Friday, February 22, 2013

சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி தரிசனம் (4 ஆம் படைவீடு)

குருவாய் அரற்கு உபதேசம் வைத்த , குகனே
குறத்தி மணவாளா .! குளிர்கா மிகுந்த வளர்புக மெத்த,
 குடகாவிரிக்கு வடபாலார்,
திருவேரகத்தில் உரைவாய்.! உமைக்கோர்,
சிறுவா .! கரிக்கும் இளையோனே.!

 -அருணகிரி நாதர்

 அமைவிடம்
: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் உள்ளன.

தமிழகத்தின் ஆறுபடை வீடுகளில் நான்காவது வீடாகவூம் திருவேரகம் எனஅழைக்கப்படும் சுவாமி மலை பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளக்குகின்றது.

சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பிரணவ உபதேசம் வழங்கிய அற்புத திருத்தலமாக கருதப்படுகிறது. ஆதலால் சுவாமி மலை வந்து வழிபட ஞானம் கிட்டுமென்பது பெரியோர்கள் வாக்கு.

புராணம் விளக்கும் உண்மை :

பிரம்மா படைப்புத்தொழில் புரிவதால் ஆணவம் முற்றி இருந்த தருணத்தில்
முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரணவமந்திரத்தின் பொருளை பிரம்மாவிடம் முருகர் கேட்க நான்முகனால் விளக்கமுடியவில்லை.

 அப்போது பிரம்மாவின் தலையில் குட்டி பிரணவமந்திரப்பொருள் அறியாத நீவீர் படைப்புத்தொழில் புரியக்கூடாதென பிரம்மாவை சிறையில் அடைத்தார்.  பின்  முருகரே படைக்கும் தொழிலை செய்து வந்தார் .

 பிரம்மா சிறையில் வாடுவதை அறிந்த திருமால் சிவனிடம் தோன்றி பிரம்மாவை சிறையிலிருந்து விடுவிக்க  வேண்ட முதலில் நந்தியை தூதுக்கு அனுப்பினார் சிவன் ,அப்போதும் முருகரின் கோபம் தணியவில்லை.நந்தி திரும்பி வந்தார் .

பின் சிவனே முருகரின் முன்
தோன்றி பிரம்மாவை சிறையிலடைப்பது தவறென கூறி முருகரை சமாதானம் செய்தார் .தந்தை சொல்மிக்க மந்திரமில்லையென பிரம்மாவை விடுவித்தார் .

 அப்போது பிரம்மா என் ஆணவம் அடங்கியது எனக்கூற மகிழ்ந்த சிவன் முருகப்பெருமானை மடியில் உட்கார வைத்து பிரணவமந்திரப்பொருளை எமக்கு கூறு என முருகரிடம் கேட்க பிரணவமந்திரத்தின் பொருளை சிவனின் திருச்செவியில் முருகர் உரைத்தார் .

 இந்த அரிய நிகழ்வு நடைபெற்ற இடமே சோழ நாட்டில் ஆறுபடை  வீடுகளில் ஒன்றான திருவேரகம் என புராண காலத்தில் அழைக்கப்படும் சுவாமி
மலையாகும் . இந்நிகழ்வால் முருகர் சுவாமிநாதன் என்றும் குருநாதன்
என்றும் அழைக்கப்படுகிறார் .

 திருக்கோவில் அமைப்பு :

 மூன்று சுற்றுகள் கொண்ட சுவாமிமலை உருவாக்கபெற்ற குன்றாகும் .60படிகள் கொண்ட திருக்கோவில் ஏறிச்சென்றால் மூலவர் ஸ்ரீ சுவாமிநாதரின் தரிசனம் கிட்டுகிறது.

 தெற்குபார்த்ததாக அமைந்த இராஜகோபுரம் 5 மாடங்களுடன் அழகே அமைந்துள்ளது.


நிகழ்வுகள் :

அருணகிரிநாதர் சுவாமிநாதரை தரிசித்து அவர் பாதங்களை
தரிசித்ததாக வரலாறு.பூமாதேவி பார்வதின் சாபத்திற்குள்ளானதால்
இத்தலத்தில் வந்து சாபம் நீக்கியதாக புராண வரலாறு.

 பின் பூமாதேவி
இத்தலத்திலிருந்து செல்லாமல் நெல்லிமரமாக அமர்ந்ததாக கூறப்படுகிறது.
மீனாட்சி சன்னதின் கிழக்கே நோய்களை தீர்க்கும் வச்சிர தீர்ததமென்ற கிணறு
அமைந்துள்ளது.

ஷ்தல தீர்த்தம் :

நேத்திர புஸ்கரணி ஆகும் . இது கிழக்கே
கீழவீதியில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் :நெல்லி மரம்

 சுவாமிமலையின்
வேறுபெயர்கள் :சுந்தராசலம் ,திருவேரகம் ,குருமலை,சிரகிரி ,சிவகிரி
ஆகியனவாகும் .

பூஜை நடைபெறும் நேரங்கள் :


விசுவரூப தரிசனம் காலை 6மணிக்கும்
உஷாக்காலம் 7மணி க்கும்
 காலைசந்தி 9 மணிக்கும்
 உச்சிகாலபூஜை:நன்பகல் 12 மணிக்கும்
 சந்தியாகாலபூஜை:05.30மணிக்கும் ,
இரண்டாம் காலபூஜை: இரவு 7மணிக்கும் ,
அர்த்த யாமபூஜை இரவு 9 மணிக்கும்
நடைபெறுகிறது.

விஷேசகாலங்களில் பூஜைநேரங்கள் மாறுதலுக்குட்பட்டது.

பாடிவர்கள் :

சுவாமிமலை திருக்கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும். நக்கீரர்
திருமுருகாற்றுப்படையிலும் அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்ற பல
நூல்கள் சுவாமிமலை புராணத்தை உரைக்கின்றது.

திருக்கோவில் காலம் :
பழங்காலத்தில் அமைந்த திருக்கோவிலாயினும் விக்கிரம சோழன் 1120 -1136
காலக்கல்வெட்டுகளினால் இது 1000 வருடத்திற்கு முந்தைய திருக்கோவிலாகும்


. முடிவுரை :

குன்றே இல்லாத இடத்தில் குன்றை உருவாக்கி அழகான குன்றாக
அமர்ந்த ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை வந்து வணங்கி அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் பெற்று உய்ய வேண்டுகிறேன் .

தரிசித்து கருத்துரையிடுங்கள்
.நன்றி

ஸ்ரீ வேலாயுதசாமி திருக்கோவில். வட்டமலை ,குமாரபாளையம்

குன்று தோறும் குமரன் இருக்குமிடம் என்ற பெரியோர்களின் வாக்கிற்க்கு
இணங்க குமாரபாளையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில் சுமார் 4
கி.மீட்டர் தொலைவில் நான்கு வழிச்சாலை அருகிலேயே வட்டமலை அமைந்துள்ளது.


ஜே.கே.கே நடராஜா கலை அறிவியல் கல்லூரி பஸ்ஸ்டாப் எதிரே சிறிது தூரம் நடந்து சென்றால் சிறிய குன்றில் திருக்கோவில் அமைந்துள்ளது. 75படிகள் கொண்ட சிறிய குன்றில் படி ஏறி சென்றால் திருக்கோவிலை அடையலாம் .


புதிதாக திருக்கோவில் வேலைப்பாடுகள் நடந்து அழகே அமையப்பெற்றுள்ளது. வட்டமலையில்
முருகர் வேலாயுதசாமியாக மூலவர் வீற்றிருக்கிறார் .

 திருக்கோவில் மேலே செல்ல கார் பைக் வாகனங்கள் பாதையும் உண்டு. பளிங்கு கற்களால் அழகாக அமைக்கப்பட்ட திருக்கோவில் ,கணபதி காசி விஸ்வநாதர் ,நவகிரகங்கள் என  தனிச்சன்னதிகள் அமைந்துள்ளது .

 குமாரபாளையத்தில் பார்க்க வேண்டிய
ஆலயங்களில் வட்டமலை முருகர் திருக்கோவிலும் ஒன்று . திருக்கோவில்
வளாகத்தில் ஆங்காங்கே மயில்கள் விளையாடுகின்றது.

புதுப்புது முருகர்
ஆலயங்கள் தரிசிக்க வேண்டுபவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் வட்டமலை, முருகருக்குரிய செவ்வாய்கிழமை, கிருத்திகை ,தைப்பூசம் ஆகிய நாட்கள் கூட்டம் வருகிறது.

வட்டமலை திருக்கோவில் ஆண்டவர் மலை எனவும் மக்கள்
அழைக்கின்றனர். வாய்ப்பு கிடைக்கும் போது வந்து வணங்கிச்செல்லுங்கள்


.ஓம் முருகா சரணம் முருகா

Friday, February 15, 2013

ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில் வெண்ணெய்மலை,கரூர்

அமரர் இடம் தீர அமர்ந்த
 குமரனடி நெஞ்சே குறி                                        முருகர் துதி

 கரூர் வெண்ணெய்மலையில் முருகர் ஸ்ரீபாலசுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . கரூர் பஸ் நிலையத்தில் இருந்து 3கி.மீட்டர் தொலைவில் அமைந்த அற்புத திருக்கோவிலாகும் . அண்மையில் வெண்ணைமலை செல்லும் அருமையானதோர் வாய்ப்புகிட்டியது.

 சுமார் 60படிக்கட்டுகள் ஏறினாலே ஸ்ரீபாலசுப்பிரமணியரைதரிசித்து விடலாம் . பாலயோகி பகவன் என்பர் இங்கு தவமிருந்த போது முருகர் காட்சி கொடுத்து இங்கே எம் அருட்சக்தி நிறைந்துள்ளது .

 இதை மக்களுக்குஅறிவிக்க கூற பகவன் அப்போது கரூரை ஆண்ட அரசரிடம் விபரம் கூறதிருக்கோவில் அழகே அமைக்கப்பட்டு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் பிரதிஷ்டைசெய்யப்பட்டதாக வரலாறு.

திருக்கோவில் 1000ஆண்டுகள் பழமையாளதாகும் .
ராஜராஜ சோழன் காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் 18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் சித்தர்க்கு தஞ்சை பிரகதீஷ்வரர் திருக்கோவில் மற்றும்


கருவூரில் அமைந்துள்ள பசுபதீஷ்வரர் திருக்கோவில் மற்றும் வெண்ணெய்மலை முருகர் திருக்கோவில் ஆகியவற்றில் தனி சன்னதிகள் அமையப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க சிறப்பாகும் .


 காமதேனுவால் அமைக்கப்பட்ட
தேனுதீர்த்தம் இங்கு குளிப்பவர்களுக்கு குழந்தை வரம் கிட்டுமென்பது
ஐதீகம். இங்கு நடைபெறும் தைப்பூசத் தேர் திருவிழா மிக விஷேசமான
ஒன்றாகும் .

திருக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4மணி
முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது. கருவூரார் சித்தரை தரிசிக்க
விரும்பும் சித்தர் தேடல் விரும்பும் நண்பர்கள் அவசியம் செல்ல வேண்டிய
திருக்கோவில் .

கருவூராரின் பாதம் பட்ட அற்புத இடம் . ஸ்ரீமுருகப்பெருமான் குன்று தோறும் குடியிருந்து அருள்பாலிக்க வெண்ணெய்மலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணியராக அருள் செய்கிறார் . வந்து வணங்கிவிட்டு செல்லுங்கள் .நலங்கள் நாள் தேறும் பெறுங்கள் .

ஓம் முருகா சரணம் முருகா . நன்றி

Monday, February 11, 2013

திருப்பங்கள் தரும் திருவிடைமருதூர் திருத்தலம்

ஓடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை
காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ்
வாடாமுலை மங்கையுந் தானும் மகிழ்ந்(து)
ஈடாவுறை கின்ற இடைமரு தீதோ.


                                                                                       தேவாரம் -திருஞானசம்பந்தர்.

 மூலவர் : ஸ்ரீ மகாலிங்கப்பெருமான்
(இடைமருதன் ,மருதவாணர்)

அம்பிகை :

பெருநலமா முலையம்மை திருக்கோவில்

அமைவிடம் :

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை
செல்லும் வழியில் திருவிடைமருதூர் திருத்தலம் அமைந்துள்ளது. மூர்த்தி
ஸ்தலம் ,தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடைய அழகிய திருக்கோவில் திருவிடை
மருதூர் ஆகும் .

பாடல் பெற்ற திருத்தலம் பாடியவர்கள்:அப்பர் ,சுந்தரர்
,திருஞானசம்பந்தர் , மாணிக்கவாசகர் , கருவூர்த்தேவர் ,பட்டினத்தார் ,
அருணகிரிநாதர் , கவிகாளமேகம் , ஆகியோர் பாடிய ஸ்தலமாகும்


 நான்குபுறமும் சிவாலயம் இருக்க நடுவே ஸ்ரீ மகாலிங்கப்பெருமான் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத்தலம் என போற்றப்படுகிறது.காவிரியின் தென்கரையில் உள்ள  காசிக்கு நிகரான பதினோரு ஸ்தலங்களில் திருவிடைமருதூரும் ஒன்றென்பதே மிக விஷேசமான விஷயமாகும் .

 திருக்கோவில் அமைப்பு:

கிழக்கு நோக்கியதிருத்தலம் .திருக்கோவில் அருகே காருண்யாமிர்தத் தீர்த்தம் எனும்திருக்குளம் அமைந்துள்ளது. ஏழு கோபுரம் ஏழு பிரகாரங்களை கொண்ட பெரியபரப்பளவில் அமைந்த பிரமாண்ட அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்த திருக்கோவில்ஆகும் .            பட்டினத்தாருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

 புராணச்சிறப்பு:

அகத்தியரும் பல முனிவர்களும் அம்பிகையை நேரில் தரிசிக்க தவம் இருந்தனர் .பல நாட்கள் அம்பிகைக்கு தவமிருந்தும் காட்சி அளிக்காததால் வருத்தமுற்று இருந்தனர் .

கயிலாயத்தில் இருந்து இதை கவனித்த அம்பிகை சிவனிடம் நமக்காக நெடுநாட்கள் அகத்தியர் தவமிருக்கிறார் . அவர்க்கு நாம் காட்சி அருளவேண்டுமென கேட்டுக்கொண்டார் .

 சிவன் அம்பிகையை முன்னமே செல்லச் சொல்லி விட்டு சிவன் அவர்க்கு முன்னமே திருவிடைமருதூர் வந்து தங்கினார்
அகத்தியர் முன் அம்பிகை காட்சி அளித்தார் .

அம்பிகை கண்டது மகிழ்ச்சி சிவனேயும் நாங்கள் தரிசிக்க வேண்டும் என ஆர்வமாக அகத்தியர் கேட்க சரி நானும் உங்களுடன் தவமிருக்கிறேன் என தவமிருத்தார் .

 சிவபெருமான் முதலில் சோதி வடிவாக பின் லிங்கவடிவாக அதன் பின்   மான் மழுவுடன் தலையில் பிறையணிந்து சிவபெருமான் முழு உடலாக காட்சி தந்து " இத்தலத்தில் லிங்கத்தை தரிசிப்பவருக்கு பெருஞ்செல்வங்கள் மற்றும் பாவங்களை போக்குவேன் என்றருளி தம்மை தாமே பூசித்த அற்புத ஸ்தலமாக திருவிடைமருதூர் இருப்பது பெரும் சிறப்பாகும் ,

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை வரை சிறப்புற நடக்கிறது.89 அடி உயர தேர்தமிழகத்தின் உயரமான தேர்களில் திருவிடைமருதூர் தேரும் ஒன்றாகும் .

திருவாடுதுறை ஆதினம் அவர்களால் திருக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு
வருவது குறிப்பிடத்தக்கது


 முடிவுரை :

 அம்பிகைக்கும் அகத்தியருக்கும் பல
முனிவர்களுக்கும் நேரில் காட்சி கொடுத்த அற்புதஸ்தலமான காசிக்கு நிகரான ஸ்தலமாக

அருள் தரும் பெருதலமாமுலையம்மை உடனமர் ஸ்ரீமகாலிங்கப்பெருமான வணங்கி பாவங்கள் போக்கி பல அற்புதங்களை அருளும் திருவிடை மருதூர் திருத்தலம் அற்புத ஆலயம் .

தரிசித்து அருள் பெறுங்கள் .
ஓம் சிவ சிவ ஓம்

Monday, February 4, 2013

அருள்மிகு பெருங்கருணைநாயகி உடனமர் ஸ்ரீ அவிநாசிலிங்கேஷ்வரர் திருக்கோவில்

" இதுவோ அவிநாசி..? இவ்வாறே நள்ளா(று)..?,
 இதுவோ திருப்புக்கொளியூர்..?-இதுவோதான் ,
 மூவாண்டு சென்று முதலை வாய்ப்பிள்ளை தனை,
 வாவென அழைத்த மண்

. -பழம் பாடல்



 மூலவர் -அவினாசி லிங்கேஸ்வரர்

அம்பிகை: அருள்மிகு
பெருங்கருணை நாயகி

 ஸ்தல விருட்ஷம் - பாதிரி மரம்

 பாடல் பாடியது ; ஸ்ரீ
சுந்தரமூர்த்தி நாயனார் . குமரகுருபரர் ஆகியோராவர் .

திருக்கோவில் காலம்
: திருக்கோவில் காலம் மிகப்பழமையானது . 5 ஆம் நூற்றாண்டில் இருந்து
கல்வெட்டுக்குறிப்புகள் கிடைத்துள்ளன. கூன் பாண்டியன் என்பவரால் கோவில் நிர்மாணப் பணிகள் துவங்கப்பட்டது.

கொங்கு நாட்டிலுள்ள முக்கிய
சிவாலயங்களில் சுமார் 1500ஆண்டுகள் பழமையான சிவாலயமாக ஸ்ரீ அவிநாசிலிங்கேஷ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது


 அமைவிடம் : சேலத்தில் இருந்து
கோவை செல்லும் வழியில் அவிநாசி என்னும் ஊரில் பழைய பேருந்து நிலையத்தின்அருகே அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில்
தென்னை மரங்கள் சூழ அமைந்துள்ளது .


 முகப்பில் அழகிய அரசமரமும் அதனடியில்
ஸ்ரீ விநாயகப்பெருமானையும் தொழுது சென்றால் இடப்பக்கத்தில் குளமும்
முகப்பில் இராஜகோபுரம் பின் கொடிமரமும் வணங்கி உள்ளே சென்றால் மூலவர்ஸ்ரீ அவினாசி லிங்கேஸ்வரரை தரிசிக்கலாம் .


 திருக்கோவில் ஸ்தல வரலாறு :


சேரநாட்டிற்கு ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் வருகை தந்தபோது தற்போது
அவிநாசி அக்காலத்தில் திருப்புக்கொளியூர் என்ற ஊரின் அருகில் வந்த போது
இரண்டு வீடுகளில் ஓர் வீட்டில் சந்தோஸத்தையும் ஓர் வீட்டில் ஓர் வீட்டில்
துக்கமாய் இருப்பதையும் கண்டார் .

அதை பார்த்த சுந்தரர் விசாரிக்க ஓர்
குழந்தை பிறந்த நாள் விழா கொண்டாடுவதாகவும் , ஒரு குழந்தை குளத்தில்
கவ்விச்சென்றதால் இறந்து போனதால் சோகமாய் இருப்பதாக கூறப்பட்டது.
உடனே ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் இறந்தபோன குழந்தையின் பெற்றோரை
அழைத்துச் சென்று தேவாரம் பாட குளத்தில் நீரும் முதலையும் வந்தது.

"
கரைக்கால் முதலை பிள்ளை தரச் சொல்லு காலனையே"

 எனப்பாட 7ஆண்டு கால
வளர்ச்சி பெற்ற குழந்தையை முதலை வாயில் இருந்து வந்ததது. அதைப்பெற்றகுழந்தையின் பெற்றோர் சந்தோஷமடைந்தனர் .

பாடல் பெற்ற ஸ்தலம் .நால்வரில் ஒருவரான சுந்தரர் தேவாரம் பாடி முதலையின் வாயில் குழந்தையை வரச்செய்ததால்எம பயம் நீக்கும் ஸ்தலமாக கருதப்படுகிறது.

திருக்கோவில் வளாகத்தில்சுந்தரருக்கு தனிச்சன்னதி அமைந்துள்ளது. பழங்கால சிறப்பு மிக்ககல்வெட்டுகள் திருக்கோவில் பின்புறத்தில் அமைந்துள்ளது.

 நீங்களும்
கொங்கு நாட்டின் 7 சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ பெருங்கருணைநாயகி உடனமர் ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரரை தரிசித்து எம பயம் நீங்கி வாழ்வில் எல்லா   வளமும் நலமும் பெற அந்த இறை துணை வேண்டி நிற்கிறேன் .

நன்றி

Friday, February 1, 2013

திருப்பங்கள் தரும் திருபாம்புரம் வழிபாடு

திருப்பாம்புர தரிசனம் தழழும் மேனியன்
தையல் ஓர்பாகம் அமர்ந்தனன் .
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி - சோற்றுத்துறை ,
கழலும் கோவை உடையவன்காதலிக்கும் இடம் ,
பழனம்,பாம்பணி,பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே.

 ஸ்ரீ
சுந்தரரின் நாட்டுத்தொகை


 மூலவர் : பாம்புரநாதர்
என்றும்
,ஷேசபுரிஸ்வரர் ,பாம்பீசர் , பாம்புரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார் .


அம்பிகை- வண்டு சேர் குழலி
 என்றும் பிரமராம்பிகை ,வண்டார் பூங்குழலி
என அழைக்கப்படுகிறார் .

 ஸ்தல அமைவிடம் :

 கும்பகோணத்தில் இருந்து
காரைக்கால் செல்லும் வழியில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி எனும்
ஊரில் இருந்து தென் திசையில் திருப்பாம்புரம் என்னும் அழகிய ஊர்
அமைந்துள்ளது.

 செல்லும் வழி :

1. கும்பகோணத்தில் இருந்து கொல்லுமாங்குடி
வழியாக காரைக்கால் செல்லும் பேருந்தின் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி
வரலாம் .மயிலாடுதுறை திருவாரூர் சாலையும் குடந்தைசாலையும் ,காரைக்கால் சாலையும் சந்திக்கும் இடமான கொல்லுமாங்குடி பேராளம் ஆகிய ஊர்களுக்குஅருகே திருபாம்புரத்தை மினி பஸ் மூலம் அடையலாம்.


 ஸ்தல மரம் : வன்னிமரம்

 தீர்த்தம் : ஆதிசேட தீர்த்தம்

 சன்னதியின் சிறப்பு :

இராகு கேது ஏக சரீர சன்னதி

 ஸ்தல சிறப்பு:

காவிரி ஆற்றின் உள்ள பாடல் பெற்ற
ஸ்தலங்களில் 59 வது ஸ்தலம் .திருஞானசம்பந்தரால், திருநாவுக்கரசர் ,
சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

காலம் : 1200 ஆண்டுகள்
பழமையானது .கி.பி 1178முதல் 1218 வரை ஆண்ட 3 ஆம் குலோத்துங்க சோழன் காலத்திய கால்வெட்டே முதல் கல்வெட்டாகும் ,அதற்கு முந்தையகாலம் அறிய இயலாதது .

 ஸ்தல வரலாறு:

சிவனின் சாபம் நீங்க ஆதிசேடன் சிவராத்திரி
முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும் இரண்டாம் சாமத்தில்
திருநாகேஸ்வரம் நாகநாதர் மூன்றாம் சாமத்தில் திருப்பாம்புரம் வந்து
வழிபட்டு விமோச்கனம் பெற்றதாக வும் ,திருப்பாம்புரத்தில் வாழும்
பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதால் யாரையும்
தீண்டுவதில்லை.

 ஆதிஷேகட தீர்த்தம் :

 திருக்கோவில் முன்பாக அழகிய
தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இங்கே வரும் பக்தர்கள் குளித்து
ஆனந்தமடைகிறார்கள். ஆச்சர்யம் : திருக்கோவில் உள்ளே இறைவன் இறைவியின் மேல் நல்லபாம்பு சட்டை உரித்தது 2002ல் நடந்த அற்புத நிகழ்வாகும் .

முடிவுரை:

 கடந்த ஆறுமாதத்திற்கு முன்பூ சென்ற அற்புத திருக்கோவிலில்
திருப்பாம்புரமும் ஒன்றாகும் . பல தோஷங்கள் மற்றும் ஜோதிடத்தில்
கூறப்படும் நாகதோஷங்களை நீக்கும் அருமருந்தாக திருப்பாம்புரம்
விளங்குகிறது.

 இராகுவும் கேதும் ஓரே உடலாக விளக்கும் அற்புத பாடல்
பெற்ற ஸ்தலமாகும் . எனது இந்த குடந்தை பயணத்தில் சில மாற்றங்கள் எம்
வாழ்வில் ஏற்பட்டன. திருக்கோவில் உள்ளே கணீர் குரலில் பாடலுடன் பாடி
பூஜிக்கின்ற திருக்கோவில் சிவாச்சாரியாரை பார்த்து அதிசயித்து நின்றேன்
.
 நிறைவான திருக்கோவில் வந்து வணங்கி ஸ்ரீ திருப்பாம்புரநாதர்
அருளைப்பெற்று உய்யுங்கள் . நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...