Friday, July 29, 2011

Arulmigu gurunathaswamy temple anthiyur


குருநாதசாமி திருக்கோவில் அந்தியூர் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூருக்கு வடக்கே 2 வது கி.மீட்டரில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் உள்ள புதுப்பாளையத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருநாதசாமி திருக்கோவிலுக்கு மகாமண்டபம்,சபாமண்டபம்.




பிரகார மண்டபம் கட்ட 50,50,000/ ரூபாய் ஐம்பது லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் கட்ட இறை அருள்வாக்கின் படி துவங்க இருப்பதால் நன்கொடைகளை மக்களிடம் எதிர்பார்க்கும் கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.



நன்கொடைகள் செக், D.D M.O அனுப்ப வேண்டிய முகவரி THE EXCUTIVE OFFICER AND THE HERIDITARY TRUSTEE, ARULMIGU GURUNATHASWAMY THIRUKKOIL THIRUPPANI, PUDUPPALAYAM, ANTHIYUR -638501


உங்களால் முடிந்த தொகையை அனுப்பி அருள்மிகு குருநாத சாமி அருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்த 2010 ஆண்டு ஆடி மாத இறுதியில் 10.8.2011 அன்று புதன் கிழமை தொடங்கி 4 நாட்கள் பிரமாண்டமாக மாட்டுச்சந்தை,குதிரைச்சந்தையுடன் அருள்மிகு குருநாதசாமி பண்டிகை தொடங்குகிறது.

நம் இணைய பிளாக்கர்களையும்,வாசகர்களையும் வருக வருக என வரவேற்கிறேன். வந்து விட்டு முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். திருவிழா முடித்ததும் திருப்பணி துவங்கும்.

இந்த வருட குருநாத சாமி பண்டிகைய பார்த்து விட்டு நல்ல தகவல்களை பகிரலாம்.அந்தியூர் குருநாதசாமியை பற்றி மேலும் அறிய இதே பிளாக்கில் உள்ள குருநாதசாமி வரலாறு பாகம் 1,2,3, இடுகைகளை பார்க்கவும் நட்புடன் குரு.பழ.மாதேசு.

Wednesday, July 27, 2011

அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T




அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில்

வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளது.


திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் குடி கொண்டு கொங்கு வேளாளர் இனத்தில் சேரன்,பாண்டியன்,பனங்காடை குலத்தவர்களுக்கும், தேவர் குலத்தவரில் கணக்கன் கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகிய அருள் மிகு தங்கம்மன் கோவில் வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் அம்பிகையாக விளங்கி வருகிறது.


மூலவராக தங்கம்மன் சப்த கன்னிமார் வடிவில் அழகாக அமர்ந்திருக்கிறது.அருகிலேயே பிரமாண்டமான அக்கினீஷ்வரர் சன்னதியும் அலங்கரிக்கிறது. வெண்நாகப்புற்று சன்னதி தங்கம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது.


பூஜை விபரங்கள் ; பிரதி அமாவசை காலை 11.00 மணிக்கும் பிரதி பெளர்ணமி அன்று மாலை 06.00மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நாட்களில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்காக ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அருகிலுள்ள அக்கினீஷ்வரருக்கு பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

போக்குவரத்து வசதி ;

தினமும் தங்கம்மன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ;


காலை 8.20 SRRBS பஸ் ஈரோடு ,8.45 ஆனந்த் பஸ் கொடிமுடி 0945 பஸ் நெம்பர் 47 கீரனூர் 10. 50 மணிக்கு 4B/47Bபஸ் படியூர்

மதிய நேரத்தில் திருப்பூரில் இருந்து செல்லும் பஸ்கள் 1.20 ஆனந்த் பஸ் கொடுமுடி 3.00 மணிக்கு 4B/47B படியூர் 3.15 SRRBS ஈரோடு ஆகியவையும்


மாலையில் திருப்பூரில் இருந்து தங்கம்மன் கோவிலுக்கு வர 6.20 ஆனந்த்பஸ் கொடுமுடி 6.50 பஸ் நெ 20 நால்ரோடு இரவு 9.10க்கு பஸ் நெ 20 நால்ரோடு ஆகிய பஸ் வசதிகள் உள்ளன.

வருடாந்திர பூஜை ; தமிழ்மாதம் ஆடிமாதக்கடைசியிலும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் சிறப்பாக நடைபெறும். அது வருகிற கர வருடம் ஆடிமாதம் 25 ஆம் நாள் 10.08.2011 புதன் கிழமை அன்று சிறப்பாக பொங்கல் விழா நடைபெறும்.



அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு பூஜை, அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும் ; கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணி சங்கத்தினர்,, தம்மரெட்டிபாளையம் அஞ்சல், காங்கேயம் வட்டம் திருப்பூர் வட்டம் .


தொலை தொடர்புக்கு ;-STD 04294

திருக்கோவில் 258252,293278,
செயலாளர் வீடு 258224 258101

செயலாளர் அழைபேசி -;9486047324

பொருளார் அழைபேசி -9360194485.

காங்கேயம் நால்ரோட்டில் இருந்து 10கி.மீட்டர் தொலைவில்
உள்ள அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு வாருங்கள்.

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
வாழ்வில் எல்லா உயர்வுகளும் பெறுங்கள் .

திரக்கோவில் ஸ்தல வரலாற்றுடன் இடுகை விரிவாக்கப்படும்.
நட்புடன் குரு.பழ.மாதேசு.
குருவரெட்டியூர்

Monday, July 25, 2011

Arulmigu balathantayuthapani temple,kanjikovil,perundurai


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கனககிரி குமரன் மலை என்னும் இடத்தில் அழகிய குன்றில் அமர்ந்துள்ள அற்புதமான முருகர் ஆலயமாகும்.



அருகில் கொங்கு வேளாளர் மெட்குலேசன் பள்ளி அமைந்துள்ளது.

திருக்கோவில் அடிவாரத்தில் வைத்திய விநாயகர் சன்னதியும் ஸ்தலமரமாக 500 வருட பழமை வாய்ந்த நகப்பழமரமும் அதன் அடியே நாகர் அமர்ந்திருக்க அருகில் இடும்பன் சன்னதியும் யோகி அருளானந்த சுவாமிகளின் ஜீவசமாதியும் அவர்கென சன்னதியும் அதை "ஓம் கார மண்டபம் " என்று அழைகிறார்கள்.



இச்சன்னதியில் அமையாய் அமர்ந்து கேட்க ஓம் எனும் ஒலி கேட்பதை உணரலாம் .பின் சுமார் 50 நுட்பமாய் கருங்கல் மலையில் செதுக்கிய படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் திருமுருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக வரும் பக்தர்கள் குறைதீர்க்கும் குமரனாக அருள் புரிகிறார்.



முருகர் அழகுடன் அமர்ந்து அருள் தரும் அற்புதத்தை காண காஞ்சிக் கோவில் அருகிலுள்ள கனககிரி குமரன்மலை மலைக்கு வாருங்கள் .

வந்து தரீசனம் செய்து புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகள் தாருங்கள்.

ஓம் முருகா சரணம் முருகா ...


நட்புடன் ஆன்மீகத்தேடலில்

குரு.பழ.மாதேசு

Sunday, July 24, 2011

அழகாய் முடிந்த கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேக விழா



கக்குவாய் மாரீயம்மன் கும்பாபிஷேகம் :




ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur ) அரசமர வீதியில் அமர்ந்து ஆட்சி செய்யும்


அருள் நிறை கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் (kakkuvai marriamman temple guruvareddiyur),அருள் நிறை சக்தி விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் (10.07.2011) ஞாயிற்றுக்கிழமை நாளில் விடியல் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சரியாக 6.07 மணிக்கு மிதுன லக்கினத்தில் அமரர் திரு .G.G குருமூர்த்தி EX.MLA அவர்களின் ஆசியாலும்



ஊராட்சி மன்றத் தலைவர் திரு .தாயகம் சிவ நடராசன் அவர்கள் மற்றும் கொமராபாளையம் அங்கப்பன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்க திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க வேள்விப்பணியில் பவானியை சேர்ந்த சிவ .மாரியப்பன் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.


பல சிவனடியார்கள் அடியார் பெருமக்களும், குருவரெட்டியூர் (guruvareddiyur) சுற்று வட்டார பெருமக்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.

விழா நாள் இரவு ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் அவர்களின் பட்டி மன்றம் சிறப்பாக நடந்தது. அதில் பேசிய அனைவரும் நன்றாக பேசினார்கள் . தாரமங்கலம் செந்தில் அவர்கனின் சிரிப்பில் மயங்க வைத்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.


சிறியதாய் இருத்த கக்குவாய் மாரியம்மன் கோவிலை நேர்த்தியாக வடிவமைத்து கொடுத்த பொறியாளர் திரு. துரை.செல்வக்குமார் மற்றும் ஆலய சிற்பிகள் திரு.அத்தியப்பன்,திரு.வேலாயுதம், மற்றும் மங்கள இசை அமைத்த கொளத்தூர் அப்பு குழுவினர் அவர்களுக்கு கக்குவாய் மாரீயம்மன் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.


எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல திருக்கோவில் கட்ட தன் ஒரு வருட உழைப்பை அற்பணம் செய்த திரு. அருள்சண்முகம் ஜோதிடர்,ப.அர்ச்சுணன், செ.முத்துராமலிங்கம். ஆசிரியர் தங்கவேல் ,தனசேகர் மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள் கூறி


குருவரெட்டியூர் (guruvareddiyur) என்னும் சிற்றூரில் கட்டப்பட்டிருக்கும் அருள் நிறை கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவிலுக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கும்


குரு.பழ.மாதேசு, (guru.pala.mathesu)

குருவரெட்டியூர். (guruvareddiyur)

Tuesday, July 12, 2011

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள்




சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்

3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.

இந்த இடுகையை பாராயணம் செய்த

உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டி விரும்பும்

குரு.பழ.மாதேசு

Friday, July 1, 2011





அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க நடைபெற உள்ளது .

அனைத்து ஆன்மிக பெருமக்களும் ,பொது மக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது. விழா அன்று காலை 09.00
மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக

Tuesday, June 28, 2011

இறைவழிபாட்டில் தீபங்கள் ஏற்ற உபயோகிக்க வேண்டிய எண்ணெய்கள்


இறைவனுக்கு விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பலன்கள்





இலுப்பை எண்ணெய்- ஆரோக்கியம்,

நல்லெண்ணைய்- எமபயம் போக்கும்
நெய் தீபம்-ஞானம் ஏற்படும் .
விளக்கெண்ணெய் தீபம்- சகல சம்பத்தும் கிட்டும் .

தீபங்கள் அனைத்திற்கும் பருத்தி நூல் திரி ஏற்றுதல் சிறப்பாகும்.

வெண்கல விளக்கில் தீபமேற்றினால் - வீரிய விருத்தி .நாள்தோறும் சிவாலயங்களில் தீபமேற்றுவதன் மூலம் எல்லா நன்மைகளும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் இரும்பு அகலில் தீபம் ஏற்றினால் சனி ப்ரிதி உண்டாகும்.

இறைவனுக்கு தீபம் ஏற்றுங்கள் எல்லா வளங்களும் பெறுங்கள்.

தோஷப்பரிகாரமும் இறைவனுக்கு இட வேண்டிய தீபங்களின் எண்ணிக்கையும்


ஜாதக தோஷங்கள் நீங்க இறைவனுக்கு ஏற்ற வேண்டிய தீபங்கள் :-



சனிஸ்வர தோஷம் 9 தீபங்கள் ,

துர்க்கை அம்மனுக்கு 9 தீபங்கள்,

ஈஸ்வரனுக்கு 11 தீபங்கள் ,

ராகு தோஷம் நீங்க 21 தீபங்கள்
,
திருமண தோஷம் நீங்க -21 தீபங்கள்
,
காலசர்ப்ப தோஷம் நீங்க 21 தீபங்கள்,

குரு தோஷம் நீங்க -33 தீபங்கள் ,

சர்ப்ப தோஷம்-48 தீபங்கள் ,

புத்திர தோஷம் நீங்க -51 தீபங்கள்


,களஷ்திரதோஸம் நீங்க- 108 தீபங்கள்

Thursday, June 23, 2011

அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம் ,சித்தோடு. ஈரோடு மாவட்டம் Arulmigu MANGALAMPIGAI & MATHESWARAR temple history chithode ,erode district






அருள்மிகு மங்களாம்பிகை உடனமர் மாதேஸ்வரர் ஆலயம்



ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் (chithode) அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும் .சித்தோடு நான்கு ரோடு சந்திப்பில் சித்தோட்டில் இருந்து பவானி செல்லும் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அற்புதமான ஆலயமாகும்.இங்கு மூலவராக மாதேஸ்வரர் அமைந்துள்ளார் .அருகே மங்களாம்பிகை சன்னதி உள்ளது.


இங்கு குரு,லிங்கபத்மர் ,பிரம்மா,சனிஸ்வரர், துர்க்கை அம்மன்,காலைபைரவர் சன்னதிகள் உள்ளது. சிவராத்திரி பிரதோஷ பூஜைகள் சிறப்பாக செய்யப்படுகின்றது.

தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு காலை 11.00 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. கோவில் அமைவிடம் சிறியதாக இருப்பினும் அழகாக இருக்கிறது.


ஈரோட்டில் இருந்து 8 கி.மிட்டர் தொலைவில் இருக்கும் சித்தோட்டிற்கு நீங்களும் வந்து

அருள்மிகு மாதேஸ்வரர் ,மங்களாம்பிகை

(arulmigu matheswarar & mangalampigai temple)

அருள்பெற்று செல்லுங்கள் .

நன்றி

அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில் ,காஞ்சிக்கோவில் பெருந்துறை வட்டம். arulmigu SEEDEVI ammpal thirukkovil. kanjikovil , perundurai taluk






அருள்மிகு சீதேவி அம்பாள் திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் (erode district) பெருந்துறை வட்டம் (perundurai taluk)காஞ்சிக்கோவிலில் (kanjikovil) எனும் ஊரில் அமைந்துள்ள அற்புத ஆலயமாகும் . காஞ்சிக் கோவிலுக்கு ஈரோட்டில் இருந்து சுமார் 16 கி.மீட்டரும் சித்தோட்டில் இருந்து 8 கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத ஆலயமாகும். ஆலய முகப்பில் பெரிய அரசமரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது.

வருடம் ஒரு முறை குண்டத்திருவிழா நடைபெறுகிறது. அதைத்தாண்டி உள்ளே சென்றால் கொடிமரம் வணங்கி விட்டு சிம்ம வாகனம் தரிசித்து மூலவரான சீதேவியை அழகிய தரிசனம் செய்யலாம். கோவிலை சுற்றி வீரமாத்தி ,குப்பண்ணசாமி ,முனியப்பன் ஆகிய சன்னதிகள் தரிசனம் செய்யலாம்.

ஸ்தல விருட்சமாக இலந்தை மரம் இருப்பது சிறப்பான ஒன்றாகும். அருகில் பக்தர்கள் தண்ணீர் வசதிக்காக திருக்கோவில் உள்ளே கிணறு உள்ளது. பெரிய குதிரை வாகனம் உள்நுழையும் போது அழகாய் நம்மை வரவேற்கிறது.

பழங்கால கோவில் தரிசனம் நிறைவாக இருக்கிறது. திருக்கோவில் மண்டபம் கட்ட சக்தி மசாலா குழுமத்தினர் பெருளுதவி அளித்துள்ளது பாராட்டத்தக்கது.

சீதேவி அம்பாள் தரிசனம் பெற காஞ்சிக்கோவில் வந்து செல்லுங்கள்.

வளங்கள் கூடட்டும் .
மேலும் தகவல்களுடன் இவ் இடுகை நீட்டிக்கப்படும்.
நன்றி

Tuesday, June 21, 2011

அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில், தொப்பபாளையம் ,குருவரெட்டியூர். ARULMIGU IRUSI AMMAN TEMPLE HISTORY ,THOPPA PALAYAM (guruvareddiyur )




அருள்மிகு இருசியம்மன் திருக்கோவில்


ஈரோடு (erode ) மாவட்டம் பவானி வட்டம் (bhavani taluk )அம்மாபேட்டையில் (ammapet )இருந்து 10கி.மீட்டர் தொலைவில் குருவரெட்டியூரில் (guruvareddiyur)இருந்த 1கி.மீட்டர் தொலைவில் தொப்பபாளையம் (thoppapalayam)எனும் சிற்றூரின் வனத்தில் அமைந்துள்ளது.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது, இங்குள்ள வனத்தில் இருசியம்மன் மூலவராக அமைந்து பக்தர்களுக்கு அருள் தரும் அம்பிகையாக அமைந்துள்ளது ஓர் சிறப்பாகும்.

இருசியம்மன் அந்தியூரில் (anthiyur) அமைந்துள்ள சின்ன குருநாதசாமிக்கும் வெள்ளித்திருப்பூரில் (vellitirupur) அமைந்திருக்கும் பெரிய குருநாதசாமிக்கும் சகோதரி முறையிட்டு அழைப்பார்கள்.

தொப்பபாளையத்தில் அமைந்துள்ள இருசியம்மன் கோவிலில் மல்லியம்மன் ,வீரகாரகன்,வீரபத்திரன் இடும்பன் ஆகிய சிலைகள் தரிசனம் பெறலாம். வைகாசி மாதத்தில் வருடம் ஒரு முறை வனத்தில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. அப்போது தொப்பபாளையத்தில் இருந்து இருசியம்மனுக்கு மகா தேர் கட்டி வனத்திற்கு அழைத்து வருவதுண்டு.

இரட்டை தேரில் குருவரெட்டியூர் பகுதி மக்களை அழைத்து ஓரு தேரை இழுக்க வைத்து வனத்திற்கு இருசியம்மனை காலம் காலமாக நடந்து வரும் மரபாகும்.மற்றொரு தேர் தொப்பபாளையம் ஊர் மக்கள் இழுத்து வந்து வனத்தில் இருசியம்மனை அலங்கரித்து பூஜை நடைபெறுகிறது. இக்கோவில் பூச்சாட்டின் போது தொப்ப பாளையம் வனத்தில் உள்ள எமதர்மராஜாவுக்கும் பூச்சாட்டுதல் மற்றும் விழா தொடங்கும்.


அருள்மிகு இருசியம்மனுக்கு வார பூஜையாக வெள்ளிக்கிழமை இரவு 07.00 மணிக்கு நடைபெறும். வனத்தில் கட்டுவர்த்தனை பூஜையாக ஞாயிறு மதியம் 12.00மணி அளவில் நடைபெறுகிறது. தொப்பபாளையம் வாருங்கள்

அருள்மிகு இருசியம்மன் அருள் பெற்று எல்லா வளமும்

நலமும் பெற வாழ்த்துக்கள்

நட்புடன் குரு.பழ.மாதேசு

by.guru.pala.mathesu

Saturday, June 18, 2011

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில், பவானி Arulmigu palani ahandavar thirukkovil. Bhavani




முருகர் துதிப்பாடல் ;

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு,
வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் ,
செந்தமிழ்தநூல் விரித்தோனை விளங்கு,
வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக்,
கார்மயில் வாகனைச் சாந்துணைப் போதும் மறவா தவர்கொரு தாழ்வில்லையே..!

அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில்

ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மத்தியில் பவானி அஞ்சல் அலுவலகம் அருகிலும் ராணா திருமண மண்டபம் அருகில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோவில் அருகிலும் பவானி பழைய பஸ் நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

முருகருக்கு என பவானி நகரில் அமைந்துள்ள ஓர் அற்புதமான ஆலயமாகும்.கோவில் நுழைவாயிலில் வலப்புறமுள்ள ஆனைமுகத்தோன் கணபதியை வணங்கி விட்டு இடப்புறமுள்ள ஐயப்பனை வணங்கி திருக்கோவில் உள்ளே சென்றால் வெளிப்பிரகாரத்தில் அழகிய கொடிமரத்தை வணங்கி விட்டு உட்பிரகாரம் சென்றால் வலப்புறம் அருள்மிகு பொன்னம்பலவாணரை தரிசித்து இடப்புறம் சிவகாமி அம்மாள் திரு உருவங்களை தரிசித்து திருக்கோவில் மூலவரான அருள்மிகு பழனி ஆண்டவரின் தரிசனம் கிட்டுகிறது.



நின்றவாறு வேலுடன் காணப்படும் முருகப்பெருமான் அழகு கம்பீரமானது. வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் கிடைக்கும் அற்புதமான ஆலயமாக பழனி ஆண்டவர் தரிசனம் இருக்கும் என்பது திண்ணம்.

திருக்கோவிலின் உள்ளே வீரமுத்துக்குமாரசாமி, பிரம்மா, இடும்பன் துர்க்கை, நவநாயகர்கள் காலபைரவர் என திருக்கோவில் சுற்றி வரும் போது தரிசனம் செய்யலாம். தமிழக அறங்காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்படும் ஆலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

பெளர்ணமி, கிருத்திகை ,அமாவசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் பார்க்க வேண்டிய ஆலயமாகும்.

கூடுதுறை பவானிக்கு வரும்போது தரிசித்து விட்டு மெயில் செய்யுங்ஙள்.

நன்றி

Sunday, June 12, 2011

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள் erode district important places,temples,dam ,tourist places





ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள்

1.அருள்மிகு சங்கமேஷ்வரர் ஆலயம் கூடுதுறை பவானி
2.அருள்மிகு வேதகீரிஷ்வரர் ஆலயம் ஊராட்சிக்கோட்டை
3.அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்,பண்ணாரி சத்தியமங்கலம்
4.சமணர் கோவில் விஜயமங்கலம்
5. வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் அதைச்சுற்றியுள்ள கோவில்கள்
6. அருள்மிகு சென்னிமலை முருகர் திருக்கோவில் (கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றப்பட்ட ஸ்தலம் ,அருணகிரியார் பாடிய ஸ்தலம்,பிண்ணாக்கு சித்தர் குகை உள்ள இடம்)
7.சீனாபுரம் முருகர் கோவில்
8. துடுப்பதி பெருமாள் கோவில்
9. பாலமலை சித்தேஷ்வரர் திருக்கோவில்
10.அருள்மிகு நட்டாட்றீஷ்வரர் திருக்கோவில் (சாவடி பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள அகத்தியரால் பாடல் பெற்ற ஸ்தலம்)
11.தம்பிக்கலை அய்யன் திருக்கோவில்
12. திண்டல் முருகர் கோவில்
13.கொடிமுடி மகுடேஷ்வரர் திருக்கோவில்
14. பாரியூர் கொண்டத்து காளியம்மன் ,அமர பரணிஷ்வரர் திருக்கோவில்
15.பவளமலை முருகர் கோவில்
16. வட்டமலை முருகன் கோவில்
17. திங்களுர் அப்பிச்சிமார் மடம் ( புஷ்ப நந்த தீர்த்தங்கரர் சமணக்கோவில்)
18.அருள்மலை முருகன் திருக்கோவில் திங்களூர் ( நஞ்சைய புலவரால் 1,000 திருப்புகழ் பாடிய இடம் )
19.அருள்மிகு நாட்டராயன் திருக்கோவில் ,வள்ளியரச்சல்
20.ஆதிநாதர் சமணக்கோவில், மமுட்டித்தோப்பு
21 அருள்மிகு தவளகிரி முருகன் கோவில் ,சத்தியமங்கலம் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் வெண் குன்று
22. சிவன்மலை முருகர் திருக்கோவில்
23.அந்தியூர் குருநாதசாமி திருக்கோவில்

ஈரோடு மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள் , &அணைகள் :

1. பவானிசாகர் அணைக்கட்டு (மண்ணால் கட்டப்பட்ட அணை )
2.கொடிவேரி அணைக்கட்டு
3. குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு
4. வரட்டுப்பள்ளம் அணை
5.வெள்ளோடு பறவைகள் சரணாலயம்
6.பழமங்கலம் நடுகல்லில் பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல்
7.ஈரோடு அண்ணா ,பெரியார் நினைவகம்
8.ஈரோடு வ.உ.சி பூங்கா& அரசு அருங்காட்சியகம்
9.ஒடா நிலை தீரன் சின்னமலை நினைவு மண்டபம்
10.சமண முனிவர் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டின் இசைக்கல்வெட்டுள்ள அறச்சலூர் மலை 11 காலிங்கராயன் கி.பி 1282 ல் கட்டிய காலிங்கராயன் அணைக்கட்டு

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...