Wednesday, March 21, 2012

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக விருப்பமா? (வேலை வாய்ப்பு)


தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலைக்காவலராக சேர அரிய வாய்ப்பு. தமிழ்நாடு அரசின் சீருடைப்பணியாளர் குழுமம் இரண்டாம் நிலைக்காவலர்கள் (ஆண்/ பெண் ) ,சிறைக்காவலர்கள் , தீயணைப்புபோர்கள் பணிக்காலியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது .

விண்ணப்பங்கள் தமிழகத்தின் 284 தபால் நிலையங்களில் கிடைக்கும் . முழு விபரங்களை www.tn.gov.in/tnusrb இணையத்தளத்தில் காணலாம் . இணையத்தளத்தை காணமுடியாத நன்பர்கள் தமிழக முண்ணனி நாளிதளான தினத்தந்தியில் 21.3. 12 பக்கம் 8 ல் விளம்பரத்தை காணவும் .

தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும் நாள் 21.3.12

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் குழுமத்திற்கு வரவேண்டிய கடைசி நாள் : 23.04.2012 மாலை 05.45 மணிக்குள்

எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 24. 6.12 காலை09.00மணி .

முழுத்தகவல் விபரங்கள் விண்ணப்பத்துடன் கூடிய தகவல் சிற்றேட்டில் தெளிவாக கூறப்பட்டுள்ளது

தகுதி :

10ஆம் வகுப்பு தேர்வான 18 வயது நிரம்பிய 24 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . உயரம் 170 செ.மீ மார்பளவு 81 செ.மீ விரிவாக்கம் 5.செ.மீ பெண்கள் உயரம் 159 செ.மீட்டர் இருந்தால் போதுமானது.

எழுத்துத்தேர்வு :

50மதிப்பெண்கள் பொது அறிவுக்கும் 30மதிப்பெண்கள் உளவியல் தேர்வுக்கும் நடைபெறும் . உடல் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண்களும் , ncc,nss விளையாட்டு சான்றிதல்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள்களாக 5 அளிக்கப்படும். இரண்டாம் நிலைக்காவலர்கள் சிறைக்காவலர்கள் ,தீயணைப்பு படை என மொத்த பணியிடங்கள் :13320

நம் வலைப்பூவில் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை படிக்கின்ற நண்பர்கள் மெயிலாக தகுதியான நன்பர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . உங்களால் யாரேனும் பயன் அடைந்தால் நல்லதுதானே.

மற்றபடி மேற்படி பணிக்காக விண்ணப்பங்கள் அனுப்ப தயாராக உள்ள அனைத்து நன்பர்களுக்கு இறைதுணையுடன் வாழ்த்துக்கள் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...