இளைஞரிடம் கேட்க இந்தப்பாராட்டுகுரிய ஓர் முக்கியமானவரை கூட்டிவர அனுமதிக்க வேண்டும் எனக்கேட்க அரசர் கூட்டி வருமாறு கூறினார் . அடுத்த நாள் பிரமாண்ட விழா அந்த இளைஞர் ஒரு பெரியவருடன் விழாவுக்கு வந்திருந்தார் .

அதிர்ச்சியுற்ற மன்னர் நாட்டில் ஒரு வயதானவர் கூட இருக்ககூடாது கொல்ல வேண்டும் என உத்திரவிட்டும் வயதானவருடன் விழாவுக்கு வந்துள்ளான என யோசித்தவாறு இளைஞனே நில் யார் இந்தப்பெரியவர் ? இவரை ஏன் கூட்டி வந்தாய் எனக்கேட்க ஜயா மன்னரே என்னை மன்னிக்கவேண்டும் !

நாட்டில் எல்லா வயதானவர்களையும் கொல்லும்படி உத்திரவிட்டீர்கள் . ஆனால் பாசத்தால் என் தாத்தாவை கொல்லாமல் பாதாள அறையில் பராமரித்து வந்தேன் .மக்கள் நோயால் இறந்து கொண்டு இருந்த போது எனது தாத்தா தன் சித்த வைத்திய திறமையால் இந்த நோயை எளிதாக தீர்க்க முடியும் என எனக்கு கற்றுக்கொடுத்து உங்களிடம் அனுப்பி வைத்தார் .

அதனால் தான் என்னால் இந்த கடுமையான நோயை தீர்க்க முடிந்தது எனக்கூற அதைக்கேட்ட மன்னர் பெரும் தவறு செய்து விட்டேனே ! நாட்டில் முக்கிய செல்வங்களில் பெரியோர்கள் என்று உணர்ந்து தம்மை மன்னிக்குமாறு அந்தப்பெரியவரிடம் வேண்டினார் . சொன்னது போலவே இளைஞருக்கும் , வயதானவர் நல்ல பொறுப்பில் வைத்து தொடர்ந்து நல் ஆலோசனைகள் வழங்கி நாட்டையும் நாட்டுமக்களையும் காக்குமாறு அந்த விழாவில் ஆயிரம் பொற்காசுகள் வழங்கி அறிவித்தார் .

கதை நல்லாயிருக்கா? படிச்சிட்டு மறக்க அல்ல இந்தக்கதை .

வயதானவர்களின் முக்கியதுவத்தை உணர்த்தவே இந்தக்கதை .
பெரியவர்கள் வயதானவர்கள் அனுபவ பொக்கிசங்கள் . அதை நன்கு உணர்ந்து பாதுகாத்து நம்முடன் வைத்து அரவணைப்போம் .

இனி வீட்டிலும் நாட்டிலும் பொது இடங்களில் வயதானவர்களை கண்டிப்பாக மதிப்பீர்கள் என்று நம்பிகிறேன் .ஏனெனில் எல்லா சமுக மாற்றங்களும் நம்மிடம் இருந்து கிளம்பவேண்டுமென் விரும்பும்
உங்கள் நட்பூ.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...