Monday, February 27, 2012

சுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்


27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுத்து செய்தால் நன்மைகள் பலவும் நம்மை வந்து சேரும் .பழங்காலத்தில் எல்லா நல்ல விஷயங்கள் செய்யும் முன் ஜோதிடரிடம் கலந்து ஆலோசனை செய்தே ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் நல்ல காரியம் துவங்கும் போது நட்சத்திரங்கள் பார்த்து செய்து தடையில்லாமல் காரியங்கள் நிறைவேறிட இப்பதிவு உதவும்.

ரேவதி -திருமணம் சம்பந்தமான சுப நிகழ்ச்சி
சதயம் - திருமணம் மாங்கல்யம் செய்தல்
சுவாதி- திருமணம் செய்ய முடிகாணிக்கை ,பள்ளியில் சேர்க்க உகந்தது
அசுவனி - திருமணம் ,வளைகாப்பு,பூப்புனித நீராட்டு
ரோகிணி- திருமணம் கிரகப்பிரவேசம் ,வளைகாப்பு
புனர் பூசம் -மாங்கல்யம் செய்ய வளைகாப்பு நடத்த உகந்தது
மகம் -மாங்கல்யம் செய்ய ,போர்வெல் அமைக்க சிறந்தது
மிருகசீரிடம் - காதணிவிழா, முடிகாணிக்கை ,வெளியூர் பயணம் செல்ல உகந்தது
பூசம் -கிரகப்பிரவேசம் , வீடுகட்ட துவங்கலாம்
பூரம் , விசாகம்- ஆடுமாடு வாங்கலாம்
உத்திரம் - கிணறு வெட்ட உகந்தது
அஷ்தம்,மூலம் - வீடுகட்டிடப்பணி துவங்குதல் ,கிரகப்பிரவேஷம்
சித்திரை - பெயர் சூட்ட காது குத்த உகந்தது.
உத்திராடம் -ஆபரணம் வாங்க உகந்தது
அனுசம் -புதிய ஆபரணம் அணிய உகந்தது.
திருவோணம் - கிரகப்பிரவேசம்
அவிட்டம் - உபநயனம் செய்தல் கிணறு வெட்ட உகந்தது
பூரட்டாதி -விவசாயப் பணி துவங்க ஆடுமாடு வாங்க உகந்தவை
உத்திராட்டதி - சுவாமி பிரதிஷ்டை செய்யவும்
வளைகாப்பு நடத்தவும் உகந்த நட்சத்திரங்களாகும்

சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :
பூராடம் ,கேட்டை, ஆயில்யம் ,
திருவாதிரை, கார்த்திகை ,பரணி ஆகிய நட்சத்திரங்களாகும்

Thursday, February 23, 2012

சுனாமியை விரட்டிய ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . திருச்செந்தூர்



திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்
SRI SUBRAMANIAHA SWAMY TEMPLE THIRUCHENDUR

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி
அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிலிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு.
காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின்பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :


ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .


திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு

Sunday, February 19, 2012

மாசி மகா சிவராத்திரி (மறந்து விடாதீர்கள் இன்று 20.2.12 மாசி மகாசிவராத்திரி )


சைவத்திருமார்களும் சிவனடியார்களும் சிவவழிபாடு செய்வது மரபு . அதில் மாதமாதம் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியை மிகுந்த விஷேச நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர் .

மாசி மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவன் நினைப்போடு மாலையில் நன்கு குளித்து சிவாய நமஹ எனச்சொல்லி சுத்த வெண் திருநீறு தரித்து
" ஓம் சிவாய நமஹ"

'' ஓம் நமச்சிவாய''

எனும் பஞ்சாட்சர மந்திரங்களை இடைவிடாது உச்சரித்து விரதமிருந்து ஏதேனும் ஓர் சிவாலயத்தில் கண்விழித்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்சனை செய்து தேவாரம்,திருவாசகம் , பாரயணம் செய்வது சிவபெருமானுக்கு அருகில் நாம் செல்ல வைக்கும் அரியதோர் வாய்ப்பு

மகா சிவராத்திரியில் சிவபெருமானை வணங்குவதன் பலன் :

நூறு அசுவமேதயாகம் செய்த பலன் .
அறிந்தும் அறியாமலும் செய்த பாவ நிவர்த்தி ,
அடுத்த பிறவியில் சிவலோக பதவி, ஆகியவை கிட்டும் .

சிவன் ஜோதி வடிவில் உருவமாகவும் அருவவடிவில் லிங்கமாகவும் அருள்புரிகிறார் . அப்படி சிவன் லிங்கத்தில் அருவமாகி காட்சி தரும் நாளே சிவராத்திரியாகும் . மாசிமாதத்தில் தேய்பிறை சதுர்தசி திதியில் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. வருடம்முழுவதும் சிவராத்திரி விரதமிருக்கமுடியாதவர்கள் மாசிமகா சிவராத்திரியன்று வணங்குவது வருடமுழுவதும் சிவனை வணங்கியதற்கு சமமாகும்.

கயிலாயத்தில் ஓர் நாள் பார்வதி தேவி சிவபெருமான் கண்களை மூட சிவனின் இரு கண்களான சூரிய சந்திரகளை மறைத்தது போலகிவிட உலகம் இருண்டு ஜீவராசிகளும் மக்களும் பயந்து நடுங்க அப்போது சிவன் தன் அக்னி வடிவான நெற்றிக்கண்ணைத்திறக்க அனைத்து உயிர்களும் மேலும் பயம் கொள்ள பார்வதி தேவியார் தான் செய்த தவறை உணர்ந்து அன்றிரவு சிவனுக்கு நான்கு காலபூஜைகள் செய்து சிவனை வழிபட்டார் .

பூஜையில் மகிழ்ந்த நெற்றிக்கண் அக்னி தளர்ந்து அருள் ஒளியாக்கினார் . பார்வதியை நோக்கி சிவன் என்ன வரம் வேண்டுமெனக்கேட்க தாம் செய்த பூஜை சிவனுக்குரிய பூஜைநாளாக சிவராத்திரி பூஜையாக அருள வேண்டுமெனவும் , இந்த சிவராத்திரியில் நான்கு காலபூஜை செய்து அபிஷேகித்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு வாழ்வில் எல்லா ஐஷ்வர்யங்களும் கிட்ட வேண்டுமென அருள்புரியுங்கள் எனக்கேட்க அப்படியே ஆகட்டும் தேவி என ஆசிர்வதித்தார் சிவபெருமான் .

புராணங்கள் சிவராத்திரியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் :
அர்ஜீனன் தவமிருந்து பாசுபதம் என்ற அஸ்திரம் பெற்றது ஓர் சிவராத்திரியில்
பகிரத முனிவர் கடும் தவம் செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்தது. கண்ணப்பநாயானார் முக்தி பெற்றது சிவராத்திரி நாளில்தான் .
சிவன் பார்வதிக்கும் தம் இடப்பாகம் கொடுத்து மகாசிவராத்திரி நாளில்

இப்படி ஆயிரமாயிரம் புண்ணியங்கள் நிறைந்தது மகா சிவராத்திரி என சிவபுராணங்கள் இயம்புகின்றன. வயதானவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் சிவபுராணம் பாராயணம் செய்யுங்கள் .

இளம் வயதினர் தூங்கமலிருந்து அருகிலுள்ள சிவாலயங்கள் பலவற்றிக்கும் சென்று சிவதரிசனம் செய்யுங்கள் .கல்வி,வேலை ,திருமணம் போன்ற உயர்வுகள் கிட்ட சிவபெருமான் உங்களுடனிருப்பார் .

வெளியூர் வெளிநாடுகளில் வாழ்ந்தால் என்ன சிவாலயம் செல்ல முடியாவிட்டாலும் சிவனின் படங்களை பூஜையறையில் வைத்து வழிபடுங்கள் . யாருக்கேனும் இந்த இனிய நாளில் அன்னதானமிடுங்கள் . அல்லது அன்னதானத்திற்கு உதவுங்கள் .
அன்பே சிவம் .

எங்கும் நீங்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை வணங்குங்கள் .சிவபெருமான் உங்கள் உடனிருந்து வழி நடத்துவார் . ஓம் சிவாய நமஹ

இராமேஸ்வரத்தின் 22 தீர்த்தங்களில் நீராடுவதின் பலன்


இராமேஸ்வரம் தீர்த்தங்களை ஸ்ரீ ராமர் உருவாக்கி ஸ்ரீஇராமேஸ்வரை பிரதிஷ்டை செய்து இராவணை வதம் செய்த பின் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார் என்பது புராணகால கூற்று அப்படி பல விஷேசங்கள் பெற்ற ஸ்ரீ ராமலிங்கசாமி திருக்கோவில் உட்புறத்தில் 22 தீர்த்தங்களும் வெளிப்பகுதியில் 31 தீர்த்தங்களும் இராமேஷ்வரத்தை சுற்றியும் அமைந்துள்ளன.

22 தீர்த்தங்களில் குளிப்பதால் என்ன நன்மை கிட்டுமென பார்ப்போம். ஆனால் திருக்கோவில் எதிரே உள்ள கடலில் கலந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டே 22 தீர்த்தங்களில் நீராட வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்

22 தீர்த்தங்களும் நீராடுவதின் பலனும்

1. மகாலட்சுமி தீர்த்தம் - ஐஸ்வர்யம்
2.சாவித்திரி தீர்த்தம் - சாப நீக்கம்
3.சந்ததியில்லாதவர் சாப நீக்கம்
4. சரசுவதி தீர்த்தம் - அறியாமையால் சடங்கு செய்தாது விட்ட பாவ சாப நீக்கம்
5. சேது மாதவ தீர்த்தம் - செல்வம் ,லட்சுமி கடாட்சம் சித்த சுத்தி
6.கந்தாமன தீர்த்தம் - தரித்திர நீக்கம் ,
7 சுவாட்ச தீர்த்தம் - சொர்க்கத்திற்கு செல்லலாம்
8. கவாய தீர்த்தம் - நீண்ட ஆரோக்கியம்
9. நளதீர்த்தம் - நல்ல சுகம் சொர்க்கம்
10. நீள தீர்த்தம் - பெரும் யாகம் செய்த பலன்
11. சங்கு தீர்த்தம் - செய்நன்றி மறந்த பாவம் போகும்
12. சக்கர தீர்த்தம் -அனைத்து நோய் நிவர்த்தி
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - மகா பாவங்கள் ,பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி. பில்லி .சூன்யம் போன்ற அனுமானுஷ்ய தீவினைகளிலிருந்து விடுதலை
14. சூரிய தீர்த்தம்- ஞானம்
15.சந்திர தீர்த்தம் - அழகு அறிவு ஞான விருத்தி
16. கங்கா தீர்த்தம் - ஞானம்
17. யமுனா தீர்த்தம் - ஞானம்
18. சிவ தீர்த்தம் - சிவகடாட்சம் ஐஷ்வர்யம்
19. சாத்யமிர்த தீர்த்தம் - சாப நீக்கம்
20 கயா தீர்த்தம் -ஞானம்
21 சர்வ தீர்த்தம் - பிறவி நோய் அனைத்து சரிர நோய் நீக்கம்
22. கோடி தீர்த்தம் -
ஸ்ரீ ராமர் ஸ்ரீ ராமலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்ய பயன் படுத்திய மகா தீர்த்தமே கோடி தீர்த்தமாகும் . இந்த தீர்த்தத்தில் நீராடித்தான் கம்சனை கொன்ற பாவம் கிருஷ்ணபகவானுக்கு நீங்கியதாக புராணவரலாறு .

மேற்கண்ட பலன்கள் யாவுமே திருக்கோவில் கேட்ட செவிவழிச்செய்திகள் . சுற்றிலும் ராமேஷ்வரத்தை கடல் சூழ்ந்து இருக்க 22 தீர்த்தங்களில் நீராடி கொஞ்சம் சுவைத்துப்பாருங்கள் .ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சுவை . இராமயணக்காலத்தில் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட் இந்த ஸ்தலத்தின் பெருமையுணர்ந்து இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவது வழிபடுவதுமே ,
ராமேஸ்வரம் காலத்தால் அழியாத தமிழர்க்கு கிடைத்த மகா பொக்கிஷம் .

Saturday, February 18, 2012

ஸ்ரீ ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஸ்ரீ ராமேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட
ஸ்ரீ இராமநாதர் (சிவபெருமான் )திருக்கோவில் ராமேஸ்வரம்


மூலவர் :
ஸ்ரீ இராமேஷ்வரர் (ஸ்ரீ ராமலிங்கம், ஸ்ரீராமநாதர்) என்ற பெயராலும் அழைக்கப்படுவதுண்டு


முதலில் ராமாயண காலத்தில் நடைபெற்ற சிலவற்றை நினைவு கூர்வோம் . இராவணை கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமேஷ்வரம் கரைக்கு வந்த ஸ்ரீ ராமர் மகரிஷிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்து 22 தீர்த்தக்கிணறுகளை உருவாக்கி குளித்து ஸ்ரீ ராமர் ,சீதை ,லட்சுமணன் மூவரும் தோஷம் நீங்க சிவாயலயம் பிரதிஷ்டை செய்து சிவலிங்கம் அபிஷேகம் செய்தால் தீருமென முடிவெடுத்தனர் .

அதன் படியே அனுமனை கயிலாயத்திற்கு அனுப்பி சிவலிங்கம் கொண்டு வருமாறு குறிப்பிட்ட தேதி மணி குறித்து இராமேஷ்வரத்திற்கு கொண்டு வருமாறு கூறினார் . அதன் படியே அனுமனும் கயிலாயம் சென்று சிவலிங்கம் கொண்டு வந்து கொண்டிருந்தார் .

குறிப்பிட்ட நாள் மணியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் நேரமும் வந்தது . அனுமனைக்காணாது தவித்த சீதை உடனே மண்ணால் ஓர் சிவலிங்கம் பிடித்து வழிபாட்டை ஆராம்பித்தனர் அதையே தற்போதுள்ள இராமலிங்கம் , இராமேஷ்வரர் என அழைக்கிறோம் .

ஐந்து நிமிடம் தாமதமாக வந்த அனுமன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை தொடங்கியதை அறிந்து கோபமுற்று மண்ணாலான இராமேஷ்வர லிங்கத்தை அகற்ற முயன்று முடியாததால் ஏமாற்றமடைந்தார் .

அனுமனின் கஷ்டமறிந்த ஸ்ரீராமர் மண்ணாலான இராமேஸ்வரர் அருகில் அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுமன் கொண்டு வந்த விசுவ லிங்கத்திற்கு முதல் பூஜையும் இரண்டவதாக சீதா செய்த மண்ணாலான சிலைக்கும் பூஜிக்குமாறு கூறினார்

இராமேஷ்வரத்தின் சிறப்புகள் :

ஸ்ரீ இராமனால் உருவாக்கப்பட்ட ஸ்தலம் .
பிரம்மஹத்தி முதலான 22தோஷங்களை நீங்கும் ஸ்தலம் .
இந்தியாவில் உள்ள புண்ணியஸ்தலங்களில் தெற்கே அமைந்த ஒரே புகழ் பெற்ற சிவஸ்தலம்.
இராமேஷ்வரம் 12 ஜோதி விங்களில் ஒன்று.
மூர்த்தி,தீர்த்தம் ,ஸ்தலம் ஆகிய முப்பெருமைகளை கொண்ட ஷ்தலம் .
இராமேஸ்வரத்தின் சேதுவின் படுக்கையில் அமைந்த ஷ்தலம் .
ஸ்ரீ தாயுமானவர் , ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீதிருஞானசம்பந்தர் ,ஸ்ரீ திருநாவுகரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் .
சைவம் ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான ஸ்தலம் .

கால வரலாறு :

இராமயணக்காலத்தில் தோன்றிய இராமேஷ்வரம் திருக்கோவில் ஓர் சித்தரின் பாதுகாப்பில் இருந்து வந்ததாகவும் 12 ஆம் நூற்றாண்டில் இலங்கை அரசர் பராக்கிரம பாகு என்பவரால் முதல் மூலஷ்தானம் துவங்கப்பட்டதாக கல்வெட்டுகள் இயம்புகின்றன.

மூலவர் ஸ்ரீ இராமநாத சுவாமி சன்னதி:

முதல் பிரகாரத்தில் ஸ்ரீ இராமநாதர் எழுந்தருளியுள்ளார் . மணலால் சீதையால் ஊருவாக்கப்பெற்று இராமரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட முதல் லிங்கமாகும் .

ஸ்ரீ விசுவநாதர் சன்னதி:

அனுமனால் கயிலாயத்திலிருந்து கொண்டு வரப்பெற்ற லிங்கமாகும் . ராமநாதர் சன்னதிக்கு வடக்குபுறம் அமைந்துள்ளது. ஸ்ரீ ராமரின் கூற்றுப்படி இன்றும் முதலில் விசுவநாதர் சன்னதியில் முதல் பூஜை நடைபெறுவது கவனிக்கத்தக்கது.

ஸ்ரீவிசாலட்சி அம்பிகை சன்னதி:

விசுவநாதரின் தேவியாக விசாலாட்சி அம்பாள் இங்குள்ளார் .முதல் பூஜை ஸ்ரீ விசுவநாதருடன் இணைந்து விசாலாட்சிதேவிக்கும் நடைபெறும்.

பர்வதவர்த்தினி அம்பிகை சன்னதி :

ஸ்ரீஇராமநாத சுவாமிகளின் அம்பிகையான பர்வதவர்த்தினி அமைந்துள்ளது .சுவாமி சன்னதிக்கு வலப்புறம் அம்பிகை இருப்பது மிக விஷேசமாகும் . இங்கு அந்த அமைப்பு உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்கரம் கண்டு வழிபட வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் உட்பகுதியில் மேலும் காணவேண்டிய சன்னதிகள் :
1.அருள்மிகு விக்னேஸ்வரர்
2.ஸ்ரீ சேதுமாதவர்
3.ஸ்ரீ ஜோதிர்லிங்கம்
4. ஸ்ரீ சஹஷ்கரலிங்கம்
5. ஸ்ரீ வஜ்ரேஷ்வரர்
6. ஸ்ரீ நடராஜர்
7பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி
8. ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள்
9.ஸ்ரீ ஆஞ்சநேயர்
10.ஸ்ரீ 63நாயன்மார்கள்
11. ஸ்ரீ சிவதுர்க்கை
12. ஸ்ரீ மகாலட்சுமி

நடராஜர் சன்னதி :
உலகப்புகழ் கொண்ட நடராஜர் சன்னதி மூன்றாம் பிரகாரத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. மிகப்பெரிய அளவில் உள்ள மூன்றாம் பிரகாரம் அதிசயிக்க தக்க ஒன்றாகும் . இது சபாபதி சன்னதி எனவும் அழைக்கப்படும் .18 சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி அருகே அமைந்துள்ளது. இவர் ஆதிஷேசன் அவதாரமென அழைக்கப்படுகிறார் .

ஜோதிர்லிங்கம் விபீஷணரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அழகாக உள்ளது. திருக்கோவிலினுள் 22 தீர்த்தங்களும் மற்ற 31 தீர்த்தங்களும் திருக்கோவிலுக்கு வெளியே இராமேஸ்வரத்தை சுற்றி அமைந்து உள்ளது. எல்லா விசேச திருக்கோவில்களையும் போல 6 காலபூஜை நடைபெறுகிறது .

மண்டபம் பாம்பனுக்கு இடையே கடலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால் போக்குவரத்து எளிது. ஈரோட்டிலிருந்து பஸ்பயணமாக 375 கி.மீட்டரும் மதுரையில் இருந்து 165 கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து 666கி.மீட்டர் தொலைவிலும் இராமேஷ்வரம் உள்ளது. இராமேஷ்வரம் புகை வண்டி பயணமும் ஏதுவானதே.

முடிவுரை :
நம் ஆன்மீக அன்பர்கள் காசியில் துவங்கும் பயணத்தை இராமேஷ்வரத்தில் முடிப்பார்கள் . காசி ,திருப்பதி, கயிலாயம் போல மிகச்சிறப்புகளை கொண்டது ராமேஸ்வரம் . மூர்த்தி,தீர்த்தம் ஷ்தலமென முப்பெருமைகளை உடையது.

நல்லதோர் வாழ்வினை தொடங்க விரும்பும் யாவரும் குடும்பத்துடன் சென்று கடலில் அக்னி தீர்த்ததில் நீராடி பின் 22 தீர்த்தங்களில் நீராடி ஸ்ரீ இராமநாத சுவாமிகளையும் ,
ஸ்ரீ விசுவநாதரையும் சிவபெருமானுக்குரிய நாளில் வந்து வணங்கி வாழ்வின் எல்லாதோஷங்களும் விலகி நலமும் வளமும் காண வாழ்த்துக்கள் . நட்புடன் குரு.பழ.மாதேசு

Monday, February 13, 2012

அருணகிரி நாதருக்கு படிச்காசு வழங்கி காட்சி தந்த ஸ்ரீ சென்னி மலை சுப்பிரமணிய சுவாமி



ஸ்ரீசென்னிமலை முருகரின் அற்புதங்கள்

sri chennimalai murgar special

மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணியர் (தண்டாயுதபாணி கோலம் )

அமைவிடம் : ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் ஊரின் பெயரும் ,மலையின் பெயரும் ஒருங்கே அமையப்பெற்ற சென்னிமலை சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்திலிருந்து 1750அடி உயரத்தில் அமைந்துள்ள பெரிய குன்று ஆகும் இது சென்னியங்கிரி,சிரகிரி, சென்னிமலை என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஸ்தலவரலாறு :

ஆதிஷேசனுக்கும் வாயு பகவானுக்கும் ஒரு முறை யார் பலசாலி என பலபரிட்சை நிகழ்ந்த போது வாயுபகவானால் தூக்கி வீசப்பட்ட ஆதிஸேசனின் சிரசு விழுந்த மலை சிரகிரி (சிரம் என்றால் தலை கிரி என்றால் மலை) என்றும் பீடம் விழுந்த இடம் திருப்பதி ஏழுமலை என்றும் ஷ்தலபுராணாங்கள் இயம்புகின்றன.

பழங்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கொடுமணல் பகுதியில் வேளாளர் இனத்தின் பசுமாடு குறிப்பிட்ட புற்று மணல் உள்ள இடத்தில் பால் செரிவதை ஆச்சர்யத்துடன் தோண்டிப்பார்க்க சுயம்பு மூர்த்தியாக ஸ்ரீ முருகப்பெருமான் இடுப்பு பகுதிவரை மட்டுமே செதுக்கப்பட்ட நிலையில் வெளிப்பட்டார் .

அழகிய முருகரின் சிலை அனைவரும் மெய் சிலிர்த்து கொண்டாட அங்கு வந்த முருகர் அடியார் முருகர் அருள் வந்து ஸ்ரீமுருகப்பெருமானை பிரதிஷ்டை செய்ய சிரகிரி குன்றில் வைத்து வழிபாடு செய்யுங்கள் எனச்சொல்ல ஆன்மீக அன்பர்கள் முருகப்பெருமானே நேரில் வந்து சொன்ன வாக்காக எண்ணி பாதி உருவமேயுள்ள முருகர் சிலையை அழகாக செதுக்கலாம் என சிற்பி செதுக்க முதல் வெட்டிலேயே ஏற்பட்ட காயம் காரணத்தால் இரத்தம் வர ஸ்ரீ முருகப்பெருமானை அப்படியே கொண்டு சென்று பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர் .

இன்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியாக காட்சி தரும் மூலவர்க்கு இடுப்பு பகுதிக்கு கீழ்பகுதி செதுக்கப்படாமல் அப்படியே உள்ளது. உளிபட்ட சிறுகாயமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகப்பெருமான் இங்கு கிரக அதிபதியாக வீற்றிருக்கிறார்

சிறப்புகளும் அதிசயங்களும் :

ஸ்ரீகந்தர் சஷ்டி கவசம் பாடல் பாலன்தேவராயன் அவர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்ட ஸ்தலம் பின்நாக்கு சித்தர் உறையுமிடம் ,அருணகிரி நாதரால் பாடல் பெற்ற ஸ்தலம் முருகப்பெருமானை காண வேண்டி அருணகிரி நாதர் " உனை எனதுள் நினையும் அன்பைத்தருவாயே" எனப்பாடி மனமுருகி வேண்டியதால் சென்னிமலையில் காட்சி தந்து முருகப்பெருமான் அருணகிரி நாதருக்கு "படிக்காசு" வழங்கினார் என்பது ஸ்தலவரலாறு கூறும் உண்மை.

,9 நவக்கிரகங்களை தன் மூலவிமானத்தில் ஒருங்கே கொண்ட பரிகாரத்தலம் ( இங்கு வணங்கினால் நவகிரகங்களை வணங்கிய புண்ணியம் கிட்டும் ) , வள்ளி தெய்வானை தேவியர் அமுதவள்ளி சுந்தரவல்லியாக தவமிருந்த தலம் ,செங்கத்துறை பூசாரி அவர்களால் மாட்டு வண்டியை 1320படிகளை ஏற்றிய ஷ்தலம் , மாமாங்க தீர்த்தம் பொங்கும் சுணை, சரவணமுனிவர் ,தன்னாசியப்பர் அருளும் மலை, காளைகள் வாயிலாக முருகப்பெருமானுக்கு தீர்த்தம் கொண்டு வரும் அதிசயமென எண்ணிலடங்காக அதிசயங்களை கொண்ட மலையாக விளங்குகிறது சென்னிமலை .

திருக்கோவில் செல்ல வழி :

ஈரோடில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் 30கி.மீட்டரில் சென்னிமலை முருகர் திருக்கோவில் உள்ளது . சேலத்திலிருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 80கி.மீட்டர் தொலைவிலுள்ள பெருந்துறையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் 10 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை உள்ளது.

ஆறு காலபூஜை நேரங்கள் :

விழாகாலபூஜை காலை 7 மணி காலசந்தி காலைபூஜை 8 மணி உச்சிகால பகல் பூஜை பகல் 12 மணி சாயரட்சை மாலை பூஜை 5 மணிக்கும் இராக்காலம் பூஜை இரவு 7 மணிக்கும் அர்த்தசாம பூஜை இரவு 8 மணிக்கும் நடைபெறுகிறது.

திருவிழாக்கள்:

தைப்பூசம் ,பங்குனி உத்திரம் ,சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் , ஆடி அமாவசை கிருத்திகை,கந்தர்சஷ்டி சூரசம்ஹாரம் , கார்த்திகை தீபம்,

மரத்தேர் :

ஸ்ரீமுருகப்பெருமான் வேங்கைமரமாக வந்து வள்ளியை மணம்புரிந்ததும் ,திருக்கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஆன்மீகமரமான வேங்கை மரத்தினால் செய்யப்பட்ட மரத்தேர் பக்தர்கள் விரும்பும் நாளில் நேர்த்திக்கடன் செய்யலாம் கட்டணம் ரூ700 ஆகும் . திருப்பணி செய்யவிரும்பும் பக்தர்கள் செயல் அலுவலர் தொலைபேசியில் அழைக்கலாம் .

அலுவலகம் : 04294- 250223

மலைக்கோவில் : 04294-250263 ,292595
இணையத்தள முகவரி : www.chennimalaitemple.org

மின்னஞ்சல் : chenkovil@sancharnet.in


திருக்கோவில் பற்றிய மேலும் விபரங்கள் எமது நன்பர் திரு பிரகாஷ் அவர்களின் பிளாக்கில் அறியலாம்

www.chennimalaimurugan.blogspot.com

இந்த வலைப்பூவில் சென்னிமலை முருகரின் முழு விபரத்தொகுப்பு உள்ளது . அல்லது இப்போது படித்துக்கொண்டிருக்கின்ற வலைப்பூவில் உள்ள முருகர் படத்தை கிளிக்கினால் மேற்கண்ட வலைப்பூவிற்கு (blog) செல்லும் . இங்கு வாழ்ந்த அடியார்கள் சித்தர்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

சிறிய பகுதியில் அடைக்க முடியாத பெரும் புகழும் 2000வருடங்கள் பழமையான உலகலாவிய பெருமைகள் சிறப்புகள் கொண்ட ஸ்ரீசென்னிமலை சுப்பிரமணியசாமியை வந்து வணங்குங்கள் .

கலியுகத்தில் ஸ்ரீ தேவேந்திரனால் பூஜிக்கப்பட்ட 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழங்கால சரித்திரம் கொண்ட ஸ்ரீ சென்னிமலை பாலசுப்பிரமணியரை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற்று வாழுங்கள் .ஓம் முருகா சரணம் முருகா

Friday, February 10, 2012

ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் தரிசனம் .அந்தியூர்





அருள்மிகு அந்தியூர் மலைக்கருப்பசாமி திருக்கோவில்
ARULMIGU ANTHIYUR SRI MALAI KARUPPASAMY TEMPLE
மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலின் அமைதி தழுவ குழுமையான ஓர் இடத்தில் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு தன் அருட்சக்தியால் மக்களைக் காக்கும் ஸ்ரீ மலைக்கருப்பசாமி திருக்கோவில் விஷேசமானது.

திருக்கோவில் அமைவிடம் :
அந்தியூரில் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரங்களில் பஸ் வசதி உண்டு .

செல்லும் வழி :

அந்தியூரில் இருந்து கோபி செல்லும் வழியில் (1கி.மீ ) தவிட்டுப்பாளையத்தில் இருந்து வலப்புறம் திரும்பி 9 கி.மீட்டர் பயணித்தால் சுற்றிலும் தென்னை மரங்கள் பசுமை இழுக்க பயணித்தால் அந்தியூர் மலையின் ஒருபகுதியை அடையலாம் . முகப்பில் உள்ள முனியப்ப சாமி யை வணங்கி விட்டு பின் ஸ்ரீமலைக்கருப்பசாமி திருக்கோவில் முகப்பை அடையலாம் .

ஸ்ரீதவசியப்பன் சன்னதி :

இரண்டவதாக நாம் வணங்க வந்துள்ள சன்னதி ஸ்ரீ தவசியப்பன் சன்னதியாகும் . பிரமாண்ட முனியப்பர் போன்ற மூலவர் ஸ்ரீ தவசியப்பன் சன்னதியும் அருகருகே உள்ள சிறிய அளவிலான முனியப்பர் சன்னதிகளும் சூழ்ந்து இருக்க நேர்த்திக்கடனாக குத்தப்பட்ட வேல்கள் நூற்றுக்கணக்கில் இருக்க திருக்கோவிலை சுற்றியும் புளிய மரங்கள் இருக்கிறது.

ஸ்ரீ தவசியப்பர் சைவக்கடவுள் ஆதலால் சர்க்கரைப்பொங்கல் மட்டுமே நிவேதனமாக படைக்கப்படுகிறது. ஸ்ரீ தவசியப்பர் சன்னதியில் அமைதியான சூழல் தென்படுகிறது

பூஜை முறை :

திருக்கோவில் பூசாரி அவர்கள் வலக்கையால் நிரம்பும் அளவுக்கு கற்பூரத்தை கையில் எடுத்து அதை பற்ற வைத்து ஸ்ரீ தவசியப்பர் சன்னதி மூலவர் எதிரே உள்ள சிறு குழியில் போடுகிறார் .பின்னர் அங்கு வந்துள்ள பக்தர்களுக்கு வேலில் குத்தப்பட்டுள்ள எலுமிச்சம் பழங்களை ஒவ்வொன்றாக விநியோகிக்கிறார் . பக்தர்களுக்கு பின் அங்குள்ள குங்குமம் அளிக்கப்படுகிறது.

மூலிகைச்சாறு :

திருக்கோவில் வளாகத்தில் பூஜை முடித்த பின் கொடுக்கப்படும் மூலிகைச்சாறு வாங்க பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள் . தீராத நோய்கள் , வயிற்று வலி, சளி தொந்தரவுகள் போன்ற பல உடல்ரீதியான பிரச்சினைகளுக்கு திருக்கோவில் பூசாரியால் 4 விதமான பாத்திரங்களில் வரும் பக்தர்களுக்கு முற்றிலும் இலவசமாக மூலிகைச்சாறு வழங்கப்படுவது சிறப்பு .

மன நோய் உள்ளவர் இங்கு வந்தால் சிறப்பாக நோய் தீர்ந்து நல்ல மனிதராக திரும்பி வீட்டுக்கே செல்வது மற்றொரு சிறப்பு . பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய் தீர்ந்து சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .


ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி :

திருக்கோவில் வளாகத்தில் மூன்றாவதாக ஸ்ரீ மலைக்கருப்பசாமி சன்னதி . காக்கும் கடவுளான மலைக்கருப்பசாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .ஸ்ரீ மலைக்கருப்ப சாமியை வணங்குபவர்களுக்கு பில்லி,சூனியம் ,போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு நல்லதோர் தீர்வாக தம்மை நாடி வரும் பக்தர்கள் குறை தீர்ப்பதால் லட்சக்கணக்கான பக்தர்களின் காக்கும் கடவுளாக அருள்பாலித்து வருகிறார் .

இங்கு கோழி ஆடுகளை பக்தர்கள் பலியிட்டு தாங்கள் நேர்த்திக்கடனை பல பக்தர்கள் நிவர்த்தி செய்வார்கள் . ஆனால் இங்கு வந்து ஸ்ரீமலைக்கருப்ப சாமியை வழிபட்டு நேர்த்திக்கடன் முடித்து அசைவ உணவு உண்டவர்கள் ஸ்ரீதவசியப்பர் சன்னதிக்கு வரக்கூடாது.

வாரபூஜை:

செவ்வாய் ,வெள்ளி செவ்வாய் அதிகளவு கூட்டமும் வெள்ளியில் சுமாரான கூட்டம் வரும் . இரண்டு நாட்களும் மூலிகைச்சாறு வழங்கப்படும்

வருடத்திருவிழா :

சித்திரை மாதத்தின் முதல் செல்வாய் கிழமைகளில் வருடாந்திரத்திருவிழா ஆரம்பித்து 4 நாட்கள் நடைபெறுகிறது. யானை உலவும் காட்டுப்பகுதியாதலால் ஸ்ரீ மலைக்கருப்பசாமியை வணங்க வருபவர்கள் மாலை 6 மணிக்குள் வனத்தில் இருந்து சென்று விடவும் .

காட்டுக்குள் நீண்ட தூரம் செல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது சுற்றிலும் அமைதியான சூழலில் அமைந்துள்ள காக்கும் கடவுளாம் ஸ்ரீ மலைக்கருப்பசாமி ஸ்ரீ தவசியப்பர் ,

ஸ்ரீ முனியப்பசாமியை வணங்கி தீவினைகள் நீங்கப்பெற்று வளங்கள் பெற்றிடுங்கள் .நன்றி

Tuesday, February 7, 2012

ஸ்ரீ கோனியம்மன் தரிசனம்





ஸ்ரீ கோனி அம்மன் திருக்கோவில்


SRI KONNI AMMAN TEMPLE COIMBATORE

தைப்பூசத்திருநாளில் கோவை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மருத மலை முருகரை பார்க்க முடியவில்லை என்றாலும் கோவையை காக்கும் அரசி, அம்பிகையான ஸ்ரீ கோனி அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது.

திருக்கோவில் அமைவிடம் :

பெரிய கடைவீதி ,டவுன்ஹால் கோவை.

முகப்பில் பஞ்சமுக விநாயகர் திருக்கோவில் பழங்கால அரசமரமும் ஆரம்பமே பிரமாண்டமாக இருக்க வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ கோனி அம்மன் அழகுடன் 4 கரங்களுடன் உடுக்கைவாள் சக்கரங்களுடன் மணி. கபாலம் கேடயம் கொண்டு சூட்சம சக்தியாய் இருக்கிறார் .

திருக்கோவில் வளாகத்தில் சாந்த விநாயகர் சன்னதியும் நவகிரக சன்னதி,ஸ்ரீ வள்ளி,தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் சன்னதிகள் காணக்கிடைக்காத அற்புதம் . ஸ்ரீ கோனியம் திருக்கோவில் பின்புறமுள்ள ஸ்தலமரம் நாகலிங்கமரம் அழகாய் பூத்துக் குழுங்குகிறது.

திருக்கோவில் தோன்றி 500 முதல் 1000 ஆண்டுகள் இருக்கலாம் . ஆலயம் முன்பு இருந்த ஊர் கோவன்புத்தூர் என்றும் காலப்போக்கில் மருவி கோயம்புத்தூர் ஆகிவிட்டது.

பழங்கால அரசர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் கோட்டைகள் அமைத்து அங்கு அம்பாள் சிவனுக்காக திருக்கோவில்கள் எழுப்பி உள்ளார்கள் . அந்த வகையில் ஸ்ரீகோனியம்மன் அமைவிடம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே தற்போது "கோட்டைமேடு" என்ற பகுதி தற்போதும் உள்ளது. அருகிலேயே கோட்டை ஈஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்த்திருவிழா:

வருடாந்திர விழாவாக மார்ச் முதல் வாரத்தில் அல்லது மாசி மாதத்தின் கடைசி வாரத்தில் நடைபெறுகிறகிறது. கோயம்பத்தூரின் பெரிய தேர்விழாவாக நடைபெறுகிறது. சுமார் இரண்டு வட்சம் பக்தர்கள் தேர் இழுக்க கோவை மக்களே கொண்டாடி மகிழும் அளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது.

ஸ்ரீ கோனி அம்மனை நம்பிக்கையுடன் வந்து வணங்குகள் பெரியதோர் கோவை மாநகரத்தையே காக்கும் அன்னை உங்கள் குறைகளுக்காக செவி சாய்க்க மாட்டாரா என்ன ?

உப செய்தி:

மிகப்பெரிய இராஜகோபுரம் ஸ்ரீ கோனியம்மனுக்காக தயாராகி வருகிறது.

Sunday, February 5, 2012

ஈரோட்டில் பள்ளி கொண்ட ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் திருக்கோவில்,






SRI KASTHURI RANGANATHAR TEMPLE


ஈரோடு அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோட்டில் பன்னீர் செல்வம் பூங்கா அருகில் 200மீட்டர் தூரத்தில் ஈஸ்வரன் கோவில் வீதியில் திருக்கோவில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் கோட்டை என அழைக்கப்பட்டு பல சிற்றரசர்களால் வாழ்ந்து வந்த இப்பகுதி வரலாற்று சிறப்பு மிக்கது.

திருக்கோவில் மூலவராக ஸ்ரீ கஸ்தூரி பெருமாள் அருள்புரிய பள்ளி கொண்டு பிரமாண்ட நிலையில் ஸ்ரீ பெருமாளின் தரிசனம் அழகானது. தெற்கு பார்த்த நிலையில் திருக்கோவில் மூலவர் இருக்க திருக்கோவில் இராஜகோபுரம் அழகில் ரசிக்கக்கூடிய ஒன்றாகும் .

திருக்கோவில் ஆண்டாள் சன்னதியும் தரிசிக்கவேண்டிய இடமாகும் .

ஸ்ரீ கமலவள்ளி தாயார் சன்னதி :

திருக்கோவில் பின்பகுதி பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது .பங்குனி உத்திரதன்று சுவாமியுடன் 1 நாள் மட்டும் சிறப்பாக திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரிவர் மற்றம் ஸ்ரீ தன்வந்நிரி ஸ்ரீ விஷ்வக்னேசர் சன்னதிகள் பார்த்து தரிசிக்க வேண்டிய இடமாகும் .ஸ்ரீசக்கரத்தாழ்வார் 16 கைகளுடன் தலையில் அக்னி விரிய காட்சி தருகிறார் . பழமையான தேர் புரட்டாசி தேர்திருவிழா விஷேசமானதாகும் .

ஸ்தலவிருட்சம் :

வில்வமரம் .

திருக்கோவில் வெளிபிரகாரத்தில் ஸ்ரீ ராமனுஜர் சன்னதி , ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதி ஸ்ரீ லிங்கப்பாறை ஆஞ்சனேயர் கல்வெட்டாக செதுக்கி அழகாக உள்ளார் .

மூலவரின் சிறப்புகள் :

திருக்கோவில் மூலவர்க்கு காவல் தெய்வமாக ஸ்ரீஜெயந்,ஸ்ரீ விஜயன் ஆகியோர் வீற்றிருக்க ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதர் தரிசிக்க வேண்டிய ஆலயம் .பிரகாரத்தில் ஸ்ரீகஷ்தூரி பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் வலதுகையில் தண்டம் தலைக்கு மேல் ஐந்து தலையுடன் ஆதிஸேசன் உடல் சுற்றி இருக்க ஸ்ரீ ஆஞ்சனேயர் ஸ்ரீ கருடாள்வார்கள் உள்ளனர் .

ஆனி மாதத்தில் தைலக்காப்பு 48 நாள் சுவாமியின் முகம்,பாதமே அப்போது காண முடியும் . ஸ்ரீபெருமாளுக்குரிய நாளான ஏகாதசி, சனிக்கிழமை நாட்களில் திருக்கோவிலில் கூட்டம் அலைமேதுகிறது. இங்கு வந்து இறை வழிபாட்டை மேற்கொண்டு பல நலங்கள் பெற்று பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் .

திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் :

05.30முதல் 12.30வரையிலும்
மாலை 04.30முதல் இரவு 08.30 வரையிலும் திறந்திருக்கும் .

ஈரோடு வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ கஸ்தூரி ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு கருத்துரையிடுங்கள் நன்றி.

ஈரோட்டை காக்கும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆருத்ரகபாலீஸ்வரர் திருக்கோவில் .





ஸ்ரீ வாரணாம்பிகை உடனமர் ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில்
SRI VARANAMBIKAI AND ARUTHRAKABALIESWARAR THIRUKKOVIL, ERODE

அமைவிடம் :

ஈரோடு நகரத்தின் உட்பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதியில் பழங்காலத்தில் மன்னர் ஆட்சி செய்த பகுதியில் இப்பகுதி " கோட்டை " என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் :
ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் இறைவனை திருத்தொண்டீசுவரர் ,
கோட்டை ஈஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்

அம்பாள்:

ஸ்ரீ வாரணாம்பிகை திருக்கோவில் செல்லும் வழி :

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா வந்து இறங்கி அங்கிருந்து 200 மீட்டர் நடைப்பயணத்தில் திருக்கோவிலை சென்றடையலாம் .

திருக்கோவில் சிறப்புகள் :

ஸ்ரீ ஆருத்ர கபாலீஷ்வரர் திருக்கோவிலில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் துவங்கி 1500ஆண்டுகளாக அருள்பாலீக்கும் இறைவன் கி.பி 1146 ல் குடமுழுக்கு நடந்துள்ளதாக ஆவணங்கள் பறை சாற்றுகின்றது. கதிரவனின் கதிர்கள் மாசி மாதத்தில் 25,26,27 ல் இறைவன் மேல் விழுவது விஷேசமாகும் .

கல்வெட்டு :

850 ஆண்டுகள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலாமாக விளங்கி வருகிறது. இறைவனுக்கு நான்கு கால பூஜை நடை பெறுகிறது.

அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கின்ற ஸ்ரீ ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கோவில் இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க ஓர் வழியும் , அம்பாள் ஸ்ரீ வாரணாம்பிகையை தரிசிக்க ஓர் ராஜ கோபுர வழியும் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் ராஜ கோபுரம் பின் கொடிமரம் மற்றும் நந்தீஷ்வரரை வணங்கி பின் உள்ள செல்ல முகப்பில் அருள் தரும் மகாகணபதி ,அருள் தரும் பாலமுருகரை வணங்கி இரு பிரகாரங்கள் கொண்ட அமைப்பில் உள் பிரகாரத்தில் சுவாமி ஸ்ரீஆருத்ர கபாலீஷ்வரர் சிறிய சுயம்பு மூர்த்தியாக அமைந்துள்ளார் .

சிவதரிசனம் செய்து வெளியே வந்தால் வலப்புறம் துர்க்கை என்னும் பத்ரகாளியும் பின் நால்வர் சன்னதிகளை வணங்கி 63 நாயன்மார்கள் தரிசனம் செய்து ஸ்ரீ பொல்லாப்பிள்ளையாரை வணங்கி சேக்கிழார் நம்பியாண்டார் நம்பி, நார்த்தன கணபதியை வணங்கி ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை வணங்கி

பின் உட்பிரகாரத்தில் தொடர்ந்து வலம் வர சோமாஸ் கந்தர் வணங்கி பின்புறமுள்ள லிங்கோத்பவர் பிரம்மா அழகுடன் விளங்கும் வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியரை வணங்கலாம் பின் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ,ஸ்ரீவிஷ்ணு துர்க்கையை வணங்கினால் அருகில் பழங்கால சிறிய கிணறு அழகாய் அமைந்துள்ளது. பின் நவகிரக சன்னதிகள் வணங்கி ஸ்ரீ சனீஷ்வர பகவானை வணங்கினால் உட்பிரகார முகப்பை அடைந்து விடலாம் .

ஸ்ரீ வாரணாம்பிகை சன்னதி:

கொடிமரம் வணங்கி நந்தீசர் துதித்து தனிச்சன்னதியாக வீற்றிருக்கும் ஸ்ரீ வாரணாம்பிகை அம்மன் அழகும் சக்தியும் ஒருங்கே அமையப்பெற்ற இறைவியை வணங்கலாம் . பின் வெளிப்பிரகாரத்தில் ஸ்ரீ மூல விநாயகர் வணங்கி பின் தனிச்சன்னதியில் யானை உரிந்த நாதராக வீற்றிருக்கும் ஸ்ரீ கஜ சம்ஹார மூர்த்தியை தொழுது ஸ்ரீ வாரணம்பிகை சன்னதி இடப்புறமுள்ள ஸ்ரீ சண்டிகேஸ்வரியை வணங்கி

பின் திருக்கோவில் ஸ்தலமரமாக உள்ள சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வன்னி மரம் அதனடியே வீற்றிருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை தொழுது காலபைரவரை வணங்கி சிவனருள் முழுமையாக முடித்து வரலாம் . சூரிய சந்திரகளை வணங்கி கொடிமரம் முன்பு நெடுசான்கிடையாக விழுந்து வணங்கி சிவனருளை பெறலாம் .

திருக்கோவில் அமைப்பு பிரமாண்டமானது . திருக்கோவில் பூஜை நேரம் : காலை 5.30 முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 4.30 முதல் 08.30வரையிலும் திறந்திருக்கும் . விஷேச காலங்களில் மாறுதலுக்குட்படும் .

திருக்கோவிலில் அமைந்துள்ள சன்னதிகள் :

சித்தி விநாயகர் , ஸ்ரீ பாலதண்டாயுதபாணி, சூரிய சந்திரர்கள்,ஸ்ரீ வராணாம்பிகை ,மூலவிநாயகர் ,பைரவர் , மகாகணபதி, துர்க்கை,1008 சிவலிங்கம் , 63 நாயன்மார்கள் ,வலம்புரிவிநாயகர்,ஜீரகண்டேஷ்வரர் ,ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் . முடிவுரை : எங்கும் நீக்கமறை நிறைந்திருக்கிற சிவபெருமான் இங்கு திருத்தொண்டீசராக ஆருத்ர கபாலீஷ்வரராக ஈரோட்டை காக்கும் கோட்டை ஈஸ்வரரை வணங்கி வேண்டும் வரம் பெற்றிடுங்கள் .

ஓம் சிவாய நமஹ.

Thursday, February 2, 2012

நூற்றாண்டு விழா காணும் குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி


குழந்தையாக இருந்து தமிழை முதன் முதலாய் கற்றுக்கொடுத்து நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆரம்பிக்கிப்படுவது பள்ளிகள் .அதிலும் நாம் இளைமையில் படித்த பள்ளிக்கூட நினைவுகள் ஆட்டோகிராப் படம் போல அவ்வப்போது நம் ஞாபகத்தில் வரும் போது வரும் உற்சாகமே தனிதான் .

அந்த வகையில் நான் 1வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்த ஊராட்சி ஒன்றியப்பள்ளி .பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur-638504) அமைந்துள்ளது. இப்பள்ளி 26.2.1913 ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரும் 27.2.2012 உடன் 100 ஆம் ஆண்டு துவங்க உள்ளது.

இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க சிறப்பாக கொண்டாட , எப்படியெல்லாம் விழா நடத்தலாம் என கலந்துரையாடல் கூட்டம் 3.2.12 இன்று வெள்ளி மாலை 03.00மணியளவில் நடைபெறுவதாக பள்ளி முன்னால் மாணவர்கள் கற்போர் - கற்பிப்போர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .

நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி விரைவில் நம் இணையத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் .

நீங்களும் நம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னால் மாணவராக இருந்தால் கண்டிப்பாக நம் குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR-638504 )ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பள்ளியின் முன்னால் மாணவராக உங்களை வரவேற்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

Wednesday, February 1, 2012

சுவை


அன்பே ...!
உன் அழகை
வியந்து வரைந்த
ஓவியங்களை
கரையான்கள் அரித்து
தின்று கொண்டிருந்தன .!
அட
அதற்க்கும்
தெரிந்து விட்டதா
உன் சுவை...!

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...