மழை இல்லாது நாடே வாடிக்கொண்டிருக்கையில் குடிதண்ணீர்க்கான நிலத்தடி நீர்மட்டம் 1000அடிக்கு கீழே போய் கொண்டிருக்கிறது. மரம் நடுங்கள் என எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்க ,விளம்பரப்படுத்திக் கொண்டிருக்க ஒரு சிலரே மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் .
ஆளுக்கொரு மரம் நட்டாலே 6 கோடி மரங்கள் நடப்படும் என்பது சாத்தியமே. பலவிதமான பரிகாரங்கள் மனிதன் செய்கிறபோது உருப்படியான சமுகத்திற்கும் நமக்கும் உதவுகின்ற பரிகாரமாக இந்த மரம் வளர்ப்பு பரிகாரத்தை செய்யலாம் .
பிறந்த தேதி வருடம் ராசி நட்சத்திரம் தெரியாதவர்கள் ,தமிழ் வருடம் மட்டும்
தெரிந்தவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற்றமடைய தான் பிறந்த தமிழ்
வருடத்திற்குண்டான மரத்தை குறைந்த பட்சம் 3,6,11 எண்ணிக்கையில்
நடவேண்டும் .
எங்கு நடுவது :
அதிக இடமுள்ள ஆலயங்கள் ,பொது இடங்கள் ,
பள்ளி,கல்லூரிகள் ,ஆற்றங்கரை , தர்ம ஸ்தாபனங்கள் , மலைப்பாங்கான
இடங்களில் நடலாம் .
எப்படி நடுவது :
இரண்டரை அடி ஆழம் ஒன்றரை அடி அகலம்
கொண்ட குழி வெட்டி அதனுள் காய்ந்த தழை தாம்புகளுடன் வேர் நன்கு இறங்க மணல் செம்மண் கலந்த கலவையை இறைத்து பசுசாணம் கலவை இணைத்து மரத்தை நடவு செய்யலாம் .
நல்லது செய்ய நாள் நட்சத்திரம் பார்க்க தேவையில்லை என்பது நம் தாழ்மையான கருத்து .சூரிய உதயமாகி அஸ்தமனத்திற்குள் நடவேண்டும் .
நவதானியங்களை ஊற வைத்து அந்த நீரினை நட்ட மரக்கன்றுக்கு விட்டு
நவதானியத்தை பசு மாட்டிற்கு தீனியாக்கவும் .
இனி பிறந்த தமிழ்வருடங்களும் நடவேண்டிய மரங்களையும் பார்ப்போம்
1 . பிரபவ -கருங்காலி
2.விபவ -அக்ரோட்
3. சுக்ல - அசோகமரம்
4.பிரமோ தூத -அத்தி
5.பிரஜோத்பத்தி-பேய் அத்தி
6. ஆங்கிரச-அரசு
7.ஸ்ரீமுக- அரைநெல்லி
8. பவ-அல்யாத்தி
9.யுவ-அழிஞ்சில்
10. தாது -ஆச்சாமரம்
11.ஈஸ்வர-ஆலமரம்
12. வெகுதான்ய-இலந்தை
13.பிரமாதி -தாளை பனைமரம்
14.விக்ரம - இலுப்பை
15.விஷு-ருத்ராட்ஷம்
16.சித்ரபானு-எட்டி
17.ஷ்வபானு-ஓதியம்
18.தாரண-கடுக்காய்
19.பார்த்திவ-கருங்காலி
20.விய-கருவேலம்
21.சர்வஜித்-பரம்பை
22. சர்வதாரி - குல்மோஹர்
23. விரோதி - கூந்தல் பனை
24.விக்ருதி- சரக்கொன்றை
25.சுர-வாகை
26. நந்தன -செண்பகம்
27.விஜய -சந்தனம்
28.ஜய-சிறுநாகப்பூ
29.மன்மத- தூங்கு மூஞ்சி
30.துர்மிகி - நஞ்சுண்டா
31.ஏவிம்பி-நந்தியாவட்டம்
32.விளம்பி-நாகலிங்கம்
33.விகாரி -நாவல்
34.சார்வரி-நுணா
35. பிலவ-நெல்லி
36. சுபகிருது-பலா
37. சோபகிருது -பவழமல்லி
38.குரோதி-புங்கம்
39. விசுவாசக- புத்திரசீவிமரம்
40. பராபவ-புரசு
41. பிலவங்க -புளியமரம்
42. கீலக -புன்னை
43.சவுமிய- பூவரசு
44.சாதாரண -மகிழம்
45.விரோதிகிருத்- மஞ்சகடம்பை
46.பரிதாபி -மராமரம்
47.பிரமாதீச-மருது
48. ஆனந்த -மலைவேம்பு
49.ராட்சஷ - மாமரம்
50. நள-முசுக்கொட்டை
51. பிங்கள - முந்திரி
52. காளயுக்தி -கொழுக்கொட்டை மந்தாரை
53. சித்தார்த்தி - தேவதாரு
54. ரவுத்ரி -பனைமரம்
55. துர்மதி - ராமன்சீதா
56. துன்துபி- மஞ்சள் கொன்றை
57. ருத்ரோத்காரி - சிம்சுபா
58 .ரக்தாட்சி - ஆலசி
59. குரோதன - சிவப்பு மந்தாரை
60 .அட்சய -வெண்தேக்கு
இறைவழிபாட்டுடன் இணைந்த மரங்கள் :
பஞ்சசமிதிகள் :
1.ஆலமரம்
2.அரசமரம்
3.அத்தி மரம்
4. மாமரம்
5. வன்னி மரம்
ஆகிய மரங்களின் சுள்ளிகள்
பஞ்சசமிதை என அழைக்கப்படுகிறது.
பஞ்சவடி :
1.ஆலமரம்
2. அரசமரம்
3.மாமரம்
4. நெல்லிமரம்
5.வில்வமரம்
ஆகிய ஐந்து மரங்களும் கூடியுள்ள
இடத்திற்கு பஞ்சவடி என்று பொருள்படும் .
பஞ்சவில்வங்கள் :
1.மாவிலங்கம்
2.விளா
3.கிளுவை
4. நொச்சி
5. வில்வம்
இவற்றில் ஒவ்வொன்றும் மூன்றிதல்கள்
கொண்டது பூஜைக்குரியதாக புராணங்கள் உரைக்கின்றன .
முடிவுரை :
மரங்களுக்கும் உயிர் உண்டு . அதனை நாம் வளர்த்து அதன் மூலம்
கோடிக்கணக்கான மக்கள் சுவாசிப்பதால் உண்மையான புண்ணிய பலன் மரம்
நட்டவர்க்கு கிட்டி மரம் செழிக்க உங்கள் குடும்பமும் செழிக்குமென்று
நம்புங்கள்.
மேற்கண்ட மரங்களைத்தான் நடவேண்டுமென்பதில் உங்களுக்கு
மாற்றுக்கருத்து இருக்குமெனில் ஏதேனும் ஓர் மரம் நடுங்கள் .
நடுவீர்கள்.
ஏனெனில் உங்களால் முடியாதது உலகில் யாராலும் முடியாது.
நன்றி