Tuesday, July 31, 2012

மழைவேண்டி யாகமும் கர்நாடகாவை குளிரவைத்த மழையும்



ஆன்மீக ஆச்சர்யம்

எப்போதும் இல்லாத அளவில் 2012 வருடத்தில் மழை இல்லாமல் கர்நாடக மாநிலம் கடும் வறட்சி ஏற்பட்டது .

கர்நாடகா அரசு ஏறத்தாழ 150 தாலுக்காக்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி என அறிவித்தது . பின் சுதாரித்துக்கொண்ட கர்நாடக அரசு தனது இந்து அறநிலையத்துறை யத்தின் வசம் சுமார் 18 கோடி ரூபாயை மழைக்காக யாகம் செய்யுமாறு உத்திரவிட்டது .

அதன்படி கர்நாடகா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சீனிவாசஸ் பூஜாரி கர்நாடகா முழுவதும் உள்ள 34000 திருக்கோவில்களும் தலா 5000 காசோலை அளித்து , நடத்த வேண்டிய பூஜை முறைகளுடன் நடத்த உத்திரவு பிறப்பித்தார் .

கடந்த ஜீலை 27 ஆம் நாள் பூஜை ஆரம்பிக்கப்பட்டது . கர்நாடகவின் அனைத்து திருக்கோவில்களிலும் நிகழ்த்தப்பெற்ற பூஜையின் விளைவாக அந்த இரண்டு நாட்களிலும் மழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக தென்கர்நாடகம் ,பெங்களூர் ,சிமோகா ,சிங்மங்களூர் ஆகிய பகுதிகளில் மழையின் கடுமையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . ரயில் போக்குவரத்து சேவை அன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மழைக்காக யாகமா என கேலி செய்த எதிர்கட்சிகள் மழை பெய்ததும் ஆச்சர்யப்பட்டார்களாம் . இறை வழிபாட்டின் உண்மையை உணர்ந்த கர்நாடக அரசே முனைப்பாக மழை வேண்டி யாகம் செய்தது வியப்பான ஒன்றாகும் .

இறை வழிபாடு வேண்டுவோர்க்கு வேண்டுவன கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது . தமிழகத்திலும் பழங்கால மன்னர்களும் மழை இல்லாமல் மக்கள் துன்பப்பட்ட போது மழை வேண்டி யாகம் செய்து மழையை வரவழைத்தாக நான் கேள்விப்பட்டதுண்டு.

ஆயிரமாயிரம் அறிவியல் முன்னேற்றங்கள் வந்தாலும் "அவனின்றி அணுவும் அசையாது"

இப்பதிவுவை எழுதவும் மற்றும்

உடனடியாக செய்தியை வெளியிட்ட
தினமலர் நாளிதளுக்கு நம் வலைப்பூவின் சார்பாக நன்றிகளாயிரம் .

Tuesday, July 17, 2012

மனிதரும் கடவுளாகலாம் ( சரண்யா )




மனிதரும் கடவுளாகலாம் [சரண்யா]

சென்ற வாரம் கோவை ஈரோடு மாவட்டச் செய்திகளில் வலம் வந்த முக்கியமானவர் .

கடந்த ஜீன் 30 2012 அன்று கோவையில் இருந்து கருத்தரங்கு ஒன்றுக்காக சாலினா,சரண்யா, ,விமல் , உட்பட 6 பேர் சேலம் சென்று கருத்தரங்கு முடித்து விட்டு

சேலத்திலிருந்து கோவை நான்கு வழிச்சாலையில் காரில் பயணித்து இரவு 9 மணிக்கு வந்தபோது கோவையில் இருந்து சித்தோடுக்கு ஒரு லாரி திடிரென குறுக்கே வர காரும் லாரியும் எதிர்பாரத விதமாக மோதிக்கொண்டன..

காரில் வந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள் . ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட சாலினா என்பவரும் இறந்து விட


சரண்யா மேல் சிகிச்சைக்காக கோவையில் ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பிறகு சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் சரண்யாவின் அப்பாவிடம் தெரிவிக்கவும் இடிந்து போன சரண்யாவின் அப்பா மணியன் தனது மகளின் உடல் உள்ளுருப்பகளை தானமாக தர ஒப்புதல் தந்தார் .

அதன்படி பல்வேறு மருத்துவ மனைகளிகளில் இருந்து வந்த மருத்துவர்களிடம் சரண்யாவின் உடல் உள்ளுருப்புகளை தரப்பட்டது .இதனால் 7 நோயாளிகளுக்கு புதுவாழ்வு கிடைத்தது.


சரண்யா பற்றி :

கோவை ரத்தினபுரியை சேர்ந்த சரண்யா B.E எலக்ரிக்கல் முடித்து 93 சதவீத மதிப்பெண் பெற்று கடைசியாக நடந்த தேர்வில் தேர்வானவர்.பள்ளி கல்லூரி நாட்களில் சமுக சேவையில் விருப்பமுடையவர் .

சரண்யாவின் சமுக சேவை எண்ணம் போல வே அவர் உள்ளுருப்பு தானத்தால் "இறந்த சரண்யாவின் ஆத்மா சாந்தியடைந்தது. சிறிய வயதில் இருந்து அவருடன் ஒன்றாக படித்த சாலினா என்ற தோழி இதே விபத்தில் இறந்து விட்டார் .

மலர்கள் சில காலையில் பூத்து
மாலையில் காய்ந்து
போகும்.... .!

சரண்யா போன்ற
பூக்கள்
இருந்தாலும்
உதிர்ந்தாலும்
காலமெல்லாம் அதன் வாசம்
நம்முடன் -எப்போதும்
கலந்திருக்கும்.

முடிவுரை:

உடல் உள்ளுருப்பு தானம் செய்து மறைந்த சரண்யாவிற்கும்
அதே விபத்தில் இறந்த மற்ற நான்கு ஆன்மாக்கள்
சாந்தி அடைய இறை துணை வேண்டுகிறேன் .

Friday, July 13, 2012

விண்ணப்பித்து விட்டீர்களா? கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012_13 க்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு 2012 _13 க்கான அறிவிப்பை கடந்த 9.7.12 அன்று வெளியிட்டது. இதன்படி 1870 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்கிறது.

விண்ணப்பங்கள் அனுப்ப 10.8.12 கடைசி தேதியாகும் .
வங்கி அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் கட்ட கடைசி நாள் 14.08.12
தேர்வு நடைபெறும் நாள் 30.09.12 காலை 10மணிமுதல் மதியம் 1 மணி வரையாகும் .

21 வயது முடிந்த 40வயதிற்குட்பட்ட 10ஆம் வகுப்பு படித்த தமிழ்நாட்டை சேர்ந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம் . பொது அறிவு பொதுதமிழ் ஆகியவற்றில் 200வினாக்களுக்கு 300மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் .

விண்ணப்பதாரர்கள் 10.7.12 செய்தித்தாள்களை பார்த்தோ அல்லது

www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net

ஆகிய இணையங்களில் விபரங்களை பார்த்து விண்ணப்பிக்கவும்

முடிவுரை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் மேற்கண்ட முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .
உங்கள் நன்பர்களுக்கு இந்த தகவல் பயன்படும் ஆகவே அனைவருக்கும் பகிருங்கள் .
நம் வலைப்பூவைப் பார்த்து விண்ணப்பித்து தேர்வு எழுதும்

அனைவருக்கும் ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்

குருவரெட்டியூர் ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் முதலாம் ஆண்டு நிறைவு விழா


SRI kakuvai mariamman temple function -2012 GURUVAREDDIYUR


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர்
அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேகம்
சென்ற வருடம் நடந்து முடிந்தது .

அதைத்தொடர்ந்து முதலாம் ஆண்டு நிறைவு விழா நந்தன வருடம்

ஆனி மாதம் 26 ஆம் நாள் 10.7.2012 செவ்வாய் கிழமை நிறைவு பெற்று அதிகாலை 5 மணிக்கு காவிரி ஆறு சென்று தீர்த்தம் கொண்டு வந்து காலை 11மணிக்கு யாக வேள்வியுடன் அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையம் தவத்திரு அங்கப்பன் சுவாமிகள் அவர்களால் யாக வேள்விகள் செய்யப்பட்டு சிறப்பான அலங்கார பூஜை நடைபெற்றது.

மதியம் 2 மணிக்கு சிறப்பான அன்னதானம் இடப்பட்டு நிறைவு பெற்றது.


குருவரெட்டியூர் பகுதி மக்கள் பலரும் ஆன்மீக அன்பர்களும்
கலந்து கொண்டு ஸ்ரீ கக்குவாய் மாரியம்மன் அருள் பெற்றுச்சென்றனர் .

Saturday, July 7, 2012

திருப்பங்கள் தரும் திருப்பதி ஸ்ரீஏழுமலையான் தரிசனம்




திருப்பங்கள் தரும் திருப்பதி நடைப்பயணம்


கடந்த ஒருமாதங்களுக்கு முன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆசைப்பட்டு திருப்பதி கிளம்பினோம் . 12 வருடங்கள் கழித்து திருப்பதியை பார்க்க விரும்பி எங்கள் கிராமத்தில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் அடைந்து காட்பாடி ரயில் நிலையம் அடைந்து அங்கிருந்து திருப்பதி ரயில் நிலையம் அடைந்தோம் .


நண்பர் கூறியபடி நடைபாதையாக சென்றால் ஏழுமலையானை எளிதாக தரிசனம் செய்யலாம் என கூற ஓர் ஆட்டோவில் மலைப்பாதை அடிவாரத்தை அடைந்தோம் .

அங்கிருந்து மலையைப்பார்த்தால் மிகப்பெரிய பாறை செந்நிறத்தில் வித்தியாசமாக தெரிகிறது. எளிதான நடைப்பயணம் தான் என ஆரம்பத்தில் சொன்னார்கள் அடிவாரத்திலுள்ள படிகளில் கற்பூரம் கொளுத்தி அங்குள்ள சன்னதியில் வழிபட்டு முதற்படிக்கட்டில் காலடி வைத்தால் வருணபகவான் மழையை பொழிய ஆக அருமையான குளிர்ச்சி திருப்பதி ஏழுமலையான் நாம் வருவதை அறிந்திருப்பார் போலும் சந்தோஷமாக இருந்தது.

படிக்கட்டுகளில் சந்தனம் ,குங்குமம்,மஞ்சள் என பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க படிக்கட்டில் தடவி கற்பூரம் கொளுத்தி "கோவிந்தா "என பக்தி மயமானது படிக்கட்டுகள் . மழை நீரில் முன்பே படிக்கட்டில் இடப்பட்ட சந்தனமும் ,குங்குமம் ,மஞ்சள் ஆகியவை நம் கால்களை சிவப்பு கலராக்கியது.

தொடர்ந்து பயணத்தை ஆரம்பிக்க ஆங்காங்கே பக்தர்கள் தங்கள் உடற்கடன்களை முடித்துக்கொள்ள பளிச் கழிவறைகள் , இருக்கின்றன. படிக்கட்டை அவ்வப்போது சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் என எங்கும் சுத்தம்.

மாலை 4.00 மணிக்கு துவங்கிய நம் பயணம் நடந்து கொண்டே இருந்தோம் . 6. 00 மணியளவில் திருப்பதி தேவஸ்தானத்தால் நமது போட்டோ எடுக்கப்பட்டு தரிசன நேரம் இரவு 12 மணி எனக்குறித்து நடைபாதைபக்தர் எனக்குறித்து அனுப்புகிறார்கள் . ஆங்காங்கே பாதுகாப்பிற்கு ஆந்திர காவலர்கள் இருக்கிறார்கள் .

அங்கிருந்து பல படிக்கட்டுகள் ஏறி ஒரு மணி நேரம் பயணித்தால் நம் போட்டோ அடையாள அட்டையில் ஒரு சீல் வைத்து தருகிறார்கள் .செல்லும் வழிகளில் ஆங்காங்கே ஆழ்வார்கள் சன்னதி சிலைகள் நிறுவி அழகுபடித்தி இருக்கிறார்கள்.ஆங்காங்கே கடைகள் படிக்கட்டுகளில் இருக்கின்றன.

இடையில் ஓர் பெரிய பூங்காவில் நிறைய மான்கள் இயற்கையாக வளர்க்கப்படுகிறது.முகம் மட்டுமே கருப்பாக காணப்படும் ஒருவகை குரங்கு காணப்படுகிறது.சற்று தூரம் பயணித்தால் பெரிய அனுமன் சன்னதி யை காணலாம் .

தொடர்ந்த நம் பயணத்தில் இடையே பர்ஸ் மிஸ் பண்ணிவிட்டேன் என குடும்பத்துடன் காசு கேட்கும் ஏமாற்றுப்பேர்வழிகள் உள்ளார்கள் உஷார். ஏழுமலை கொண்ட அடுக்கில் நீண்டு கொண்டே செல்கிற நம் மலைப்பாதை காணற்கறியது. ஒருவழியாக ஓட்டமும் நடையுமாக 6 மணி நேர நடைப்பயணத்திற்குப் பின் திருமலையை அடைந்தோம் .

இரவு 10 மணிக்கு திருமலைக்கு வந்தோம் . எங்கு பார்த்தாலும் மக்கள் மொட்டைத்தலையில் சுற்றுகிறார்கள் . நன்பரின் திருமலை வேண்டுதலின் படி மொட்டையை போட்டுவிட்டு தரிசனத்திற்காக ஒடிக்கொண்டே இருந்தோம்.இரவு 12 மணிக்கு வரிசையில் பட்டியில் அடைக்காமல் விட்டார்கள் .

கியு போய்கொண்டே இருந்தது லட்டு டோக்கன் கொடுத்தார்கள் பின் இராஜ கோபுரம் வணங்கி பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத்தகடுகளால் வேயப்பட்ட கூறைகள் அழகானது .


சரியாக இரவு ஒருமணிக்கு ஸ்ரீ வெங்கடேசப் பெருமானின் தரிசனம் கிட்டியது. சரியாக 1 நிமிடம் மட்டுமே ஸ்ரீஏழுமலையானை பார்க்க முடிந்தது. பிரகாசமனம் முகம் .தக தக வென உடல் அருமையான தரிசனம் .

வைணவத் திருத்தலங்களில் ஓர் சிறப்பான ஸ்தலமாகும் . தினமும் நம்மைபோல லட்சக்கணக்காண மக்கள் தரிசனம் செய்ய வேண்டி உள்ளதால் நாமும் ஸ்ரீ பெருமாளை வணங்கியதும் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதே முறை.

நீண்ட விடுமுறைக்கு பின் திருப்பதி திருமலையின் ஏழுமலையானை நிறைவான தரிசனம் செய்து வந்தோம் .

திருமலையில் ஏழுமலையான் குறித்த சில விபரங்கள் :

மூலவர் :ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள்

வேறுபெயர்கள் : திருவேங்கடம், ஏழுமலையான் ,

சிறப்புகள் : பழங்காலத்தில் கி.மு 500 முதல் 300 வரையிலான காலத்திய வரலாறு தமிழ் நூல்களான சிலப்பதிகாரம் மணிமேகலையில் திருவேங்கடம் என சிறப்பாக திருப்பதி அழைக்கபடுகிறது.

வைணவ திவ்யதேஷங்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக திருப்பதி போற்றப்படுகிறது.

அமைப்பு :
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்

பன்னாட்டு விமான நிலையம் :சென்னை

பிரசாதமாக காப்புரிமை பெற்ற லட்டு வழங்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடம் முழுவதும் பச்சைக்கற்பூர அபிஷேகம் நடைபெறுகிறது.

முடிவுரை :

திருப்பதி மலையில் காணப்படுகிற சிலாதாரா எனப்படுகிற பாறைகள் 250 கோடி ஆண்டுகள் முந்தையது என ஆய்வில் கூறியுள்ளனர் .
ஒரு பக்கத்தில் அடுக்க முடியாத சூட்சம சக்தியான
ஸ்ரீ வெங்கடேசப்பெருமானது அற்புதங்கள் ஏராளம் .
பகிர்ந்தவனும் பகிர்ந்ததும் சிறிய அளவே .நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...