Tuesday, February 15, 2011

விஜயமங்கலம் அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் ஆலயம்



விஜயபுரி கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் ஆலய வழிபாடு :-

இறைவன் :
ஸ்ரீ நாகேஸ்வரர்
இறைவி: கோவர்த்தனாம்பிகை

அமைந்த ஊர்:
விஜயமங்கலம் ,பெருந்துறை வட்டம், ஈரோடு மாவட்டம்
திருக்கோவில் சிறப்பு :
தமிழகத்தின் மிகப்பழமையான ஊர்களில் கொங்கு நாடு எனப்போற்றப்படுகிற மற்றும் பழங்கால வரலாற்று ஏடுகளில் புரட்டினால் விஜயநகரப்பேரரசு அதன் தலைநகரம் விஜயபுரிதான் தற்போது விஜயமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

காலங்களின் உருமாற்றங்கள் இப்பகுதியை மாற்றினாலும் இறை சன்னதிகள் மட்டும் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது மிகச்சிறப்பு. பழங்கால மன்னர்களும் புலவர்களும் நன்னூல் எழுதிய புலவர் பவணந்தி முனிவர் என பலரும் வந்த புண்ணிய பூமியில் வீற்றிருக்கும் எல்லாம் வல்ல எம்பெருமான் ஸ்ரீ நாகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.எல்லா சிவாலயங்களை விட இது சற்றே மாறுபட்டது

விஷேச மானது.

1. சுயம்புவாக சிவபெருமான் காட்சி தருகிறார்
2.மேற்கு பார்த்தவாறு காட்சி அளிக்கிறார் . (பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கி இருக்கும்)
3.பழங்கல்வெட்டுகள் ஆங்காங்கே அமைந்துள்ளன. இவ்வாறு விஜயமங்கலத்தை (vijayamangalam)பார்த்தவாறு அருள்புரியும் இறைவனுக்கு கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற ஆவன செய்யப்படுகிறது.

உங்களால் முடிகிற போது நேரில் சென்று தரிசியுங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆலயம் சேலத்திலிருத்து ( salem)கோயம்புத்தூர் (coimbatore) செல்லும் சாலையில் 90கி.மீட்டரிலும் ஈரோடு (erode )மாவட்டம் பெருந்துறையில் (perundurai)இருந்து 10 கி.மீட்டரிலும் அமைந்துள்ள இப்பழம்பெரும் நாகேஸ்வரர் ( nageswarar) ஆலயத்தை தரிசனம் செய்து இறையருள் பெற்று வாழ்வாங்கு வாழ இறை சித்தம் வேண்டுகிறேன்.

அருகிலுள்ள ரயில் நிலையம் ஈரோடு (erode) 30 கி.மிட்டர்,

மேலும் தகவல் வேண்டுபவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.

Monday, February 7, 2011

அருள்மிகு அல்லால் ஈஸ்வரர் வடிவுடையம்மன் திருக்கோவில்


அல்லால் ஈஷ்வரர், வடிவுடையம்மன்


திருக்கோவில் அமைவிடம் :


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் 5 கி.மீட்டரில் ஈங்கூரில் அமைந்துள்ளது .

மூலவர் : அல்லால் ஈஷ்வரர்

அம்பாள்: வடிவுடைஅம்மன் .

ஸ்தல விருட்ஷம்: வில்வம் .
பெயர் காரணம் அல்லால் ஈஸ்வரர் என்றால் அல்லல்களை களைபவர்
எனப்பொருள்படும்.
ஸ்தல வரலாறு மற்றும் சிறப்புகள் :

கொங்கு நாட்டில் புகழ் பெற்ற ஈஷ்வரர் ஆலயங்களில் இதுவும் ஒன்று.இங்கே சிவபெருமான் மேற்கு பார்த்த நிலையில் இருப்பது ஒர் தனிச்சிறப்பு, பெரும்பாலான சிவாலயங்கள் கிழக்கு நோக்கிய இருக்கின்றன. அவ்வகையில் இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பு அவ்வகையில் அல்லால் ஈஸ்வரரை தரிசனம் செய்தால் 12 ஈஸ்வரர் ஆலயங்களை தரிசனம் செய்த பலன் கிடைக்குமென ஆன்மீகப்பெரியோர்கள் சொல்கிறார்கள்

.இக்கோவில் 50 ஆண்டுகளுக்களுக்கு மோலாகி தற்போது 7.2.11 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 50 பெண்கள் 5000 ரூபாய் வீதம் வசூலித்தும் ஆன்மிகப்பெரியோர்கள் ,சிவனடியார்கள் பேருதவியுடன் அல்லாலீஷ்வரர் கும்பாபிசேகம் மிக அருமையாக நடைபெற்றது.

அன்னதானம் மிகச்சிறப்பாக செய்து ஆன்மீகத்திற்கு உயிரூட்டிக்கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்து நானும் என் நன்பன் பார்த்தீபனும் கோபுர தீர்த்ததில் நனைந்து ( கோபுர தீர்த்தம் கோடி நன்மையாம்) வந்தேன்.

ஈங்கூர் ரயில் நிலையம் அருகில் உள்ள இந்த அல்லால் ஈஸ்வரப் பெருமானை வணங்கி உங்கள் வாழ்வின் அல்லல்கள் குறைந்து எல்லா வளமும் நலமும் பெற வாழ்த்துகிறேன்.

Thursday, February 3, 2011

எம் இணையத்தை காண வந்த உங்களுக்கு

எம் இணையத்தை காண வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன். ஆன்மீகம் சம்பந்தமான புது புது கோவில்கள் குறிப்பாக ஈரோடு மாவட்டக்கோவில்கள் தேடி கண்டு பிடித்து உங்களுக்கு அளிக்க ஆவலாக உள்ளேன். எனக்கு உங்களிடம் தேவை எல்லாம் உங்கள் மேலான கருத்துரைகள் மட்டுமே.வெளிநாடு வாழ் தமிழ் உள்ளங்கள் ஆன்மிக அன்பர்கள் தங்கள் விமர்சனங்களை எமக்கு அனுப்புங்கள். அது மேன்மேலும் எழுத தூண்டும் .கருத்துரைகள் அனுப்பிய சிவதமிழோன், vetrigee அவர்களுக்கு நன்றி.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...